இடுகைகள்

சசிதரூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தில் படித்தது, இ

இந்தியாவை பிரிட்டிஷார் சுரண்டிய வரலாறு! - இந்தியாவின் இருண்டகாலம் - சசி தரூர்

படம்
  இந்தியாவின் இருண்டகாலம் சசிதரூர் தமிழில் ஜே கே ராஜசேகரன் கிழக்கு பதிப்பகம் நூலை தொடங்கும்போது, சசிதரூர் தான் இங்கிலாந்து அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை முன்வைத்து தொடங்குகிறார். 200 ஆண்டுகளாக காலனி நாடாக இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். இந்த ஆட்சியில் இந்தியாவை சுரண்டியதற்கு அடையாளமாக நஷ்ட ஈடு தரவேண்டும். குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறார். பின்னாளில் இப்பேச்சுக்கு ஆதரவாக எதிர்ப்பாக நிறைய கருத்துகள் எழுகின்றன.  இவற்றை முன்வைத்து நூல் மெல்ல பல்வேறு தகவல்களை பேசத் தொடங்குகிறது. அட்டையில் பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடித்த கதை என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் நூலில் சொல்லுகிறார். வித்தியாசம் என்னவென்றால், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நிறைய வசதிகளைக் கொடுத்ததாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தது என்பதற்கு இந்தியா நிறைய விலை கொடுத்திருக்கிறது என்பதை சசிதரூர் பல்வேறு ஆதாரங்கள் வழியாக விளக்குகிறார்.  ரயில்வே, சட்டம், நிர்வாக முறைகள் ஆகியவற்றை பிரிட்டிஷாரின் கொடை என்பார்க்ள். இன்று நூலை நன்கொடை என பெரிய விலை போட்டு விற்கிறார்க

உங்களால் முடிந்த பெஸ்டை கிடைக்கின்ற வாய்ப்புகளில் கொடுத்தால் போதும் ஜெயித்துவிடலாம்! சசி தரூர் - அரசியல்வாதி, எழுத்தாளர், அறிவுஜீவி

படம்
            சசிதரூர் பிரபல எழுத்தாளர் , காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவர் . 2009 இல் தான் அரசியலில் காலடி எடுத்து வைத்தார் தரூர் . அதற்கு முன்னர் 1997-2007 வரை ஐ . நாவில் தகவல்தொடர்பு தொடர்பான பணியில் இருந்தார் . கேரளத்தை பூர்விகமாக கொண்டவர் , திருவனந்தபுரத்தில் நின்று வென்று மக்களவை உறுப்பினரானார் .   வெளிநாடுகளைப் பற்றிய கட்டுரை நூல்கள் , நாவல் , தத்து வம் என டஜன் கணக்கிலான நூல்களை எழுதி குவித்துள்ளார் . டிவிட்டர் இவர் எழுதும் பல்வேறு கருத்துகளை எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படிக்கின்றனர் . விவாதிக்கின்றனர் . 2006 இல் சசி தரூரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஐ . நா தலைவராக்க பரிந்துரைத்தது . ஆனால் அத்திட்டம் நிறைவேறவில்லை . 22 வயதில் ஐ . நாவில் அதிகாரியாக இணைந்து பணியாற்றிய அனுபவத்தில் , ஐ . நா தலைவர் போட்டியில் இருந்து பின்வாங்கினார் . இந்த பதவி முழுக்க பல்வேறு நாடுகளின் அரசியல்போட்டியை உள்ளடக்கியது என்று கூறினார் . 50 வயதில் அடுத்து நான் என்ன செய்வது என யோசித்துக்கொண்டிருந்தேன் . அப்போது ஒரு வேலையைத் தேடுவது என்பது சரியான முடிவல்ல . நான் எடுத்த முடிவு சரிதா

நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை!

படம்
நேரு - கமலா கௌல் திருமண வாழ்க்கை! இந்தியாவின் முதல் பிரதமராக பணியாற்றிய நேரு, கடுமையான உழைப்புக்கு பெயர் பெற்றவர். தினசரி பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் உழைத்தவர். நாட்டின் பிரதமராகவும், வெளியுறவுக்கொள்கை அமைச்சராகவும் இருந்தார். இவரின் அரசியல் வாழ்வு அளவுக்கு, இவரின் திருமண வாழ்வு அதிகளவு குறிப்பிடப்படவில்லை. நேரு, இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜிலுள்ள ட்ரினிட்டி கல்லூரில் படித்து வந்தார். தந்தை மோதிலால் நேருவுக்கு அவரை ஆங்கிலேயே அரசில் ஐசிஎஸ் அதிகாரியாக வேலைசெய்ய வைக்கவேண்டும் என்று ஆசை. ஆனால் நேரு படிக்கும் காலத்திலேயே உலக அரசியலில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரியில் படிக்கும்போது ஐசிஎஸ் அதிகாரியாக தேர்வு பெறுவதற்கான மதிப்பெண்களை அவர் பெற்றிருக்கவில்லை. ஆங்கில அரசில் பணிபுரியும் எண்ணமும் அவருக்குக் கிடையாது. விருப்பமற்ற திருமணம் அந்த கால நடைமுறைப்படி நேருவுக்கு திருமணம் செய்வதற்கான பேச்சு தொடங்கியது. இதுகுறித்து தன் தாய்க்கு 1907 ஆம் ஆண்டு நேரு கடிதம் எழுதினார். ”திருமணத்திற்கு பொருத்தமான பெண்ணை நீங்களே தேர்ந்தெடுங்கள். அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால்