சரக்குளை சென்சார் வைத்து கண்காணிக்க முடியும்! - ஒளி மூலம் மின்சாரம் சேமிக்கும் சென்சார்கள்
ஒளியைப் பயன்படுத்தும் சென்சார்கள்! அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், மைக் ஃபிட்ஸ்ஜெரால்ட். இவரது நிறுவனத்தின் பெயர், நெட் ஃபீசா ). மைக்கிற்கு ஒரு கனவு உண்டு. கண்டெய்னர்களில் சென்சார்களைப் பொருத்தி, அதுபற்றிய தகவல்களை அனுப்புவர்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதை லட்சியமாக நினைக்கிறார். எதிர்காலத்தில் சென்சார்களை வைத்து இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும் என நினைக்கிறார். சமகாலத்திலேயே நிறைய நிறுவனங்கள் அதற்காக முயன்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம். அமேஸான், கூகுள் ஆகிய நிறுவனங்களின் சாதனங்கள் மூலம் வீட்டிலுள்ள அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், ஸ்மார்ட்வாட்ச் மூலம் நமது உடல்நிலை பற்றியும் கவனத்துடன் இருக்க முடிகிறது. 2035ஆம் ஆண்டுக்குள் சென்சார்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நெட் ஃபீசா தயாரிக்கும் சென்சார்கள், அசைவு, ஒளி, வெப்பம் மூலம் ஆற்றலை சேமித்து வைத்து இயங்கக் கூடியவை. இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், கார்க்கில் உள்ள டின்டால் தேசிய கழகம் உருவாக்கியுள்ளது. தற்போது சென்சாரை சோதிக்கும் ச