இடுகைகள்

பெண் குழந்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மதிய உணவுத்திட்டம் பெண் குழந்தைகளை வலுவாக்கியுள்ளது! - புதிய ஆராய்ச்சி அறிக்கை

படம்
  தமிழ்நாட்டில் மதிய உணவுத்திட்டம் முன்னாள் முதல்வர் காமராஜரால் அமலாகி, பின்னர் எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா, கருணாநிதி என அடுத்தடுத்து வந்த முதல்வர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 1993 முதல் 2016ஆம் ஆண்டு வரை வெளியான தகவல்களை வைத்து நேச்சர் கம்யூனிகேஷன் என்ற இதழில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.  அரசின் மதிய உணவுத்திட்டம் மூலம் குழந்தைகளும், தாய்மார்களும் வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி பெற்றுள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 23 ஆண்டுகளாக நடைபெற்ற மதிய உணவுத்திட்டம் பற்றிய ஆராய்ச்சிகள் இதை வெளிக்காட்டியுள்ளன. 2005ஆம் ஆண்டு மதிய உணவுத்திட்டம் நிறைய மாற்றங்களைப் பெற்றன. இதன் விளைவாக பெண் குழந்தைகளின் ஊட்டச்சத்து பாதிப்பு குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.  இந்தியாவில் மூன்றில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி பேசும் உணவுத்துறை வல்லுநர்கள், குழந்தை கருவாக தாயின் வயிற்றில் இருக்கும்போது, ஊட்டச்சத்து பற்றாக்குறையை சரிசெய்வதற்கான முயற்சிகளை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். 13-32 சதவீதம் வரையில் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவை சீராக இருக்க மதிய உண