இடுகைகள்

மின்னூல் புதிது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை மனிதர்கள் 2020 - 50 மகத்தான மனிதர்களைப் பற்றிய சுவாரசிய விளக்கம்

படம்
canva.com   டி . ஜெயகிருஷ்ணன் , அசிமோவ் ரோபாட்டிக்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் கோவிட் -19 நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள , உணவுகளைத் தருவதற்கான ரோபோக்களை உருவாக்கியுள்ளார் . 2018 ஆம் ஆண்டு நிபா வைரஸ் கேரளத்தைத் தாக்கியது . இதன் காரணமாக , செவிலியர்கள் நோயாளிகளை தொடாமல் சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது . இதற்கு தீர்வு கண்டுபிடிக்க ஜெயகிருஷ்ணன் முயன்றார் . அப்படி உருவானதுதான் கர்மி பாட் . ‘’’ நீங்கள் எங்கள் பாட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு எளிதாக உணவு மற்றும் மருந்துகளை அளிக்க முடியும் . இதன் செயல்பாடுகளை செவிலியர்கள் தங்கள் அறைகளிலிருந்து கண்காணிக்க முடியும் ’’ என்கிறார் டி . ஜெயகிருஷ்ணன் . தற்போது கர்மி பாட் அதிநவீனமான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்குகிறது . மருந்துகள் , உணவுகள் ஆகியவற்றை நோயாளிகளுக்கு அளிக்கிறது . இதோடு அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் புற ஊதாக்கதிர்கள் மூலம் சுத்தப்படுத்தி எடுத்துக்கொண்டு வருகிறது . மேலும் நோயாளியின் உடல் வெப்பநிலையையும் கணக்கிட முடிகிறது . இதனை மொபைல் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும் . தேவையெனில் நோயாளியிடம்