இடுகைகள்

தொழுநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் ஆங்கில மொழிபெயர்ப்பில்.... - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
  புதிய நூல்கள் அறிமுகம் வீ மூவ் குர்நாய்க் ஜோகல் செர்பன்ட் டெய்ல் 499 இங்கிலாந்தில் குடியேறிய ஆசிய மக்கள் பற்றிய கதைகளை நூலில் கூறுகிறார்கள். மேற்கு லண்டன் பகுதியில் ப்ரீத்தி வாழ்கிறாள். இவளது பாட்டி பஞ்சாபி மொழியைப் பேசுகிறாள். இருவருக்குமான இடைமுகமாக இருப்பது ப்ரீத்தியின் அம்மாதான். இவர்களது உலகம் சார்ந்த சிக்கல்களை ஆசிரியர் விவரித்திருக்கிறார்.  நியூ அனிமல் எல்லா பாக்ஸ்டர் பிகாடர் 799 அமெலியா, இறந்து போனவர்களின் உடல்களை அலங்கரிக்கும் தனது குடும்ப நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவள் ஆன்லைனில் தனது காதலைக் கண்டுபிடிக்கிறாள். இடையில் அந்த உறவை இழக்கிறாள். பாலுறவு, இறப்பு, துக்கம் என பல்வேறு விஷயங்களை அவள் எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதே கதை. வலி என்பது உடல்தோறும் மாறிக்கொண்டே இருப்பதை வாசிக்கையில் வாசகர்கள் எளிதாக உணரலாம்.  லாஸ்ட் கேர்ள் சனா ஷெட்டி ஹார்ப்பர் கோலின்ஸ் இந்தியா 299 சிம்லாவில் நடைபெறும் திரில்லர் கதை. இங்கு பணியில் ஓய்வு பெற்ற அதிகாரி வனெஸ்ஸா தனது கணவர் அடியனோடு வாழ்கிறார். ஒருநாள் சாலையோரத்தில் உள்ள புதர்ப்பகுதியில் பெண் ஒருவர் அடிபட்டு குற்றுயிராக கிடப்பதைப் பார்த்து அ

காந்திய அணுகுமுறையில் சமூகத்தை மாற்றியமைத்த மூன்று அமைப்புகள்! - தன்னார்வ செயல்பாடும், காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா

படம்
தன்னார்வச் செயல்பாடும் காந்திய அணுகுமுறைகளும்! டி.கே. ஓசா நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா புது டில்லி ரூ.22 பக்கம் 89 இன்று காந்திய அணுகுமுறை என்பது குறைந்துவிட்டது. காந்தி என்றாலே கோழைத்தனமானவர், தந்திரமானவர் என்று எண்ணும்படி செய்திகளை மதவாத கூட்டம் வெளியிடுகிறது. எளிமையாகவும், உண்மையாகவும் இருப்பது தவறு என எண்ணும் சமூக கலாசாரம் வளர்ந்த பிறகு சொல்லுவதற்கு என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம்.  அண்மையில் நடந்த விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் காந்திய வழிமுறையைப் பின்பற்றி நடந்து வெற்றிபெற்றது. ஆங்கில ஊடகங்கள், தமிழ் ஊடகங்கள் என பாகுபாடின்றி விவசாயிகளை வசைபாடினர். இதற்கு அவர்கள் தங்கள் மனசாட்சியை விற்று பெற்ற பணம்தான் காரணம். யார் கொடுத்தார்கள் என்று கேட்காதீர்கள். ஊபா சட்டம் உடனே பாயும். தேச வளர்ச்சிக்காக என்று சொல்லி சுயநலத்திற்காக இந்தியாவை விற்க  பாடுபடுபவர்கள்தான் இதற்கு காரணம்.  இந்த காலகட்டத்தில்தான் டி.கே. ஓசா எழுதிய   இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. தொண்ணூறுகளில் வெளியான நூல் இது. அப்போதே மறுசுழற்சிக்கான காகிதத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். நூலில் பேசப்படும் விஷயமும் அந்தள

சிறிய விஷயங்களை பேரன்போடு செய்யமுடியுமா? - அன்னை தெரசா

படம்
  அன்னை தெரசா அன்னை தெரசா  ஊக்கமூட்டும் வாழ்க்கைப் பயணம் அல்பேனியக் குடும்பத்தின் வாரிசு. 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்ற பிறந்தார். மாசிடோனியாவில் பிறந்தவரின் இயற்பெயர் ஆக்னஸ் கான்க்ஸா போஜாக்ஸ்ஹியூ. பனிரெண்டு வயதிலேயே மிஷனரி அமைப்பில் சேர்ந்து வேலை செய்யவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டார்.  பதினெட்டு வயதில் அயர்லாந்திலுள்ள லாரெட்டோ அமைப்பில் சேர்ந்து ஆங்கிலத்தை கசடற கற்றுக்கொண்டார். பிறகு தெரசா என பெயர் மாற்றப்பட்டது. 1929ஆம் ஆண்டு முதல் தனது குடும்பத்தை துறந்தார்.  பதினேழு ஆண்டுகள் கன்னியாஸத்ரீயாக பணியாற்றினார். அப்போது அவரை சுற்றி வாழ்ந்த மக்களின் வறுமை அவரது மனத்தை வருத்தியது. எனவே இந்த காலத்தில்தான் அவரது மனதில் கேட்ட குரலுக்கு செவி சாய்த்தார். வறுமையில் வாடுபவர்களுக்கு உதவி தேடுபவர்களுக்கு உதவ நாம் தெருவில் இருக்கவேண்டும் என முடிவெடுத்தார். எனவே வாடிகனில் அனுமதி பெற்று தி மிஷனரிஸ் ஆப் சாரிட்டி  என்ற அமைப்பைத் தொடங்கினார். செயல்பாடு 1950ஆம் ஆண்டு முதலே தொடங்கியது.  இந்த அமைப்பின் நோக்கமே யாரும் கவனிக்காத மக்களை கவனித்துக்கொள்வதுதான். அன்பும், பராமரிப்பும்தான் முக்கியமான அம்சங்கள். த

இந்தியாவை மிரட்டும் தொழுநோய்!

படம்
இந்தியாவுக்கு புதிய பெருமை கிடைத்திருக்கிறது. ஆம் வேதனையான பெருமைதான். உலகில் 58 சதவீத தொழுநோய் நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். ஹான்சன்ஸ் என குறிப்பிடப்படும் இந்த நோய் மைக்ரோபாக்டீரியம் காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. கண்கள், மூக்கு, கை, கால்கள் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதை ஓராண்டு மல்ட் டிரக் முறையில் மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்த முடியும்.  தோலில் ஏற்படும்போது உணர்ச்சியற்ற தன்மை உருவாகும். பின்னர் மெல்ல பல்வேறு உறுப்புகளுக்கு பரவி, அதன் செயல்பாடுகளை பாதிக்கும். கண்களில் தொற்றும்போது, பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. 2005ஆம் ஆண்டு தொழுநோய் முற்றிலும் அழிக்கப்பட்டது என்று கூறினர். ஆனால் இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு முற்றிலும் போகவில்லை. இதனை எளிமையாக ஒழித்துவிட்டோம் என ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் சொன்னாலும் இதனை முற்றிலும் கணிக்க முடியவில்லை என்பதே கள யதார்த்தம். உடல் உறுப்புகளின் உணர்வு குறைவது, வலியற்ற குடல் புண், ஆகியவை ஏற்படும். முன்னமே மருத்துவர்களைக் கண்டு நோய்க்கு மருந்து சாப்பிடாதபோது, நோய் பாதிப்பு இன்னும் கூடுதலாகும். நோய்த்த