இடுகைகள்

சிவாஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இழந்த அலுவலக வேலையைப் பெற நாயகன் செய்யும் அதீத சோதனைகள்!

படம்
            மிஸ்ஸம்மா நீலகண்டா சிவாஜி, லயா, பூமிகா தனியாக தொழில்நிறுவனம் தொடங்கி நடத்தக்கூடிய திறமை உள்ள நாயகன், நண்பர்களால் மோசடிக்கு உள்ளாக்கப்பட வேறு வழியின்றி ஒரு நிறுவனத்தில் கணக்காளனாக வேலை செய்கிறான். அந்த நிறுவனத்தின் தலைமை இயக்குநர், ஒருநாள் அவனது நிறுவனத்திற்கு வருகை தருகிறார் அப்போது, தனது வணிக திட்டங்களைக் கொடுத்து பொதுமேலாளர் பதவியைப் பெற நினைக்கிறான். இயக்குநரோ, அவனை பணிவிலக்கி, வினோதமாக சோதனைகளை செய்யச் சொல்கிறார். அதனால், நாயகனின் குடும்பவாழ்க்கை, தொழில்வாழ்க்கை என அனைத்துமே சிதைந்து போகிறது. உண்மையில் அந்த இயக்குநரின் நோக்கம் என்ன? நாயகனின் வணிக கனவு என்னவானது என்பதே மீதிக்கதை. படத்தில் வணிக ரீதியான கவர்ச்சிப் பாடல்கள் சில உண்டு. இதையெல்லாம் தாண்டி படத்தில் பூமிகா சாவ்லா சிறப்பாக நடித்திருக்கிறார். மிகச்சில பாத்திரங்கள்தான். கதையும் பெரிதாக எங்கும் நகரவில்லை. அதில் சுவாரசியம் சேர்க்கவே பல்வேறு சோதனைகள் என்பதை சேர்த்திருக்கிறார்கள். பூமிகா பாத்திரத்தை தொடக்கத்தில் எதிர்மறையாக தொடங்கி பிறகு நேர்மறையாக முடித்திருக்கிறார்கள். வினோத சோதனையில் நா...

கொள்ளையர்களின் நகையை திருடி ஊரிலுள்ள கடனை அடைக்க முயலும் YSR தொண்டன்!

படம்
  குபேர்லு சிவாஜி, அலி, கிருஷ்ண பகவான் அருங்காட்சியம் ஒன்றை மும்பை கொள்ளையர்கள் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடித்த நகையை விவேகானந்தா காலனி என்ற இடத்தில் பதுக்கிவைத்துவிட்டு, கொள்ளைக்கூட்ட தலைவனது தம்பி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோகிறார். அந்த நகைகள் யாருக்கு கிடைத்தது கொள்ளைக்கூட்டத்திற்கா, காவல்துறைக்கா என்பதே கதை.  ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி என்ற அரசியல் தலைவருக்கான முகஸ்துதியாக எடுக்கப்பட்ட படம். படத்தில். தன் குடும்பத்தை கவனிக்காமல் ஊருக்காக உழைப்பவராக சொத்துக்களை மக்களுக்காக இழப்பவராக நாயகன் வருகிறார். அவருடைய மாமா அலி. இருவரும் சேர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றுப்போகிறார்கள். வீடுகட்டித்தரும் மோசடி திட்டத்தில் மக்களை ஈடுபடுத்தி மாட்டிக்கொள்கிறார்கள். பஞ்சாயத்து தலைவர் தேர்தலுக்காக ஏற்கெனவே நிறைய சொத்துக்களை விற்றுவிடுகிறார்கள். மீதியிருப்பது வீடு மட்டுமே. மோசடி செய்ததால் குறிப்பிட்ட நாளில் பணத்தை கட்டாவிட்டால் அவர்களது ஒரே சொத்தாக உள்ள வீடும் பறிபோகும் நிலையில் நகரத்திற்கு பணம் சம்பாதிக்க வருகிறார்கள். நாயகனும் அலியும் பணம் சேர்த்தார்களா இல்லையா என்பது இன்னொ...