இடுகைகள்

அசோகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுமூளை கொண்டவர்கள்தான் வரலாற்றை திருத்தி எழுத முயல்கிறார்கள்! - உ.பி. மகாராஷ்ர பாடநூல்கள் மாற்றம்

படம்
                 பாடத்திட்டங்களை மாற்றினால் உலகம் மாறிவிடுமா? நவீன கால இந்தியாவில் ஆட்சியாளர்கள் தம்மை சர்வாதிகாரிகளாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். தாங்கள் மனதில் நினைப்பதை பிறருக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் வரலாறாக்க நினைக்கிறார்கள். இதன் பொருட்டுதான் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி பாடங்கள் பாடநூல்களிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் எதிர்கால மாணவர்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்கள் மறைக்கப்படுகின்றன. அவர்கள் தொன்மை இந்தியாவில் என்ன நடந்தது என்று கூட தெரியாமலே படித்து பட்டம் பெறும் ஆபத்து உள்ளது. அரசியல்வாதிகள் தங்களை பிரபலப்படுத்தி, பிரமாண்டப்படுத்திக் காட்டுவதற்காக இதுபோன்ற பாடங்களை நீக்கி, வரலாற்றைத் தூய்மைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள். கடந்த மாதம் மகாராஷ்டிரா அரசு கல்வித்துறை, வரலாற்று நூல்களிலிருந்து இஸ்லாமிய மன்னர்களைப் பற்றிய செய்தியை நீக்கிவிட்டது. உத்தரப்பிரதேச அரசு இதே விஷயத்தை இப்போது செய்துவருகிறது. இப்படி இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி நீக்குவதால், இஸ்லாமியர்களுக்க் எந்த இகழ்ச்சியும் கிடையாது. வரலாற்றைப் படிப்