இடுகைகள்

ஜோன் பென்னட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

26 ஆண்டுகால மர்மம் - சிறுமி ஜோன்பென்னட்டை கொன்றது யார்?

படம்
  ஜோன்பென்னட் கல்லறை ஜோன் பென்னட்டின் குடும்பம் குற்றவாளியைக் கண்டறிய முடியாத ஆறுவயது சிறுமியின் கொலை வழக்கு! 1996ஆம் ஆண்டு. அமெரிக்காவின் பௌல்டர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி. மொத்த நாடுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இருந்தது. கொலராடோ பௌல்டர் காவல்நிலைய அதிகாரிகள் என அனைவருமே விழா கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி அலைகழிக்கப்படும் என அவர்கள் அறியவில்லை. அடுத்தநாள் காவல்நிலையத்திற்கு அழைப்பு ஒன்று வந்தது. ஆறு வயது சிறுமி, அவளது வீட்டின் கீழ்தளத்தில் இறந்து கிடக்கிறாள் என்று. அதிகாரிகள் உடனே ரோந்து வண்டியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு போனபோது இறந்துபோன சிறுமியின் பெயர் ஜோன்பெனட் ராம்ஸே என தெரிய வந்தது. அப்பாவித்தனமும், மலர்ந்த புன்னகையுமாக பேரழகியாக வளர்ந்து வரும் சாத்தியங்கள் கொண்டவள். அவள் வீட்டிலேயே அடித்தும், கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு கிடந்தாள்.   சிறுமியின் அம்மா, பாட்ஸி, அழகுப்போட்டிகளில் பங்கேற்று புகழ்பெற்றவர். இவரது கணவர் ஜான் ராம்ஸே கணினி பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஜானுக்கு, பாட்ஸி இரண்டாவது மனை