இடுகைகள்

புல்டோசர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அச்சுறுத்தலுக்கு உள்ளாகி தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்!

படம்
    தங்களுக்கான சினிமாவை தாங்களே உருவாக்கிக் கொள்ள முயலும் சிறுபான்மையினர்! இன்று இந்தி மொழி திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் தெரிவது என்ன? ஆபாச வக்கிரமான காட்சிகள், பெண்களை இழிவாக நடத்துவது, அளவற்ற வன்முறை, மதவாத அரசியலை ஊக்குவிக்கும் அரசுக்கு ஆதரவான படங்கள் என்றுதான் நிலைமை உள்ளது. கதைக்கு தேவையோ இல்லையோ படத்தினுள் கற்பனைக் கதையான அரசியலுக்கு உதவும் ராமாயணம் வந்துவிடும். எதற்கு என பார்வையாளர்களுக்கே புரியாது. இப்படிப்பட்ட குப்பைகளை எடுப்பதற்கு பலகோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. சிலவேளைகளில் இதுபோன்ற மதவாத படங்களை நாட்டின் ஆட்சித்தலைவரே. தனது அமைச்சரவையில் உள்ள குற்றவாளி அமைச்சர்களுடன் அமர்ந்து கண்டு காண்பார். அதைப்பற்றிய பெருமைமிகு விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பகிர்வார். இந்த லட்சணத்தில் வீடு இடிக்கப்படும், தொழில்களை மிரட்டி பறிக்கும் அவலமான நெருக்கடி நிலையை சிறுபான்மையினர் எப்படி பிறருக்கு கூறுவது? அதற்காக அவர்களும் கேமராக்களை, செல்போன்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அரை உண்மையை மட்டுமே எடுத்து வைத்து எதிர்க்கட்சிகளை அல்லது மக்களை இழிவுபடுத்தும் கால்நக்கி ஊடகங்கள்...

நீதிக்கு புல்டோசரே போதுமானது!

படம்
        நீதிக்கு புல்டோசரே போதுமானது! கடந்த பத்தாண்டுகளில் வலதுசாரி மதவாத கட்சியான பாஜக ஆளும் மாநிலங்களில் மாறாத காட்சி ஒன்றைப் பார்த்திருப்போம். அதுதான் மஞ்சள் நிற புல்டோசர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் காட்சி. இதற்கு ஆக்கிரமிப்புகள் அல்லது நகரை அழகாக்குகிறோம் என உள்ளூர் நிர்வாகம், நீதிமன்றம், மாநில அரசு என அனைவருமே ஒன்றுபோல ஒரு காரணத்தைக் கூறுவார்கள். இந்த நடவடிக்கையில் முறையான ஜனநாயக நடவடிக்கைகள் ஏதும் கடைபிடிக்கப்படுவதில்லை. உதாரணமாக அறிவிப்பு நோட்டீஸ்களை வழங்குவது.  குறிப்பாக சிறுபான்மையினரான முஸ்லீம், கிறிஸ்தவர்கள் வீடுகள் என்றால் புல்டோசர்களுக்கு கூட ஆவேசம் வந்துவிடுகிறது. இந்த ஆவேசம் எந்தளவு செல்கிறது என்றால், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் கட்டிய வீடுகளைக் கூட விட்டுவைப்பதில்லை. எப்படி விடுவதாம்? அங்கு ஊடுருவல்காரர்களான, நாட்டின் சொத்துகளைத் திருடித் தின்னும் முஸ்லீம்கள் வாழ்கிறார்களே? கடந்த ஜூன் 19ஆம் தேதி, லக்னோவின் அக்பர் நகரில் மாநில அரசு 1800 கட்டுமானங்களை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து நொறுக்கித் தள்ளியது. இதில் 1,169 வீடுகளும், 101 வணிக கட்டு...

இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!

படம்
  இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!  அனைவரும் ஒற்றுமையாக இருங்கள், கூட்டாக சேர்ந்து பெரிய விஷயங்களை சாதிக்கலாம் என்று கூறுபவர்களை விட இந்தியாவில் பிரிவினைவாதிகள் கிராக்கி அதிகம். ரிசர்வ் வங்கி, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், காவல்துறை, உளவு அமைப்புகள் என அனைத்திலும் பாகுபாடு பார்க்கும் ஆட்களே அதிகமாக உள்ளனர்.  அதிலும் ஆர்எஸ்எஸ் தொண்டரான மோடியே பிரிவினைவாதிகளுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரது ஆட்சியின் நிர்வாக செயலின்மை பற்றி பேசினால் உடனே ரூ.500 கோடி ராமர்கோவில், காசியில் செய்த வழிபாடு, உண்ணாநோன்பு இருந்து செய்த கோவில் தரிசனம், முந்தைய பிரதமர்கள் செய்த தவறு என பேசுவாரே ஒழிய பத்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து என்ன செய்தார். அவரது அமைச்சரவைக் குழு செய்த மக்களுக்கான நன்மை என எதையும் பேசமாட்டார். செய்த அனைத்துமே கலவரங்கள், படுகொலைகள், சிறுபான்மையினரின் சொத்துகளை அழித்ததுதான். பிறகு என்ன சொல்வது? முஸ்லீம்களை ஜென்ம எதிரியாக கருதும் பயங்கரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ். வெளியில் தன்னை கலாசார அமைப்பாக காட்டிக்கொண்டு கலவரம், பிரிவினை, மசூதிகளை இடிப்பது, சி...

புல்டோசர் சென்றபிறகு வாழ்க்கை என்னவானது?

படம்
  பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால், மதம் மாறி திருமணம் செய்தால் போதும். உடனடியாக மாநில அரசு அதற்கான தண்டனையை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இன்ஸ்டன்டாக வழங்கி விடுகிறது. இன்றுதான் இன்ஸ்டன்ட் உப்புமா, பொங்கல் என வந்துவிட்டதே நீதி மட்டும் ஏன் தாமதமாக கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. வீடு இடிக்கப்பட்ட பிறகு நீதிமன்றம் வழக்கை விசாரித்து இடிக்கப்பட்டது சரியா அல்லது தவறா, ஊடக கருத்துக்கணிப்பு, மக்கள் கருத்து என என்ன செய்யலாம் முடிவு செய்யப்படுகிறது. பாஜக அரசின் இந்த முன்மாதிரி செயல்பாட்டால் நீதிமன்றத்தின் சுமை பெரும்பாலும் குறைந்து வருகிறது.  ஜஹாங்கீர்புரி இங்கு நூர் ஆலம் தனது மூன்று பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வாழ்கிறார். நூர் ஆலம், கால்நடைகளுக்கான தீவனத்தை தயாரித்து அருகிலுள்ள பால்ஸ்வா பால் பண்ணைக்கு தருவதுதான் முக்கியமான வேலை. இவரது கடை இருக்கும் கட்டிடத்தை நகர நிர்வாகம் ஆக்கிரமிப்பு என சொல்லி இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. இதனால் நூர் ஆலம் தனது வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்கியிருக்கிறார்....