இடுகைகள்

குழப்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழம்பித்தவிக்கும் மனிதர்களின் மனக்கேணி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஒடிஷாவில் தமிழ் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது . இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார் . ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர் . இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன் . அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு . தனிநபர்களுக்கு கிடையாது . அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என ஓவியர் விரிவாகப் பேசினார் . உண்மையில் ரேடார் , சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை . அதை அரசு பழுதுபார்க்க முனையவில்லை . ஆ . வியில் ஆர் . பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது . தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன் . ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம் . தொடர் சிறப்பாக இருந்தது . தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார் . இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன் . இந்த ஆண்டு உருப்படியாக ஏதேன