இடுகைகள்

என்டிஆர் ஜூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமைதியான மெக்கானிக்கை அடங்காதவனாக மாற்றும் தங்கை பாசம்! - அசோக் - சுரேந்தர் ரெட்டி

படம்
      Director: Surender Reddy Produced by: Valluripalli Ramesh Writer(s): Surender Reddy, Vakkantham Vamsi, Gopimohan  அசோக் 2006 சுரேந்தர் ரெட்டியின் படம். இவர் முதலில் உருவாக்கிய படம் அதனொக்கடே. இதுதான் தமிழில் ஆதி என விஜய் நடிப்பில் வெளியானது.  அசோக் படத்தின் முதல் காட்சியே சண்டைதான். ஜூனியர் என்டிஆர் வில்லன்களை புரட்டி எடுக்கிறார். அதேநேரத்தில் போலீஸ்கார ர்களை கூட்டிக்கொண்டு பிரகாஷ்ராஜ் வருகிறார். அவர் வரும்போது அவரது வீட்டுக்கு வந்த ரவுடிகள் எலும்புகள் நொறுங்கி கிடக்கிறார்கள்.  ஜூனியர் என்டிஆர் யார், பிரகாஷ்ராஜூவுக்கும் அவருக்கும் என்ன உறவு என்பது படத்தின் நெகிழ்ச்சியான கதை.  மெக்கானிக்காக வேலை செய்யும் என்டிஆர் எப்போதும் நண்பர்களுடன்தான் இருக்கிறார். ராஜீவ்தான் அவருக்கு நெருக்கமான தோஸ்த். கோபப்படும்போதெல்லாம் ஆற்றுப்படுத்தும் நண்பன். அப்பா வீட்டை விட்டு விரட்டுவதால் நண்பர்களுடன் தங்கியிருக்கும் என்டிஆர்,  குடும்பத்துடன் சேர்வதையே முக்கியமாக நினைக்கிறார். அதேசமயம் ஜாலியாக ஆடிப்பாடுபவர் அங்கு சமீராவை பார்க்கிறார். பார்த்தவுடனே மனம் ஓகே சொல்ல ஐ லவ்யூ சொல்லிவிட்டு வந்துவிடுகிறார். ப

பச்சோந்தியாக குணம் மாறினாலும் காதலை மறக்காதவன்தான் டோனி! - ஊசரவெலி - சுரேந்தர் ரெட்டி

படம்
            ஊசரவெல்லி   காஷ்மீரில் என்டிஆர் ஜூர்(டோனி), தமன்னாவை(நிகாரிகா) சந்திக்கிறார். தீவிரவாதிகள் ஒவ்வொருவராக பிடித்து வைத்துள்ளவர்களை கொன்று கொண்டு இருக்கிறார்கள். இதனால் என்டிஆர், தான் இன்னும் காதல், முத்தம், கல்யாணம் என எதுவுமே செய்யவில்லை என ஆதங்கப்பட அவருக்கு நச்சென முத்தம் கொடுத்து வாழ்க்கையை பூரணமாக்குகிறார். பின்னர் அங்கிருந்து தப்பிவிடுகிறார்கள். பின்னர் இருவரும் சந்திக்கிறார்கள். டோனி நிகாரிகாவை காதலிக்க தொடங்குகிறான். அது அவளது தோழிக்கு  வித்தியாசமாக தோன்றுகிறது. ஆனால் டோனிக்கு முன்பாகவே மந்திரியின் மகன் நிகாரிகாவை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுவிடுகிறான். ஆனால் டோனியைப் பொறுத்தவரை அதனால் என்ன என்று பதினைந்து நாள் டைம் கொடுங்கள் என்று நிகாரிகாவிடம் நேரம் கேட்டு காதலிக்கிறான். படத்தில் என்னதான் கதை என இந்த இடத்தில் நிறையப் பேர் பொறுமையிழந்து விட வாய்ப்பு அதிகம்.    ஆனால் இது சுரேந்தர் ரெட்டியின் படம். எனவே படத்தின் பின்பகுதி அழுகையான கதைக்கு முன்னதாகவே நிறைய காமெடி காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்கள். அவை அத்தனையும் பிரமாதமாகவே படத்திற்கு மேட்ச் ஆகின்றன. ரகுபாபு, ரகு கர

பாலியல் வல்லுறவுக்குள்ளான தங்கைக்கு நியாயம் தேடி நகரம் வரும் கிராமத்து மனிதனின் வாழ்க்கை! - நரசிம்முடு

படம்
                  நரசிம்முடு    Director: B. Gopal Produced by: Chengala Venkat Rao Writer(s): P. Ravi Shankar பஸ்ஸில் ஜெயசித்ராவின் பெண்ணை கல்லூரி மாணவர்கள் மானபங்கம் படுத்த முயல்கிறார்கள் . அவர்களை அடித்து உதைத்து மூஞ்சி முகரையை பெயர்க்கிறார் என்டிஆர் ஜூர் . ஆனால் ஒரு வார்த்தை பேசுவதில்லை . முழுக்க அடிதான் . பதினைந்து பேர்களை அடித்து நொறுக்கி புத்தூர் கட்டு போட வைத்ததிற்காக அவரை போலீசார் கைது செய்கிறார்கள் . அங்கு வரும் ஆசிஷ் வித்யார்த்தி ( கமிஷனர் ) என்டிஆரைப் பார்த்து எரிச்சலாகி விசாரணை செய்ய முயல்கிறார் . ஆனால் என்டிஆருக்கு பேச்சு வராது ஊமை என்று சொல்ல ஆசிஷ் அமைதியாகிறார் . என்டிஆரின் கண்களை மட்டும் அவரால் மறக்கவே முடியவில்லை . என்டிஆரை , ஜெயசித்ரா தான் வாழும் காலனிக்கே கூட்டி வருகிறார் . கொண்டுவீடு எனும் கிராமத்திலிருந்து ஹைதராபாத்திற்கு என்டிஆர் எதற்கு வந்திருக்கிறார் என்பதுதான் பிளாஷ்பேக் கதை .    இந்த படத்தில் வரும் ரேஷன் கார்டில் என்டிஆர் பெயரை அவரது மொத்த கிராமமுமே சேர்த்திருக்கிறார்கள் . இக்காட்சியை அப்படியே சுட்டு எங்கள் ஆசான் படத்தில் வைத்திரு