இடுகைகள்

இளைஞர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளைஞர்களிடையே வன்முறை இயல்பு எப்போதும் இருப்பதுதான்

படம்
  வன்முறை எப்போடு இயல்பானதாகிறது? அதை நீங்கள் தினசரி வாழ்க்கையில் சந்தித்துக்கொண்டிருந்தால் ஒருவர் அடித்து நொறுக்கப்படுவதை, பிறரை நீங்கள் தாக்கி ரசிப்பதைக் கூட பின்னாளில் செய்யலாம். அந்தளவு மனம் அத்தகைய காட்சிகளால் நிரம்பியிருக்கும். மனதிற்கு முதல்முறை நடக்கும் வன்முறை அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை மனதை மெல்ல மரத்துப் போகச் செய்கிறது. கலைகளில் உயர்வு பெற்ற மேற்குநாடுகளில் அதற்கு இணையான போர் கொடூரங்கள், சித்திரவதைகள் நடந்துள்ளன. மனதிற்கே ஒருபுறம் கலையின் உயர்வு, மறுபுறம் கற்பனை செய்யவே பயப்படும் கொடூரங்களை நடத்த முடிகிறது வன்முறையால் ஒருவருக்கு சாகச உணர்வும், சமூகத்தில் அந்தஸ்தும் கிடைக்கிறது என்றால் எப்படியிருக்கும்? இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் வன்முறையை இயல்பானதாக எடுத்துக்கொள்கிறார்கள் என்று உளவியலாளர்களான வோல்ஃப்கேங், ஃபெராகுட்டி ஆகியோர் கூறினர். இதற்கு ஆதாரமாக பெரு நகரங்களில் இளைஞர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை நிறைய ஆய்வுகள் காட்டுகின்றன. வறுமை, இனக்குழு மோதல்கள், முரண்பாடுகள், விரக்தி ஆகியவற்றின் இறுதி வடிவமே வன்முறையாக உருவெடுக்கிறது. இப்ப

இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய சோனி வாக்மேன்!

படம்
  இசை கேட்கும் அனுபவத்தை மாற்றிய வாக்மேன்! இன்று ஐபோன், இயர் பட்ஸ், ப்ளூடூத் வயர்லெஸ் ஹெட்போன் என வாழ்க்கை மாறிவிட்டது. பாடல் கேட்கும் அனுபவத்தை இன்று ஜேபிஎல் ஹார்மன், இன்ஃபினிட்டி, ஸ்கல் கேண்டி, பிலிப்ஸ், போஸ் என நிறைய நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. இதற்கெல்லாம் முன்னோடி ஒன்று உண்டு. அதுதான் சோனியின் வாக்மேன்.  இன்றுமே சில காமன்சென்ஸ் இல்லாத முட்டாள்கள், ஊருக்கே ரேடியோ வைத்து கேட்டுக்கொண்டு இருப்பார்கள், ஜிஃபைவ், லாவா, கார்பன் என உருப்படாத போன்களை வைத்துக்கொண்டு முத்துக்கொட்டை பல்லழகி என ஊருக்கே தண்ணீர் தொட்டியில் பகவதி அம்மன் கோவில் ஒலிப்பெருக்கி போல பாட்டு போட்டுக்கொண்டிருந்தனர். இங்கே எங்கே பிரைவசி? அதைத்தான் சோனியின் வாக்மேன் கொண்டு வந்தது.  நான் ஒலிப்பெருக்கி என்றால் வெளிநாடுகளில் ரேடியோ, கிராம போன் என பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 1979ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சோனி வாக்மேனை அறிமுகப்படுத்தியது. இசை கேட்பதில் தனித்துவமான பொருளாகவே வாக்மேன் இன்றும் உள்ளது.  1978ஆம் ஆண்டு சோனியின் துணை நிறுவனர் மசாரு இபுகா, பாடல் கேட்பதை எளிமையாக்க நினைத்தார். இதற்காக டிசி டி5 ஸ்டீரியோ கேசெட்

விழுப்புரம் இளைஞர்களை முன்னேற்ற முயலும் விக்ளக் அமைப்பு!

படம்
  இடதுபுறத்தில் முதல் நபர் திரு.கணியம் சீனிவாசன் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் விக்கிமீடியா பவுண்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, அண்மையில் ஹேக்கத்தான் உதவித்தொகைக்கு இந்தியாவில் இரு அமைப்புகளை தேர்ந்தெடுத்துள்ளது. இதில் ஒரு அமைப்பு விழுப்புரத்தில் செயல்பட்டு வருகிறது. ஹேக்கத்தானில் விக்கிப்பீடியா . ஆர்க் தளத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை செய்கிறார்கள்.  பொதுவாக ஐடி நிறுவனங்கள் என்றால் ஹைதராபாத் அல்லது பெங்களூருவைச் சொல்லுவார்கள். ஆனால், விழுப்புரம் அங்கே எப்படி வந்தது என பலரும் நினைப்பார்கள்.  விழுப்புரம் ஜிஎன்யூ லினக்ஸ் பயனர்கள் குழுவின் பெயர், விகிளக். இவர்களைத்தான் விக்கி மீடியா தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள் கணினி, ஸ்மார்ட்போன் ஆகியவற்றில் இலவச மென்பொருட்களை பயன்படுத்த கிராம மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இதில் கோடிங்குகளை எழுதவும் பயிற்றுவிக்கின்றனர்.  இந்த பயிற்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்தான். பயிற்சி மாணவர் ஒருவரின் தாய், வீட்டு வேலை செய்து வருகிறார்.  இன்னொருவர் தினக்கூலி செய்பவர்களின் பிள்ளை என இதுபோல மாணவர்களுக்கு

இளைஞர்கள் அரசியலைப் புரிந்துகொள்ள உதவும் அமைப்பு! -YPP

படம்
  தமிழ்நாட்டில் அரசியல் என்பது அனைத்து இடங்களிலும் உண்டு. தேவையில்லாத கலவரங்களை தடுக்க சில டீக்கடைகளில் அரசியல் பேசக்கூடாது என கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்று நிறைய இடங்களில் இளைஞர்கள் அரசியல் பார்வை கொண்ட இயக்கங்களை கட்டி எழுப்பி வருகிறார்கள். அப்படி ஒன்றுதான் யங் பீப்பிள்ஸ் ஃபார் பாலிடிக்ஸ் .  அண்மையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  மேற்சொன்ன இளைஞர் இயக்கத்தின் மாநாடு நடைபெற்றது. நூலகத்தில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை. ஒய்பிபி இயக்கம், பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகளை வழங்க கௌரவித்தது. விருது பெற்றவர்களும் இந்த வகையில் முதல் முறையாக விருதுகளை பெறுவதலால் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.  பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளில் இருந்து வந்தவர்களை விருதுகளைப் பெற்றனர். ஒய்பிபி இயக்கம், இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட இடத்திலிருந்து தலைவர்களாக உருவானவர்களை கௌரவிக்கின்றனர். ஒய்பிபி இயக்கத்தின் நிறுவனர், ராதிகா கணேஷ். எங்களது இயக்க உறுப்பினர்கள் அனைவருமே பன்முகத்தன்மை கொண்ட இனக்குழுவிலிருந்து வந்தவர்கள்தான். நிறைய விஷயங்களை முதல்முறை என்று கூறுவதற்கான வ

கல்லூரியில் தொழில் தொடங்கிய நம்பிக்கை தரும் இளைஞர்களின் கதைகள்! - ரஷ்மி பன்சல்- எழுந்திரு விழித்திரு

படம்
  எழுந்திரு விழித்திரு ரஷ்மி பன்சல் வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் இது தொழில்முனைவோர்கள் பற்றிய நூல். நூலில் பிராக்டோ  நிறுவனம் முதல், புக்கட் எனும் உணவு நிறுவனம் வரையில் நிறைய இளைஞர்களின் கனவு தொழில்களை விளக்கியுள்ளார் ஆசிரியர்.  ரஷ்மி பன்சலின் எழுத்துமுறை, கனெக்டிங் டாட்ஸ் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை ஒத்துள்ளது. தொழிலதிபர்கள் பற்றிய சுவாரசிய ஒருபக்க அறிமுகத்தை தொடர்ந்து அவர்களின் கனவுத்தொழிலைப் பற்றிப் பேசுகிறார்.  இந்த முறை படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  தொடக்க தொழில்கதையான பிராக்டோ உண்மையில் இன்றைய வேலை, சுயதொழில் ஆகியவற்றுக்கு இடையில் அல்லாடும் இளைஞர்களை சிறப்பாக பிரதிபலிக்கிறது. இப்போதே கிடைக்கும் வேலைக்கு செல்வதா அல்லது காத்திருந்து சுயதொழிலுக்கான வாய்ப்புகளை தேடுவதா என அலைபாயும் இடம் முக்கியமானது. இன்று பிராக்டோ நிறுவனம் சிறப்பாக வளர்ச்சி அடைந்துவருகிறது. இதுவே அவர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு, வளர்ச்சிக்கு சான்று.  இதில் நடைமுறையாக இல்லாத விஷயங்களை செய்து பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிக்கும் இளைஞர்களின் கதைகள் நிறைந்துள்ளன.  தோசாமேட்டிக் நிறுவனம் அப்படிப்பட்ட ஒன்று. இதன் அமைப்புப்படி தோச

இளம் வயதினருக்கான நூல்கள் 1993-2000

படம்
  தி கிவ்வர் லூயிஸ் லோவ்ரி பனிரெண்டு வயதான ஜோனாஸ் பிரச்னை, வெறுப்பு, வலி இல்லாத உலகத்தில் வாழ்ந்து வருகிற பாத்திரம். மெல்ல அவனுக்கு நினைவுகள் கிடைக்கும்போது அவனது வாழ்க்கை மாறுகிறது. வண்ணமும், காதலும் இல்லாத வாழ்க்கை பல கேள்விகளை எழுப்புகிறது. இதனை அவன் அறிந்துகொள்வதுதான் நாவலின் கதை. 1997 எல்லா என்சேன்டட் கெயில் கார்சன் லெவைன் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்று கட்டுப்பாடுடன் வளர்க்கப்படும் எல்லா, எப்படி தன்னைத்தானே உணர்ந்துகொண்டு வாழ்கிறாள், தனக்கான அடையாளத்தை கண்டுபிடிக்கிறாள் என்பதுதான் கதை.  1998 ஹோல்ஸ்  லூயிஸ் சாச்சர் க்ரீன் லேக் எனும் பகுதியில் தவறு செய்த சிறுவர்களை அடைத்து வைத்துள்ளனர். ஸ்டேன்லி யெல்னட்ஸ் என்ற பதினான்கு வயது சிறுவன், தான் செய்யாத தவறுக்கு அங்கு தண்டனை பெற்று வருகிறான். அவனும் நண்பர்களும், அங்கிருந்து தப்பிக்க குழி ஒன்றை தோண்டுகின்றனர். அதன் வழியாக அவர்கள் அங்கிருந்து தப்பினார்களா இல்லையா என்பதுதான் கதை.  1999 ஆங்கஸ் தோங்க்ஸ் அண்ட் ஃபுல் ஃபிரான்டல் ஸ்னாக்கிங் லூயிஸ் ரென்னிசன் இளைஞர்களுக்கான கிளாசிக் நூல் இது. பதினான்கு வயது ஜார்ஜியாவின் காதல், பள்ளி வாழ்க்கையை பேசுகிற

டீன் ஏஜ் இளைஞர்களுக்கான நூல்கள் 2015-2017

படம்
  2015 சிக்ஸ் ஆப் கிரௌஸ்  லெய் பர்டுகோ புனைவுக்கதையில் நாயகர்களுக்கும் எதிர்மறை பாத்திரங்களுக்கும் இடையிலுள்ள குண வேறுபாடுகளை லெய் நூலில் விளக்கியுள்ளார்.  2016 சால்ட் டு தி சீ ரூடா செப்டிஸ் கிழக்கு ப்ருஸ்யாவில் நடைபெறுகிற கதை. கிழக்கு ஜெர்மனிக்கு படகு வழியாக மூன்று பாத்திரங்கள் எப்படி செல்கிறார்கள், இவர்களுக்கு ஏற்படும் உறவு சிக்கல்கள்தான் கதை. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற பிறகு நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது.  2016 தி சன் ஈஸ் ஆல்ஸோ எ ஸ்டார் நிக்கோலா யூன் நியூயார்க்கில் நடைபெறும் காதல் கதை. எழுத்தாளர் டேவிட் யூன் மற்றும் நிக்கோலாவின் கணவர் ஆகியோருடனான காதல் சம்பவங்களை இந்த நாவல் தழுவியுள்ளது.  2016 வீ ஆர் தி ஆன்ட்ஸ் சாவுன் டேவிட் ஹட்சின்சன் பள்ளியில் கடுமையாக கேலி செய்யப்படும் ஹென்றி, உலகை காப்பாற்ற முயலும் கதை. உலகை ஹென்றி காப்பாற்றுவானா என்பதுதான் முக்கியமான அம்சம்.  2016 வென் தி மூன் வாஸ் அவர்ஸ்  அன்னா மேரி மெக்லெமோர் இரண்டு இளம் வயதினர் தங்களுக்குள் கொள்ளும் காதல் உறவுதான் கதை. உலகையே மறந்து இருவரும் எப்படி ஒன்றாக இருக்கிறார்கள். இருவரும் எதிர்கொள்ளும் சவால்கள்தான் முக்கியமான அம்ச

தூக்கம் வரலியா?

படம்
தூக்கம் வரலியா? இன்று ஜென் இசட் இளைஞர்கள் பலரும் இரவு இரண்டு மணிக்குப் பிறகுதான் தூங்கச் செல்கிறார்கள். படிப்பு, படம் பார்ப்பது, சமூக வலைத்தளங்களை பார்வையிடுவது என கணினி, ஸ்மார்ட்போன் ஆகிய சாதனங்கள் அவர்களின் நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்வதுதான் இதற்குக் காரணம்.  தூக்கம் பற்றிய கவலை இளமையில் தோன்றாவிட்டாலும் முப்பது வயதுக்குப் பிறகு அது நோயாக அறியப்படலாம். இப்போது இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் வரவுக்குப் பிறகு இன்சோம்னியா, டிலேய்டு ஸ்லீப்பிங் டிஸ்ஆர்டர் போன்ற பல்வேறு தூக்க குறைபாடுகள் தொடர்பான வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன.  தூக்கம் என்றால் படுத்து தூங்குவது என பலரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதில் இருவகை உண்டு. ஆர்இஎம் (REM), நான் - ஆர்இஎம் (Non-REM) என இருவகையாக இதனைப் பிரிக்கலாம். ஆர்இஎம் எனும் தொடக்கநிலை தூக்கம், பகலில் நடக்கும் சம்பவங்களின் பின்னணியில் நடைபெறுகிறது. இதில்தான் உங்களது கருத்து எண்ணமாக, செயலாக உருவாக்கம் பெறுவது நடைபெறுகிறது.  நான் -ஆர்இஎம் எனும் தூக்கம் (ஆழ்நிலைத் தூக்கம்) மெதுவாகவே வருகிறது. இந்நிலையில் அதிக கனவுகள் வருவதில்லை.  இம்முறையில்தான் உடல் நல்ல ஓ

தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் படிக்கவேண்டிய நாவல்கள்! - சோம வள்ளியப்பன், திருப்பூர் கிருஷ்ணன், இந்துமதி, முகில் சிவா

படம்
              சென்னை புத்தக திருவிழா பக்கத்தில் வந்துவிட்டது . இந்த நிலையில் எழுத்தாளர்கள் சொல்லும் பல்வேறு நூல்பட்டியல் கவனம் பெறும் . ஆனால் இதனையே முழுக்க பின்பற்றுவது என்பது சரியானதாக இருக்கும் என்று கூறமுடியாது . எழுத்தாளர்களுக்கு அவர்களது கண்ணோட்டத்தில் சில நூல்கள் சரியான அரசியல் பார்வை கொண்டிருக்கும் . சிலருக்கு அது பிடிக்காமலும் இருக்கலாம் . இங்கு கூறப்படும் நூல்களையும் அப்படியே பார்ப்பது நல்லது . மிஸ் ஜானகி அண்ட் கல்யாணி எனக்கு தேவனோட நாவல்கள் தெய்வ வார்த்தைகள் போல . எழுத்து என்பதை யாராவது தொழிலாக எடுத்து செய்ய நினைத்தால் அவர்களுக்கு இந்த இரு நூல்கள் உதவும் . எனக்கு எழுத வராது வாசிக்க மட்டும்தான் என்றாலும் கூட அற்புதமான வாசிப்பு அனுபவத்தை தேவன் எழுத்துகள் தரும் . வி . திவாகர் , பத்திரிகையாளர் , வரலாற்று புதின எழுத்தாளர் . ரங்கநாயகி - பாரதி 1955 தொடங்கி நடைபெறும் கதையில் முக்கிய பாத்திரம் மணலூர் மணியம்மாள் . வரலாற்று பின்னணியில் சமூக பிரச்னைகளை பேசியிருக்கிறார்கள் . இந்த நூல் எனக்கு பிடித்துள்ளது . வரலாற்று நாவல்களில் இந்த நூல் முக்கிய இடம்

பெரும்பலூர் மாவட்டத்தில் பசுமையைப் பரப்பிய மனிதர்!

படம்
    sample picture/ pixabay     க்ரீன் கார்டியன் பெரும்பலூர் மாவட்டத்திலுள்ள கீழப்புளியூர் கிராமத்தில் வி . கருப்பையா என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகன்றுகளை நட்டதுடன் அவற்றைப் பராமரித்து வருகிறார் . கடந்த நாற்பது ஆண்டுகளாக கருப்பையா மரக்கன்றுகளை ஆற்றின் கரையோரமாக நட்டு பராமரித்து வருகிறார் . ’’’ நான் நூறு மரக்கன்றுகளை நடவில்லை . காரணம் , அத்தனையையும் என் ஒருவனால் பராமரிக்க முடியாது . ஆண்டுக்கு நான்கு மரக்கன்றுகள் என நடுவேன் . அதனை தினசரி சென்று பராமரித்து வருகிறேன்’எனும் கருப்பையான கோவில் ஒன்றினை நிர்வாகம் செய்து வருகிறார் . இவர் பெரும்பாலும் வேம்பு , ஆலமரம் ஆகிய்வற்றை அதிகம் நடுகிறார் . தினசரி காலை வேளை தொடங்குவது மரக்கன்றுகளை சென்று பார்த்தபிறகுதான் . இவருக்கு மரக்கன்றுகளை நடுவதற்கான யோசனை சிறுவயதில் வந்திருக்கிறது . அப்போது சிலர் மரங்களை வெட்டி எடுத்துச்சென்றுள்ளனர் . அவர்களை எப்படி தடுதது என்று தெரியாமல் தவித்திருக்கிறார் . உடனே பெற்றோரிடம் இதனை சொல்லியிருக்கிறார் . ஆனால் அவர்களும் இதனை கண்டுகொள்ளவில்லை . இதனால் தனது வீட்டுக்கருகில் உள்ள இடங்களில

சூழலியலில் போராடி வரும் இளைஞர்கள்!

படம்
              இளைய போராளிகள் ஜான் பால் ஜோஸ் இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் போராட்டக்கார ர் . உலகளவில் நடைபெறும் இயற்கை பேரிடர்களில் இந்தியாவைச் சார்ந்து கருத்துகளை முன்வைத்த சூழலியல்வாதி . இவர் எழுத்தாளரும் கூட . டெலானி ரினால்ட்ஸ் இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் . மியாமி பல்கலைக்கழகத்தில் படித்தவர் . கடல்நீர்மட்டம் உயர்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறார் . ஷியா பட்டிஸ்டா அமெரிக்காவைச் சேர்ந்தவர் . நியூயார்க்கில் வசித்து வருகிறார் . பிரைடேஸ் பார் ப்யூச்சர் யூத் வெப்பநிலை மாற்ற சூழல் போராட்டத்தின் முக்கியமான தலைவர் . ஹோலி கில்லிபிராண்ட் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் .. இங்கிலாந்து நாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்திவர்கள் இவர்ரகள முக்கி ஆட்டும் பெல்டியர் கனடாவாசி . தூய்மையான தண்ணீருக்கு போராடி வருகிறார் . இதற்கான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . பருவநிலை மாறுதல் போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி வருகிறார் . ரித்திமா பாண்டே பதினொரு வயது சிறுமி . 2013 ஆம்

மியான்மரில் தொடங்கியுள்ளது இளைஞர்களின் தெரு நடனம்!

படம்
இந்தியில் இப்போதுதான் ஸ்ட்ரீட் டான்ஸர் படம் ட்ரெய்லர் பார்த்து முடித்திருப்பீர்கள். இங்கு தேசி ராப், கானா என பாடல், இசையில் உயரே பறக்கிறோம். ஆனால் ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் நிலைமை இப்போதுதான் பரவாயில்லை. இங்கு நடனம், தெருநடனம், பாடல்களை அனைவரும் கேட்கும் நிலை இப்போது வந்திருக்கிறது. இப்போதுதான் சிம்கார்டுகளின் விலையே குறைந்திருக்கிறது. 2011 ஆம் ஆண்டு தொடங்கி, தெரு நடனங்கள் அங்கு பிரபலமாகத் தொடங்கின. இன்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஹிப் ஹாப் நடனங்களை அங்கு ஆடி வருகின்றனர்.இதில் கிடைக்கும் புகழ் அங்குள்ள இளைஞர்களுக்கு பணத்தை விட முக்கியமாகப் படுகிறது. 2014இல் இருந்துதான் ஹிப் ஹாப் இசை வடிவம், நடனம் அங்கு பகிரப்பட்டு வருகிறது. இதன்காரணமாக யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என அனைத்து தளங்களிலும் இசை வீடியோக்கள் நிரம்பி வழிகின்றன. மியான்மரின் யாங்கூனிலுள்ள நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள சாலையில் அடிக்கடி தெரு நடனங்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். "தாய்லாந்துக்கு வேலைக்கு போன இடத்தில்தான் இந்த டான்சைப் பார்த்தேன். கிடைச்

ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி என்னால் ஸ்மார்ட் போனின் நோட்டிபிகேஷனை பார்க்காமல் இருக்க முடியவில்லை? இப்பிரச்னைக்கு தீர்வு என்ன? உங்களுக்கு அந்த பிரச்னை. எங்கள் குழுவுக்கு போயபட்டி ஸ்ரீனு படங்கள் பார்ப்பது எனக்கு பிரச்னை. அதை விடுங்கள். இதை எப்படி கட்டுப்படுத்துவது? சிம்பிள். ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் நோட்டிஃபிகேஷன் செட்டிங்கில் சென்று அதனை ஆஃப் செய்யுங்கள். பிரச்னை பாதி தீர்ந்தது. பாக்கெட்டில் வைத்தால் தொலைபேசி அழைப்புகளை மட்டும் பெறும்படி மாற்றுங்கள். கை அரிக்குது எஜமான் என்று புகார் சொன்னால் வேறு வழியில்லை. உளவியல் மருத்துவரைச் சந்திக்க அப்பாய்ன்மென்ட் வாங்குவதே ஒரே வழி. இப்பழக்கத்தை மாற்றுவது நீண்ட கால நோக்கில் யோசித்தால்தான் முடியும். எளிதல்ல. நன்றி - பிபிசி 

ஷேரிங் செய்வோம் மச்சான்ஸ்! - பகிர்தல் பொருளாதாரம்!

படம்
giphy.com பகிர்தல் என்பது எப்போதும் சிறந்த துதான். இன்று பொருளாதார மந்த நிலை உள்ளது. இதனால் சிறப்பங்காடி முதற்கொண்டு தேவைப்படும் பொருட்களைத் தவிர பிற பொருட்களை யாரும் வாங்க விரும்பவில்லை. புது பொருட்களை மக்கள் கண்கள் விரியப் பார்க்கிறராகளே தவிர பர்சை எடுத்து பொருட்களை வாங்க விரும்புவதில்லை. இந்த மனநிலை மாற்றம் அனைத்து விஷயங்களிலும் உள்ளது. உதாரணத்திற்கு ஆபீஸ் திறக்கிறார் என்றால், தனியாக வாடகைக்கு இடம்பிடிப்பதை விட கோ வொர்க்கிங் முறை எனும் முறையைத்தான் இன்று பலரும் விரும்புகின்றனர். ஆபீசுக்குத் தேவையான கணினிகள், நாற்காலிகள், ஏசி, ஏன் குடைகளைக் கூட வாடகைக்கு வாங்கலாம். இன்று கார் வாங்காமல் ஊபர், ஓலாவில் செல்கிறார்களே அதேபோல்தான். ஃபர்லென்கோ, சிட்டி ஃபர்னிஷ் ஆகிய நிறுவனங்கள் நாற்காலிகளை, மேசை ஆகிய பொருட்களை வாடகைக்கு அளிக்கின்றன. நெஸ்ட் அவே என்ற கம்பெனி, பல்வேறு வீடுகளை வாடகைக்கு அளிக்கிறது. இது அனைவருக்கும் விருப்பமான வழிமுறை என்று கூற முடியாது. முப்பது வயதுக்கு கீழுள்ளவர்கள்தான் இம்முறையை உலகெங்கும் பிரபலப்படுத்துகிறார்கள். இந்தியாவில் இவர்களின் சதவீதம் 51%. உலகெங்கு

தற்கொலையில் சிறந்த அமெரிக்கா - சிதையும் இளைஞர்கள்!

படம்
giphy.com அமெரிக்காவை உள்ளிருந்து உடைக்கும் பிரச்னையாக தற்கொலை மாறி வருகிறது. ஆண்டுக்கு தோராயமாக 47 ஆயிரம் பேர் அங்கு தற்கொலை செய்து வருகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அங்குள்ள குடும்ப அமைப்பாகவும் இருக்கலாம். ஆனால் தற்கொலைகள் நடந்து வருவது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாம் உலகப்போர் சமயங்களில் நடந்த இறப்புகளை விட தற்கொலை மரணங்களின் எண்ணிக்கை அதிகம். அதுவும் குறிப்பாக 10 -24 வயது பிரிவில்தான் அதிகளவு தற்கொலை மரணங்கள் ஏற்படுகின்றன. ஏறத்தாழ 2007-2017 வரையில் 56 சதவீதம் தற்கொலைகள் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. தற்கொலை ஏன் செய்துகொள்கிறார்கள் என்று டக்கென கூறிவிடமுடியாது. ஏதாவது நிராகரிப்பு, தோல்வி, விரக்தி, ஹிக்கிகோமெரி போல சாதிக்க எதுவுமே இல்லையென்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். உளவியல் பிரச்னை என்றாலும் அமெரிக்கர்கள் உடனே நரம்புகளை அறுத்துக்கொண்டு செத்து விடுவதில்லை. 83 சதவீதம் பேர் மருத்துவர்களைச் சென்று சந்திக்கிறார்கள். பின்னரே தற்கொலைகளை சந்திக்கிறார்கள். அல்லது அதிலிருந்து மீள்கிறார்கள். அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள சென்டர்ஸ்டோன் மனநல மருத்துவ

இ சிகரெட்டுக்கு உலக நாடுகள் தடை விதிப்பது ஏன்?

படம்
இ சிகரெட்டைத் தடை செய்வது ஏன்? அமெரிக்காவில் சாதாரண புகையிலையைக் கொண்ட இ சிகரெட்டுகளைத் தவிர பலவித வாசனைகளைக் கொண்ட இ சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தயாரிப்பு, இறக்குமதி, விற்பனை ஆகிய  அனைத்து செயற்பாடுகளையும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்றுவரை இருபது நாடுகளில் இ சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே ஆகிய நாடுகள் புகையிலை, இ சிகரெட்டுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை விதிகளை இயற்றி அமல்படுத்தியுள்ளன.. இ சிகரெட்டுகள் தொடர்ச்சியாக சிகரெட்டுகளை புகைப்பவர்களுக்கு, அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை தரும் என்கிறார்கள். ஆனால் இ சிகரெட்டுகளில் 1500க்கு மேற்பட்ட வெரைட்டியான வகைகள் உண்டு என்பதால், இளைஞர்கள் நேரடியாக இதற்கு வந்துவிடுகின்றனர். அமெரிக்காவில் 12-17 வயதில் உள்ளவர்களில் 81 சதவீதம் பேர் புகைக்கின்றது ஆபத்தான சங்கதிதானே? எண்ணிக்கையில் 3.6 மில்லியன் குழந்தைகளை இதனை புகைக்கத் தொடங்கியுள்ளன்ர. புகையிலையிலுள்ள நிகோட்டின் பாதிப்பை விட இ சிகரெட்டிலுள்ள வேதிப்பொருட்கள் இளைஞர்களை அதிகளவு பாதிக்கின்றன. இதனால் மரபான புகையிலையை விட இ சி

கற்ற இளைஞர்களை அவமதிக்காதீர்கள்! - சேட்டன் பகத்

படம்
அண்மையில் நான் ஓர் உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றேன். அங்கு எனக்கான ஆர்டரை நேர்த்தியாக உடையணிந்து ஆங்கிலத்தில் பேசிய இளைஞர் எடுத்தார். சுறுசுறுப்பாக வேலை செய்ததோடு, அங்கு தினசரி வருபவர்களிடம் இயல்பாக பேசினார். மறக்காமல் அவர்களின் ஆர்டர்களை எடுத்துக் கொண்டார். எனக்கு ஆச்சரியம். அவர் துல்லியமான ஆங்கில மொழியில் பேசியதுதான். இவ்வளவு மொழியறிவு கொண்டவர் இந்த உணவகத்தில் என்னதான் செய்கிறார்  என்று யோசித்தேன். பிறகு எனக்கான உணவை அளித்தபோது, அவரிடம் பேசினேன். அவரின் மாத சம்பளம் வெறும் 8 ஆயிரம் ரூபாய். இது அமெரிக்காவில் பகுதி நேரமாக பணிபுரிபவரின் ஊதியத்தை விட மிக குறைவு.  இந்தியா இன்னும் வளரும் நாடு என்ற பட்டியலில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப்போகிறதோ என்று எனக்கு வேதனையாக இருந்தது. துல்லியமாக ஆங்கிலம் பேசுபவருக்கு இந்தியாவில் இந்த வேலைதான் கிடைக்கும் என்றால், பள்ளியில் படிப்பெதற்கு? பட்டம் எதற்கு என்று எனக்கு மனதில் ஆவேசம் கரைபுரண்டது. எனக்கு அவர் கொடுத்த உணவு கூட கசந்துபோனது. சாப்பிடவே முடியவில்லை. சமாளித்து சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன். புன்னகையுடன் பில்லை மேசையில் வைத்

அட்மிஷன் நேரத்து ஆபத்து! - மக்கப் மகேஷ்கள் வேண்டாம் - சேட்டன் பகத்

படம்
அட்மிஷன் நேரத்து முட்டாள்தனம்! பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் நேரம் இது. டெல்லி பல்கலைக்கழகம், சில இடங்கள் மட்டுமே அங்கு உள்ளது என்று கூறியுள்ளது. நாளிதழ்களில் நிறைய விளம்பரங்கள் இடைவிடாமல் வருகின்றன. அவற்றில் பலவும் அட்மிஷன் தங்கள் கல்லூரிகளில் நடைபெறுகிறது. விரைவீர் என தங்க நகைக்கடை போல விளம்பரங்கள் கொடுக்கின்றனர். இதனால் என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை. டெல்லி பல்கலைக்கழகம் போன்ற கல்வி அமைப்புகள் சிறிதேனும் விதிவிலக்கான முயற்சிகள் ஏதேனும் செய்யலாம். இப்போது, இரண்டு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அம்மாணவருக்கு நிறைய திறன்கள் உண்டு. என்எஸ்எஸ் அமைப்பில் இருக்கிறார். பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆர்வம் உண்டு. இவர் பள்ளியில் பெற்ற மதிப்பெண்கள் 87 சதவீதம்தான். ஆனால் இன்னொரு மாணவருக்கு இத்திறன்கள் ஏதும் கிடையாது. பள்ளிக்குச் செல்வார். அதைவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெறுகிறார். இவர்களில் யாருக்கு பல்கலையில் இடம் கிடைக்கும்? 94 சதவீதம் மதிப்பெண் எடுத்தவருக்குத்தானே.

ஹிப்பி திருவிழா - 1969 வுட்ஸ்டாக் கொண்டாட்டம்!

படம்
அரை நூற்றாண்டுக்கு முன்பு இசைக்கலாசாரம் ஒன்று தொடங்கியது. இதில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விநோதர்கள் கலந்துகொண்டனர். ஆம் இவர்கள்தான் இசை, ஆன்மிகம் என நாடோடியாக அலைந்து திரிந்த கேசுவல் ஹிப்பிகள். எல்எஸ்டி போர்டு வைத்து அதனை விற்று காசு சேர்த்து ஜமாய்த்த கில்லாடிகள். அமைதியும் இசையும் என்ற பெயரில் இந்த இசை விழாக்கள் அக்காலத்தில் மரபு ஆட்களையும் அமைப்புகளையும் அதிரடித்தன. அதைப் பலரும் பின்பற்றி இசையமைத்து பாடல்களும் வெளியிட்டனர். வுட்ஸ்டாக் இசைவிழாவை மைக்கேல் லாங், ஆர்டி கான்ஃபெல்ட், ஜோயல் ரோசன்மென், ஜான் ராபர்ட்ஸ் ஆகியோர்தான் தொடங்கினர். இவர்கள் பல்வேறு இசை நட்சத்திரங்களை அணுகி, நிகழ்ச்சி நடத்தக் கேட்டனர். ஆனால் அவர்கள் ஏதோ காரணத்தால் மறுத்துவிட்டனர். ஆனாலும் இளைஞர்களை சந்திக்க முடியும் காரணத்தினால் புகழ்பெற்ற சிலர் இசைந்தனர். இதன் விளைவாக, அவர்கள் புகழின் உச்சத்தைத் தொட்டனர். வால்கில் எனுமிடத்தில் விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவர்களும் ஒரு கட்டத்தில் இசைவிழாவுக்கு இடம் தர மறுத்துவிட்டனர். பின் பெதல் பகுதியில் நிலமுள்ள பால்பண்ணை விவசாயி இடம் தர முன்வந்தார். அதற்கும்

மில்லினிய இளைஞர்கள் - சீக்ரெட்ஸ் லிஸ்ட்!

படம்
சீனியர்களை கோப ப்படுத்தும் விஷயம் நாங்கள் மில்லினியல் பாஸ் என பொடுசுகள் பேசுவதுதான். பின்னே அடிக்கடி வயசை நினைவுபடுத்தினால் எப்படி..... தற்போது மில்லினிய குழந்தைகளைப் பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. உண்மையில் மில்லினிய செட் பற்றி தெரிந்துகொள்வோம். 1981 - 96 ஆண்டுகளுக்குள் பிறந்தவர்களை மில்லினிய செட்டில் சேர்க்கலாம். இளையவர்கள் என்பதைத்தான் மில்லினியர்கள் என்று குறிப்பிடுகிறார்கள் என்பதை ப்யூ ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. இதில் மூத்தவர்கள் 30 களில் இருப்பார்கள். மில்லினியல் என்ற வார்த்தை 91 ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டது. நெய்ல் ஹோவே மற்றும் வில்லியம் ஸ்ட்ராஸ் ஆகியோரின் நூலான ஜெனரேஷன்ஸ் என்பதில் இந்த வார்த்தை முதன்முதலில் குறிப்பிடப்பட்டது. 2000 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றவர்களைக் குறிப்பிட்ட இந்த வார்த்தையை ஆசிரியர்கள் பயன்படுத்தினர். மில்லினியர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வமுடையவர்கள்தான். 2016 ஆம் ஆண்டு இவர்கள் ஆண்டுக்கு ஐந்து நூல்களை தோராயமாக படித்திருப்பதாக ஆய்வு கூறுகிறது. முந்தைய ஆய்வில் நான்கு நூல்களைத்தான் படித்தார்கள். டெக்