இடுகைகள்

விழிப்புணர்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தன்னைப் பற்றி உணர உதவும் உளவியல் சிகிச்சை முறை

படம்
  கெஸ்சால்ட் தெரபி என்பது நிகழ்காலத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது. ஒருவர் தனது உணர்ச்சிகளை கையில் கையாளத் தெரிந்துகொண்டாலே எளிதாக பிரச்னைகளிலிருந்து வெளியே வரமுடியும். தனது மனதில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதே இதில் உணரவேண்டியது. இப்படி உணர்ந்துகொண்டால் ஒருவரால் கவனமாக தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். தன்னைப் புரிந்துகொள்ளலாம்.  உணர்ச்சிகளின் மீதான கவனத்தை ஒருவர் கொண்டிருப்பது, கூறுவதைப்போல எளிதானது அல்ல. கடினமானது. இதை நிகழில் வாழ்தல் என்று கூறுவார்கள். இதை ஒருவர் மெல்ல பழகினால் எளிதாக தனது சூழல், அதில் அவரது அனுபவம் என இரண்டையும் மெல்ல மாற்றிக்கொள்ள முடியும். கெஸ்சால்ட் தெரபியில் என்னால் முடியாது என்று கூறுவதை நான் அதை செய்ய விரும்பவில்லை என மாற்றிச்சொல்ல வைக்கிறார்கள். செயல்பட வைக்கிறார்கள். முதலில் பேசவேண்டும். பிறகு அதுவே செயலாகிறது. அதாவது, நான் என்ற தன்மை மாறுதல் அடைகிறது. விஷயங்களை வாய்ப்பாக பார்க்கும் குணம் கூடுகிறது. குறிப்பிட்ட சூழல் காரணமாக அல்லது அதை காரணம் காட்டி தன்னை பாதிக்கப்பட்டவர்கள

வாழ்க்கையின் அழகு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார் விக்டர் காமெஸி ஒருவர் அமரத்துவம் கொண்ட களங்கமற்ற புனிதம் என்ற ஒன்றை அடையாளம் கண்டார் என்றால் அவர் உலகிலுள்ள வேதனைகளை புரிந்துகொண்டார் என்று பொருள். வேதனை என்பது தனிப்பட்ட ஒருவரின் அதாவது உங்களுடையது மட்டுமல்ல. உலகம் முழுக்க உள்ள வேதனை பற்றியது. இது உணர்ச்சிகரமான, காதல் உணர்வு கொண்டதாக இல்லை. நம்முடன்தான் இருக்கிறது. வேதனையுடன் வாழ்வதில் உள்ள சிக்கல், அதிலிருந்து தப்பித்து ஓடாமல் இருப்பதுதான். நீங்கள் தப்பித்து ஓடாமல் இருந்தால், வேதனையை எதிர்கொள்ள அதிக ஆற்றல் தேவை. வேதனையைப் புரிந்துகொண்டால் நீங்கள் அதனால் பாதிக்கப்பட மாட்டீர்கள். இந்த முறையில் தியானம் செய்து அமரத்துவமும், புனிதமுமான தீர்வை அடையாளம் காண்பீர்கள். சானென் 3 ஆகஸ்ட் 1975   கடவுள், உண்மையை தேடுவது நிச்சயமாக முழுமையாக சிறந்ததுதான். நன்மைக்கான வேண்டுதல், அவமானம், கண்டுபிடிப்புகள், மனதின் பல்வேறு தந்திரங்களைக் கடந்து தேட வேண்டும். இதன் அர்த்தம் இவற்றைக் கடந்த பின்னும்   உள்ள தன்மைதான். அதுதான் உண்மையான மதம். நீங்கள் தோண்டியுள்ள நீச்சல் குளத்தை கைவிட்டு ஆற்றின் போக்கில் பயணித்து செல்

இதுவே சரியான நேரம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

  ஜே கிருஷ்ணமூர்த்தி உரையாடுகிறார்   ரோபோக்கள் மேம்படுத்தப்படும்போது, மனிதர்கள் தினசரி இரண்டு மணி நேரம் வேலை   செய்தால் போதுமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலை உருவாகும். அப்போது மனிதர்கள் என்ன செய்வார்கள்? பொழுதுபோக்கு துறையால் ஈர்க்கப்படுவார்களா? அல்லது   அந்த துறையில் உள்ள விஷயங்களை கவனித்து சோதித்துப் பார்ப்பார்களா? இவைதான் மனிதர்களுக்கான   இரண்டு வாய்ப்புகளாக   உள்ளன. சானன் 21 ஜூலை 1981 தி நெட்வார்க் ஆஃப் தாட்   நீங்கள் கொண்டிருக்கும் வரைமுறையிலான திறன்கள் மற்றும் பரிசுகள் ஆபத்தான நண்பர்களாக உள்ளன. அவை உங்களுக்கு புரியாத தன்மையையும், சோகத்தையும் கொண்டு வருவதில்தான் நிறைவுபெறுகின்றன. உங்களது உணவு, உடை, பாவனை, மகிழ்ச்சி ஆகியவை மெல்ல சோர்வுற்றவராக மாற்றுகிறது. உங்களது மனது உணர்ச்சிகளற்றதாக, விஷயங்களை புரிந்துகொள்ளும் திறனை விரைவில் இழப்பதாக உள்ளது. சக்திவாய்ந்த மனம் நிறைய செயல்பாடுகளை செய்கிறது. குறிப்பாக, உரையாடுகிறது. நடனமாடுகிறது. இதற்கென அதற்கு காரணங்கள்,முடிவு, விழிப்புணர்வு ஆகியவை உள்ளன. இதன் வழியாக அமைதி, தெளிவு கிடைக்கிறது. தி வேர்ல்ட் வித் இன் தன்னை அ

பொருட்களை வாங்கும்போது சுதாரிப்பாக இருக்கிறோமா, இல்லையா?

படம்
  பெப்சி தனது லோகோவை மாற்றியுள்ளதை அறிந்திருப்பீர்கள். ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோகோ மாற்றம் பெற்றுள்ளது. இதனால், அந்த நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா இல்லையா என்பதெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பார்த்துக்கொள்வார்கள். கொக்க்கோலா, பெப்சி என இரண்டில் சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது, கொக்ககோலாதான். இதற்கு அடுத்த இடத்தில்தான் பெப்சி உள்ளது. இப்போதும் இரு பன்னாட்டு நிறுவனங்களின் பிராண்டுகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது. கோலா நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. 1980ஆம் ஆண்டு கொக்க்கோலா தனது சந்தை லாபம், பெப்சியிடம்   செல்வதை உணர்ந்து, புதிய ஃபார்முலா ஒன்றை உருவாக்கியது. இனிப்பு சற்று கூடுதல். இதற்கான நான்கு மில்லியன் டாலர்களை அள்ளி இறைத்தது. மார்க்கெட்டில் ஏழு சதவீத விற்பனை உயர்வு கிடைக்கும் என திட்டம் போட்டது. ஆனால் சந்தைக்கு சென்றபிறகு, மக்கள் புதிய கொக்ககோலாவை ப்பருகினர். ஆனால் அதை தொடரவில்லை. அவர்களுக்கு பழைய கோலா போல சுவை இல்லை என்று தோன்றியது. எங்களுக்கு புதிய கோலா பிடிக்கவில்லை. பழைய கோலாவின் சுவை வேண்டும் என்று கருத்துகளை சொல்லத் தொட

தோல்பாவைக்கூத்து மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வுக்கல்வி! பிரவின்குமார் குழுவினரின் புதிய முயற்சி!

படம்
  சூழல் பிரசாரத்தை தோல்பாவைக்கூத்து மூலம் செய்யலாம்!  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சூழல் ஆராய்ச்சியாளர், ஆர்.பிரவின் குமார். அண்மையில் தமிழக அரசு பிரவின் குமாரின் சூழல்பணிகளைப் பாராட்டி,  2021ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதை வழங்கியுள்ளது.  பிரவின் குமார், பொம்மலாட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு காடுகளின் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். 2013ஆம் ஆண்டு தொடங்கி,  பள்ளிகளில் தனது குழுவினருடன் சேர்ந்து பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை பிரவின் குழுவினர், தமிழ்நாடு முழுக்க 150 நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.  தனது நிகழ்ச்சி மூலம் உயிரினங்கள் பற்றிய அறிவையும், அதனை பாதுகாக்கும் அக்கறையையும் மாணவர்களுக்கு உணர்த்த உழைத்து வருகிறார் பிரவின் குமார்.  “முதலில் நாங்கள் பொம்மலாட்டத்தை பள்ளியில் நடத்தும்போது அமைதியாக மாணவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஒருமுறை திடீரென பச்சோந்தி பாத்திரம் நாடகத்தின் இடையே தோன்றி, நீங்கள் என்னைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க வைத்தோம். சற்று நேரம் பேசாமல் இருந்த மாணவர்கள் அதனை வேட்டையாடுவோம் என ஒப்புக

சூழல் பற்றிய விழிப்புணர்வால் மக்கள் பயன் பெறுவார்கள்! பிரபு பிங்காலி, பொருளாதார பேராசிரியர்

படம்
  சூழலில் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை! பிரபு பிங்காலி, அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்துத் துறை மற்றும் பொருளாதாரத்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். புது டில்லியில் இயங்கும் டாடா கார்னெல் வேளாண்மை மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார்.  உணவு அமைப்பு முறைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்தியது எது? வேளாண்மையில்  உணவு உற்பத்தி, விளைபொருளை விவசாயிகளிடமிருந்து பெறுவது, வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தவேண்டும். இதில், நாம்  போதிய கவனம் செலுத்துவதில்லை. விவசாயி, விளைபொருள், விற்கும் சந்தை, உணவுப்பொருட்களுக்கான தேவை, நகரங்களின் உணவு நுகர்வு, உணவின் தரம், ஊட்டச்சத்துகள் என உணவு அமைப்பு முறை, ஏராளமான அம்சங்களைக் கொண்டுள்ளது.  காலநிலை மாற்றங்களால் இந்தியா எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ளவிருக்கிறது? வங்கம் - பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தான் நெல், கோதுமை ஆகிய பயிர்கள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசம், பீகார் என சென்றால், அங்குள்ள கிராமங்களின் வறுமையையும் அறியலாம். வெப்பமயமாதல்

இளைஞர்கள் அரசியலைப் புரிந்துகொள்ள உதவும் அமைப்பு! -YPP

படம்
  தமிழ்நாட்டில் அரசியல் என்பது அனைத்து இடங்களிலும் உண்டு. தேவையில்லாத கலவரங்களை தடுக்க சில டீக்கடைகளில் அரசியல் பேசக்கூடாது என கண்டிப்பாக சொல்லியிருப்பார்கள். ஆனால் இன்று நிறைய இடங்களில் இளைஞர்கள் அரசியல் பார்வை கொண்ட இயக்கங்களை கட்டி எழுப்பி வருகிறார்கள். அப்படி ஒன்றுதான் யங் பீப்பிள்ஸ் ஃபார் பாலிடிக்ஸ் .  அண்மையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்  மேற்சொன்ன இளைஞர் இயக்கத்தின் மாநாடு நடைபெற்றது. நூலகத்தில் இப்படியொரு நிகழ்ச்சி நடப்பது இதுவே முதல்முறை. ஒய்பிபி இயக்கம், பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு விருதுகளை வழங்க கௌரவித்தது. விருது பெற்றவர்களும் இந்த வகையில் முதல் முறையாக விருதுகளை பெறுவதலால் மகிழ்ச்சியாக காணப்பட்டனர்.  பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவுகளில் இருந்து வந்தவர்களை விருதுகளைப் பெற்றனர். ஒய்பிபி இயக்கம், இப்படிப்பட்ட பின்புலம் கொண்ட இடத்திலிருந்து தலைவர்களாக உருவானவர்களை கௌரவிக்கின்றனர். ஒய்பிபி இயக்கத்தின் நிறுவனர், ராதிகா கணேஷ். எங்களது இயக்க உறுப்பினர்கள் அனைவருமே பன்முகத்தன்மை கொண்ட இனக்குழுவிலிருந்து வந்தவர்கள்தான். நிறைய விஷயங்களை முதல்முறை என்று கூறுவதற்கான வ

விவசாயிகளின் துயர் துடைக்கும் மிரிட்ஸா!

படம்
  விவசாயிகளுக்கு உதவும் மிரிட்ஸா! ஆந்திர விவசாயிகளுக்கு உதவ பள்ளி மாணவிகள் நால்வர் இணைந்து  திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். புராஜெக்ட் மிரிட்சா எனும் திட்டத்தை நந்தினி ராஜூ(16), ஸ்ரீலக்ஷ்மி ரெட்டி(16), சாரதா கோபாலகிருஷ்ணன் (14), அம்ருதா பொட்லூரி (16) ஆகிய மாணவிகள் தொடங்கியுள்ளனர். இதுவரை 1.5 லட்சம் ரூபாய் நிதி திரட்டி இயற்கை விவசாயம் செய்யவும் குளிர்பதனக்கிடங்குகளைக் கட்டவும் விவசாயிகளுக்கு உதவி வருகின்றனர். இதில் சாரதா கோபாலகிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். அம்ருதா, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  கடந்த ஜூன் மாதம் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வீடியோக்களை  உருவாக்குவது, தானியங்களை சேமிப்பதற்கான கிடங்குகளை ஏற்படுத்துவது, இயற்கை விவசாய மாதிரிகளை பிரசாரம் செய்வது, அரசு திட்டங்களை விளக்குவது ஆகியவற்றை செய்து வருகின்றனர்.  ஆந்திரத்தின் குண்டூர் பகுதியில் இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக வலைத்தளங்களையும் நான்கு மாணவிகளும் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களை செய்கின்றனர். இங்கு கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின

சிகரெட் அட்டைப் பெட்டிகளில் புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு- அருப்புக்கோட்டை மாணவியின் புதிய ஐடியா

படம்
  மது எப்படி ஒருவரை குடிநோயாளி ஆக்குகிறதோ, அதேபோல்தான் புகைப்பிடித்தலும். சிலர் எந்த நோக்கமும் இல்லாமல் சிகரெட்டுகளை ஊதி தள்ளிக்கொண்டிருப்பார்கள். வெறுமையைப் போக்க என காரணம் சொல்லுவார்கள். இதனை கைவிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கும் நல்லது அவர்களின் அருகே இருப்பவர்களுக்கும் நல்லது.  அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவி அஸ்மா அஹமது, புகைப்பிடித்தலுக்கு எதிராக விழிப்புணர்வு முயற்சிகளை செய்து வருகிறார். இதற்கு தன்னார்வ நிறுவனமான வில் அவார்ட்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் விருது வழங்கியுள்ளது. அப்படி என்ன விஷயம் செய்தார்?  மூன்று ஆண்டுகளாக ஆயிரம் சிகரெட் அட்டைகளை பொறுக்கி எடுத்து அதன் பின்பக்கத்தில் புகைப்பிடித்தலுக்கு எதிரான வாசகங்களை எழுதி அதனை கண்காட்சியாக்கியிருக்கிறார். அட்டைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகங்களை எழுதியிருக்கிறார். ராமனாதபுரத்தைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனத்தின் மூலம் ஆறாவதிலிருந்து அஸ்மா செய்யும் விழிப்புணர்வு முயற்சிகள் வெளித்தெரிந்துள்ளன. இவரது புகைப்பிடித்தலுக்கு எதிரான கண்காட்சியை அவரது பள்ளியில் உள்ள 1500 மாணவ, மாணவிகள் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் அத்தனை குடும்பங்களி