இடுகைகள்

மாங்கா காமிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மறுபிறப்பெடுத்து வந்து தீயசக்தி இனக்குழுவை அழிக்கப் போராடும் இரவு வீரன்! இம்மார்டல் இன்விசிபிள்

படம்
  இம்மார்டல், இன்விசிபிள் மாங்கா காமிக்ஸ் ரீட்மாங்காகாமிக்ஸ்.காம் 150---- தீயசக்தியைச் சேர்ந்த இனக்குழுவில் உள்ள நாயகன், மக்களுக்கு பீதியூட்டிய தற்காப்புக்கலை மாஸ்டர். அனைத்து நாடுகளிலும் பொது எதிரியாக கருதப்பட்டு துரத்தப்படுகிறார்.  பின்னாளில், எதிரிகளால் வெட்டி படுகொலை கொல்லப்படுகிறார். ஆனால் அவர் மனதில் நம் வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியவில்லை என்ற கருத்து இருக்கிறது. இதனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்கிறார். மறுபிறப்பில், சென் என்ற வணிக குடும்பத்தைச் சேர்ந்தவரின் வாரிசாக பிறக்கிறார். அப்பா, வணிகர். அம்மா, புகழ்பெற்ற வாள் வீராங்கனை. அம்மாதான், மகன் கோ உன்னுக்கு அடிப்படை தற்காப்புக்கலை பயிற்சிகளைக் கற்பிக்கிறார். தினசரி மறக்காமல் பயிற்சி செய்யவேண்டும் என கூறுகிறார். அதுவே கோ உன்னுக்கு போதுமானதாக இருக்கிறது. அம்மா சொல்லிக்கொடுத்த கலைகளோடு, அவன் முற்பிறவியில் கற்ற தீயசக்தி கலைகளையும் சேர்த்து பயிற்சி செய்கிறான்.  அவன் அம்மா முற்பிறவியில் எதிரிகளுடன் சண்டையிட்டு இறுதியாக இறந்துபோகிறார். எனவே, அந்த சூழ்நிலையை கோ உன் மாற்ற முயல்கிறான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அம்மாவின் வாள

கூலிக்கொலைகாரன் தொன்மைக் காலத்திற்கு நகர்ந்து போர்வெறி கொண்ட வீரனாகும் கதை!

படம்
  டேங் யின்  மாங்கா காமிக்ஸ்  250 அத்தியாயங்கள்----- நகரத்தில் வாழும் கூலிக்கொலைகாரன். பாரில் உள்ள பெண்ணை ஒரு ரவுடிக்கூட்டம் போதைக்குள்ளாக்கி வல்லுறவு செய்ய முயல்கிறது. நாயகன் அதை தடுத்து அத்தனை பேர்களையும் கொல்கிறான். பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறான். பிறகு தனது அறைக்கு திரும்புகிறான். தூங்குபவனின் ஆன்மா தொன்மைக்காலத்திற்கு பயணிக்கிறது.  ஒரு காட்டில் இலையை கட்டிக்கொண்டு நிற்பதை உணர்கிறான். உண்மையா என்று பார்த்தால் உண்மைதான். அங்கே உள்ள விலங்கு ஒன்றிடமிருந்து சண்டை போட்டு சற்றுவெளியே சென்று பார்த்தால் அங்கு நிங், விண்ட் என்ற இரு நாட்டு ராணுவத்துக்கு இடையில் போர் நடக்கிறது. டேங் யின் என்பது நாயகன் பெயர். கதையில் திடீரென டோமின் மாறுகிறது. நாம் டோமின் என்றே கொள்வோம். நிங் பலம் பொருந்தியவர்கள். விண்ட் பலவீனமானவர்கள். அவர்கள் புறம் நின்று டோமின் நான்கு எதிரிப்படை வீரர்களைக் கொல்கிறான். எதிரிப்படையினர் இறந்துபோன விண்ட் வீரர்களின் பிணங்களை நெருப்பு வைத்து கொழுத்துகிறார்கள். டோமின் நெருப்புக்கு பயந்து குகையில் பதுங்குகிறான். அங்குள்ள டார்க் ஆர்ட்ஸ் மாவீரனின் ஆவி, டோமினுக்குள் ப

உலகை ஆள நினைப்பவனின் மறுபிறப்பு ரகசியங்கள்!

படம்
  ஸ்காலர் ரீஇன்கார்னேஷன்  மாங்கா காமிக்ஸ்  150 அத்தியாயங்கள்---- தற்காப்புக்கலை கற்ற மாவீரன் ஒருவனை, பத்து தற்காப்பு கலை மாஸ்டர்கள் ஒன்றாக சேர்ந்து சதி செய்து  கொல்ல நினைக்கிறார்கள். எதற்கு, அவனால் உலக அமைதி கெட்டுவிடுமாம். மாவீரனைப் பொறுத்தவரை கற்ற டார்க் ஆர்ட்ஸ் கலையை ஆயுதமாக பயன்படுத்துகிறான். அவனிடம் வாளோ, குறுங்கத்தியோ கூட கிடையாது. தற்காப்புக்கலை கற்றவன் ஆயுதங்களை சார்ந்து இருக்ககூடாது என்பதுதான் அவனது உறுதியான கொள்கை. இமாலயம் போன்ற மலைப்பகுதியில் நடக்கும் சண்டையில், புத்த துறவி தற்கொலைத் தாக்குதல் நடத்தி மாவீரனை கொல்கிறார். அவரும் இறந்துபோனதாக காட்டுகிறார்கள்.  பிறகு, அதிக காலமெல்லாம் ஆகவில்லை. அதே மாவீரன் மீண்டும் பிறக்கிறான். டார்க் ஆர்ட்ஸ்  என்ற தற்காப்புக்கலை கற்றதால் கொல்லப்பட்டவன், மீண்டும் அதே கலையை நினைவில் கொண்டு பிறக்கிறான். முற்பிறவி நினைவுகளுடன் நகரத்தின் தலைவர் வீட்டில் பிறக்கிறான். முற்காலத்தில், அனாதை. ஆனால் புதிய மறுபிறப்பில் குடும்பம், பெற்றோர். தங்கை, குறிப்பாக வீடு, செல்வம் என அனைத்துமே இருக்கிறது.  மாவீரனைப் பொறுத்தவரை தனது உலகத்தை ஆளும் ஆசையை அவன் கைவிடவில்ல

போரைத் தடுக்க நினைக்கும் மவுண்ட் குவா இனக்குழுவைச் சேர்ந்த வாள் துறவியின் சாகசங்கள்!

படம்
  வல்கானிக் ஏஜ்  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம்  160 அத்தியாயங்கள்  மவுண்ட் குவா செக்ட்டைச் சேர்ந்த பெரிய தலைவர்களில் ஒருவர். மரணப்படுக்கையில் கிடக்கிறார். நிறைய விஷயங்களை அறிந்திருந்தாலும் அதைப் பயன்படுத்தி நினைத்த வெற்றிகளை அவரால் அடைய முடியவில்லை. குறிப்பாக காதல் இல்லை, திருமணம் இல்லை. நட்பு இல்லை. தொடர்புகள் இல்லை. இதனால் சாகும் நிலையில் வருத்தப்படுகிறார். நாம் நினைத்தது போல சந்தோஷமாக வாழ முடியவில்லையே என.... அந்த உயிர் அப்படியே மவுண்ட் குவாவில் உள்ள எட்டு வயதான சிறுவனின் உடலில் புகுகிறது.  அந்த சிறுவனின் பெயர் ஜூ சூ சியோன். அவனுக்கு இப்போது, மூத்த தலைவரின் நினைவுகள் இருக்கின்றன. அதை வைத்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களை முன்னதாக அறிந்து அதை தனக்கு எப்படி சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் என்பதே கதை.  ஜூவின் மாஸ்டர் ஓவியத்தில் ஆண் போல இருக்கிறார். ஆனால் உரையாடலில் அவரை பெண்பாலாக குறிப்பிடுகிறார்கள். இது கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. இருந்தால் கதையின் போக்கில் நாம் அவரை ஆண்பாலாகவே புரிந்துகொள்வோம். மவுண்ட் குவா செக்ட், தாவோயிசத்தை கடைபிடிக்கும் துறவி மடம். எனவே, அங்குள

நீலி பழிக்குப்பழி வாங்கினானா? - கடவுள் மற்றும் சாத்தானின் கதை!

படம்
தி டேல்ஸ் ஆப் டிமோன்ஸ் அண்ட் காட்ஸ் ஜப்பான் அனிமே மேட் ஸ்னெய்ல் 224 அத்தியாயங்கள் முந்தைய பிறவியில் மன்னர் ஒருவரால் கொல்லப்படும் நீலி, எப்படி மீண்டும் குளோரி சிட்டியில் பிறந்து எதிரிகளின் வாலை ஒட்ட நறுக்கி, தன்னைக் கொன்ற மன்னரை போட்டுத்தள்ளுகிறார் என்பதே இந்த மாங்கா காமிக்ஸின் கதை. கதை இன்னும் முடியவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். பதிமூன்று வயது சிறுவன் நீலி, வகுப்பறையில் தனது முந்தைய காலத்தை நினைவுகூர்கிறான். மெல்ல நிகழ்காலத்திற்கு வந்தால் ஆசிரியர் வருணபேத த்தைக் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். அதாவது, இவர்களுக்கு இது இதுதான் வரும் என. கோபத்தில் கொந்தளிக்கும் நீலி, இரண்டு மாதங்களில் சில்வர் ரேங்க் வரை வந்துகாட்டுகிறேன் என சவால் விடுகிறான். முதலில் அனைவரும் சிரித்தாலும்,. அவனையொத்த பொருளாதார ரீதியாக தாழ்ந்த குடும்ப வாரிசுகள் ஐவர் அவனை தங்களது முன்னோடியாக பார்க்க நாயகன் உருவாகிறான் மொமண்ட். உண்மையில் நீலி யார் என்ற உண்மை 224 அத்தியாயங்களிலம் சொல்லப்படவில்லை என்பதுதான் ட்விஸ்ட். அவன் முன்னதாகவே பல்வேறு மந்திரங்கள் ஆயுதங்களைக் கற்றிருக்கிறான். எனவே மேல்சாத