இடுகைகள்

ஆன்டிபயாடிக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் பிளேக் நோய்!

படம்
  2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பிளேக் நோய், வளர்ப்பு பிராணியான பூனை மூலம் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஒரேகானில் பிளேக் நோயை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உயிர் எதிரி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. பிளேக் நோயை ஏற்படுத்திய பூனைக்கும் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் அதை காப்பாற்ற முடியவில்லை. ஐரோப்பாவில் 1346 -1353 காலத்தில் ஏற்பட்ட பிளேக் நோயால் 50 மில்லியன் மக்கள் இறந்தனர். இதை கருப்பு மரணம் என்று அழைத்தனர்.  பிளேக் நோய், யெர்சினா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா விலங்குகளிடம் காணப்படுகிறது. அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த பாக்டீரியா நுண்ணுயிரிகளை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பில் பார்க்க முடியும்.  நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கடிப்பதன் வழியாக, அதன் உடலில் உள்ள எச்சில், மலம், சிறுநீர் வழியாக, பாதிக்கப்பட்ட விலங்கிடமிருந்து கிருமிகள் மனிதர்களின் நுரையீரலுக்கு செல்வதன் மூலம் என பிளேக் நோய் பரவ மூன்று காரணங்கள் உள்ளன. ஒருவரின் உடலில் பாக்டீரியா சென்ற பிறகு, அவருக்கு காய்ச்சல், தலைவலி, பலவீனம், உடலில் வலி, தளர்ச்சி ஆகிய அறி

நுண்ணுயிரிகளிடமிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் ஆன்டிபயாடிக்!

படம்
  நோய்களின் அரண் - முறிமருந்து(Antibiotic) நமது இயற்கைச்சூழலில் ஏராளமான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. நமது உடலிலும் கூட வாழ்கின்றன. ஒருவருக்கு நிம்மோனியா எனும் காய்ச்சல் ஏற்பட பாக்டீரியா எனும் நுண்ணுயிரிகளே முக்கியக் காரணம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை தடுக்க முதலில் மருத்துவர்கள் தடுமாறினர். பிறகுதான், நோய்க்கு காரணமான நுண்ணுயிரிகளை தடுக்கும்  வேறுவகை நுண்ணுயிரிகள் உண்டு என்பதை கண்டறிந்தனர். இப்படி சிலவகை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளிடமிருந்து பெறும் வேதிப்பொருட்களை ஆன்டிபயாடிக்காக (முறி மருந்து) பயன்படுத்தினர்.  இந்த கண்டுபிடிப்பு மூலம் தீர்க்கவே முடியாது என கருதப்பட்ட பாக்டீரியா தொடர்பான நோய்களை எளிதாக  குணமாக்க முடிந்தது. தற்போது தயாரிக்கப்படும் முறிமருந்துகளுக்கு, ஆதாரமாக ஸ்ட்ரெப்டோமைசிஸ் (Streptomyces) எனும் பாக்டீரியாக்களை பயன்படுத்துகின்றனர். இந்த பாக்டீரியா, பெரும் காலனியாக வளர்ந்து பெருகுகிறது.  பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முறிமருந்துகளை நெடுங்காலமாக மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, நோய் உண்டாக்கும் பாக்டீரியங்கள் மெல்ல வலுப்பெற்று வருகின்றன. ஸ்டேபிலோகாக்

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!

படம்
unsplash ஆபத்தை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகள்!  ஆன்டிபயாடிக் மருந்துகளை இந்தியர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 2050இல் உலகமெங்கும் இப்பாதிப்பிற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நைஜீரியா, ஜாம்பியா போன்ற நாடுகளில் ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வாங்கி உண்ணுகிறார்கள். இதன் விளைவாக , அவர்களின் உடலில் நோய்களுக்கு எதிராக ஆன்டிபயாடிக் மருந்துகளின் செயல்பாட்டுத் திறன் குன்றுகிறது. இதுபற்றி பற்றிய தகவல்களைக் கொண்ட மருந்து பாதுகாப்பு பட்டியல் (DRI) தயாரிக்கப்பட்டது. இதனை சிடிடிஇபி, வாஷிங்டன் மற்றும் ரோலின்ஸ் சுகாதாரப் பள்ளி, ஜார்ஜியாவிலுள்ள இமோரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ளனர். இதில் தெரிய வந்துள்ள உண்மை, இந்தியா ஆன்டிபயாடிக் மருந்துகளைக்  கையாளுவதில் மிக மோசமான நிலையில் உள்ளது என்பதுதான். இதுபற்றி லான்சட் இதழ் 2017ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், 2002 முதல் 2012 வரையில் ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது பற்றி குறிப்பிடப்பட

நீலநிற சீஸ் என்ன செய்யும்?

படம்
மிஸ்டர் ரோனி நீலநிற சீஸை உண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுமா? சரிவிகிதமான உணவைச் சாப்பிட்டால்தான் உடல் சரியாக இயங்கும். நீங்கள் கூறும் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் மட்டும் பாக்டீரியாக்களை எதிர்கொள்வதற்கான வழி பிறந்துவிடாது. ஆன்டி பயாடிக் மருந்துகள் கூட இன்று பாக்டீரியாக்களுக்கு எதிராக தேங்கி விட்டன. பாக்டீரியாக்களில் பலவீனமாக உள்ளவற்றை மட்டுமே அவை எதிர்கொண்டு தாக்கி அழிக்கின்றன. பென்சிலினை சீஸ் தயாரிப்பில் பயன்படுத்தினால் நீங்கள் சொன்னது போல, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்காது. வயிற்றிலுள்ள நன்மை, கெடுதல் செய்யும் பாக்டீரியா என அனைத்துமே அழியும் விளைவுதான் ஏற்படும். எனவே மருந்தை மருந்தாக பயன்படுத்துவதே நல்லது. நன்றி - பிபிசி

ஆன்டிபயாடிக் அபாயம்! - மக்களை பலிகொள்ளும் துயரம்!

படம்
மிஸ்டர் ரோனி வெப்பமயமாதலை ஆன்டிபயாடிக் அதிகரிக்கிறதா? பென்சிலின் எதிர் நுண்ணுயிரி என்று நீங்கள் அறிவீர்கள். அதன் பின்னரே காயங்கள் பட்டு இறக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டனர். நோய்த்தொற்று என்பது அவ்வளவு கொடுமையானதாக அன்று இருந்தது. இன்றும் கூட பல்வேறு உறுப்பு மாற்ற சிகிச்சைகள், முக்கியமான அறுவை சிகிச்சைகளில் எதிர் நுண்ணுயிரி மருந்துகளின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. ஆனால் தொட்டதற்கெல்லாம் இவற்றை நீங்கள் பயன்படுத்தினால் நம்மைத் தாக்கும் கிருமிகள் வலிமை பெற்று எழும். மீண்டும் இவை நம்மைத் தாக்கும்போது எதிர் நுண்ணுயிரி மருந்து வேலை செய்யாது. இதன் காரணமாக எதிர் நுண்ணுயிரி மருந்துகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள் என பிரசாரம் செய்து வருகின்றனர். தற்போது உலகில் பல நாடுகளிலும் நோய்த்தொற்று காரணமாக  ஏழு லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த எண்ணிக்கை இனி குறையாது. இன்னும் கோடிகளுக்கு மேல் பலியாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை. ஆன்டி பயாடிக்கை நான் பயன்படுத்தவே இல்லை என்று யாரும் கூறமுடியாது. நாம் குடிக்கும் பாலில் ஏராளம