இடுகைகள்

சாவர்க்கர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கருணை மனுக்கள் மூலம் சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் கெஞ்சியது சங்கடமானது! - டாக்டர் வினய் லால், வரலாற்றுத்துறை பேராசிரியர்

படம்
  டாக்டர் வினய் லால் டாக்டர் வினய் லால் இவர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். தி ஹிஸ்டரி ஆப் ஹிஸ்டரி, இன்ட்ரோடியூசிங் ஹிஸ்டரி, தி அதர் இண்டியன்ஸ் எ பொலிட்டிகல் அண்ட் கல்ச்சுரல் ஹிஸ்டரி ஆப் சவுத் ஆசியன்ஸ் இன் அமெரிக்கா ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அவரிடம் இந்திய அரசியல் நிலை, வரலாறு பற்றி பேசினோம்.  சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் எழுத காந்திதான் பரிந்துரைத்தார் என ராணுவ அமைச்சர ராஜ்நாத்சிங் கூறியிருக்கிறார். இது உண்மையா? இந்துத்துவ தலைவர்கள் சுதந்திரப் போராட்டத்திற்காக போராடினார்களா? இதில் உங்கள் கருத்து என்ன? சாவர்க்கரின் நூல்களைப் படித்து விட்ட ராணுவ அமைச்சருக்கு முன்னரே பலரும் காந்திதான் கருணை மனுவுக்கு மனு செய்ய உதவினார் என்று கூறி வந்தனர். ஆனால் இது ஆதாரமே இல்லாத அப்பட்டமான பொய். இதில் பல்வேறு புனைவுகளும் வதந்திகளும்தான் உள்ளன. ஏஜி நூரானி எழுதிய சாவர்க்கர் அண்ட் இந்துத்துவா தி கோட்ஸே கனெக்ஷன் (2002) என்ற நூலில் சாவர்க்கர் எழுதிய கருணை மனுக்களை ஒருவர் எளிதாக அடையாளம் கண்டு வாசிக்க முடியும். அதில் சாவர்க்கர் பரிதா