இடுகைகள்

பாலியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் சீண்டல் வழக்குகளில் நேரடி சாட்சியங்களின் உண்மைத்தன்மை!

படம்
  1979ஆம் ஆண்டு, லாஃப்டஸ் ஐவிட்னஸ் டெஸ்டிமோனி என்ற நூலை எழுதினார். இதில் விபத்து நடக்கும்போது அதைப் பார்க்கும் நேரடி சாட்சியங்கள் எப்படி தகவல்களை தவறாக புனைந்து கூறுகிறார்கள் என்பதை செய்த ஆய்வுகளின் மூலம் விளக்கியிருந்தார்.  பின்னாளில் லாஃப்டஸ், தடயவியல் உளவியல் மீது ஆர்வம் கொண்டார். 1980ஆம் ஆண்டு குழந்தைகள் மீது பாலியல் சீண்டல் பற்றிய வழக்கில் அவர் வல்லுநராக இயங்கி இருந்தார். நினைவுகள் என்பது காலப்போக்கில் பல்வேறு தவறான தகவல்களால் மாறுகிறது. தவறான தகவல்களால் நிரம்புகிறது என்பதை அடையாளம் கண்டார். ஆனால் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பது எளிதாக இல்லை.  தொண்ணூறுகளில் ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. இதில் ஜார்ஜ் ஃபிராங்களின் என்பவர், தனது மகள் எய்லீனின் தோழியைக் கொன்றார் என்பது காவல்துறையின் வழக்கு. ஆனால் இதில் நேரடி சாட்சியான எய்லீன் கூறிய தகவல்கள் நிறைய மாறுபட்டன. பல்வேறு முறை அவை தவறாகவும் இருந்தன. ஆனாலும் நீதிமன்ற ஜூரிகள், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனையை வழங்க பரிந்துரைத்தனர். தவறுதலாக பல்வேறு விஷயங்களை சேர்த்து, இணைத்து நினைவுபடுத்திக் கூறுவதைஃபால்ஸ் மெமரி சிண்ட்ரோம் என்று உளவிய

கொத்தடிமைகளை மீட்ட பார்வதி அம்மாள்!

படம்
”என்னுடைய அப்பா, அவரது நண்பரிடம் 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதனால் அவரிடம் நான் வேலை  செய்யும்படி சூழல் உருவானது. அப்பாவின் நண்பர் செங்கல் சூளை ஒன்றைத் தொடங்கினார். எனவே, எங்கள் குடும்பம் அங்கு வேலை செய்யத் தொடங்கியது. அதுதான் கொத்தடிமை முறை என்பது எனக்கு தெரியாது. ” செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றதும் பார்வதியின் கல்வி தடைபட்டது. தாத்தா, பாட்டி பார்வதியை பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினர். பள்ளியில் பிள்ளைகளை அடிப்பார்கள் என்று கூறி தடுத்துவிட்டனர். இதனால் வேலை மட்டுமே பார்வதி அம்மாள் அறிந்த விஷயம். காலையில் எழுந்தவுடன் பெற்றோருடன் வேலைக்கு செல்வார். பின்னாளில் மரம் வெட்டும் வேலைகளுக்கு சென்றார். இந்த வேலை, பார்வதியின் மாமனார் அவரது திருமணத்திற்காக வாங்கிய 2 ஆயிரம் ரூபாய் கடனுக்காக செய்யும்படி ஆனது.  பார்வதியும் அவரது கணவரும் அந்த செங்கல் சூளையில் சில ஆண்டுகள் வேலை செய்து கடனை கழித்தபிறகு வேறு சூளைக்கு மாறினார்கள். அங்கு முதலாளியிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்கள். இத்தொகையை வைத்து வீட்டுக்கு குடியேறி வாழ நினைத்தனர். இதற்குள் பிறந்த மூன்று குழந்தைகளை பார்வதி, அவரின்

போக்சோ சட்டத்திற்கு வயது 10!

படம்
  1 வரும் நவம்பர் மாதம் வந்தால் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல், குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டத்திற்கு வயது 10 ஆகப்போகிறது.  2012ஆம் ஆண்டு மே 22 அன்று போக்சோ சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. உறுப்பினர்கள் வாக்களித்து ஏற்கப்பட்டு நவம்பர் 14 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் ஆபாசப்படும், பாலியல் சுரண்டல், வல்லுறவு செய்யப்படும், சீண்டப்படும் குழந்தைகளை பாதுகாக்க முடியும். இதற்கான விசாரணைகள் அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையான வழியில் இருக்கும். இதுதான் சட்டத்தின் சிறப்பம்சம்.  நகரங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள்  திருச்சி - 177 சென்னை - 1404 கோவை - 284 சேலம் - 361  மதுரை -440 திருநெல்வேலி - 198  திருப்பூர் - 187 2012ஆம் ஆண்டு போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -43 2020ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -3,187 2 கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின், பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த வழக்குகளை வேகமாக பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசினார்

பாலியல் தொழிலில் ஈடுபடும் சிறுமிகளை மீட்கும் பெண்மணி! - சோனல் கபூரின் மகத்தான சாதனை

படம்
  சோனல் கபூர், பிராட்சகான் இந்தியா பௌண்டேஷன் இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் கூட சோனல் கபூரால் அந்த நாட்களை மறக்கமுடியவில்லை. அந்த நாட்கள் என்று சொல்லுவது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த சம்பவம்தான். அப்போது சோனல் கபூர் குடிசைப்பகுதிக்கு தனது விளம்பர பணி காரணமாக சென்றிருந்தார். அங்குதான் ஒரு பெண்ணை சந்தித்தார். அவருக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். ஏழாவது குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்தார். இத்தனை குழந்தைகள் இருந்தால் இவர்களுக்கான உணவிற்கு என்ன செய்வது? வறுமையில்தான் இருந்தார்கள்.  வேறு வழியில்லாத அந்த தாயார் தனது மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருந்தார். இதைப் பார்த்த சோனல் கபூர் அதிர்ந்து போனார். இப்படியெல்லாம் நடக்குமா என்றவர், அதை சரி செய்ய முயன்றார். இதற்காகவே மும்பையின் சேரி பகுதியில் திறன்களை வளர்ப்பதற்கான ஒற்றை அறை கொண்ட அலுவலகத்தை தொடங்கினார். இதன் மூலமே ஏராளமான சிறுமிகளை பாலியல் தொழிலிலிருந்து மீட்டு சமூகத்தில் பொறுப்பான பகுதியில் வாழும்படி செய்திருக்கிறார். இப்படித்தான் பிராட்சகான் இந்தியா என்ற அமைப்பு உருவானது. இதன் மூலம் 81 ஆயிரம் ஏழை சிறுமிகள் பயன் பெற்றிருக்கிறார்

வரலாற்றை திருத்தி எழுதி அதனை அரசியலுக்க சில கட்சிகள் பயன்படுத்துகின்றன! - பேராசிரியர் உபீந்தர் சிங், வரலாறு, அசோகா பல்கலைக்கழகம்

படம்
  உபீந்தர் சிங் உபீந்தர் சிங் பேராசிரியர் வரலாற்றுத்துறை அசோகா பல்கலைக்கழகம் நீங்கள் எழுதியுள்ள நூலில் தொன்மை இந்தியா பற்றி பேசியுள்ளீர்கள். அதில் மதங்களுக்கு இடையில் பன்மைத்தன்மை இருப்பதோடு மதரீதியான வன்முறைகளும் இருப்பதைக் கூறியுள்ளீர்கள்.  தொன்மைக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதற்காக நிறைய நேரத்தையும் ஆற்றலையும் செலவழித்துதான் ஆக வேண்டும். அகிம்சை, வன்முறை, கடவுள் நம்பிக்கை, நாத்திகம், சமூக பாகுபாடு பற்றி நான் நூலில் எழுதியுள்ளேன். இன்று மத வேறுபாடுகள் உருவாக்கப்படுவதைப் போலவே அன்றும் மத சம்பந்தமாக பிரச்னைகள் இருந்தன. அசோகர் பௌத்தத்தைப் பின்பற்றினார். மதம் தொடர்பான பன்மைத்துவத்தை கோட்பாடு அளவில் உருவாக்கினார். ஆனால் பிற அரசர்கள் இந்த அளவு யோசிக்கவில்லை. அவர்கள் இருக்கும் மத அமைப்புகளை அப்படியே பராமரித்தனர். மதங்களை பின்பற்றுவதில் பன்மைத்தன்மை நிலவியது.  அதேசமயம் மதரீதியான வன்முறைகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பௌத்த நூலான சூலவம்சத்தில் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. பல்லவர்களின் ராணுவம் இலங்கையில் உள்ள அனுராதபுரத்தின் புத்த சிலைகளை கொள்ளையடித்தது பற்ற

விடாது துரத்தும் காமவெறி - பெட்ரோ லோபெசின் அவல வாழ்க்கை!

படம்
கொலை அணிவகுப்பு அசுரகுலம் பெட்ரோ லோபெஸ் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். ஏறத்தாழ 350க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற சாதனையாளர். 1948ஆம் ஆண்டு பிறந்தார். இவரது அம்மா, விலைமாதாக இருந்தார். மொத்தம் பதிமூன்று பிள்ளைகள். அதில் எட்டாவது ஆள், லோபெஸ். சிறுவயதில், தன் சகோதரியின் மார்பை பிடித்து விளையாடியதை அம்மா பார்த்து வெறியானார். மகனை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன்பிறகு அவனை தன் மகனாக அங்கு சேர்த்துக்கொள்ளவில்லை. அதன் விளைவை பின்னர் சமூகம் அனுபவித்தது. தெருவுக்கு வந்தவர் என்ன செய்வார்கள்? அதேதான் கைகளை ஏந்தி பிச்சை எடுக்கத் தொடங்கினார். அப்போது சிரித்தமுகமாக குழந்தைகளுக்கு உதவுவதாக வாலிபர் ஒருவர் வந்தார். லோபெசுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்தார். ஆனால் பதிலுக்கு லோபெஸை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்தார் கருணை வாலிபர். எரிச்சலான லோபெஸ், அந்த காப்பகத்திலிருந்து சிறுமிகள் மீது பாய்ந்து வேட்டையாடினார். ஓநாயைப் பார்த்து ஆடு மிரள்வது போல பீதியான சிறுமிகள் புகார் கொடுத்தால், இனிமேல் அப்படி நடந்துகொள்ளமாட்டேன். சாமி சத்தியமாக என்று சர்க்கரை பொங்கலாக பேசுவார் ல

கருணையற்ற கொலைகாரன் - பிடிகே

படம்
பள்ளியில் படித்தபோது மிகச்சிறப்பான மாணவர் அல்ல. சுமாராக திரியும் கூட்டத்தில் ஓர் மாணவர் மட்டுமே. பின் கல்லூரியிலும் பெரியளவு பெயர் பெறவில்லை. நாம் எல்லோரும் அப்படித்தான் கடந்து வந்திருப்போம். டென்னிஸ் ரேடாரும் அப்படித்தான் வளர்ந்தார். படித்தார். அவர் 30 ஆண்டுகளாக மறைத்து வந்த ரகசியம் ஒன்று உண்டு. அதுதான் அவர் சீரியல் கொலைகாரன் என்பது. அதனை அவர் தன் மனைவியிடம் கூட வெளிப்படித்தியிருக்கவில்லை. அதற்கான அறிகுறிகளைக் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. மதிப்பான மனிதர்கள், குடும்பம் இருந்தது. பள்ளி ஸ்கவுட் குழுவில் இடம்பெற்றவர், பின்னர், தேவாலய பிரார்த்தனை குழுவின் தலைவராக இருந்தார். விபத்து, கொலை பற்றிய செய்திகளை கேட்டாலே பதறி வேறுபுறம் செல்பவர் பத்து பேர்களுக்கும் மேற்பட்டவர்களை கொன்று புதைத்தார் என்றால் நம்புவீர்களா? டென்னிஸ் ரேடார் பிடிபட்டபோது, அவரது குடும்பம் பதறியது. அவரது மகள் எனக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுத்தவர் இப்படி செய்திருப்பாரா என்று கேட்டார். பின்னர் போலீஸ் எடுத்துச் சொல்லியதும்,  எனது தந்தை தவறான விஷயங்களிலிருந்து சரியான விஷயங்களுக்கு வழிகாட்டி உள்ளார் என்று கூறி பே

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

படம்
இன்ஸ்டாகிராம் செக்ஸ் தொழில் ஜரூர்..... மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஏதாவது ஒரு குற்றம் நடைபெற்றுக்கொண்டே இருப்பது வாடிக்கை. முதலில் ஃபேஸ்புக்கில் வாழ்க்கை நடத்தியவர்கள், இப்போது இன்ஸ்டாவுக்கு நகர்ந்து விட்டனர். தற்போது செக்ஸ் வியாபாரமும் டிஜிட்டல் வடிவில் இன்ஸ்டாவுக்கு நகர்ந்திருக்கிறது. மேலே பார்த்த படம் சின்ன சாம்பிள்தான். இதே போல மஸ்த்தி வித் சோனா உள்ளிட்ட பெயர்களில் செக்ஸ் வியாபாரம் ஜோராக நடைபெறுகிறது. 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வீடியோ, ஆடியோ  படங்கள் என அனைத்தும் கிடைக்கிறது. இதில் வாட்ஸ் அப் வழியாக வீடியோ பார்க்கும் வசதியையும் செக்ஸ் குழு அளிக்கிறது. டிஜிட்டல் இந்தியா மோடியை நினைத்துக்கொள்ளுங்கள். தைரியம் தானாக வரும்.  சரி சந்தோஷத்தை அனுபவிக்க பணத்தை எப்படிக்கட்டுவது, யெஸ். பணமதிப்பு நீக்கத்தில் உயரத்துக்கு வந்த பேடிஎம்தான் இருக்கிறதே? முன்பின் தெரியாதவர்களை எப்படி நம்புவது என்றால் செக்ஸ் குழுவும் அதேதான் கூறுகிறது. நம்பாவிட்டால் சேவை கிடையாது. கிடைக்காது. இதிலுள்ள எண்களை அவ்வளவு எளிதாக அணுக முடியாது. முடிந்தளவு இணையத்தை ஊடகமாக பயன்படுத்து