இடுகைகள்

-Mr.ரோனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எடை குறைப்பிற்காக சாப்பிடும் உணவைக் குறைக்கவேண்டுமா? - மிஸ்டர் ரோனி

படம்
  எடை குறைப்பு கேள்விகள் எடை குறைப்புக்காக குறைந்தளவு உணவை சாப்பிட்டாலும் போதுமா? ஒருவரின் உடல் அமைப்பு, அவர் செய்யும் வேலை பொறுத்து சாப்பிடும் உணவின் அளவு மாறுபடும். வேலையைப் பொறுத்து ஒருவர் தனது   சாப்பிடும் இடைவேளையை அமைத்துக்கொள்ளலாம். மூன்று வேளை உணவு என்பது கட்டாயமல்ல. பசித்தபிறகு சாப்பிடுவது நல்லது. உடலுக்கு உணவு என்பது அடிப்படையானது. எனவே, உடலின் பசித் தேவையைப் பொறுத்து உணவை சாப்பிடுவது நல்லது. ஊட்டச்சத்தான முறையில் உணவை அமைத்துக்கொள்வது சிறந்தது. பல்வேறு வகை சத்துகளை கொண்டதாக உணவை அமைத்துக்கொண்டால் வயிறு நிறைந்துவிட்ட உணவு ஏற்படும். உடல் எடை குறைப்பதில், உடல் உறுப்புகளுக்கான அவசிய சத்துகள் கிடைப்பதை மறந்துவிடக்கூடாது.   கவலை, மகிழ்ச்சி ஆகிய உணர்வுகள் மேலோங்கும்போது, உணவு சாப்பிடுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்வது முக்கியம். இவையே உடல் பருமனை ஊக்குவிக்கிறது. எடை குறைவை உறுதிப்படுத்துவது எப்படி? தினசரி காலையில் எடை மெஷின் மீது ஏறி நின்று எடை குறைந்ததா என்று பார்க்க அவசியமில்லை. வாரத்திற்கு ஒருமுறை எடையை சோதித்தால் போதுமானது. தினசரி செய்யும் உடற்பயிற்சி, நீர், எடுத்துக்

முட்டையின் சுவை மாறுபட்டுக்கொண்டே இருப்பதற்கு காரணம்! - மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
        cc           மிஸ்டர் ரோனி கால்பந்து போட்டிகளை நாம் பார்வையாளர்களின் கூச்சல் இன்றி பார்ப்பது ஏன் வினோதமாக தோன்றுகிறது ? விளையாட்டு மைதானத்தில் நேரடியாக பார்க்க எதற்கு செல்கிறார்கள் . அந்த நேரத்தில் குழுவாக மக்கள் எழுப்பும் பரவசமான கூச்சல் , சந்தோஷம் , கோபம் என உணர்ச்சிகளின் பீறிடலுக்காகத்தான் . அந்த தன்மை டிவியில் பார்க்கும்போது கிடைக்காது . அதேசமயம் பார்வையாளர்களே இல்லாத மைதானத்தில் விளையாடும்போது வீரர்களுக்கு அந்த சூழ்நிலையை எதிர்கொள்வது கடினமாகவே இருக்கும் . இனிமேல் நேரடி போட்டியை ஒளிபரப்பினாலும் கூட அதில் செயற்கையான ஒலியை உருவாக்கி பார்வையாளர்களை டிவி சேனல்கள் பார்க்க வைப்பார்கள் . ஆனால் அது நிச்சயம் பொருந்தாத ஒன்று . ஆனால் இன்றைய பெருந்தொற்று சூழலில் நமக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது ? உயிரைக் காத்துக்கொள்வதே முக்கியம் . அதற்குப்பிறகுதான் மற்றவை . பொதுமுடக்க காலத்தில் பலரும் தினசரி நடக்கும் பத்தாயிரம் அடிகள் என்பது ஏழாயிரமாக மாறியுள்ளது . இது ஆரோக்கியத்திற்கு கெடுதலா ? தினசரி பத்தாயிரம் அடிகள் நடக்கவேண்டும் என்பது ஒன்றும் மந்திரச்சொல் அல்ல .

ஆண்களின் வழுக்கைத் தலை அதிகரிப்புக்கு மரபணுக்கள்தான் காரணம்! - மிஸ்டர் ரோனி

படம்
மனிதர்களின் காது அமைப்பு வித்தியாசமாக இருக்கிறதே? இந்த அமைப்பை டிரைகஸ் என்று கூறுவார்கள். மிகப்பெரிய பயன் என்று இந்த அமைப்பில் ஏதும் கிடையாது. கேட்கும் ஒலியை தெளிவாக ஊக்கப்படுத்தி உள்ளே அனுப்புகிற பணியை இந்த அமைப்பு செய்கிறது. கண்களுக்கு கீழே கேரிபேக் போல கருவளையம் உருவாக என்ன காரணம்? உடலில் ரத்த ஓட்டம் சரியாக ஓடவில்லை என்று அர்த்தம். இது முதல் காரணம் என்று கொள்ளுங்கள். அடுத்து சரியான உணவு, தூக்கம், முதுமை ஆகியவை அடுத்தடுத்த காரணங்கள். கண்களுக்கு கீழே கருப்பாக கேரிபேக் போல மாறுவது, அதில் நீர் கோர்ப்பதால்தான். ஆண்களில் அதிகம் பேருக்கு வழுக்கை தலை ஏற்படுவது ஏன்? இதை பெண்களை ஒப்பிட்டு கேட்க நினைத்திருக்கலாம். அனைத்து பிரச்னைக்கும் காரணம் என பிரதமர் மோடி சொல்வது போல நாம் ஹார்மோன், மரபணுக்கள் பக்கள் கைகாட்டுவதுதான் ஒரே வழி. இதில் டெஸ்டோஸ்டிரோன் உச்சமானால் இந்த பாதிப்பு. அதேசமயம் இந்த ஹார்மோன் அளவு பெண்களுகு குறைவாக உள்ளது. அதனால் அவர்களுக்கு தலைமுடி கொட்டி வழுக்கை ஆவது குறைவாக உள்ளது. உடலில் சிராய்ப்பு ஏற்பட்டால் அது ஏன் நீலம் அல்லது மஞ்சள் நிறமாக உள்ளது? சைக்கிள் ஓட்டும்போது

உடலில் அரிப்பு ஏற்படுவது இந்தகாரணத்தால்தான்! - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி உடலில் அரிப்பு ஏற்படுவது எதனால்? உடல் செல்களில் ஒவ்வாமை அல்லது தேனீ கொட்டுவது, எறும்பு கடிப்பது போன்ற செயல்களின்போது நாம் தோலை வேகமாக சொரிகிறோம். காரணம், செல்களில் சுரக்கும் ஹிஸ்டாமைன் என்ற டிரான்ஸ்மிட்டரே இதற்கு காரணம். செல்லிலுள்ள இந்த வகை பொருளே மூளைக்கு தகவல் கொடுத்து குறிப்பிட்ட இடத்தில் அரிப்பதற்கான தன்மையை ஏற்படுத்துகிறது. கண்களை சிமிட்டுவது எதற்கு? காதலைச் சொல்ல, சில்மிஷங்களை மறைக்க என பல ஜெகஜால வேலைகளுக்கு கண்களை நாம் சிமிட்டுகிறோம். இமைப்பது தானியங்கி செயல்பாடு. உண்மையில் கண்களை நாம் இமைப்பது கண்களிலுள்ள ஈரம் வற்றாமல் இருக்கவும், தூசிகள் உட்புகாமல் தடுப்பதற்கும்தான். ஒருவகையில் கண்கள் சுத்தமாக இருப்பதற்கு கண்சிமிட்டுதல் உதவுகிறது. விபத்தில் கை, கால் உள்ளிட்ட உறுப்புகளை இழந்தவர்களுக்கு வலி ஏற்படுமா? உறுப்புகளை இழந்திருக்கலாம். ஆனால் அதற்கான நரம்புகள் அங்குதானே இருக்கும். எனவே கண்டிப்பாக அவர்களுக்கு வலி தோன்றும். காரணம் அங்குள்ள நரம்பு செல்கள் மூளைக்கு உறுப்பு காணோமே ப்ரோ என அடிக்கடி டேட்டாபேக் தீர்ந்த போனாக சிக்னல் கொடுக்கும். இதனால் அவர்களுக்கு வலி ஏற

மூச்சுக்காற்றை நம்மால் பார்க்க முடிவது எப்படி? மிஸ்டர் ரோனி பதில்கள்

படம்
மிஸ்டர் ரோனி வானவில் வானில் எத்தனை மணி நேரம் நீடித்திருக்கும்? இதற்கு காலவரையறை ஏதுமில்லை. மழை, நீர்த்திவலைகள் மீது ஒளி எவ்வளவு நேரம் பிரதிபலிக்கிறதோ அதைப்பொறுத்து வானவில் வானில் நீடிக்கும். சூரிய ஒளி திவலைகளின் மீது படும் கோணத்தைப் பொறுத்து வானவில்லின் வளைவு அமைகிறது. மண்வாசனைக்கு காரணம் என்ன? மண்ணில்  வாழும் ஆக்டினோமைசீட்ஸ் என்ற பாக்டீரியாக்கள் மழை நீர் பட்டு காற்றில் மேலெழுவதே இதற்கு காரணம். புயல் நிலப்பரப்பிற்கு தோராயமாக எவ்வளவு மழையைக் கொண்டுவருகிறது? புயல் உருவாகும்போது, 1330 பரப்பளவிற்கு மழையைக் கொடுக்கிறது. 22 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களிலுள்ள நீரின் அளவுக்கு   சமமான மழை இது. அனல் காற்று, பஞ்சம் என்ற இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? மழைபொழிவு குறைந்தால் பஞ்சம் ஏற்படுகிறது. அரசு தானியங்களை ஏற்றுமதி செய்து உள்நாட்டு மக்களுக்கு உணவின்றி உருவாக்கப்பட்ட பஞ்சங்களே வரலாற்றில் அதிகம். இயற்கையின் சுழற்சியில் பயிர்களுக்கு பாய்ச்ச நீரின்றி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அனல் காற்று ஏற்படுவது, சூரியவெப்பம் சில மாதங்களில் நினைத்துப் பார்க்க முடியாதபடி திடீரென அதிகரிப்

அறிவியல் செய்திகளில் எது உண்மை? எது பொய்? மிஸ்டர் ரோனி

படம்
நம்பிக்கையும் உண்மையும்!  வைரங்களை வைரங்களால்தான் வெட்ட முடியும் வைரங்களை அறுக்கும் தொழிற்சாலைகள்தான், வைரங்களை அறுக்கும் கருவிகளில் இதனைப் பயன்படுத்துகின்றனர். வைரங்களின் அமைப்பு காரணமாக அதனை கடினமானது என்று கூறுகின்றனர். ஆனால் அனைத்து வைரங்களும் வலிமையானவை என்று கூற முடியாது. வைரத்தின் வடிவமைப்பில் பலவீனமான தன்மைகளும் உண்டு. வண்ணத்துப்பூச்சி கால்களின் மூலம் சுவை அறிகிறது வண்ணத்துப்பூச்சி, பூவின் மீது அல்லது இலையின் மீது அமர்ந்து டார்சி என்ற தனது கால்களின் மீது அதன் சுவையை அறிகிறது. இதற்கு அதன் கால்களிலுள்ள கீமோரெப்டார்ஸ் உதவுகின்றன. இதன்வழியாக அந்த இலை அல்லது பூவிலுள்ள தேனை உண்ணலாமா, வேண்டாமா என்பதை வண்ணத்துப்பூச்சி முடிவெடுக்கிறது. லேசர் கதிர்களை விண்வெளியில் பார்க்க முடியாது ஒளிக்கற்றைகளில் வலிமையானது லேசர் கதிர்கள். இவற்றை நாம் பார்ப்பது, சூழல்களில் உள்ள தூசிகள் மூலம்தான். அதில் லேசர் கதிர்கள் படும்போதுதான், அதன் போட்டான் துகள்களை நம் கண்களால் பார்க்க முடியும். விண்வெளியில் உள்ள வெற்றிடத்தில் லேசர் கதிர்கள் பாய்ந்தாலும் நம்மால் பார்க்கமுடியாது. காரணம், அங்கு லேசர் கதிர்க

இன்னும் எத்தனை கோடிப் பேர்களை பூமி தாங்கும்? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி நாக்கை கடித்துக்கொண்டால் வேகமாக குணமாவது எப்படி? இதற்கு காரணம், நமது எச்சில்தான். அதிலுள்ள ஹிஸ்டாடின் 1 என்ற அமினோ அமிலம் சேதமடைந்த செல்களை வேகமாக மாற்றி புதிய செல்களை அங்கு உருவாக்குகிறது. காயமான உடலிலும் கூட இந்த அமினோ அமிலம்தான் புதிய செல்களை உருவாக்கி காயத்தை ஆற்றுகிறது.  ஆப்பிளை கடித்தவுடன் அதன் நிறம் பழுப்பாக மாறுவது ஏன்? அதிலுள்ள டானிஸ் என்ற என்சைம் ஆக்சிஜனுடன் வினைபுரிந்து பழுப்பு நிறத்தை உருவாக்குகிறது., எனவே ஒரு கடி கடித்துவிட்டு அப்படியே விடாமல் முழுக்க சாப்பிட்டால் இதுபோன்ற கேள்விகளை உங்களுக்கு கேட்கத் தோன்றாது. ஆப்பிளிலுள்ள என்சைம் அதன் வகைகளைப் பொறுத்து மாறும். ஆப்பிள் நீங்கள் அணில் போல கடித்து கொறித்த தடம் மாறாமல் இருக்க, அதனை நீரில் அல்லது சர்க்கரையில் வைக்கவேண்டும். இப்போது ஆக்சிஜன் மூலம் ஏற்படும் வேதிவினை நிகழாது.  எத்தனை கோடி மக்கள் வாழ்வதற்கு பூமி உதவும்? பத்து அல்லது பதினொரு பில்லியன் மக்கள் வாழ பூமி உதவும். இப்போது நாம் 7 பில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டிவிட்டோம். இந்த எண்ணிக்கையும் இப்போது கூடி வருகிறது.பூமி மாதா எப்போது வாயைப் பிளப்பாள் என்று தெரியவி

ரியலும் ரீலும் - நமது நம்பிக்கைகளில் எவை உண்மை, எது உடான்ஸ்? - மிஸ்டர் ரோனி பதில்கள்

மிஸ்டர் ரோனி ரியலும் ரீலும் 1. கேரட் சாப்பிட்டால் கண்பார்வை நன்றாக தெரியும் ரியல் - உண்மையில் வைட்டமின் ஏ சத்தை உடலுக்கு ஈர்த்து கொடுக்கும் பீட்டா கரோட்டின் கேரட்டில் உள்ளது . ஆனால் உடல் கேரட்டை கிலோ கணக்கில் நீங்கள் சாப்பிட்டாலும் குறிப்பிட்ட அளவோடு உட்கிரகிப்பதை நிறுத்திவிடும் . எனவே கேரட்டை மட்டும் சாப்பிடாமல் அதோடு சேர்த்து பச்சைக் காய்கறிகளை நிறைய சேர்த்து சாப்பிடுங்கள் . கண்களும் உடலும் சேர்ந்து பலம் பெறும் . 2. சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வந்துவிடும் ரியல் - சர்க்கரையில் செய்த பலகாரங்களை அல்லது சர்க்கரையை அள்ளி தின்றால் நேரடியாக உடல் பாதிக்கப்படாது . உடல்பருமன் பிரச்னை ஏற்படும் இதன் மறைமுகவிளைவாக நீரிழிவு நோய் ஏற்படும் . இதனால் லட்டு , ஜிலேபி , பால்கோவா , பாதுஷா ஆகிய பலகாரங்களை இலவசமாக கொடுத்தாலும் அளவோடு சாப்பிடுங்கள் . மூக்கு பிடிக்க சாப்பிட்டால் கஷ்டப்படப்போவது நீங்கள்தான் . 3. தீப்புண்ணுக்கு ஐஸ் வைக்கக்கூடாது ரியல் - ஆம் அப்படி வைத்தால் அப்புண் மேலும் பெரிதாகி பிரச்னை தரும் . தீப்பட்ட புண்ணை சாதாரண நீரில் கழுவி ஆன்டி செப்டிக் க்ரீ

உள்ளூர் உணவு, உலக உணவு எது சிறப்பானது?

படம்
இன்று நாம் கேஎப்சியில் சிக்கன்களை பக்கெட் ஆபரில் வாங்கி சாப்பிட்டுவிட்டு தாகம் எடுத்தால் கோலா பானங்களை தேடிக்குடிக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் அதே சுவையில் இங்கேயும் கோலா பானங்களை தயாரித்து விற்கிறார்கள்., நிலப்பரப்பிற்கான சுவை என்பது இன்று மெல்ல அழிந்துவருகிறது. அதேசமயம் இதற்கு எதிரான உள்ளூர் உணவுகளை சாப்பிட அறிவுறுத்தும் பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த குழுக்களும் உருவாகி வருகின்றனர்.  உள்ளூர் உணவுவகைகளை ஏன் சாப்பிடவேண்டும்? காரணம் குறிப்பிட்ட உணவு வகைகளை தேடி சாப்பிடத் தொடங்கினால் அதனை குறிப்பிட்ட இடத்திலிருந்து கொண்டு வர பல்வேறு சிரமங்கள் உண்டு,. மேலும் சூழல் மாசுபாட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். திருநெல்வேலி அல்வா என்பது அங்குள்ள நீரில் செய்யப்பட்டு சாப்பிடும்போது அதன் சுவை நன்றாக இருக்கும். அதே சுவையில் இங்கு சாப்பிடவேண்டும் என ஆசைப்படுவது தவறான ஒன்று. அதேபோல நேர்த்தியாக இங்கேயே செய்து சாப்பிடலாம். இதுபோல குறிப்பிட்ட உணவுவகைகளுக்கு டிமாண்ட் ஏற்படுவது அங்குள்ள பல்வேறு இயற்கை வள ஆதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே உள்ளளூர் வகை உணவுகள

உணவு வீணாவதை தடுப்பது எப்படி?

படம்
உணவு உற்பத்தி முறைகளிலும் அதனை பயன்படுத்தும் முறைகளிலும் பெருமளவு உணவு வீணாகி வருகிறது. இதைத்தடுக்க உணவுப்பொருட்களை கவனமாக தேவைக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். வளர்ந்த வளரும் நாடுகளில் உள்ள குறிப்பிட்ட சதவீத மக்கள் உணவின்றி தவிக்கும்போது மற்றொரு இடத்தில் உணவுப்பொருட்கள் தேவையின்றி வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் நமக்கு கிடைக்கும் உணவுப்பொருட்களின் இன்றியமையாத தன்மையை நாம் அறியாததே ஆகும். இம்முறையில் உலகெங்கும வீணாகும் உணவுப் பொருட்களிலிருந்து 3 பில்லியன் டன்கள் பசுமை இல்ல வாயு வெளியாகி உலகை வெப்பப்படுத்தி வருகிறது. அதாவது உலகில் 23 சதவீத விவசாய நிலங்களிலிருந்து பெறும் விளைபொருட்கள் பயன்படுத்தப்படாமல் வீண்டிக்கப்படுகின்றன.  மக்களின் உணவுத்தேவைக்காக விளைவிக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு காய்கறிகள் உணவுகள் வீண்டிக்கப்பட்டு வருகின்றன. இதனை எப்படி தவிர்ப்பது? அருகிலுள்ள காய்கறிகடைகளுக்கு செல்லும்போது தேவையான காய்கறிகளை மட்டும் வாங்குங்கள். உணவு தயாரிக்கும்போது எத்தனை பேர்களுக்கு என திட்டமிட்டு அதனை செய்யுங்கள். முடிந்தவரை ஒட்டுமொத்தமாக காய்கறிகளை வாங்குவதை தவிருங்க

உணவில் தில்லுமுல்லு! - கலப்படத்தின் ஆபத்து

படம்
pixabay பாலில் வேதிப்பொருட்களை கலப்பது, கோதுமை மாவில் சோயா மாவு கலப்பு, எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்பு என கலப்படம் இல்லாத உணவு வணிகம் கிடையாது என்று ஆகிவிட்டது. வணிகத்திற்கு கருணை கிடையாது என்பதால் உணவில் பாரபட்சம் பார்க்காமல் கல், மண், மலிவான எண்ணெய்களை கலந்து விற்கிறார்கள். அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்துவிட்டு மேட் இன் இந்தியா என்று பிரின்ட் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். சாதாரண உணவில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய சற்று கூர்மையான நாக்கும் அறிவும் தேவை. 2013ஆம் ஆண்டு உலகளவில் டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சிப் பொருட்களை சோதனை செய்தனர். அதில் மாட்டு இறைச்சி என்று எழுதப்பட்ட டின்களில் மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சி உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. கறிகளில் என்ன தீண்டாமனை என அதிலும் கலப்படம் செய்து உலகளவில் மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையை தில்லாலங்கடி ஆட்கள் குலைத்தனர். பால் பொருட்களில் பலரும் தில்லுமுல்லு வேலைகளைச்செய்கிறார்கள். இன்று உங்கள் கையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை பால் பண்ணையில் நான்கு நாட்களுக்கு முன்னரே வேதிப்பொருட்களை சேர்த்து குறிப்பிட்ட

சிறந்த வணிகம் எது?

படம்
pixabay உலகம் முழுக்க நடைபெறும் வியாபாரம் பலதரப்பட்டது. முன்னர் பத்திரிகையாளர் சாய்நாத் தனது நூலில் எழுதியுள்ளது போல இடைத்தரகர்கள் விவசாயிகளின் வாழ்க்கையை சூறையாடினர். இதனால் பல விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கான விலை கிடைக்காமல் தடுமாறினர். இதனைக் கண்ட அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை விட்டு வெளியேறினர். இதனை இன்று இணைய நிறுவனங்கள் மாற்றியுள்ளன. வணிக நடைமுறையில் ஃபேர் ட்ரேட் நடைமுறை முக்கியமானது. இதில் குறிப்பிட்ட விவசாய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பொருட்களை அளித்து விவசாயத்திற்கு உதவுகின்றன. இதில் கிடைக்கும் லாபத்தை விவசாயியும், நிறுவனமும் பகிர்ந்துகொள்கின்றன. இதில் இடைத்தரகர்களின் பங்கு குறைவு. ஆனால் ஃபேர் ட்ரேட் எனும் வியாபாரத்திற்கான சான்றிதழ் பெற்றால் மட்டுமே இவ்வணிகத்தை செய்ய முடியும். இதற்கு மாற்று இல்லாமல் இல்லை. சந்தையில் அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு நேரடியாக பொருட்களை விற்கிறார்கள் அல்லவா? அதுதான். ஃபேர் ட்ரேட் நடைமுறை உலகளவில் வெற்றி பெறுவதற்கான காரணம், இதன் வலைப்பின்னல் அமைப்புதான். 1. விவசாயிகளுக்கு தேவையான விளைபொருட்கள், உரங்கள் என உதவிகள் அனைத்

இறைச்சி பற்றாக்குறை ஏற்படுமா?

படம்
pixabay இன்று பெரும்பாலான இறைச்சி உணவுகள் நமக்கு பண்ணை விலங்குகளின் மூலமாக கிடைக்கிறது. காய்கறிகள், பருப்புகள், பால் பொருட்கள் மூலம் குறிப்பிட்ட சத்துகள் கிடைத்தாலும் உடலில் அவசிய வளர்ச்சிக்கு தேவையான புரதம் இறைச்சி மூலமே கிடைக்கிறது. இது அறிவியல் உண்மை. சிலர் தீவிரமான அரசியல் கருத்தாக கருத்தியலாக உணவைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த கருத்து கொண்டவர்கள்தான் நடப்பிலும் எதிர்காலத்திலும் இந்தியாவில் மதிய உணவுத்திட்டத்தை வழிநடத்துபவர்களாக உள்ளனர். இப்போதே உணவில் பூண்டு, வெங்காயம் தவிர்த்த உணவுகளை தயாரித்து வழங்கத்தொடங்கிவிட்டனர். இப்போது பண்ணை விலங்குகள் தரும் இறைச்சி உணவு பற்றிய தகவல்களை பார்ப்போம். பொதுவாக கட்டி வைத்து வளர்க்கப்படும் பசு, பன்றி பெரியளவு ஊட்டச்சத்து கொண்டவையாக இருப்பதில்லை. அவை அதன் போக்கில் திரிந்து புற்களையும், பருப்புகளையும், புழுக்களையும் சாப்பிட்டு வளரும்போதுதான் அதன் இறைச்சி நுண்ணூட்டச்சத்துகள் கொண்டதாக மாறுகிறது. சாதாரணமாக வீடுகளில் வளர்க்கப்படும் பன்றிக்கு புற்கள், இலைகள் ஆகியவையே உணவு. இதனால் இதன் இறைச்சியில் ஒமேகா 3 சத்துகள் காணப்படுகின்றன.

பசியில் தவிக்கும் உலகம்!

படம்
pixabay நாம் கடந்த அறுபது ஆண்டுகளாக பசியோடு போராடி வருகிறோம். இந்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் பல்வேறு உணவுப்பொருட்களை வழங்கினாலும், அவற்றை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலையை சர்வதேச முதலாளிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தப்படி மாற்றி வருகிறது. அதன் தரத்தை குறைத்து வருகிறது. இதே நேரத்தில் இந்திய உணவுக்கழகம் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்து அதனை பாதுகாக்கும் வசதியின்றி வீணாக்கி வரும் செய்திகளையும் படித்திருப்பீர்கள். பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநில மக்கள் இன்னும் கூட ரேஷன் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் குழந்தைகளை பலிகொடுத்து வரும் செய்திகளை வாரத்திற்கு ஏதேனும் தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டுக்கொண்டுதான் இருக்கிறது. 1960களில் மக்களுக்கு சரியானபடி உணவுப்பொருட்களை வழங்கமுடியாத பிரச்னை எழுந்தது. இதனை பால் எல்ரிச்என்ற எழுத்தாளர் 1968ஆம் ஆண்டு எழுதிய தனது தி பாப்புலேசன் பாம் என்ற நூலில் விவரித்துள்ளளார். இந்த நிலையை சமாளிக்கவே, பசுமை புரட்சி உருவானது. இது வேறு ஒன்றும் இல்லை. மாடுகளால் உழுத நிலத்தை ட்ராக்டர் கொண்டு உழுவது, இயற்கை உரங்களைப் பயன்படுத்தாமல் வேதி உரங்களைப் பயன்படுத்துவத

எப்படி சாப்பிடுவது? - டயட் முறைகள்

படம்
pixabay எப்படி சாப்பிடுவது? காலை எட்டுமணி, மதியம் ஒரு மணி, இரவு எட்டுமணி என மூன்று வேளை உணவு சாப்பிடுவது பலருக்கும் வழக்கமாகி இருக்கும். ஆனால் இப்படி சாப்பிடவேண்டும் என்று அவசியமில்லை. இந்த சுழற்சியில் அனைவரது உடலும் இயங்குவதில்லை என்பது உங்களுக்கு நோய் வந்தபிறகுதான் தெரியவரும். இரவுப்பணிகளுக்கு செல்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு பிரச்னைகள் ஏற்படும். என்ன காரணம் தெரியுமா? நாம் ஆதிகாலத்தில் இருந்தே சூரியனை மையமாக கொண்டு வாழ்ந்து பழகிவிட்டோம். இரவு என்பது சிங்கம், புலி போன்றவற்றின் வேட்டைக்காலம். மனிதர்கள் பகலில் வேட்டையாடி உண்டுவிட்டு குகையில் பதுங்கிவிடுவதே வழக்கம். இந்த பழக்கத்தில் இருப்பவர்களுக்கு ஐ.டி பணி, நாளிதழ் பணி என கிடைக்கும்போது அது முதலில் வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் நாளடைவில் உடலில் வளர்சிதை மாற்றம் மாற்றமடையத் தொடங்கும். இதனால் கன்னம் லேஸ் பாக்கெட் போல உப்பலாக தோன்றும். வயிற்றில் பீர் பெல்லி உருவாகும். ஆளே நவரச திலகம் பிரபு போல நடக்கத் தொடங்குவீர்கள். இதெல்லாம் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றின் தொடக்க நிலை ஆகும்.  க