இடுகைகள்

ராஜா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலையைக் கண்டுபிடிக்கும் தில் போலீஸ் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  2019 - தெலுங்கு இயக்கம் ஒளிப்பதிவு இசை கொல்லாப்பூர் என்ற ஊரில் நடைபெறும் கொலை வழக்குதான் கதை. அங்கு நரசப்பா என்பவரும் அவரது தம்பியும்தான் கோலோச்சுகிறார்கள். ஊரில் அவர்களை மீறி யாரும தொழில் செய்ய முடியாது. இந்த நேரத்தில் நரசப்பாவின் தம்பி ஊரிலுள்ள கோவில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறார். கூடவே அவரின் நண்பர்களும் இதில் பலியாகிறார்கள். யார் இந்த கொலையை செய்தது என்பதுதான் கதை.   886 × 1024 கருடவேகாவுக்குப் பிறகு டாக்டர் ராஜசேகரின் படம். நாயகனுக்கான பில்டப்புகள் இருந்தாலும் அதைவிட அசத்துவது கதைதான். இதில் அம்சமாக பொருந்துகிறார் டாக்டர் ராஜசேகர். முதலில் என்ன இவர் சும்மா ஊர் சுற்றுகிறார், கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற அனைவருக்கும் தோன்றும். ஆனால் அதற்குப்பிறகுதான் ஏராளமான ட்விஸ்டுகள் உள்ளன. ஆஹா படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பிரமாதமாக பொருந்தியுள்ளன. அசோக்பாபு என்ற கதாபாத்திரம் வில்லனாக மாறுவது சூப்பர் ட்விஸ்ட். அதிலும் இறுதி பதினைந்து நிமிடம் அனைத்து முடிச்சுகளையும் சரசரவென அவிழ்க்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதி வு என அன

புதிய இசை பிடிக்காமல் போகும் வயது எது? - உளவியல் ஆராய்ச்சி

படம்
மிஸ்டர் ரோனி முப்பது வயதுக்கு மேல் புதிய இசை பிடிக்காமல் போவது ஏன்? நல்ல கேள்வி. எங்கள் அலுவலகத்தில் கூட 53 வயதான சீனியர் ரஹ்மானையும் அனிருத்தையும் திட்டி ராஜ விசுவாசத்தை நிரூபித்து வருகிறார். இதற்கு காரணம், மூளையில் இருக்கிறது. இயல்பாகவே நாம் திருவிழா, சாவு, மயானக் கொள்ளை என பல்வேறு இடங்களிலும் இரண்டு சாமி பாட்டுகளைப் போட்டு பின்னர் அதிரடியாக சினிமா பாட்டுகளுக்கு இறங்கி வந்துவிடுவோம். இதனால் நம் 13 -14 வயதில் குறிப்பிட்ட இசை வகைக்கு செட் ஆகிவிடுவோம். இருபது வயதில் ரஹ்மான்தான்டா லெஜண்டு, ஜிப்ரான்லாம் அவரோட கால் தூசுக்கு சமம்டா என சண்டை இழுக்கும் அளவுக்கு தரை லோக்கலாக மாறிவிடும். இயல்பாகவே இருபதுகளில் நமக்கு நிறைய நேரம் கிடைக்கும். அதனால் யூட்யூப்பில் வைரலாகும் அனைத்தையும் நாம் கேட்போம். நண்பர்கள் ஹேங்அவுட்டில் கிடைக்கும் நண்பர்களின் பரிந்துரைகளையும் லிங்குகளையும் ஏற்று ரசிப்போம். ஆனால் 30 வயது ஆகும்போது அனைத்தும் மாறிவிடும். அதற்குப் பிறகு, வேலை, குடும்பம் என நச்சு வேலைகள் மூளையெங்கும்  நிறைந்துவிடும்.  அதற்குப் பிறகு நாம் நினைத்தாலும் புதிய விஷயங்களுக்குச் செல்ல ம