இடுகைகள்

நேர்காணல் 2- மோடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேசத்தின் நலனில் அரசியல் சமரசமில்லை மோடி

படம்
"தேசத்தின் நலன் என்று வரும்போது அதில் நாங்கள் அரசியல் செய்வதில்லை" - மோடி புதிய இந்தியா புதுமைத்திறன்களையும் கல்வியையும் கொண்ட சிறந்த சமூகமாக இருக்கும் என்பது சரி. ஆனால் நாம் உயர்கல்வியில் உயரிய தரத்தை இன்றுவரை அடையவில்லையே? அப்போது புதிய இந்தியாவில் தரமான உயல்கல்வி என்பது கனவுதானா? புதிய இந்தியாவில் இளைஞர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உயர்கல்வியை பெறுவதே எனது கனவு. நாட்டினை கட்டமைக்கும் திறன்களை அவர்கள் கொண்டிருப்பார்கள். ஐஐடி ஐஐஎஸ் தவிர பிற தனியார் நிறுவனங்களில் கல்வியின் தரம் ஏற்புடையதாக இல்லை என்ற நிலை எதிர்காலத்தில் மாறும் என நம்புகிறேன். பொது,தனியார், தொழில்துறை என அனைவரும் இணைந்தால்தான் கல்லூரிகளிலிருந்து கனவுகளுடன் வெளிவரும் மாணவர்களை வளர்ச்சி பெறச்செய்யமுடியும். தொழில் தொடங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவது வரையிலான அரசு வழங்கும் வசதிகளை எளிதில் பெறும் சூழல்களையும் எங்கள் அரசு ஏற்படுத்தி வருகிறது. சிவப்பு நாடாமுறை, ஊழல், அநீதியான முறைகளை தற்போது சீரமைத்து வருகிறோம். ஸ்வயம் திட்டத்தின் கீழ் 15 லட்சம் ஆசிரியர்களுக்கு உயர்கல்விப்பயிற்சி