இடுகைகள்

உரையாடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உரையாடல் - தோல் - அறிவியல் அறிவோம்

கோமாளிமேடை மொழி - உரையாடுவோம்! ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது. பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை மொழியைக் கற்றவர்கள...

அகிம்சை வழியில் பிறருடன் கலந்துரையாட உதவும் நூல் - நான் வயலன்ட் கம்யூனிகேஷன்

படம்
          நான் வயலன்ட் கம்யூனிகேஷன்  ரோசன்பர்க் இந்த நூல், படிக்கும் வாசகர்களுக்கு வன்முறையில்லாத வகையில் எப்படி தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது. ஒருவரின் பேச்சு என்பது முன்முடிவுகள், தீர்ப்புகள், புகார் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை கூறவேண்டும் என கூறி அதற்கான எடுத்துக்காட்டுகளை விளக்குகிறது. இதில் முக்கியமான விஷயம் தனது தேவைகளை பிறரை புகார் கூறும் வடிவில் கூறுகிறோம் என பேசுபவருக்கும் தெரியாது. கேட்பவருக்கும் தெரியாது. இப்படியான சூழலில் நிறைய கருத்து முரண்பாடுகள், வன்முறை உருவாகிறது. அதை எப்படி தவிர்க்கலாம் என நூல் பல்வேறு எடுத்துக்காட்டுகளை வைத்து விளக்குகிறது. பரிசு, தண்டனை என்ற வகையில் ஒருவரை வேலையை செய்ய வைப்பது எப்படி தவறாக முடியும் என்பதை நூல் விளக்கியுள்ளது முக்கியமான அம்சம். உளவியல் ரீதியாக பரிசு, தண்டனை விலங்குகளை பழக்கப்படுத்துவதற்கு உதவக்கூடும். ஆனால்  மனிதர்களுக்கு பெரிய பலன் அளிக்காது. சாதாரண பேச்சு, ஓரிடத்தில் சிறுபான்மையினரை படுகொலை செய்யத் தூண்டுகிறது. இன்னொரு இடத்தில் அனைவருக்குமான வளர்ச்சி என்ற கருத்தை வித்திடு...

உரையாடலில் தேவையை, உணர்வுகளை வெளிப்படுத்த கற்கவேண்டும்!

      நம் உணர்வுகளை வெளிப்படுத்த கற்க வேண்டும்! ஒரு தம்பதியினர் இருக்கிறார்கள். திருமணமாகி இருபது ஆண்டுகள் இருக்கும். மனைவிக்கு கணவர் தான் பேசினால் அதற்கு பெரியளவில் எதிர்வினையோ, கருத்து கூறுதலோ செய்வதில்லை என வருத்தம். கோபத்தில் அவர், நீங்கள் எதையும் பேசாமல் சுவர் போல இருக்கிறீர்கள் என கூறிவிடுகிறார். இப்போது அங்கே என்ன விதமான உரையாடல் நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள். பெரிதாக ஏதும் நடக்காது. கணவர் சுவர் என்ற விமர்சனத்தால் பாதிக்கப்பட்டு முன்னைவிட மயான அமைதியை கடைபிடிப்பார். மனைவிக்கு கணவரோடு உரையாடுவது இஷ்டம். அதை அவர் தனது உணர்வுநிலை இப்படி இருக்கிறது என கூறலாம். நீங்க என்னிடம் பேசினால் சந்தோஷமா இருக்கும் என கூறினால், அங்கு உரையாடல் நடக்கலாம். இந்த வாக்கியத்தை கவனித்தால், இதில் அவர் தனக்கு என்ன தேவை என்று கூறியிருக்கிறார். கணவர் மீதான விமர்சனம் ஏதுமில்லை. முன்முடிவுகள் இல்லை. மனைவி அவரது மனநிலையைக் கூட குறிப்பிடலாம். தவறில்லை. தேவையை வெளிப்படையாக கூறுவதில் தவறேதும் இல்லை. ஒரு நாடு இருக்கிறது. அங்கு மக்களுக்கான புதிய திட்டங்களை சிந்தனையாளர்கள் குழு உருவாக்குகிறது. அதை அ...

விழிப்புணர்வோடு உரையாடலுக்கான மொழியைத் தேர்ந்தெடுத்து பேச கற்க வேண்டும்

படம்
                We are dangerous when we are not conscious of our responsibility for how we behave, think, and feel.non violent communication பிறரிடம் பழகும்விதம், சிந்திப்பது, உணர்வது ஆகியவற்றில் விழிப்புணர்வு இல்லாத நிலையில், அபாயகரமானவர்களாக மாறுகிறோம். We can replace language that implies lack of choice with language that acknowledges choice.-non violent communication வாய்ப்புகள் பற்றாக்குறையாக உள்ள மொழியைத் தேர்ந்தெடுப்பதை விடுத்து, வாய்ப்புகளைக் கொண்ட மொழியைத் தேர்ந்தெடுக்கவேண்டும் Our language obscures awareness of personal responsibility.-non violent communication தனிப்பட்ட பொறுப்புணர்வைக் கொண்ட அதை வெளிக்காட்டும் உரையாடல் மொழியைப் பேச பழக வேண்டும் நவீன காலத்தில் உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டால் வருகிற நேரடி பதில் போல யாரும் எந்த பதில்களையும் கூறுவதில்லை. தாங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளில் கூட அதை ஏற்று பதில் கூற மறுக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். அவரது பள்ளிக்கு மாணவர்கள் குறைவாகவே வருகிறார்கள். அவர்களை அவராகவ...

மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது

படம்
              அகிம்சை வழி மக்களை வகை பிரிப்பதும், இவர்கள் இப்படி என முடிவு செய்வதும் வன்முறையை ஊக்குவிக்கிறது பொதுவாக நாம் அனைவரும் வணிக திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். அதில் படம் முடியும் இறுதியில் நாயகர்கள், சிலரை அடித்து உதைக்கிறார்கள். அல்லது கொன்றுவிடுகிறார்கள். அடித்து உதைக்கப்படுபவர்கள், கொல்லப்படுபவர்கள் மோசமானவர்கள், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என திரைப்படம் சித்திரிக்கிறது. பெரும்பாலான படங்களில் இதுவேதான் இறுதிக்காட்சியாக இருந்த காலமுண்டு. இதைப் பார்க்கும் பார்வையாளர்கள், நாயகர்கள் செய்யும் வன்முறையை, கொலையை நன்மைக்காகத்தான், நன்மையைக் காக்க இப்படித்தான் செய்தாக வேண்டும் என ஒருவாறு ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள். இப்படியான மனநிலை சமூகத்தில் வன்முறையை இயல்பான ஒன்றாக கருத வைக்கிறது. பேச்சாக, உளவியல் ரீதியாக, குடும்ப உறுப்பினர்கள் மூலமாக, இனக்குழுக்கள் இடையே, நாடுகள் இடையே மாறுபட்ட கருத்துகள், செயல்கள் வழியாக வன்முறை உருவாகிறது. வன்முறையை பாராட்டி ஏற்றுக்கொண்ட சமூகத்தில் முரண்பாடுகள் வழியாக எளிதாக வன்முறை உருவாகி வளர்கிறது. இதில் பயம்,...

மத மோதல்களை போக்கும் உரையாடலுக்கு ரெடி - விபின்குமார் திரிபாதி

படம்
  ஐஐடி டெல்லியில் இயற்பியல் பேராசிரியராக இருந்தவர். ஓய்வு பெற்றபிறகு என்ன செய்வார்? இருக்கும் தொடர்புகளை வைத்து வெளிநாடுகளுக்கு செல்வார், தனது சொந்த விஷயங்களை செய்வார். ஆனால் டெல்லியைச் சேர்ந்த விபின்குமார் திரிபாதி, நாடெங்கும் சென்று மதமோதல்களை தடுக்கும் முயற்சியை செய்து வருகிறார்.  ஏறத்தாழ இது வங்கப் பிரிவினையின்போது நடந்த மத மோதல்களை தடுக்க காந்தி தொடர்புடைய இடங்களுக்கு சென்ற சம்பவம் போல இருக்கிறதா? அதேதான். அதே வழியைத்தான் பின்பற்றுகிறார். அகிம்சை வழியில் முடிந்தளவு மக்களிடம் பேசி வன்முறை உணர்வை மட்டுபடுத்த நினைக்கிறார்.  பத்து பேரிடம் பேசினால் கோபமாக இருப்பவர்களில் ஒருவர் மட்டுமே என் பேச்சை கேட்கிறார். இந்த அளவில் எனது பணி இருக்கிறது. இந்தியா உயிர்வாழ்வது இப்படி பட்ட சிலரால்தான் என்கிறார்.  திரிபாதியின் உறவினர்கள் இவரையும் குடும்பத்தையும் பார்த்தாலே பதற்றமாகி வேறுபக்கம் திரும்பிக்கொண்டு வருகிறார்கள். நலம் விசாரித்தலைத் தாண்டி வேறு எதையும் அவர்கள் பேசுவதில்லை. ஆனாலும் திரிபாதி எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார். அதை நோக்கி போய்க்கொண்...

லா.ச.ராவின் நுட்பமான உரையாடல்கள்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள தோழர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? சென்னையில் பகலில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரவில் அதன் வெளிப்பாடாக புழுக்கம் அதிகமாக உள்ளது.  மீனோட்டம் - லா.ச.ரா எழுதிய சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளைப் படித்தேன். அதில் இரண்டு மட்டும்தான் பிடிபட்டது. மீதி பலவும் நுட்பமான விஷயங்களைக் கொண்ட உரையாடல்கள். லா.ச.ரா அவரது சொந்தங்கள் கூட பேசுவது போலவே இருப்பதால் அதனை எளிதில் தொடர்புபடுத்திக்கொண்டு ஆர்வமாக படிக்க முடியவில்லை. மின்னூலாக படிப்பதில் அதிகம் சோதித்த நூல் இது. படிப்பை கைவிட்டுவிட்டேன்.  குமுதம் தீராநதி படித்தேன். குழந்தை எழுத்தாளர் கோதை சிவகண்ணகி பேட்டி நன்றாக வந்திருந்தது. இதழை ஆசிரியர் மலர்வதி ஒற்றையாளாக செய்கிறார் போல. இதழ் முழுக்க அவரின் கைவண்ணம்தான் அதிகம்.  சப்தரிஷி லா.ச.ரா எழுதும் தொடர் பரவாயில்லை ரகத்தில் இருக்கிறது. படிக்கலாம். ரணரங்கம் என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். சர்வானந்த் நம்பிக்கையுடன் நடித்த கேங்க்ஸ்டர் படம். காலத்தில் முன்னும் பின்னுமாக காட்சிகள் மாறி மாறி ஓடுகின்றன. கல்யாணி பிரியதர்ஷன் பிளாஷ்பேக் காட்சிகளில்...

சமூகத்தோடு இளைஞர்கள் உரையாடுகிறார்களா?

படம்
giphy தெரிஞ்சுக்கோ! இன்று பேச்சு முழுக்க சமூக வலைத்தளங்கள் வழியாக நடந்தாலும், பேசுவது நாம்தானே. பேசுவது முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ளது. உரையாடலின் இடத்தை பெரும்பாலும் இன்று இமோஜி என்ற படங்கள் ஆக்கிரமித்துவிட்டன. குறைந்த உழைப்பில் அதிக விஷயங்களை இதன்மூலம் சொல்லிவிட முடிகிறது. அதுபற்றிய டேட்டா இதோ.... பார்ட்டியில் கலந்துகொள்பவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் புதிதாக இருக்கிறார்கள் என்கிறார் பிரபல செஃப் அலிசன் ரோமன். நாம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 140 முதல் 180 வார்த்தைகளை பேசுகிறோம். அதேசமயம் அதேநேரத்தில் 400 வார்த்தைகளை கவனிக்கிறோம். இதுவரை உலகிலேயே அதிக நேரம் பேசியது இருவர்தான். சமூகம், அக்வாரியம், மூளையின் சக்தி பற்றி இருவரும் சேர்ந்து 54 மணிநேரம் 4 நிமிடங்கள் பேசியிருக்கின்றனர். இங்கிலாந்திலுள்ள கஃபேக்களில் குறைந்தது 900 புதிய நபர்கள் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதை சாட்டி கஃபே திட்டம் மூலம் ஊக்குவிக்கிறார்கள். சமூகம் தொடர்பான நிகழ்வுகளில் அமெரிக்கர்களின் பங்கேற்கு மொபைல் அளவில்தான் உள்ளது. இம்முறையில் 89 சதவீதம் பேர் சமூகத்தோடு இணைந்துள்ளனர். நன்றி - ...