இடுகைகள்

கனவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கனவில் வன்முறை செய்யும் மனிதர்கள் - பாராசோம்னியா ஆபத்து

படம்
  பாராசோம்னியா ஆபத்து   இன்சோம்னியா பிரச்னையே பலருக்கும் தீரவில்லை. ஆனால், இப்போது வந்திருப்பது பாராசோம்னியா. இன்சோம்னியா பிரச்னை   என்பது தூக்கமின்மை. தூங்காமல் ஏதோ ஒன்றை இரவிலும் செய்துகொண்டிருப்பார்கள். தூங்கும் நேரம் மிக குறைவாக இருக்கும். பாராசோம்னியாவில் வன்முறையான செயல்பாடுகள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக குற்றவழக்குகளும் பதிவாகி வருகின்றன. குற்றவாளி கொலையை, திருட்டை செய்கிறார் என்றால் அதற்கென ஒரு காரணம் வேண்டும் அல்லவா? தூக்கத்தில் செய்யும் விஷயங்கள் ஒருவருக்கு நினைவிலேயே இல்லாதபோது அவரை நீங்கள் என்ன செய்வீர்கள்? இங்குதான் கிராமர் போர்னிமன் துணைக்கு வருகிறார். இவர், ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் என்ற அமைப்பில் வேலை செய்துவருகிறார். நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து என பறந்து சென்று பாராசோம்னியா பற்றி விளக்கம் கொடுத்து வருகிறார். நீதிபதிகளுக்கு, ஜூரிகளுக்கு தூக்கத்தில் ஒருவர் இன்னொருவரை கொலை செய்ய முடியும் என்பது பற்றிய தெளிவும் அறிவும் கிடையாது. எனவே, கிராமர் அதை அவர்களுக்கு விளக்கி வருகிறார். 2006ஆம் ஆண்டு ஸ்லீப் ஃபாரன்சிஸ் அசோசியேட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. நர

மறைந்துள்ள பாலைவன நகரின் பொக்கிஷத்தை எடுக்க நடக்கும் போராட்டம்! - சாண்ட் சீ - சீன தொடர்

படம்
  சாண்ட் சீ - பிரதர் ஹாவோ   சாண்ட் சீ (2018) சீன டிவி தொடர் 53 எபிசோடுகள் ராகுட்டன் விக்கி ஆப் இயக்குநர்கள் – லீ ஸே லூ, மாவோ குன் யூ, சூ ஷி திரைக்கதை எழுத்தாளர்கள் – ஸாங் யுவான் ஆங்க், டாங்க் ஷி சென் அம்மா இல்லாமல் அப்பாவின் அடி, உதைகளை வாங்கி வளர்கிறான் லீ சூ, பல்கலைக்கழக தேர்வை எழுதவெல்லாம் விருப்பமில்லாத மனநிலை. இவனுக்கு இருக்கும் ஒரே தோழன், சூ வான். பணக்காரன். இவன் நன்றாக படிப்பவன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் தனது பள்ளியில் மாணவிகளை படமெடுத்து வைத்து, யாரோடு டேட்டிங் போகலாம் என யோசிப்பவன்.   அடுத்து, ஹாவோ. இவன் பள்ளியில் படிப்பவனல்ல. இறந்தவர்களுக்கு சடங்கு செய்யும் நிறுவனத்தை ஹாவோவின் பாட்டி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஹாவோ ஆதரவாக இருக்கிறான். இவனது வேலை சட்டவிரோதமாக போதைப்பொருட்களை விற்பது.   பிறகு பணக்காரன் பள்ளி மாணவனான சூ வானை ஏதோ ஒருவகையில் மிரட்டி காசைப் பிடுங்குவது… இந்த மூன்றுபேர்களின் நட்புதான் தொடரின் முக்கியமான அம்சம். இது கடந்த காலத்தில் நட்பாக இருந்த அயர்ன் ட்ரையாங்கில் என்ற மூவரை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.   பள்ளி மாணவன் லீ சூ, ஒர

கனவை நிறைவேற்ற உதவியவர்களை தேடிச்சென்று நன்றி சொன்னால்... தேங்க்யூ - விக்ரம்குமார்

படம்
  தேங்க்யூ சைதன்யா அக்கினேனி, மாளவிகா நாயர், ராஷி கண்ணா தனது குறிக்கோளில் சமரசமே இல்லாமல் முன்னேறுபவன், அதற்காக உறவுகளை உதறித்தள்ளினால் என்னாகும் என்பதே தேங்க்யூ. படம் மனிதர்களைப் பற்றிய நல்லுணர்வுகளை ஏற்படுத்த முயல்கிறது. அந்த வகையில் பாராட்டத்தக்கது. அபிராம் வைத்யா என்ற ஆப் ஒன்றை உருவாக்குகிறார். அவர் அமெரிக்காவில் வேலையில் சேரவே வருகிறார். ஆனால் அங்கு வந்து ஸ்டார்ட்அப்பாக வைத்யா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றி பெறுகிறார். இதற்கான முதலீட்டை அவரது   அபியின் காதலியும் எதிர்கால மனைவியுமான பிரியா கொடுக்கிறார். நாட்கள் செல்ல செல்ல நான்தான் அனைத்தையும் செய்தேன். இதில் பிறருக்கு எந்த பங்கும் இல்லை என்ற ஈகோ அபியிடம் தலைதூக்குகிறது. இதனால் நிறுவனத்தை தொடக்க காலத்தில் உருவாக்கிய   தன் நண்பர்களை வேலையில் இருந்து தூக்குகிறான். நாம் சாதித்தோம் என்பதை தான் சாதித்தேன் என மீட்டிங் ஹாலில் உள்ள போர்டில் மாற்றி எழுதும் அளவுக்கு தலைகனம் உச்சத்திற்கு செல்கிறது. இதனால் பிரியா அபியை விட்டு விலகுகிறாள்.   ஒன்றாக சேர்ந்து வாழ்வதால், உறவிலிருந்து விலகும்போது பிரியா கர்ப்பமாக இருக்கிறாள். அதைக்கூட அபியிட

அற்புதமான விமானங்களை வடிவமைத்த ஜப்பானிய பொறியாளரின் கனவு - விண்ட் ரைசஸ் - anime

படம்
  விண்ட் ரைசஸ் அனிமேஷன்  ஜப்பான்  அடிப்படையில் தேசியவாதப் படம்தான். ஆனால் அதைத்தாண்டிய விமானங்களை கட்டமைக்கும் கனவு கொண்ட ஒருவனின் வாழ்க்கை தான் அனிமேஷன் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.  இந்த அனிமேஷன் படம், ஜெர்மனியில் உள்ளது போன்ற நவீனத்துவத்துடன் அதிவேகம் செல்லும் விமானங்களை கட்டமைக்கும் பொறியாளர் ஒருவரின் கதையைப் பேசுகிறது. சிறுவயதில் இருந்தே விமான பைலட்டாக மாறும் ஆசையுடன் ஜீரோ உள்ளான்,ஆனால் கண்பார்வை சற்று குறைவானதால், பொறியாளர் ஆகிறான். அப்போது உலகப்போர் காலகட்டம். எனவே, வேகமாக செல்லும் ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்களை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஜீரோ தனது விமானத்தை எப்படி உருவாக்குகிறான் என்பதே படம்.  படம் நெடுக விண்ணில் பறக்கும்போது அல்லது வாகனத்தில் பைக்கில் போகும்போது நமது முகத்தில் காற்று அடிக்குமே, வேகமாக, மெதுவாக என பல்வேறு விதமாக.. .அப்படி காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. விமானத்தை உருவாக்குபவனான ஜீரோ, காற்றில் தனது கனவுகள் அலைபாய திட்டங்களை தீட்டுகிறான். பெரும்பாலானவை, எஞ்சின் கோளாறுகள், மோசமான எரிபொருள், ஜப்பானில் வீசும் காற்றுக்கு சமாளிக்க முடிய

மாற்றுத்திறனாளி பெண்ணைக் கொல்லத் துரத்தும் புத்திசாலி சைக்கோ! - மிட்நைட் 2021 - கொரிய திரைப்படம்

படம்
  மிட்நைட் தென்கொரிய திரைப்படம் திரில்லர் சொகுசு வேனில் சைக்கோ கொலைகாரன் ஒருவன் சுற்றுகிறான். அவன் ஒரு பெண்ணை கொலை செய்ய முயற்சிக்கிறான். அடிபட்டு கிடப்பவளை வாய் பேசமுடியாத காது கேளாத பெண் பார்த்து உதவுகிறாள். இதனால் கொலைகாரன், அவளையும் அவளது அம்மாவையும் கொல்லத் துரத்துகிறான். அவள் அந்த கொலைகாரனிடமிருந்து தப்பித்தாளா இல்லையா என்பதுதான் படத்தின் இறுதிக்காட்சி.  படத்தில் வரும் சைக்கோ கொலைகாரர் (வி ஹா ஜூன்), வாய் பேச முடியாத பெண் (ஜின் கி ஜூன் ) என இருவருமே சிறப்பாக நடத்திருக்கிறார்கள். அதிலும் இறுதிக்காட்சியில்  திக்கித்திணறி பேச்சிலும், செய்கையிலும் தனது கனவு பற்றி விவரித்து தன்னை உயிரோடு விட்டுவிடும்படி கெஞ்சும் காட்சி. அடுத்து, தன்னைக் காப்பாற்ற கத்திகுத்துபட்ட பெண்ணின் அண்ணனிடம் (பார்க் ஹூன்) உதவி கோரி, இறுதியில் அவன் சுயநலமாக தனது தங்கைக்காக வாய் பேச முடியாத பெண்ணை கைவிடும்போது விரக்தியாகி அழும் காட்சி.  வள்ளுவர் கோட்டத்திலிருந்து போரூர் வரை பல்வேறு சந்து பொந்துகளில் புகுந்து வெளியேறி வேகம் குறையாமல் ஓடிக்கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி ஓடும் தடகள காட்சியை பதினைந்து நிமிடங

கனவுகளின் மீது கவனம் குவிக்கும் மேற்கு நாடுகள்! - கற்றதும் பெற்றதும் என்ன?

படம்
  கனவுகளின் ஆராய்ச்சி! கனவுகளை தானே கட்டமைக்கும் லூசிட் முறையில் கற்றலையும் புதுமைத்திறனையும் அதிகரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர்.  விண்வெளிக்கு சுற்றுலா சென்றுவருவது, சூரியனுக்கு விண்கலங்களை அனுப்புவது வரையில் முடியாத விஷயங்களே விஞ்ஞானிகளுக்கு கிடையாது. ஆனால் அவர்களையும் குழப்ப வைக்கும் விஷயம், கனவுகள்தான். நம் அனைவருக்கும் தூங்கும்போது வரும் கனவுகளைத் தான் இங்கு சொல்லுகிறோம். இந்த கனவுகள் அன்றாட நிகழ்ச்சிகள் அல்லது நிறைவேறாத ஆசைகளை அடிப்படையாக கொண்டிருக்கலாம். இவற்றை ஆய்வு செய்து உண்மையான துல்லியத்துடன் கனவுகளை பார்க்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர்.  பொதுவாக ஒருவர் கனவுகண்டு காலையில் எழுந்தால் 90 சதவீதம் மறந்துவிடவே வாய்ப்பு அதிகம். அப்படியும் அதனை கூறினால் அதில் நிறைய தவறுகள் இருக்கும். துல்லியமான தன்மை இருக்காது. கனவுகளை நாமே திட்டமிட்டு உருவாக்கினால் எப்படியிருக்கும்? கனவு காணும்போதுகூட நாம் கனவில்தான் இருக்கிறோம் என்ற விழிப்புணர்வையும், அதில்  வரும் சம்பவங்களையும் கூட நம்மால் உருவாக்க முடிந்தால் அதை லூசிட் கனவுகள் என்று கூறலாம். அமெரிக்காவின்

குற்றங்களை ஆவணப்படுத்துபவரின் மனநிலை!

படம்
  குற்றங்களை ஆவணப்படுத்துவர் கொல்லப்படுவாரா ஆங்கில திரைப்படங்களில் இப்படி காட்டுவார்கள். ஆனால் உண்மையில் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் நூலகத்தில் இருப்பார். அல்லது காவல் நிலையத்தில் குற்றம் பற்றிய புகைப்படங்களை ஆய்வு செய்துகொண்டிருப்பார்.  அதிகபட்சமாக சிறை சென்று சிலரை நேர்காணல் செய்துகொண்டிருப்பார். பொதுவாக கொலை செய்த இடத்திற்கு சென்று விசாரிப்பது காவல்துறையினரின் வேலை. அங்கு வேறுவழியில்லாமல் செல்லவேண்டிய நிலையில்தான் குற்றங்களை ஆவணப்படுத்துபவர் செல்வார்.  தான் திட்டமிட்டபடி கொலைகளை நம்பிக்கையுடன் செய்துகொண்டிருக்கும் சீரியல் கொலைகாரர், காவல்துறையின் தொடர்பு கொண்டவரை கொல்வது அரிது. தேவையில்லாமல் எதற்கு மாட்டிக்கொள்ள அவர் நினைக்கவேண்டும்? குற்றங்களை செய்யும் மனம் குற்றங்களை ஆவணப்படுத்துபவர், பல்லாண்டுகளாக இதுதொடர்பான ஆய்வில் இருப்பவர். யாராக இருந்தாலும் கொலையைப் பார்த்தவுடனே சற்று மனம் அதிர்ச்சியடையவே செய்யும். ஆனால் பிறருக்கு ஏற்படும் அதிர்ச்சியை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். இதனால் கொலையைப் பார்த்தவுடனே கொலையாளியை எப்படி கண்டுபிடிப்பது என அவர்கள் யோசிப்பார்கள். தடயங்களை சே

இன்று நடப்பதை நேற்றே அறிய முடியுமா? - தேஜா வூ கதை!

படம்
தெரிஞ்சுக்கோ  - தேஜா வூ தேஜா வூ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பிரெஞ்சில் இதற்கு முன்னமே பார்த்தது என்று பொருள். பொதுவாக தாராளவாத கருத்துகள், யாத்ரீகராகச் சுற்றுவது, நிறைய நூல்களைப் படிப்பது, டஜன் கணக்கிலான படங்களைப் பார்ப்பது போன்ற பழக்கங்களைக் கொண்டவர்களுக்கு தேஜா வூ பாதிப்பு இருக்கிறது. உளவியல் பூர்வமாக இது சாதாரணமானது என்று கூறப்பட்டாலும், குறிப்பிட்ட சம்பவங்களை முன்னமே பார்த்தது போல் இருப்பது யாரையும் சற்றே அதிர வைக்கும். அதுபற்றிய டேட்டாவைப் பார்ப்போம். உலகில் மூன்றில் இருபங்கு பேருக்கு தேஜா வூ அனுபவம் நடந்திருக்கிறது. எனவே உங்களை நீங்களே அமானுஷ்யமானவர், அபூர்வமானவர் என நினைத்துக் கொள்ளாதீர்கள். தேஜா வூ அனுபவங்கள் நடப்பதற்கான குறைந்தபட்ச வயது எட்டு முதல் ஒன்பது வயது வரை. இது பற்றி 30க்கும் மேலான விளக்கங்கள் அறிவியலில் உண்டு. இவற்றைக் கொஞ்சம் நம்பலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். உலகில் 32 சதவீதம் பேருக்கு தேஜா வூ அனுபவம் ஏற்படுகிறது என்றால் அவர்களில் பலரும் ஆண்டுக்கு நான்கு முறை அங்குமிங்கும் பயணிப்பவர்கள். இதில் 11 சதவீதம் பேர் மட்டுமே எங்கும் பயணிக்காதவர்கள். ஆ

பாதுகாப்பில்லாத இடத்தில் வரும் கனவு பலிக்குமா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி வேறு இடங்களில் தூங்கும் போது வரும் கனவு நம் நினைவில் நிற்பது எப்படி? பொதுவாக புது இடத்தில் படுத்து உறங்க முயற்சிக்கும்போது உடலின் ஆதி எச்சரிக்கை உணர்வு தீவிரமாக இயங்குகிறது. அதாவது, கவனமாக உறங்கு. இது பாதுகாப்பான இடமல்ல. ஆபத்து இருக்கிறது என்ற செய்தி மூளையில் பதிகிறது.எனவே புது இடங்களில் தூங்கும்போது ஆழமான தூக்கம் வராது. இது ஆராய்ச்சியில் தெரிய வந்த விஷயம். பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த விஷயம் இது. அதேபோல இப்படி தூங்கும்போது வரும் கனவுகளை 98 சதவீதம் நீங்கள் நினைவு கூறமுடியும். பிற கனவுகள் 90 சதவீதம் காலையில் எழும்போது உங்கள் நினைவுகளோடு அழிந்துவிடும். அப்படியும் சில நினைவுகள், குறிப்பிட்ட கனவு காட்சி நிஜமாக விரியும்போது இடது கண் துடித்து நினைவுக்கு வந்தால் அதுதான் தேஜா வூ. இதுவும் குறைபாடு கிடையாது. உலகில் பலருக்கும் நடக்கும் நிகழ்வுதான். நன்றி: பிபிசி

பி.டெக் வெப்சீரிஸ் எப்படி? - தருண் பாஸ்கரின் திரைக்கதை அசத்தல்

படம்
huffingtonpost பி.டெக் ஜீ5 தயாரிப்பு இயக்கம்: உபேந்திர வர்மா கதை, திரைக்கதை: தருண் பாஸ்கர்   Abhay Bethaganti , Kaushik Ghantasala, Madhulatha Reddy, Vishnu Mohan Chaitanya Garikipati, Meraj Ahmed and Arjun Chukkala பெல்லி சூப்புலு படத்திற்கு முன்பு எழுதிய கதை இது என தருண் பாஸ்கர் இன்ஸ்டாகிராமில் சொல்லி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும் பேட்டி தட்டிவிட்டார். அதனால் இதில் முக்கிய கேரக்டர்கள் தடுமாறினாலும் அந்த பிரச்னை இதனால்தான் என புரிந்து கொள்ள முடியும். பெல்லி சூப்புலு படம் எடுத்து தேசிய விருது வென்ற இயக்குநரின் வெப் சீரிஸ் என்று விரக்தி அடையக்கூடாது என்பது விமர்சனத்திற்கு முன்பே நாங்கள் கூறும் அட்வைஸ். மூன்று இளைஞர்கள் தங்கள் கனவைத் துரத்துகிறார்கள். அதில் அவர்கள் ஜெயித்தார்களா? இல்லையா என்பதே கதை. ஹரி, விக்ரம், அக்தர் என மூன்று இளைஞர்கள். இதில் மூவருக்கும் உள்ள ஒற்றுமை அனைவரும் பொறியியல் படிக்கும் மாணவர்கள் என்பதே. இரண்டாவது ஒற்றுமை மூவருக்கும் படிப்பைத் தொடர அதுதொடர்பான வேலைக்குச் செல்ல அணுவளவும் ஆர்வம் கிடையாது. ஹரி, காலேஜூக்கு அட்டன்டன்ஸ் கொடுத்துவிட்டு குழந்தைக

லவ் இன்ஃபினிட்டி: நீ கேட்டதை நான் தரல. சாரிடா

படம்
freepik.com லவ் இன்ஃபினிட்டி குமார் சண்முகம் தொகுப்பு: அஷ்ரத், விக்கி ஸ்டார் கடிதம் இரண்டு கவிக்கு Phone பண்ணவே முடியலை. Line ஏ கிடைக்கல. கவிதாக்கா வீட்டுக்கு பண்ணினேன். நீ அவங்க வீட்டுக்குப் போய் 2 வாரம் ஆச்சாம். உன்னை Evening (monday) வரச்சொன்னாங்க. அப்புறம் Future ல் IAS ஆயிட்டா எனக்கு ஒரு நல்ல Post வாங்கித் தருவியா? அப்படி IAS ஆனால் யார் யாருக்கு என்னென்ன செய்வ. குறிப்பாக Family, Society etc. அப்புறம் கவிக்கு கூட நல்ல Future இருக்கில்ல. அவங்க Aim அடையற வரைக்கும் அவங்க அப்பாம்மா பொறுமையாக இருப்பாங்களா? சரி என்னுடைய Aim or எண்ணம் என்னன்னு தெரிஞ்சுக்க. நான் சொந்த தகுதில நல்ல Post டுக்கு வரணும். என் செலவில் யாராவது இரண்டு அனாதை குழந்தைகளை atleast பிளஸ் டூ வரையாவது படிக்க வைக்கணும். அப்புறம் social work பண்ண எனக்கு ரொம்ப ஆசை. யாராவது பொது இடத்தில் பெரியவங்க , குழந்தைங்க கஷ்டப்பட்டா அழுகையா வருது. (நமக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா என்ன செய்யறது? Or இரக்க குணமோ?)  அவங்களுக்கெல்லாம் Help பண்ண ஆசைப்படுவேன். ஆனா ஏதோ ஒண்ணு தடுக்கும். அப்புறம் என் Marriage க்குப் பின்