இடுகைகள்

உணவு பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெப்பநிலை அதிகரித்து வருவது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்! - ரோக்ஸி மேத்யூ கோல்

படம்
  ரோக்ஸி மேத்யூ கோல், ஜப்பானில் கடல் மற்றும் வானிலை இயக்கம் பற்றிய முனைவர் படிப்பை படித்தவர். தற்போது, இந்திய வெப்பமண்டல வானியல் கழகத்தில் சூழல் அறிவியலாளராக பணியாற்றி வருகிறார். புயல், வெப்பஅலை, கடல் சூழல் பற்றி ஆய்வுகளை செய்துவருகிறார்.  வெப்பநிலை அதிகரித்து வருவது உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதே? உலகளவில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வேகம் குறைவாக இருக்கிறது. காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் செயல்பாடுகளை உலகளவிலும், உள்ளூர் அளவிலும் சமச்சீராக செய்வது அவசியம். மக்களின் இனக்குழு மற்றும் கிராம பஞ்சாயத்துகள் காலநிலை மாற்ற மேம்பாட்டு பணிகளை கண்காணிப்பதோடு, அதனை செயல்படுத்தவும் முன் வரவேண்டும்.  இந்தியப் பெருங்கடலின் வெப்பம் அதிகரிப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது? ஐ.நாவின் காலநிலை கௌன்சில்(IPCC), இந்தியப் பெருங்கடல் வேகமாக வெப்பமடைந்து வருவதைக் கூறியிருக்கிறது. கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, இந்தியா முழுக்க பெய்த 3 மடங்கு அதீத மழைப்பொழிவு, புயல்களே முக்கியக் காரணம். நாம், கார்பன்

பார்லே ஜியும் இந்தியாவின் உணவு பாதுகாப்பு தடுமாற்றமும்!

படம்
  1929 ஆம் ஆண்டு பார்லே பிஸ்கெட் நிறுவனத்தை மோகன்லால் தயாள் சௌகான் தொடங்கினார். அவர் வைல் பார்லே எனுமிடத்தில் வாழ்ந்தார். அந்த இடத்தின் பெயரையே நிறுவனத்திற்கு சூட்டினார். அன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள்தான் பிஸ்கெட் துறையில் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு போட்டியாக தொடங்கிய சுதேசி நிறுவனம்தான் பார்லே. முதல் பிஸ்கெட் பிராண்ட் பார்லே ஜி.   இன்று பார்லே  நிறுவனம் பல்வேறு உணவு சார்ந்த பொருட்களை தயாரித்து வருகிறது. இதிலும் அவர்களது முத்திரை பதித்த ஒரு பொருள் என்றால் அது குளுக்கோஸ் பிஸ்கெட்டான பார்லே ஜி தான். விலை குறைவு. இன்றுவரையுமே கையில் காசு இல்லாத பலரும் பார்லே ஜியை வாங்கி டீயில் தொட்டு சாப்பிட்டு பசியாற்றிக் கொள்வது பார்க்க கூடிய ஒன்று. பார்லே ஜி மகத்தான ருசி கொண்ட பிஸ்கெட் கிடையாது. ஆனால் குறைந்த விலைக்கு கிடைக்கும் ஒரு பிஸ்கெட் அதுதான்.  இன்றைய காலத்தில் பார்லே கூட ப்ரீமியம் வகையில் தனது பிஸ்கெட் வரிசைகளை உருவாக்கிவிட்டது. ஆனாலும் பார்லே ஜி பிஸ்கெட் உற்பத்தியை நிறுத்தவில்லை. இன்றும் அதனை தொடர்ச்சியாக விற்றுவருகிறது. பெருந்தொற்று காலத்தில் பார்லே நிறுவனம், பார்லே ஜி பிஸ்கெட்டுகளை இலவசமாக கொ