இடுகைகள்

வெள்ளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தினசரி இயற்கையில் நடைபெறும் பாதிப்பு, மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுகிறது - எழுத்தாளர் மிதுல் பருவா

படம்
  ஸ்லோ டிஸாஸ்டர்  எழுத்தாளர் மிதுல் பருவா அசாம் மாநிலத்திலுள்ள மஜூலி, உலகின் நீளமான ஆற்றுத் தீவுகளில் ஒன்று. எழுத்தாளர் மிதுல் பருவா, இங்குதான் பிறந்து வளர்ந்தார். இவர் தற்போது சமூகவியல், மானுடவியல், சூழல் ஆராய்ச்சி படிப்புகளை பயிற்றுவிக்கும் ஆசிரியராக உள்ளார். மிதுல், ஸ்லோ டிஸாஸ்டர் என்ற நூலை எழுதியிருக்கிறார். இதில் தான் வளர்ந்து வந்த ஆற்றுத்தீவு எப்படி வெள்ளம், மண் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் மறு குடியேற்றம் செய்யப்பட்டனர் என்பதை விளக்கி எழுதியுள்ளார். அவரிடம் நூல் பற்றி பேசினோம். பிரம்மபுத்திரா ஆறு, அதன் சவால்கள் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்டுள்ளது. நீங்கள் மஜூலி ஆற்றுத்தீவில் பிறந்து வளர்ந்திருக்கிறீர்கள். உங்கள் நூலில் முக்கிய அம்சங்களாக கூறியுள்ளவை எவை? ஸ்லோ டிஸாஸ்டர் நூலில், வெள்ளம், ஆற்றுபரப்பு அரிப்பு ஆகியவை மஜூலியை எப்படி பாதிக்கிறது என்பதை விளக்கி எழுதியுள்ளேன். இது பிரம்மபுத்திரா ஆற்றின் பகுதியில் கூடுதலாக நடைபெறும் விளைவு எனலாம். இங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை, இயற்கை நெருக்கடிகளால் எப்படி மாறுகிறது என்பதை நூலில் விளக்கமாக எழுதி பதிவு செய்துள்ளேன். நான் ப

சூழல் பதற்றத்திற்குள்ளாகும் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்?

படம்
  உலகம் அழியப்போகிறது என்ற செய்தியை பெரும்பாலான நாளிதழ்கள், ஊடகங்கள் பல்லாண்டுகளாக கூறி வருகின்றன. குறிப்பாக, இயற்கை பேரிடர்கள் நினைத்துப் பார்க்க முடியாத இழப்பை ஏற்படுத்தும்போதும், நோய்த்தொற்று காரணமாக மக்கள் லட்சக்கணக்கில் இறக்கும்போதும் சமூக விஞ்ஞானிகள் இத்தகைய கருத்துகளை முன்வைத்து பேசுவார்கள். இன்று டிஜிட்டல் ஊடகம் அனைத்து மக்களின் கையிலும் உள்ளது. தான் சொல்ல விரும்பும் கருத்தை ஒருவர் சமூக வலைத்தளங்கள், யூட்யூப், விமியோ என்ற தளங்களில் வழியாக எளிதாக உலகிற்கு சொல்லலாம். மக்கள் தங்கள் சூழல் பயத்தை, விரக்தியை பிறருக்கு எளிதாக கடத்தி வருகிறார்கள்.   2012ஆம் ஆண்டு இப்படித்தான் மாயன் காலண்டரில் உலகம் அழியப்போகிறது என சிலர் கூறி பயமுறுத்தினார்கள். இதனால் பீதிக்குள்ளான மாணவர்கள், இளைஞர்கள் தங்கள் பிரியத்திற்கு உள்ளானவர்களை கட்டிப்பிடித்து அழுத்து பிரியாவிடை கொடுத்த காட்சிகள் அரங்கேறின. 5,126 ஆண்டுகளைக் கொண்ட மாயன் காலண்டர் சொன்ன குறியீடுகள், மர்மங்களை வைத்து நிறைய கதைகள் உள்ளன.   உலகம் அழிகிறது, அழியவில்லை என்பதை விடுங்கள். ஒருவேளை, உலகம் அப்படி அழிகிற சூழ்நிலை ஏற்பட்டால் நாம் என்ன செய

காலநிலையைக் கட்டுப்படுத்தும் மனித முயற்சிகள் - மேக விதைப்பு, மேக வெளுப்பு

படம்
    காலநிலையை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா?   உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 800 கோடியை உலகம் எட்டிவிட்டது. இதில் முதலிடம் சீனா, என்றால் அடுத்தது இந்தியாதான். ஒப்பீட்டளவில் சீனாவின் மனிதவளம் பெற்ற பொருளாதார வளர்ச்சியை இரண்டாவது இடத்தில் இருந்தால் இந்தியா பெற முடியவில்லை. இதற்கு தொலைநோக்கு இல்லாத தலைவர்கள் நாட்டை வழிநடத்துவதுதான் என்பதை தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மக்களுக்கான இயற்கை வளங்கள் நீர், நிலம், உணவு என அனைத்துமே குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய இயற்கை நிகழ்வுகளை புரிந்துகொள்வது அல்லது அதை கட்டுப்படுத்துவது என இரு வழிகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் நாம் இப்போது படிக்கப் போகிறோம். இப்போது நிறைய மாநிலங்களில் அதிகமாக மழை பெய்வது, சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருந்தும் பருவமிருந்தும் கூட மழை பெய்வதே இல்லை. இந்த பிரச்னையை க்ளவுட் சீடிங் முறையில் தீர்க்க முடியும். இதற்கான சோதனை 1946ஆம் ஆண்டே நடைபெற்றது. செயற்கையாக மழை பொழிய வைக்கும் முயற்சி தேவையா என்றால், மழை பொழிவு மட்டுமே இயற்கையாக மண்ணில் உள்ள ஆற்றலை, விதைகளை முளைக்கும் திறன

ஆற்றுத் துண்டாடலால் நடைபெறும் சேதங்கள்! - வெள்ளப்பெருக்கு அதிகரிக்க வாய்ப்பு கூடுகிறது!

படம்
வெள்ளத்தால் மாறும் ஆற்றின் வழித்தடம்! 2008ஆம் ஆண்டு, இந்தியா- நேபாளத்தின் எல்லையில் உள்ள கோசி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக, 30 லட்சம் மக்களின் வீடுகள் வெள்ளத்தால் அழிந்தன.  வெள்ள எச்சரிக்கையை முன்கூட்டியே கூறாத அறிவியலாளர்கள், அரசு ஆகியோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். வெள்ளப்பெருக்கு அபாயத்தை ஆக்கிரமிப்புகளும் அதிகரித்தன என்பதே உண்மை. இந்த சம்பவத்தில் நாம் அறியவேண்டியது, ஆறு தன் வழித்தடத்தை மாற்றிக்கொள்வதேயாகும்.  பெரியளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபிறகு, ஆற்றின் வழித்தடம் மாறுவதற்கு, ரிவர் அவல்ஷன் (River avulsion) என்று பெயர். தமிழில் வெள்ளத் துண்டாடல் எனலாம். ஆற்றின் வழித்தடத்தில் காலப்போக்கில் அரித்துச் செல்லும் மண்ணில் உள்ள வண்டல் கீழே படியும். இப்படி படியும் மண் ஆற்றின் நீர்ப்போக்கைத் தடுக்கும். இதனால் ஆற்றின் நீர் வேறுவழியாக செல்ல முயலும். இதனால் ஆற்றின் கரைப்பகுதிகளில் ஏற்படும் சேதம், நிலநடுக்கம் ஏற்பட்டால் உருவாவதைப் போலவே இருக்கும். கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான கோசி ஆறு, வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் வழித்தடத்தில் இருந்து 100 கி.மீ. தூரத்திற்கு மாறியது. ஆற்ற

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவும் ஆனந்த்! - திருச்சி தன்னார்வத் தொண்டர் கதை!

படம்
  சூரியன் வானில் வெளிச்சம் காட்டியபோதும் கூட சிகே ஆனந்தின் பணி நிற்கவில்லை.  அவரது போன் அழைப்புகள் வந்துகொண்டு இருந்தன. மழைப்பொழிவால் நீரில் மூழ்கிய பல்வேறு இடங்களிலிருந்து உதவி கேட்டு அழைக்கும் அழைப்புகள்தான் அவை. படகு வேண்டும், உணவுக்காக காய்கறிகள் வேண்டும் என குரல்கள் ஏதேனும் உதவிகளை கோரியபடி இருந்தன.  அத்தனை அழைப்புகளையும் சமாளித்து காய்கறிகளை தேவையான உதவிகளை ஆனந்த் வழங்கிக்கொண்டே இருந்தார். முப்பது வயதான ஆனந்த், தன்னையொத்த உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்களின் குழுவை ஒருங்கிணைத்து மேற்சொன்ன அழைப்புகளுக்கு வரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பு பிரச்னை ஏற்பட்டபோது காலை ஏழுமணி தொடங்கி நள்ளிரவு வரை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது இக்குழு.  கருமேகங்கள் திருச்சி நகரை சூழ்ந்தபோது, லிங்கம் நகர், அருள் நகர், செல்வம் நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களிலிருந்து உதவி கோரி அழைப்புகள் வந்தன. உடனே தன்னுடைய பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றார் ஆனந்த். முதலில் முக்கொம்பு பகுதிக்கு போனவர், அங்கு மக்களுக்கு தேவையான தினசரி வாழ்க்கைக்க

பத்தாவது பெயிலா? கொடைக்கானலில் எனது வீட்டில் வந்து தங்குங்க!- புதுமை மனிதர் சுதீஷ்

படம்
  செய்திஜாம் ஆஹா! சமையல் சாதனை! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜஸ்டின் நாராயணன், மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் வென்றிருக்கிறார். இந்திய வம்சாவளியைச்  சேர்ந்த இவர் சமையல் நிகழ்ச்சியின் 13 ஆவது சீசனின் வெற்றியாளராகி 1.86 கோடி ரூபாயை வென்றிருக்கிறார். ”உங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள மனிதர்களைக் கண்டுபிடியுங்கள். அவர்களை எப்போதும் உங்கள் பின்னால் வைத்துக்கொள்ளுங்கள். தினந்தோறும் உங்களை ஆச்சரியப்படுத்திக்கொள்ளும்படியுங்கள். இதை வாசிக்கும் அனைவரையும் நான் நேசிக்கிறேன்” என இன்ஸ்டாகிராமில் செய்தி வெளியிட்டுள்ளார் ஜஸ்டின்.  https://www.indiatimes.com/entertainment/celebs/indian-origin-justin-narayan-wins-masterchef-australia-season-13-takes-home-rs-186-crore-544905.html காட்சிப்படம் ! காட்டுத்தீயை அணைக்க முயலும் விமானம்! இடம் அமெரிக்கா, வாஷிங்டன் அபாரம்! பசியின் மொழி! ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சையத் உஸ்மான் அசார் மெக்சூசி. இவர் பசிக்கு மதமில்லை என்ற திட்டத்தை தொடங்கி ஐந்து நகரங்களில் உள்ள 1,500 மக்களுக்கு தினசரி உணவிட்டு வருகிறார். இதனை பத்து ஆண்டுகளாக செய்துவருபவருக்கு ஐ.நா அமைப்பு, காமன்வெல்த் பாய்ன்ட

நீரின்றி தவிக்கப்போகும் கோடிக்கணக்கான மக்கள்!- இமாலயத்தில் உருகும் பனிப்பாறைகள்

படம்
  சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறது. ஆறுகள் உருவாகி வரும் இமயமலையில் இதற்கான பாதிப்புகள் தொடங்குவதால் விரைவில் டெல்லி, பெங்களூரு, இந்தூர், ரூர்க்கி, நேபாளம், அகமதாபாத் ஆகிய நகரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா ஆகியவை சிந்து நதியினை நம்பியுள்ளன. டெல்லி, உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தானின் பெரும்பகுதி கங்கை நதியை நம்பியே நிலப்பரப்புகள் உள்ளன.  அசாம், சிக்கிம், நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் பிரம்ம புத்திரா ஆற்றை நம்பியே உள்ளன.  உலக மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி, டாகா, லாகூர், கராச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களையே அதிகம் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உலகளவில் பார்த்தால் எட்டில் ஒருவர் என்று கூறலாம்.  இமாலயத்திலுள்ள காரகோரம் பகுதியில் உருவான பனிப்பாறைகள் மெல்ல வெப்பத்தால் உருகத் தொடங்கியுள்ளன. இதனால

மக்களுக்காக எந்த துரும்பையும் கிள்ளிப்போடாதவர்கள்தான் எங்களை ஊழல்வாதி என விமர்சிக்கிறார்கள்! - யஷ்வந்த் ஜாதவ், சிவசேனா

படம்
                  யஷ்வந்த் ஜாதவ் சிவசேனா தலைவர் மும்பை முனிசிபாலிட்டி நிலைக்குழு தலைவர் . நீங்கள் மக்களுக்கு பைகளை கொடுத்து ஊழல் செய்ததாக பாஜகவினர் குற்றம் சாட்டுகிறார்களே ? நாங்கள் உதவி தேவைப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம் . ம எங்கள் மீது குறைசொல்பவர்கள் பணக்கார ர்களின் பக்கம் நிற்கிறார்கள் . நாங்கள் ஏழைகளின் பக்கம் நிற்கிறோம் . அதுதான் இங்கு வித்தியாசமாக உள்ளது . எனது தொகுதி மட்டுமல்ல தேவையான மக்களுக்கு நாங்கள் உதவிகளை வழங்கியபடியே இருக்கிறோம் . பதினைந்து ஆண்டுகளாக முனிசிபாலிட்டி தலைமைப் பதவியில் இருப்பது சிவசேனா கட்சிதான் ஆனாலும் கூட வெள்ள பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லையே ? நாங்கள் இதற்கான கட்டமைப்பை உருவாக்க முனைந்து வருகிறோம் . நிலத்திற்கு கீழே நீர்த்தொட்டி ஒன்றையும் கட்டி வருகிறோம் . அடுத்து வரும் பருவமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படாது என நம்புகிறோம் . பலரும் நீங்கள் முடிவை எடுக்கும்போது உறுப்பினர்களுடன் கலந்து பேசவில்லை என்று புகார் கூறியுள்ளனரே ? பெருந்தொற்று காரணமாக வேகமாக செயலாற்ற வேண்டிய சூ்ழ்நிலை . பணத்தை நேரடியாக ந

புயல்களின் வரலாறு! - அமெரிக்காவை பாதித்த புயல்களை அறிவோமா?

படம்
            புயல்களின் வரலாறு! ஒக்கிசோபீ 1928ஆம் ஆண்டு 6-21 செப்டம்பர் பலி- 4 ஆயிரம் புளோரிடாவில் இந்த புயல் ஏற்படுத்திய நிலச்சரிவு பாதிப்பு அதிகம். இதனால் பால்ம் பீச் அருகே குடியிருப்புகளில் வாழ்ந்த மனிதர்கள் இறந்துபோனார்கள். கரீபியன் பகுதியில் இதன் காரணமாக 1500 பேர் பலியான செய்தியை முன்னமே கிடைத்தும் மக்களின் இறப்பைத் தடுக்க முடியவில்லை. விவசாயம் செய்யப்பட்டு வந்த ஏரி ஒக்கிசோபீதான் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி. 225 கி.மீ வேகத்தில் அடித்த புயல் காற்று அனைத்தையும் சர்வநாசம் செய்துவிட்டது. பல தொழிலாளர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டனர். லேபர் டே புயல் 1935ஆம் ஆண்டு 29 ஆக. 10 செப்டம்பர் பலி 485 இந்த புயலை சரியாக அதிகாரிகள் கணிக்கவில்லை. எனவே 485பேர் பலியாகும்படி சூழல் உருவாகிவிட்டது. புளோரிடாவை 2ஆம் தேதி புயல் தாக்கியது. சீர்குலைந்த சாலைகளை சரிசெய்ய முதல் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீர ர்கள் அனுப்பினர். இவர்களில் 250பேர் வேலை செய்த இடத்திலேயே பலியானார்கள். காரணம் ஒருங்கிணைப்பாளர் புயலின் பலத்தை முன்னமே அறிந்திருக்கவில்லை.  கடற்பகுதியில் மனிதர்கள் உருவாக்கிய எந்த கட்டுமானமும் உடையாமல்,

கடல்நீர்மட்ட உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? - அலசல் பார்வை

படம்
      cc     நகரங்களை மூழ்கடிக்கும் கடல்நீர்மட்ட உயர்வு ! 2100 ஆம் ஆண்டில் கடல் மூலமாக ஏற்படும் வெள்ள அபாயம் 48 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சிகள் தகவல் தெரிவித்துளளன . கடந்த சில ஆண்டுகளாகவே கடல்நீர்மட்டம் உயர்நது வருவதைப் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன . இவை வெறும் பயமுறுத்தல் அல்ல என்பதற்கான சான்றுகளை , நாம் உலக நாடுகளில் கடற்கரையோர நகரங்கள்மூழ்குவதன் மூலம் அறியலாம் . இதுபற்றிய ஆராய்ச்சியில் 2100 ஆம் ஆண்டு கடல் அலைகள் மூலமாக கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று தெரிய வந்துளளது . இதன்மூலம் ஏற்படும் சொத்துக்களின் பாதிப்பு காரணமாக 20 சதவீத பொருளாதார இழப்பு ஏற்படும் எனறும் எப்ரு கிரெஸி , லான் யங் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சி அறிக்கையில் சுடடிக்காட்டப்பட்டுளளது . பாதிப்பைக் கட்டுப்படுத்த பசுமை இல்ல வாயுக்களை குறைக்கவேண்டும் . அடுத்து , கடல்நீர் நகரங்களுக்குள் புகாதபடி சுவர்களை கட்டலாம் என பல்வேறு ஆலோசனைகள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன . கடல்நீர் மட்டம் உயருவதற்கான முக்கிய காரணம் , வெப்பநிலை உயர்வு , துருவப்பகுதிகளில் உள்ள

ஓசோன் படலம் அழிந்தால் என்னாகும்? - சிஎஃப்சி விபரீதம்

படம்
giphy.com மிஸ்டர் ரோனி குளோரோஃப்ளோரோ கார்பன் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தினால் என்ன ஆகும்? குளோரோப்ளோரோ கார்பன்களைப் பற்றி ஏராளமான விஷயங்களை  பள்ளியில் படம் வரைந்து பாகம் குறித்து படித்திருப்பீர்கள். பசுமை இல்ல வாயுக்களில் ஒன்று, நம் தலைக்கு மேல் உள்ள 30 கி.மீ. பரப்பில் உள்ள ஓசோன் படலத்தைப் பாதிக்கிறது. ஓசோன் வாயுவின் அளவைக் குறைக்கும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் ரூம் போட்டு யோசித்தனர். இதன்விளைவாக பிறந்ததுதான் மான்ட்ரியல் நெறிமுறை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் 197 நாடுகள் இணைந்துள்ளன. இந்நாடுகளுக்கு ஒரு நோக்கம் உண்டு. ஒரே நோக்கம்தான் ப்ரோ. , 2050 க்குள் உலகில் பல்வேறு செயல்பாடுகளின் விளைவாக வெளியேறும் குளோரோஃப்ளோரோ கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதுதான். இல்லையெனில் கட்டுப்படுத்த முடியாத மழை, வெள்ளம், அனல் காற்று என வெப்பமயமாதலின் விளைவுகள் அதிகரிக்கும். கூடுதலாக புற ஊதாக்கதிர்கள் உள்ளே வருவதால் தோல் புற்றுநோய் பாதிப்பும் அதிகரிக்கும். நன்றி - பிபிசி

கேட்ஜெட்ஸை மழையில் காப்பாற்றுவது எப்படி?

படம்
மிஸ்டர் ரோனி மழைநாட்களில் என்னையும் கேட்ஜெட்ஸையும் எப்படி பாதுகாப்பது? மான் மார்க் குடைகளை பாத்திரக் கடைகளில் கேட்டு வாங்குங்கள். பட்டன்களை நன்கு அழுத்திப்  பார்த்துவிட்டு காசு கொடுங்கள். இதுதான் அடிப்படையானது. மற்றபடி ரெயின்கோட், வாட்டர் ப்ரூஃப் ஷூக்கள் போன்றதெல்லாம் உங்கள் பட்ஜெட் சம்பந்தப்பட்ட விஷயங்கள். எது சாத்தியமோ அதனை வாங்குங்கள். இவையெல்லாம் மழை, நீர் இறைத்துச் செல்லும் கார்கள் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும். நன்றி - டி3 இதழ்

பாலம் கட்டிய கிராமத்து மக்கள் - இது கர்நாடக நமக்கு நாமே முயற்சி!

படம்
நமக்கு நாமேதான் உதவி! மத்திய அரசு, மாநில அரசு என நம்பாமல் தம்முடைய வாழ்க்கையை தானே தோளில் சுமக்க முடியும் என நம்புகிறவர்கள் தென்னிந்தியர்கள். இதனால்தான் எத்தனை இக்கட்டான நிலையிலும் அரசு கைவிட்டாலும் கடவுளே கைவிட்டாலும் மனிதர்கள் உதவுகிறார்கள். இதற்கான எடுத்துக்காட்டுகளை இயற்கைப் பேரிடர்களில் நாம் காணலாம். தற்போது கர்நாடகத்திலும் இத்தகைய நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இம்மாநிலத்திலுள்ள சிவமோகா மாவட்டத்திலுள்ள பிராமணகெபிகே என்ற ஊரில் மழை வெள்ளத்தில் பாலம் ஒன்று உடைந்து நொறுங்கிவிட்டது. அதனை சரிசெய்ய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. உடனே ஊடகங்களிடம் புகார் சொல்லாமல், கிராமத்தினரே களமிறங்கி கிடைக்கும் பொருட்களை வைத்து தற்காலிகமாக பாலத்தை கட்டியிருக்கிறார்கள். காலை 7.30க்கு வேலையைத் தொடங்கி மாலை 4.30க்கு வேலையை முடித்துவிட்டனர். பின்னே தினசரி வேலை நடக்கவேண்டுமே! கிராம பஞ்சாயத்து 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்த பாலத்தைக் கட்டியுள்ளனர். ஏன் கட்டவேண்டும் என்ற கேள்வி கூட உங்களுக்குத் தோன்றலாம். அரசு அதிகாரிகள் பசி என்ற உணர்வு தோன்றும் முன்பே உணவுத்தட்டுகள் அவர்கள் முன்