இடுகைகள்

சூழலியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு

மாநில பட்டாம்பூச்சி அந்தஸ்து!

படம்
  கோவாவின் மாநில பட்டாம்பூச்சி! உடலில் கருப்பு வரிகளைக் கொண்ட பேப்பர்கைட் (paperkite) எனும் பட்டாம்பூச்சியை கோவா  அரசு, மாநில பட்டாம்பூச்சியாக தேர்ந்தெடுத்துள்ளது. இதனை மலபார் ட்ரீ நிம்ப் (malabar tree nymph ) என குறிப்பிடுகிறார்கள் . இதன் செல்லப்பெயர்,  பேப்பர்கைட். கோவாவில் ஐந்தாவது ஆண்டாக பறவைத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை கோவாவின் வனத்துறை நடத்தியது. அதில் பங்கேற்ற மாநில முதல்வர்  பிரமோத் சாவந்த், பேப்பர்கைட் பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக அறிவித்தார்.  பேப்பர்கைட் பட்டாம்பூச்சி, 120 முதல் 154 மி.மி. நீளம் கொண்ட இறகைக் கொண்டது. அழியும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரி என உலக இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN),தனது பட்டியலில் இதனை அறிவித்துள்ளது. பேப்பர்கைட் பட்டாம்பூச்சி நிம்பாலிடே (Nymphalidae)எனும் குடும்பத்தைச் சேர்ந்தது.   அழியும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள பட்டாம்பூச்சியை மாநில பட்டாம்பூச்சியாக கோவா அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் இப்பட்டாம்பூச்சியின் வாழிடம் பாதுகாக்கப்படும் முயற்சிகள் தொடங்கும் வாய்ப்புள்ளது. வனத்துறை உருவாக்கிய குழுவில் சூழல் வல்லுநர்கள் பலர் இடம்பெற்

ஓராண்டு இடைவெளியில் சமூகத்தை கற்ற சிறுவனின் கல்வி! - தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ்

படம்
  ராகுல் அல்வரிஸ் - தெருக்களே பள்ளிக்கூடம் தெருக்களே பள்ளிக்கூடம் ராகுல் அல்வரிஸ் தமிழில் - சுஷில்குமார்  தன்னறம் நூல்வெளி ரூ.200 பக்கங்கள் 203 பொதுவான கல்விமுறையில் நாம் படித்து நிறுவனத்தில் வேலைக்கு செல்லலாம். ஆனால் இதில் நாம் கற்பவை பெரும்பாலும் உதவாது. அவை கல்வி சான்றிதழில் இருக்கும். நேரடியாக வாழ்க்கையில் அவை பெரிய பங்காற்றாது. இப்போது கல்லூரி படிப்பவர்கள் பெரும்பாலானோர்க்கு அவை கல்யாணப் பத்திரிக்கையில் குறிப்பிட உதவுகிறது. பெருமைக்கு மட்டுமே.  இதைத்தாண்டி நடைமுறை வாழ்க்கையைக் கற்க நாம் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. பள்ளி, கல்லூரி என மூடிய வகுப்புகளைத் தாண்டி சாளரம் திறந்தால்தான் சூரிய ஒளி, காற்று என வெளிப்புற சூழல்களை உணரமுடியும்.  கோவாவைச் சேர்ந்த ராகுலும் அப்படித்தான் தனது படிப்பை அமைத்துக்கொண்டார். ஜூன் 1995 முதல் ஜூன் 1996 என பள்ளிப்படிப்பில் சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். இந்த இடைவெளியில் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் என்னென என்பதை தெருக்களே பள்ளிக்கூடம் நூல் விவரிக்கிறது.  ராகுல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் தனது உறவினர்கள், நண்பர்கள் போல கல்லூரியில் சேரவில்லை. அதில்

சூழலியலில் போராடி வரும் இளைஞர்கள்!

படம்
              இளைய போராளிகள் ஜான் பால் ஜோஸ் இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் போராட்டக்கார ர் . உலகளவில் நடைபெறும் இயற்கை பேரிடர்களில் இந்தியாவைச் சார்ந்து கருத்துகளை முன்வைத்த சூழலியல்வாதி . இவர் எழுத்தாளரும் கூட . டெலானி ரினால்ட்ஸ் இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் . மியாமி பல்கலைக்கழகத்தில் படித்தவர் . கடல்நீர்மட்டம் உயர்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறார் . ஷியா பட்டிஸ்டா அமெரிக்காவைச் சேர்ந்தவர் . நியூயார்க்கில் வசித்து வருகிறார் . பிரைடேஸ் பார் ப்யூச்சர் யூத் வெப்பநிலை மாற்ற சூழல் போராட்டத்தின் முக்கியமான தலைவர் . ஹோலி கில்லிபிராண்ட் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் .. இங்கிலாந்து நாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்திவர்கள் இவர்ரகள முக்கி ஆட்டும் பெல்டியர் கனடாவாசி . தூய்மையான தண்ணீருக்கு போராடி வருகிறார் . இதற்கான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் . பருவநிலை மாறுதல் போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி வருகிறார் . ரித்திமா பாண்டே பதினொரு வயது சிறுமி . 2013 ஆம்

இயற்கைக்கும் பெண்ணுக்கும் தொடர்பு உண்டு!

படம்
நேர்காணல் கிறிஸ் குவோமோ, சூழலியலாளர் பெண்கள் இயற்கையோடு இணைந்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள் எப்படி? நீங்கள் பெண்ணை அவளின் பொறுமை, பாதுகாக்கும் குணம் ஆகியவற்றை வைத்து இயற்கையோடு இணைக்கிறீர்கள். நானோ மனிதர்கள் அனைவரும் இயற்கையை சார்ந்து அதிலிருந்து அறிவைப் பெற்று தம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதைக் காண்கிறேன். இதில் பெண்கள் அர்ப்பணிப்பாக பணிகளைச் செய்கிறார்கள் இங்கு நான் சொல்வது பெண்ணின் பணிகளை மட்டுமே. அவர்களை உடல்களாக கருதி, இயற்கையோடு இணைக்கவில்லை. பெண்கள் உலகை வேறுவிதமாக பார்க்கிறார்கள் என்கிறீர்களாழ ஆமாம். கடந்த இருநூறு ஆண்டுகளாக நாம் காலனியாதிக்கத்தால் அவதியுற்றோம். இன்று முதலாளித்துவத்தால் மறைமுகமாக பிரச்னைகளுக்கு உள்ளாகிறோம். பெண்கள் இக்காலகட்டங்களில் தங்களுக்கான பிரச்னைகளை தீர்க்க முனைந்திருந்தார்கள். அதாவது பாலின பாகுபாடு, சமூகப் பிரச்னைகள், சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த உழைத்து வந்தனர். ஆனால் இருநூறு ஆண்டுகளில் இவர்களை அமைப்புகளை உருவாக்க வைத்திருந்தால் பருவநிலை மாறுபாடுகளை நாம் சந்திக்கும் நிலை வந்திருக்காது. இப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலைகளை அவர்கள்

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வீடுகள் - இங்கிலாந்தில் புது ரூல்!

படம்
giphy.com மாற்றம் தரும் பசுமை வீடுகள் !   இங்கிலாந்தில் உள்ள வீடுகளில் வெளியாகும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க கார்பன் வெளியீட்டுக்கு எதிரான மனநிலை உருவாகிவருகிறது. இதன்காரணமாக தனிநபரின் இயற்கைவள ஆதாரங்கள் செலவு, தொழிற்சாலைகளின் பங்கு, உணவுக்கு உதவும் பண்ணை விலங்குகள் என அனைத்தையும் சூழலியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தில் வெளியாகும் கார்பன் வெளியீட்டுக்கு, அங்கு வாழும் மக்களின் வீடுகளும் முக்கியக்காரணம் என அரசு கண்டறிந்துள்ளது. இதன்விளைவாக, 2022க்குள் கட்டப்படும் புதிய வீடுகள் கார்பன் வெளியீடு குறைந்த பசுமை வீடுகளாக்க முயன்று வருகிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும், 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் அறைகளை சூடாக வைக்க கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றைத் தவிர்க்க வைக்கும் வழிகளை அரசு தேடிவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் பசுமை வீடுகளுக்கான விதிகள் அமலாக இருக்கின்றன. தற்போது வீடுகளுக்குத் தேவைப்படும் வெந்நீர் பொதுவா

பழங்குடித் தலைவரை கொன்ற சமூக விரோதிகள் - பிரேசில் அட்டூழியம்

படம்
பிரேசிலின் அமேசான் காடுகளைப் பாதுகாக்க போராடிய தலைவர்களில் ஒருவரான லோபோ நவ.1 அன்று கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுவரை அங்கு 135 சூழலியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குவாஜாஜரா எனும் பழங்குடி இனக்குழு தலைவராக இருந்த பாலோ பாலினோ குவாஜாஜரா என்ற 26 வயது இளைஞர், தற்போது கொல்லப்பட்ட சூழலியலாளர் பட்டியலில் இணைந்துள்ளார். அவரையும்  கொலைகார கும்பல் விட்டுவைக்காமல் கொன்றுவிட்டனர். அங்கு சட்டவிரோதமாக மரங்களை, விலங்குகளை வேட்டையாடும் கும்பல் லோபோவின் முகத்தில் சுட்டுக் கொன்றுள்ளது. அவரின் நண்பர் லேர்சியோவுக்கும் கடுமையான காயம் பட்டுள்ளது. லோபோ, கார்டியன் ஆப் தி ஃபாரஸ்ட் என்ற உதவிக்குழுவைத் தொடங்கி செயல்பட்டு வந்தார். அராரி போலா எனும் பாதுகாக்கப்பட்ட கானக இடத்தை இவர்கள் பாதுகாத்தனர். இதனை அழிப்பது சட்டவிரோத கும்பலுக்கு முக்கியமான லட்சியமாக இருந்தது. பிரேசில் அதிபர் பொல்சனாரோ தேர்ந்தெடுக்கப்படும் சமயத்தில் இக்கொலைகள் அதிகரித்து வந்தது தற்செயலான ஒன்று என நியூயார்க் டைம்ஸ் வஞ்சப் புகழ்ச்சியணியாக எழுதியுள்ளது. வலதுசாரி அதிபரான பொல்சனாரோ, காடுகளை அழிப்பதில் பேரார்வம் க

சூழலைக் காக்க குழந்தை வேண்டாம்! - புதிய தியாகிகள் உதயம்!

படம்
சுற்றுச்சூழலுக்காக சில தியாகங்களை பலரும் செய்வதுண்டு. ஒரு பொருளை வாங்கினால் மீண்டும் அதனைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டிலை பயன்படுத்துவது, ஆக்சிஜன் தரும் செடிகளை வளர்ப்பது உள்ளிட்டவை இந்த வகையில் சேரும். ஆனால் திருமணம் செய்தாலும் குழந்தை வேண்டாம். சூழலுக்கு பிரச்னை, வளரும் வாய்ப்பில்லை என தவிர்க்க முடியுமா? இப்படிப்பட்ட சிந்தனையும் ஒருபுறம் வளர்ந்துவருகிறது. அதை மற்றவர்கள் மறுக்கவும் முடியாது. தீவிரவாதம், பஞ்சம், குழந்தை கட்டுப்பாட்டு என நிலைமை மாறி வருகிறது. நிருபமா கொண்டய்யா, விபின் நாயர் அப்படிப்பட்ட தம்பதிகள்தான். எங்களுக்கு குழந்தை இல்லை என்று சொல்லி, அதற்கான காரணத்தை சொன்னால் உடனே விநோதமாக உறவினர்கள் பார்க்கிறார்கள். அதற்காக எங்களுக்கு உடல் பிரச்னை என்று கூறமுடியுமா? சரியான சூழல் இல்லை என்று தைரியமாக கூறி வருகிறோம் என்கிறார் நிருபமா. இது ஏதோ வின்சென்ட் காபோ போல புதுமைப்பித்து தலைக்கேறியவர்கள் உருவாக்கிய கருத்து என நினைத்து விடாதீர்கள். அமெரிக்காவில் அலெக்சாண்டிரியோ ஒக்காசியோ கார்டெஸ் என்ற அம்மணி, குழந்தை பெறாதீர்கள். சூழல் கெட்டுவிடும

நகரும் செர்னோபில் - ரஷ்யாவின் சூப்பர் திட்டம்!

படம்
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா ஆகியோர் நிலங்களில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார்கள். அடுத்து அவர்களின் பார்வை ஆர்க்டிக் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது அங்கு கனடா, அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் துண்டு போட்டு இடம்பிடிக்க முயற்சித்து வருகின்றன. உச்சபட்சமாக கடுங்குளிர் நிலவும் அங்கு, அணு உலை ஒன்றை நகரும் விதமாக அமைக்க ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் பெயர் அகாடெமிக் லோமோன்சோவ். அணு உலை என்றால் அதற்கு உடனே மின்நிலையம் என்று சொல்லித்தானே எழுதுவார்கள். இதனையும் அப்படித்தான் கூறுகிறார்கள். இந்த அணுஉலை மூலம் 70 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த மின்சாரத்தை வைத்து ஒரு லட்சம் வீடுகளுக்கு தோராயமாக மின்வசதியை வழங்க முடியும். சாதாரணமாக நிலத்தில் அமைக்கும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பை கண்காணித்து முறைப்படுத்துவதே கடினம். இதில் ஆர்க்டிக் பகுதியில் நகரும் விதமாக அணுமின் நிலையம் அமைப்பது சூழலுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் க்ரீன்பீஸ் அமைப்பைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜன் ஹேவர்கேம்ப். ரஷ்யா உக்ரைனில் செர்னோபில் விஷயத்தில் பல தகிடுத த்தங்களைச் செய்தது. பாதுகாப்பு வ

சூழலியலாளர்கள் படுகொலை - ஏரி ஆக்கிரமிப்பாளருக்கு நேர்ந்த கொடூரம்!

படம்
அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை! மேலே சொன்ன அப்பர் பெருமானிம் வரிகளை மனதில் கொண்டுதான் தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே சூழலியலாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், குற்றவாளிகளும் கைகோத்து செயற்படுவதால், இயற்கையைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் பலியாகி வருகிறார்கள். அண்மையில் கரூர் மாவட்டத்தில் ஜூலை 29 அன்று, முத்தாலைபட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமலை, நல்லதம்பி என்ற தந்தை - மகன் இருவரும் கொல்லப்பட்டது இப்படித்தான். ஆறுபேர் கொண்ட குழு இவர்களை வெட்டிச்சாய்த்தது. காரணம், சுலபம். ஏரிக்குச் சொந்தமான 39 ஏக்கர்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்தனர் என்று புகார் மனுவை எழுதினர். அம்மனுவை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் தாக்கல் செய்த குற்றத்திற்காக கொல்லப்பட்டனர். ”அரசு பொதுச்சொத்துகளைக் காப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அதனைக் காப்பாற்ற முயற்சிப்பவர்களையும் குற்றவாளிகளுடன் கைகோத்து கொல்கிறது. இதில் எதிர்கட்சிகள் ஆளுங்கட்சிகள் என்று எந்த வேறுபாடும் கிடையாது” என்கிறார் எக்ஸ்னோரா தன்னார்வ அமைப்பின் தலைவரான நிர்மல். உலகளவில் கோல்

செய்திக்கட்டுரைகளின் தொகுப்பு

படம்
தினமலர் பட்டத்தில் வெளியான செய்திக்கட்டுரைகள் இவைதான். குடும்பக்கட்டுப்பாடு கட்டுரை மட்டும். குப்பைகளை என்ன செய்வது கட்டுரை மட்டும். இன்ஸ்டாகிராம் கட்டுரை மட்டும். நாப்கின் கட்டுரை மட்டும். கண்டுபிடிப்பாளர் விருது கட்டுரை மட்டும். வெளியீட்டு அனுசரணை: தினமலர் பட்டம்

இரான் சிறையில் சூழலியலாளர்கள்

படம்
இரானைச் சேர்ந்த எட்டு சூழலியலாளர்கள் ஓராண்டுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். ஊழல் புகார்களின் பேரில் கைதானவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.  ஊழல் புகாரின்படி ஒருவருக்கு மரணதண்டனைகூட விதிக்கலாம் என்ற சட்ட விதிதான் பயமுறுத்துகிறது. நிலோஃபர் பயானி, சாம் ராட்ஜபி, ஹவ்மன் ஜோகர், தாஹெர் காட்ரியான், மொராத் தபாஸ், செபைடெ கசானி, அமிர் ஹோசைன் கலேகி, அப்டோல்ரெஸா கௌபயெ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெர்சியன் வைல்டுலைஃப் ஹெரிடேஜ் பவுண்டேஷனில் பணியாற்றி வந்தவர்கள். கடந்த ஆண்டு ஊழல் புகாரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் சயீத் இமானி பிப். 2008 ஆம் ஆண்டு சிறையில் இறந்துபோனார்.  ஆசிய சீட்டா புலியைக் காக்கும் முயற்சிக்காகத்தான் இரான் அரசு இப்படி இவர்கள் மீது பாய்ந்திருக்கிறது. இதில் பெரும்பாலானோர் இரான், கனடா, அமெரிக்காவில் படித்தவர்கள். மேலும் பல்வேறு உலகளாவிய அமைப்புகளில் பங்கு பெற்றவர்கள், உறவுகளை வைத்திருப்பவர்கள். அரசு திட்டமிட்டு இயற்கையியலாளர்களை தண்டிப்பதின் மூலம் மனித உரிமையாளர்களை மிரட்ட நினைக்கிறது. 

விண்ணரசு என்ஜிஓக்களுக்கு கிடைக்குமா?

படம்
ப்ரீயா பேசுவோம் என்ஜிஓ எழுத்து கட்டுரை, நாவல் அனைத்திலும் என்ஜிஓ எழுத்து பிறந்துள்ளது. அப்படி என்றால், இவர்கள் பல்வேறு துறைகளில் எதற்கு வேலை செய்கிறோம் என்றே தெரியாமல் வேலை பார்ப்பார்கள். சிபாரிசு மூலம் நல்ல சம்பளம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் வேலை? அதெல்லாம் கேட்டால் கஷ்டம். பசங்க படம் அனைவருக்கும் பிடித்தாலும் அதில் நல்லவன் கெட்டவன் என்ற தன்மை பலரும் ஆட்சேபித்த ஒன்று. என்ஜிஓ எழுத்தாளர்களும் அப்படித்தான். சூழல் பற்றி எழுதச்சொன்னால், கட்டுரை நெல்மணிகள் அறுத்துவிட்டு வயலில் எறிந்த வைக்கோலைப் போல இருக்கும். சத்தும் இருக்காது. விஷயமும் இருக்காது. அப்படியே மேற்கத்திய அறிவிலிருந்து தரவிறக்கி எழுதுவது. இதனால் வலுக்கட்டாயமாக எழுதிய உணர்வு கட்டுரைகளை படிக்கும் அனைவருக்கும் இருக்கும். ஏன் நான் கூட அதுபோல செயற்கையாக எழுதிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்து படிக்க டார்ச்சர் செய்திருக்கிறேன். ஆனால் அத்தவறை விரைவில் புரிந்துகொண்டு எழுதும் முறையை மாற்றிக்கொண்டேன். ஆனால் இந்த என்ஜிஓ சங்க எழுத்தாளர்கள், தாங்கள் எழுதும் கட்டுரையைக் கூட படிக்க முடியாமல் ஸ்டீபன் ஹாக்கிங், சார்லஸ் டிக்க