இடுகைகள்

வறுமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் அதிகரிக்கும் பெரும் பணக்காரர்கள்... தீவிர வறுமையில் அழுத்தப்படும் 95 சதவீத மக்கள்!

படம்
  பெர்னி சாண்டர்ஸ் பார்வையில் இந்தியா... இந்தியா, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மொத்தம் 1.46 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு மொத்தம் 200 பெரும் பணக்காரர்கள்.இவர்கள், 2025ஆம் ஆண்டில் 941 பில்லியன் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவில் 75 மில்லியன் மக்கள் தீவிரமான வறுமையில் வாடி வருகிறார்கள். இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள கௌதம் அதானி, பிரதமருக்கு நெருக்கமானவர்.இவர் நிலக்கரி, அடிப்படை கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரதமரின் நெருக்கமான நட்பை பயன்படுத்தி பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறார். கூடுதலாக பெரும் வரி விலக்கு, தனது நிலக்கரி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு, தொழிலாளர் சங்கங்களை அழுத்தி செயலிழக்கச் செய்வது, ஆதரவான நீதித்துறையினர் மூலம் விசாரணைகளை தாமதப்படுத்தி நிறுவனங்களை காப்பாற்றுதல் என நிறைய விஷயங்களை சாதித்து வருகிறார்.  பல கோடி மக்கள் அடிப்படையான சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்தான உணவு, வேலை கிடைக்காமல் வறுமையில் தடுமாறி வருகிறார்கள்.  இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுக...

உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்!

படம்
      பாயும் பொருளாதாரம் உலகமயமாக்கலின் பிரச்னைகள், பயன்கள்! இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நிதி அறிக்கையில் வருமானம் இருந்தால் பனிரெண்டு லட்சம் வரையில் சம்பாதிப்பவர்களுக்கு வரி சலுகை வழங்கப்பட்டுள்ளது. கேட்க நன்றாக இருப்பதெல்லாம் நடைமுறையில் பெரிய பயனைத் தருவதில்லை. உலகமயமாக்கம் பற்றி நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தின் நூல்களை படித்து முழுமையாக புரிந்துகொள்ளலாம். நாம் இங்கு அதைப்பற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறோம். உலகமயம் என்பது அனைத்து நாடுகளையும் இணைத்து செய்யும் பெரிய வணிக சங்கிலி என்றுகூறலாம். உலகமயத்திற்கு பெரிய பயன்பாடாக கன்டெய்னர் அமைந்தது. நிலம், நீர் என இரண்டிலும் கன்டெய்னர்களை கொண்டு செல்ல முடியும். கப்பல் மூலம் கன்டெய்னர்களை கடலில் கொண்டு செல்கிறார்கள். நிலத்தில் வாகனங்கள், ரயில் மூலம் கன்டெய்னர்களைக் கொண்டு செல்லலாம். இந்த வகையில்தான் 1954ஆம் ஆண்டு 57 பில்லியன் டாலர்களாக இருந்த கன்டெய்னர் வணிகம், 2018ஆம் ஆண்டில் 18 டிரில்லியன் டாலர்களைக் கடந்துவிட்டது. இதில் வணிகம் சார்ந்த ஆதரவு தொழில்நுட்பமாக இணையம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆப்கள்...

பொருளாதாரத்திற்கு உதவும் வேலை!

படம்
             பாயும் பொருளாதாரம் 9 பொருளாதாரத்திற்கு உதவும் வேலை யாருடைய செழிப்பிற்கு வேலை உதவுகிறது என்று உள்நோக்கமாக கேட்டால் பதில் சொல்லமுடியாது. பொதுவாக மனிதர்கள் அனைவருமே வேலை செய்வதில் அதிக நேரத்தை செலவிடுகிறோம். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து உணவு, உடை, இருப்பிடம் பெறுகிறோம். இதற்கு மேல் காசு இருந்தால் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தலாம். தொழிலாளர்களை தொடக்கத்தில் எந்த அரசும் பாதுகாக்கவில்லை. அவர்களே ஒன்று திரண்டு போராடித்தான் குறிப்பிட்ட எட்டுமணி நேர வேலைத்திட்டத்தை உருவாக்கினர். இன்று அந்த வேலை நேரத்தை மாற்றிவிட சுரண்டல் தொழிலதிபர்களாக சில பைத்தியங்கள் ஊளையிடுகின்றன. இதற்கு பதிலடியாக, வாகனங்கள் தயாரிக்கும் தொழிலதிபர், இப்படியான வேலை நேரத்தை மேல்நிலையில் இருந்து தொடங்கலாமே என்று கேட்டிருக்கிறார். நிறுவனர், தலைவர், இயக்குநர் வாரத்திற்கு 90 மணிநேரங்கள் வேலை செய்கிறார் என்றால் அவரின் சம்பளம் அதிகம். தொழிலாளர்கள் அதை வாழ்நாளில் நினைத்து பார்த்திர முடியாத தொகை. அப்படியே உழைத்தாலும் உடல்,மனம் கெட்டுப்போவதுதான் மிச்சமாகும். கையில் காசு ஏதும் கிடைக்க...

விரில் என்ற அற்புத சக்தியூட்டும் ஆதாரம்- மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
                அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி விரில் என்றால் என்ன? எழுத்தாளர் எட்வர்ட் புல்வர் லைட்டன் என்பவர் எழுதிய நாவலில் இடம்பெற்ற மர்ம ஆற்றல் ஆதாரத்தின் பெயர்தான் விரில். தி கமிங் ரேஸ் என்ற நாவலில் சூழலில் உள்ள மின்காந்த சக்தியைப் பயன்படுத்தி வலிமையான ஆயுதம் ஒன்றை தயாரிக்க நினைப்பார்கள். அப்படியான மர்ம ஆற்றல் ஆதாரமே விரில். இப்படி எழுதிய எழுத்தின் பின்னால் எந்த அறிவியலும் கிடையாது. ஆனால் எழுத்தாளரின் கற்பனையை வைத்து நிறைய வேதிப்பொருட்களை இஷ்டப்படி கலந்து தயாரித்து சந்தையில் விற்றார்கள். அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தின. இப்போதைக்கு சந்தையில் போவ்ரில் என்ற பொருள் சந்தையில் கிடைக்கிறது. இறைச்சியிலிருந்து பெறப்படும் பொருள் இது. 1870ஆம் ஆண்டு தொடங்கி போவ்ரில் விற்பனையாகி வருகிறது. தொடக்க காலத்தில் இதன் பெயர் ஜான்ஸ்டன் ஃப்ளூய்ட் பீஃப். குழம்பில் வாசனைக்காக சேர்த்தனர். வெந்நீரைக் கலந்து சூடான பானமாக குடித்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு பயன்பாடு கொண்ட இறைச்சி உணவு போவ்ரில். வார்டென் கிளிப் என்றால் என்ன? நிக்கோலா டெஸ்லா, வார்டென் கிளிப் என்ற இ...

எங்கெல்லாம் கல்வியறிவு குறைவாக உள்ளதோ, அங்கெல்லாம் வறுமையான ஏழை மக்கள் உருவாகிறார்கள்! - ஷி ச்சின்பிங்

படம்
1949ஆம் ஆண்டு சீனாவில் மக்கள் குடியரசு மலர்ந்தது. அந்த காலம்தொட்டே நாம் கல்வியில் நிறைய முன்னேற்றங்களைப் பெற்று வருகிறோம். வரலாற்று ரீதியாக கல்வி மேம்பாடு பற்றி பெருமை கொள்வதற்கான நிறைய விஷயங்கள் நம்மிடையே உண்டு. 1949ஆம் ஆண்டுக்கு முன்னர் நிங்டே பகுதி பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்று நாம் அங்கு பள்ளிகளைக் கட்டியுள்ளோம். விவசாயிகளின் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். இத்தோடு திருப்தி அடைந்துவிடலாமா?, இல்லை. மாறிவரும் கல்வியில் வரும் புதிய மேம்பாடுகளை அறிந்து கொள்ளவேண்டும். கல்வி என்பது பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு பிரிக்க முடியாத தொடர்புடையது. கல்வியைப் பயன்படுத்தி உள்ளூர் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை மேம்படுத்த முடியும். மேற்சொன்ன கருத்துகளின் அடிப்படையி்ல நிங்டேவில் உள்ள கல்வி நிலையைப் பார்ப்போம். அப்போதுதான் கல்வி பற்றிய கவனத்தைப் பெறமுடியும். நடைமுறை சூழலைப் பார்த்து வேகமாக முடிவெடுத்து தீர்மானிக்க வேண்டிய நிலையை புரிந்துகொள்ள லாம். நிங்டே பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளது. அதேநேரம் கல்வியிலும் மோசமாக உள்ளதா? அப்படி பார்ப்பது சரியா? ...

வணிக நடைமுறைகளை நகல் செய்தால் வெற்றி பெற முடியாது! - ஷி ச்சின்பிங்

படம்
ஒ ருமுறை நாம் பறக்கத் தொடங்கி கடலைத் தாண்ட முயன்றால் தட்பவெப்பநிலை, உலக நாடுகளின் சந்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் போராடி பிழைத்து சமாளித்து நிற்க வேண்டும். வணிகத்திற்கு ஏற்ற மாதிரி நிங்டே, ஷியாபு, ஃபுவான், ஃபுடிங் ஆகிய பகுதிகள் உள்ளன. இதில், முதல் இரண்டு பகுதிகள் மட்டுமே வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள இரண்டு பகுதிகளும் வணிகத்திற்கு ஏற்ப தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றன. நிங்டே, ஷியாபு ஆகிய இருபகுதிகளும் நாம் செல்லவேண்டிய திசையைக் காட்டுகின்றன. அந்த வழியில் நாம் செல்லவேண்டுமெனில், அதற்கு நம் உழைப்பு தேவைப்படுகிறது. சூழலின் அவசரத்தைப புரிந்துகொண்டு நிலையை அங்கீகரிப்பது அவசியம். வணிகத்திற்காக பின்தங்கியுள்ள பகுதியை திறந்து வைப்பது என்பது எளிதல்ல. காலம், இடம், உற்பத்தி சார்ந்த சிக்கல்கள், வணிக மாதிரிகள் என நிறைய சவால்கள் உள்ளன. திறந்த முறையைப் பின்பற்றும் பிற நகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அப்படியே நகல் எடுப்பது உதவாது. நம்முடைய நடைமுறை சார்ந்த சூழல்களைக் கருத்தில் கொண்டு வணிக முறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வணிகத்திற்காக ஒ...

வெற்றிக்கு உழைப்பு வேண்டாம், செல்வாக்கானவர்களின் தொடர்புகளைக் கொண்டிருந்தால் போதும்!

படம்
            வெற்றிக்கு காரணம், தொடர்புகள் மட்டுமே! சீனாவைச்சேர்ந்த தொன்மையான தத்துவவாதிகள், சமூகத்தை பிளவுபடுத்தும் விஷயங்களை அறிந்து மக்களை எச்சரித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது, சமநிலையற்ற பாகுபாடு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்ஃபூசியஸ், ஆட்சியாளர்கள் போதாமையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், சமமில்லாத தன்மையைப் பற்றி கவலைப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார். மாவோவின் மொழியைப் பின்பற்றும் ஷி ச்சின்பிங், மேற்கு நாடுகளுக்கு எதிராக அனைவருக்குமான வளம் என்ற சொல்லைப் பொதுவெளியில் பேசும்போது பயன்படுத்துகிறார். அதெல்லாம் வெற்றுப்பேச்சோ என்று தோன்றும்படி உள்நாட்டு நிலைமை மாறிவருகிறது. சீனாவில் தொண்ணூறுகளிலேயே பணக்காரர்களுக்கும், ஏழை மக்களுக்குமான வேறுபாடு பெரியளவில் அதிகரித்து வந்தது. இதுதொடர்பான ஆய்வை அமெரிக்கர்களான ஸ்காட் ரோசெல், மார்ட்டின் வொயிட் ஆகிய இருவரும் செய்தனர். தொடக்கத்தில் தங்கள் வாழ்க்கை மாறிவிடும் என நம்பிக்கையோடு இருந்தவர்கள், சமநிலையற்ற பாகுபாடு அதிகரிக்க பொருளாதார முறை மீது புகார்களை அடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆய்வை ஷி ஆட்சிக்கு வருவ...

சீனாவின் தொன்மைக்காலத்திற்கு சென்று மருத்துவராகி சாதனை புரியும் நவீனகால மருத்துவ மாணவன்!

படம்
  இன்கார்னேடட் லெஜண்டரி சர்ஜன்  சீன காமிக்ஸ்  104 அத்தியாயங்கள்  நவீன உலகில் மருத்துவராக உள்ளவர், தொன்மையான சீனாவின் காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார். அதாவது அவரது ஆன்மா செல்கிறது. அங்கு குவா என்ற வாழ்ந்து கெட்ட குடும்ப கடைசிப்பிள்ளையின் உடலில் புகுகிறது.  குவாபு, வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றவர், ஊருக்கு வந்திருப்பார். அந்த நேரத்தில் கொள்ளையர்கள் அங்கு புகுந்து தாக்கி கிராமத்தினரை கொலை செய்து சென்றதில் குவாபு என்ற கடைசிப்பிள்ளையும் நெஞ்சில் வெட்டுபட்டு இறந்துபோயிருப்பார்.  படித்துவிட்டு வந்து அரசு தேர்வு எழுதினால் ஒரு வேலை கிடைக்கும் குவா குடும்பம் வறுமையில் வாடாது என்பதே அவர்களின் ஆசை.  வழி வழியாக அரசு அதிகாரிகளாக வாழ்ந்த குடும்பம், இப்போது வறுமையில் தத்தளிக்கிறது. சாப்பிட சோறே இல்லாத கொடுமை எல்லாம் கிடையாது. உணவில் இறைச்சி வாங்கி சேர்க்க முடியாத வறுமை. குவாபுக்கு இரண்டு அண்ணன்கள். ஒருவர், அரசு தேர்வை எழுதி லஞ்சம் கொடுத்து வேலைக்கு போகமாட்டேன் என உறுதியாக இருக்கிறார். அடுத்தவர், தற்காப்புக் கலை கற்று ராணுவத்தில் சேரவிருக்கிறார். மூன்றாவதாக உள்ள கு...

பணத்தை தேடி ஓடும் மனிதர்களின் வாழ்க்கை அவலத்தைப் பற்றிய பகடி!

படம்
  மணி  தெலுங்கு  இரண்டு இளைஞர்கள் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். சாப்பிடக்கூட காசில்லை. வீட்டு ஓனரின் மகளை இளைஞர்களின் ஒருவனான போஸ் காதலிக்கிறான். இன்னொருவனான சக்ரி, பக்கத்து வீட்டு தொழிலதிபரின் மனைவியை கடத்தி பணம் கேட்டு மிரட்டினால் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என யோசனை சொல்கிறான். இதன்படி மனைவியை கடத்துகிறார்கள். பணம் கேட்டு போன் செய்தால், கணவர், அவளை கொன்றுவிட்டால் ஒரு லட்சம் என்ன இரண்டு லட்சமே தருகிறேன் என பேசுகிறார். இந்த நேரத்தில் கணவரை விசாரிக்க வரும் போலீஸ், தொழிலதிபர் மனைவியைக் கொன்றதாக அவர் மீது சந்தேகப்படுகிறது. அந்த இளைஞர்கள், ஒருகட்டத்தில் வேலையின்மையால் கடத்திவிட்டோம் என தொழிலதிபர் மனைவியிடம் உண்மையைக் கூறுகிறார்கள். அதற்குப் பிறகு நிலைமை என்னவானது என்பதே படத்தின் இறுதிக்காட்சி.  இதில் கூறாத கதை. படத்தில் ரவுடியாக வரும் பிரம்மானந்தம் பாத்திரம். இவர் உள்ளூரில் உள்ள கடைகளில் மிரட்டி காசு பிடுங்கி வாழ்கிறார். இவரிடம் பணம் கடன் வாங்க சக்ரி அவர் சினிமாவில் நடிக்கலாம் என ஆசையை தூண்டிவிட்டு காசு வாங்குகிறான். இதற்குப் பிறகு பிரம்மி, நடிப்பு ஆசையில் ம...

இங்கிலாந்தில் உருவாகும் வறுமை நிலை!

படம்
 பெருகும் வறுமை, பட்டினியால் வாடும் குழந்தைகள்! இந்த நிலை மூன்றாம் உலக நாடுகளில் சகஜம்தான். இந்தியா போன்ற நாடுகளில் கண்ணை மூடிக்கொண்டு சேரிப்பகுதிகளை, சாக்கடைகளை, மனிதர்கள் மலத்தை பசியில் அள்ளி தின்பதை பார்க்காமல் கடப்பவர்கள் அதிகம். ஆனால் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளை காலனியாக்கிய ஒரு நாட்டில் பட்டினி, பசி தொடர்ச்சியாக உருவாகி வளர்கிறது என்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதான் சமீபத்திய அதிர்ச்சி.  வீட்டை விட்டு வெளியே செல்லும்போது நடைபாதையில் உட்கார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மசூதியில், குருத்துவாராவில் இலவச உணவுக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு வங்கிக்கான நன்கொடை, வறுமையில் இருப்பவர்களுக்கான உதவி தரவேண்டி பதாகைகள் நிறைய காணப்படுகின்றன. இதெல்லாம் இங்கிலாந்தில் நடந்து வரும் நிலை. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் உணவு, உடை, வீடு ஆகியவற்றோடு குளிருக்கு சமாளிக்க ஹீட்டர் வசதியும் தேவை. இல்லையெனில் உறைந்து இறந்துவிடுவார்கள். ஏஐ காலத்தில் வேலையிழப்பு நேர்ந்துவருகிறது. பிள்ளைகளுக்கு கொடு...

அமெரிக்காவில் வறுமையில் வாடும் குழந்தைகள்!

படம்
  அமெரிக்காவில் வறுமை விளிம்பில் தள்ளப்படும் சிறுவர்கள்! அமெரிக்காவில் வறுமை நிலையில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட இரண்டு மடங்காக அதிகரித்து வருகிறது. இதை அமெரிக்க அரசின் மக்கள்தொகை அமைப்பு அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டு, 5.2 சதவீதமாக இருந்த வறுமை நிலையிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது 12.4 சதவீத்த்திற்கும் அதிகமாக உள்ளது. அமெரிக்க அரசும் கையைக் கட்டிக்கொண்டு சும்மாயிருக்கவில்லை. குழந்தை வரி கடன் திட்டம் என்பதை அமல்படுத்தியிருக்கிறார்கள். அதாவது, குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்கள் தொழில் செய்து வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குழந்தைக்கு 3,600 டாலர்கள் வரியைக் கடனாக கொடுக்கிறார்கள். இத்தொகையை அரசு வரி வருவாயில் இருந்து விட்டுக்கொடுக்கிறது. இதன்மூலம் அரசுக்கு வருமானம் குறைந்தாலும் கூட குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு இந்த திட்டம் மூலம எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை . ஆனால் எதிர்காலத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் தோல்வி என்று இல்லாமல் அரசின் கொள்கை ரீதியான முடிவு...

செயற்கை நுண்ணறிவு மூலம் பணம் சம்பாதிக்கும் ஏழை மக்கள்! - கார்யா ஆப்பின் வறுமை ஒழிப்பு செயல்பாடு

படம்
  கார்யா ஆப் பயன்பாட்டாளர்கள், கர்நாடகா செயற்கை நுண்ணறிவு மூலம் வேலையிழப்பு பற்றிய பதற்றம் தரும் செய்திகளை தினந்தோறும் கேட்டு வருகிறோம். கர்நாடக மாநிலத்தின் சிலுகாவடி, ஆலஹல்லி ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள சிறுபான்மையின மக்களுக்கு செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நிரந்தரமான வேலை என்று கூறமுடியாது. ஆனால், அங்குள்ள விவசாய நிலத்தில் செய்யும் கூலி வேலைக்கான ஊதியத்தை விட அதிகம். இதற்கு கார்யா   என்ற லாபநோக்கமற்ற அமைப்பின் அப்ளிகேஷனே காரணம். இந்த அமைப்பை டெல்லியை பூர்விகமாக கொண்ட மனு சோப்ரா தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். 2021ஆம் ஆண்டு, மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் என்ற நிறுவனத்தில்   வேலை செய்த மனு, தனது வேலையை கைவிட்டு கார்யா என்ற ஆப்பை உருவாக்கத் தொடங்கினார். இந்த ஆப் மூலம், தாய்மொழியில் அதாவது கன்னடத்தில் குறிப்பிட்ட செய்தி பற்றிய டேட்டா மாடல்களை உருவாக்குகிறார்கள். குறிப்பிட்ட செய்தியை ஒருவர் துல்லியமான வட்டார வழக்கில் பேச வேண்டும். அவர் பேச்சின் துல்லியத்தைப் பொறுத்து அவருக்கு வருமானம் கிடைக்கும். ஒரு மணிநேர உழைப்...

சட்டவிரோத சூதாட்ட வலைதளத்தை தடுக்க முயலும் ஹேக்கரும், சீனியர் இன்ஸ்பெக்டரும்!

படம்
  போலீஸ் யுனிவர்சிட்டி - கே டிராமா போலீஸ் யுனிவர்சிட்டி கே டிராமா ராக்குட்டன் விக்கி ஹேக்கராக இருந்து சூதாட்ட வலைத்தளத்தில் பணத்தை திருடியவர், கொரிய காவல்துறை பல்கலைக்கழகத்தில் மாணவராகிறார். அவர் ஹேக்கர் என்று அங்கு பாடம் நடத்தும் முன்னாள் விசாரணை நடத்தும் அதிகாரி ஒருவருக்குத் தெரியும். அந்த மாணவரை தனது சூதாட்ட வலைத்தள விசாரணைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். அவரைத் தடுக்க ஏராளமான முயற்சிகள் நடைபெறுகின்றன. மாணவரை குற்றவாளியாக்கவும் முயல்கிறார்கள். தடைகளை தகர்த்து ஹேக்கர் மாணவர் காவல்துறை அதிகாரி ஆனாரா என்பதே கதை. தொடரின் நாயகன் யூ டாங்க் மன் என்ற சீனியர் இன்ஸ்பெக்டர்தான். இவர், சூதாட்ட வலைத்தளத்தை பிடிக்க பிளாக்நெட்டில் ஹேக்கர் ஒருவருடன் நட்பு வளர்க்கிறார். பேர்ட் என்ற பெயரில் பள்ளி மாணவராக உரையாடுகிறார். எதிர்முனையில் உள்ளவர் ஹேக்கர் யூன் என்ற கங்க் சியோன் ஹோ பள்ளி மாணவர். இவர் ஆதரவில்லாதவர். பெற்றோர் விபத்தில் இறந்துவிட, அவர்களின் நண்பர் எடுத்து வளர்க்கிறார். இவரது அண்ணன், இவரை தம்பியாக நினைப்பதில்லை. இதனால் கணினியே கதி என கிடந்து அதில் நிபுணத்துவம் பெறுகிறார். ஒருமுறை அப...