இடுகைகள்

ஆனந்தபஜார் பத்திரிகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆனந்தபஜார் பத்திரிகை - நூற்றாண்டைக் கொண்டாடும் நாளிதழ்!

படம்
  anandabazar patrika 100 year supplementary 29 oct 2021 ஆனந்த பஜார் பத்திரிகை - நூற்றாண்டு கடந்த சாதனை! குறிப்பிட்ட மொழியில் பணியைத் தொடங்கி, பிறகு அனைத்து மொழிகளிலும் முக்கியமான நாளிதழாக அல்லது ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்பது நிச்சயம் சாதனைதான். அதுவும் குறிப்பிட்ட கொள்கைக்காக நாளிதழைத் தொடங்கியவர்களுக்கு சமரசம் செய்வது மிக கடினமாகவே இருக்கும்.  தமிழிலும் கூட தமிழ்நாட்டிற்காக, அதனை தனிநாடாக்க பத்திரிகை தொடங்கி இன்றுவரை அதற்கான உழைப்பில் இருக்கும் சில பத்திரிகைகள் உண்டு. இப்படி தொடங்கும் பத்திரிகைகளில் உள்ள இயக்குநர், ஆசிரியர் நாளிதழை நடத்துபவர்களின் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவே இருப்பது ஆச்சரியமல்ல. அப்படித்தான் நாளிதழை கட்டுப்படுத்தி வைத்து இலக்கை நோக்கி நடத்துகிறார்கள்.  ஆனந்த  பஜார் பத்திரிகை இன்று ஏபிபி ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஏபிபி நாடு என யூடியூப் சேனலைப் பார்த்திருப்பீர்கள். தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இந்த ஊடக நிறுவனத்தின் டிவி சேனல்கள் உண்டு. தமிழ், தெலுங்கில் டிஜிட்டல் வலைத்தளமாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் அவர்கள் டிவி சேனல்களை தொடங்கலாம். வங்காள மொழியி