இடுகைகள்

சைக்கோ கொலைகார ர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கர்ப்பிணியை தாக்கி குழந்தையை வெளியே எடுத்த ஜப்பான் சைக்கோ!

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் யோஷிரா கொடைரோ சுருக்கம் ஜப்பானைச் சேர்ந்த ராணுவ வீரர். சீனா - ஜப்பான் போர் நடைபெற்றபோது அதில் பங்கேற்று பல்வேறு கொடூர கொலைகளைச் செய்தார். பத்துக்கும் மேற்பட்ட பெண்களை கொடூரமாக கொன்றார். 1928ஆம் ஆண்டு சீனாவின் ஜினன் எனுமிடத்தை ஜப்பான் ராணுவம் கைப்பற்றியது. இப்போரில் பல்வேறு கொலைகள், வல்லுறவுகள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற கொடுமைகளை உலகிற்கு சொன்ன வீர ர்களில் யோஷிராவும் ஒருவர். மே, 1945 முதல் ஆகஸ்ட் 1946 வரையில் பத்து பெண்களை கொடூரமாக கொன்றார். இறந்த பெண்ணுடன் பாலுறவு வைக்கு முயன்றபோது காவல்துறையில் பிடிபட்டார். 1946ஆம் ஆண்டில் ஆக. 20 அன்று கைதானவர், அடுத்த ஆண்டு ஜூனில் தன் கொலைகளை ஒப்புக்கொண்டார். 1949 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இறக்கும்போதும் பெரிதாக யோஷிரோ கவலைப்படவில்லை. அமைதியாக சிகரெட் ஒன்றைப் பிடித்துவிட்டு இறந்தார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து டோக்கியோ இயர் ஜீரோ என்ற படம் 2007ஆம் ஆண்டு தயாரானது. 1905இல் ஜப்பானில் பிறந்த யோஷிரோ, பள்ளியில் சாகச வீரன். தினசரி வகுப்பில் கிடைக்கும் சோனிப்பயல்களை அடித்

ஹென்றி லெண்டரு - விதவைகளை தீர்த்துக்கட்டிய குரூரன்!

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் ஹென்றி லெண்டரு பிரான்சைச் சேர்ந்தவர் ஹென்றி. அவசரவேலையாக ஊருக்கு போகும்போதுதான் சாவிக்கொத்தை மனைவியிடம் கொடுத்தார். ஒரே ஒரு விஷயத்தைத்தான் கசியவிட்டார். அனைத்து ரூம்களையும் திறந்துகொள். கடைசி ரூமை மட்டும் திறக்காதே என்றார். அப்படியென்றால் நம் மனதில் என்ன தோன்றுமோ அதே குறுகுறுப்புதான் அவர் மனைவிக்கும். உடனே அவர் தலை தெருவில் மறைந்ததும், மனைவி அந்த அறையை திறந்து பார்த்தார். மயக்கமே வந்துவிடும் போல இருந்தது. அந்த  அறை கீழேயுள்ள அறைக்கும் செல்லும் வழி கூடத்தான். அந்த அறையில்தான் ஏழு சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனை பிணங்களிலும் கழுத்து மட்டும் அறுக்கப்பட்டிருந்தன. பார்சி இனத்தைச் சேர்ந்த நாற்காலி  விற்பவராக இருந்தார். ஓவியங்களையும் வரைந்து கொண்டிருந்தார். சின்ன வயதில் தன் சகோதரியோடு பாலுறவு வைத்திருந்தார். நான்கு குழந்தைகளையே இம்முறையில் பெற்றெடுத்தார். ஆனால் அவர்களை வளர்க்க காசு வேண்டுமே? பல்வேறு தில்லுமுல்லுகளை செய்யத்தொடங்க சிறை வாசம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை கிடைத்தது. சந்தோஷமாக வாழ வேண்டும்? என்ன செய்வது? வசதியான விதவைப் ப

பிணத்துடன் திருப்தியான தூக்கம் - டென்னிஸ் நீல்சன் விளையாட்டு

படம்
அசுரகுலம் - இன்டர்நேஷனல் டென்னிஸ் நீல்சன் 1945ஆம்ஆண்டு நவ.23 அன்று, ஸ்காட்லாந்தில் ஃபிராசர்பர்க்கில் பிறந்த சீரியல் கொலைகாரர். 1970 முதல் 80 வரை தீவிரமாக செயல்பட்டு நிறைய பேரை வைகுண்ட பிராப்தி அடைய வைத்தார். ஓரினச்சேர்க்கை மீது ஆர்வம் கொண்டவர். 1978ஆம் ஆண்டில் முதல் ஆளை போட்டுத்தள்ளி எலுமிச்சம்பழத்தை வண்டிச்சக்கரத்தில் நசுக்கி கணக்கைத் தொடங்கினார். அதன்பின்னர் போலீஸ் கணக்கெடுத்தபோது, பன்னிரண்டு பேர்களை விசா வழங்காமல் மேலே அனுப்பி இருந்தார். பெரும்பாலான சீரியல் கொலைகார ர்களின் வாழ்க்கையில் என்ன நடந்ததோ, அதுதான் இவருக்கும் நடந்தது. குடும்ப வாழ்க்கை பெரியளவு இவருக்கு உதவ வில்லை. அம்மா, தனியாக பிரிந்து வாழ்ந்தார். அப்போது அவருடன் தங்கி பாட்டியுடன் வாழ்ந்தார். பின் அம்மா மற்றொரு திருமணம் செய்தபோது, நீல்சன் தனிமரமானார். அவரின் தாத்தா இறந்தபோது நீல்சனின் மனநிலையில் பாதிப்பு ஏற்பட்டது. அவரின் இறந்த உடல் அவரின் மனநிலையில் உறுத்தலாக இருந்தது. பின்னர், படிப்பு முடிந்த தும், ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு போரிடவெல்லாம் செல்லவில்லை. சமையல்கார ராக இருந்தார். பின்னர் அங்கிருந்து வெ

துணிச்சலாக கொன்று முடி! - இரு சைக்கோ கொலைகாரர்கள்

படம்
அசுரகுலம் காங் ருண்போ காங் ருண்போ, சீனாவின் ஹெய்லோங்ஜிகாங் எனும் பகுதியில் வாழ்ந்து மறைந்த கொலையாளி. 2005 முதல் 2006 காலகட்டத்தில் சிறப்பாக வேலைபார்த்து ஆறு குழந்தைகளை பாலியல் ரீதியில் தாக்கி கொன்றார். கொன்றவர்களை இணைய கஃபேயில் பார்த்து தேர்ந்தெடுத்தார். வயது 9-16.  2008 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று காங்கை போலீஸ் கைது செய்தது. அதுவும் இவரிடமிருந்து தப்பி சென்றவர் ஒருவர் செய்த அலர்ட்டால் நடந்தது.  காங்கின் வீட்டில் நான்கு பேரின் உடல்களை போலீஸ் மீண்டது. அனைத்தும் செக்ஸ் சித்திரவதைகள் செய்யப்பட்டு இறந்தவர்கள்தான். குழந்தைகளின் உடைகள், அவர்களின் உடைகள், பத்து செட் ஷூக்கள் என கலவையாக காங்கின் அறையில் கிடைத்தன. இதற்கும் முன்பு இளம்பெண் ஒருவரைக் கற்பழித்த குற்றத்திற்காக எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். ஆறு கொலைகளுக்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை அனுபவித்தார். இருபது குழந்தைகளைக் கொன்றவர் இவர். ஸெங் கைகுய் முன்னாள் விடுதலை ராணுவ வீரர். சீரியல் கொலைகார ர், வங்கி கொள்ளையர் என புகழ்பெற்றார். 2004 ஆம் ஆண்டு தொடங்கிய கொலையின் தடம் 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. தென

பெண்களே சொர்க்கம்! அதில் நான் கடவுள்!

படம்
அசுரகுலம் கியோசி ஒகுபோ 1935  ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று ஜப்பானில் பிறந்த கியோசி, பெண்களை வல்லுறவு செய்து கொன்று போடுவதில் வித்தகர். 1971 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மட்டும் ஓவர் டைம் பார்த்து 8 பெண்களை ருசி பார்த்து கொன்று போட்டார். அரசு என்ன செய்யும்? அதேதான். 1976 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி கியோசி ஒகுபோவை தூக்கிலிட்டு கொன்று குற்றத்தின் அறிகுறியை மறைத்து மூடியது. நாற்பத்தொரு நாட்களில் அரசை நடுங்க வைக்க முடியுமா? தனிகா இவன் எனும் புனைப்பெயரைக் கொண்ட கியோசி அதனைச் சாதித்தார். கூர்மையான ரசனை கொண்டவர் கியோசி, 16 முதல் 21 வயது கொண்ட பெண்களை மட்டுமே தன் பசிக்கு ருசி பார்த்தார் கியோசி. ஜப்பானின் டகாசாகி எனும் இடத்தில் பிறந்தவர் கியோசி. அம்மா, பாதி ரஷ்யர், பாதி ஜப்பானியர். வளர்ந்த பருவத்தை பயத்திலேயே ஓட்டும்படி ஆனது. காரணம் அமெரிக்கா - ஜப்பான் போர் அப்போதுதான் நடைபெற்றது. ஆண்டு 1941. 1955 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று கியோசி ஒரு பெண்ணை வல்லுறவு செய்தார். அதே கனவில் டிச. 26 அன்று மற்றொரு பெண்ணை முயற்சித்தார். ஆனால் தேர்வில் தோல்வியுற்றார். அதோடு கைதான அவமானமும் சேர்ந்தது. சிறையில்

காதல் - கற்பழிப்பு - வல்லுறவு - காதல் மன்னனின் இருள் கதை!

படம்
அசுரகுலம் ஃப்யூசோஸி மட்சுனகா ஜப்பானின் யாங்காவா நகரில் பிறந்த  மட்சுனகா, தன் சுயநலத்திற்காக நம்மைப் போலத்தான் எதுவேண்டுமானாலும் செய்வார். 1961 ஆம் ஆண்டு பிறந்தவர், பள்ளியில் பல பஞ்சாயத்துகளைக் கொண்டு வந்தார். எல்லாம் காதல் லீலைகள்தான். தன் ஜூனியர் பெண்ணை காதலித்தேன் காதலி தேன் என கேப் கூட விடாமல் சைட் அடித்தார். அதற்காக முழுநேரமும் ரொமான்ஸ் கியரைப் போட்டு கிர் அடிக்கவில்லை. படிப்பிலும் பெயர் சொல்லும் ஆள்தான். ஆனால் என்ன மட்சுனகா செய்த ரொமான்ஸை யாரும் ரசிக்கவில்லை. என்னவாக இருக்கும் என நீங்கள் ரொம்ப யோசிக்காதீர்கள். பள்ளியில் மட்சுனகா செய்த காதல் பிரச்னைகளால் பல பள்ளிகளில் டிசியுடன் அலைந்தார். காதல் வேலி மட்சுனகா, பார்க்க அழகானவர் என்பதை நான் இங்கு சொல்லவேண்டியதில்லை. தன்னை வழிபடும் அடிமை கிடைத்தாலே பெண்கள் கிறங்கிவிடுவார்கள். இதில் கொஞ்சம் சாமுத்ரிகா லட்சணமும் சேர்ந்துவிட்டால் என்னாகும்? ஒரே நேரத்தில் பத்து பெண்களுடன் பழகி சல்லாபித்த தீராத விளையாட்டுப்பிள்ளை விஷாலின் கிராண்ட் ஃபாதர் மட்சுனகா. அதேநேரம் பத்தொன்பது வயதில் திருமணம் செய்துகொண்ட வேகத்தை  அவருடைய நண்பர்களே எ

ஜப்பானை உலுக்கியவர்கள்!

படம்
ஜப்பான் நாடு, சீனா, கொரியா என பலநாடுகளை காலனியாக்கி சீரழித்த வரலாற்றுக்கு இன்றுவரை பகையும், வன்மமும்  அந்நாட்டு உறவுகளில் ஏதோவொரு சமயம் வெளிப்பட்டு வருகிறது. அந்நாட்டைச் சேர்ந்த பரபரப்பு ஏற்படுத்தியை சைக்கோ கொலைகாரர்கள் குறித்த பார்வை நமக்குத் தேவை. இதோ.... சட்டாரோ ஃபுகியாஜே 1889 ஆம் ஆண்டு பிறந்த சட்டாரோ ஃபுகியாஜே பெண்களைக் கற்பழித்துக்கொன்றதற்காக  1926 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். எரடோமேனியா என்று வரலாற்றில் குறிக்கப்படும் கொலைகாரர் சடாரோ, ஓர் கற்பழிப்பு வெறியர். 1906 தொடங்கி 1924 ஆம் ஆண்டு வரை வல்லுறவு வெறியாட்டம் செய்தார். வழக்கு ஆதாரங்களுடன் நின்றது பதினொரு சிறுமிகளைக் கற்பழித்து கொன்றார் என்ற குற்றச்சாட்டுகளில்தான். ஆனால் சட்டாரோவைக் கேட்டால் எண்ணிக்கை தெரியாது. சுமாராக 93 பெண்களை கற்பழித்திருப்பேன் என கேசுவலாகச் சொன்னார். தடம் மாற்றிய பாலுறவு ஜப்பானின் கியோட்டோவில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் சட்டாரோ. வேலைக்குச் சென்றால்தான் ஒருவாய் சோறும் மீனும் கிடைக்கும் நிலை. வேலைக்கும் மறுக்காமல் போனார். அங்கு பதினேழு வயதுப் பெண் அழகாய் இருக்கிறாய், ஆசையாய

புளோரிடாவை நடுங்க வைத்த காதல் சைக்கோ - டெட் பண்டி

படம்
டெட் பண்டி - காதலைக் கொன்றேன்! அமெரிக்காவில் வெர்மாண்ட்டில் 1946 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று பிறந்தார் டெட் பண்டி. இப்படித்தான் போலீஸ் கூறுகிறது. இயற்பெயர் தியோடர் ராபர்ட் கோவெல். அம்மா, தங்கையுடன் வசித்த சிறுவன் தன் தந்தையைப் பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை. காரணம், திருமண உறவில் பிறக்கும் அதிர்ஷ்டம் டெட் பண்டிக்கு இல்லை, அவரின் சகோதரிக்கும் இல்லை. இப்படியொரு பெண்ணை வீட்டில் வைத்திருந்தார் அம்மா எலினார் லூயிசின் அப்பா. டெட்டின் தாத்தா. ஆனால், தினசரி எலினாரையும் டெட்டையும் அடித்து துவைப்பது மட்டுமே சமூகத்தின் அழுத்த த்திலிருந்து தப்பிக்க உதவியது. இதனால் அங்கிருந்து தன் சகோதர ர்களின் வீட்டுக்கு இடம்பெயர்ந்தார் எலினார். அங்குதான் எலினாருக்கு பிடித்த சமையல்காரர் மன(ண)த்துணையாக,கிடைத்தார். அம்மா, ஜானி பண்டி என்பவரைத் திருமணம் செய்தார்.அது டெட் பண்டிக்கு பிடிக்கவில்லை. காரணம், இரண்டாவது தந்தை அழகாகவும் இல்லை. அவர் கையில் பெரியளவு பணமும் இல்லை. இதை அவர் தன் பெண்தோழியிடம் சொல்லிச் சிரித்தார். இயல்பிலேயே வாட்ட சாட்டமான ஆள். வசீகரமான தோற்றம் என பள்ளியிலேயே புகழ்பெற்றிருந்தார்

அசுர குலம் - ரிச்சர்டு ராமிரெஸ்

இரவில் பாய்ந்த கரும்புலி! 1980களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பலரின் தூக்கத்தை ஒருவர் கெடுத்துக்கொண்டிருந்தார். சினிமாவில் நடிக்கும் கனவுக்கண்ணன் அல்ல. கொலைகாரர். அவரின் குறி, பெரும்பாலும் ஆன்டிகள்தான். மத்திய வயதிலுள்ளவர்கள் ஃபிளாட்டில் தூங்கும்போது உள்ளே நுழைந்து மெல்ல சித்திரவதையை தொடங்குவார். எல்லாம் ஷங்கரின் கருடபுராணம் போலத்தான். மெல்ல அடித்து உதைத்து துவண்டு பயந்து வீறிடுபவர்களை மெல்ல ரசித்து கொல்வது ராமிரெசின் பாணி. கொலையான உடல்களில் கண்கள் இருக்காது. பற்கள் உடைக்கப்பட்டிருக்கும். இந்த பாணி, சாத்தானின் சித்திரவதை என்று கூறப்பட்டிருப்பதை ஒத்திருக்கும் என கிசுகிசுக்கிறது எஃப்பிஐயின் கோப்புகள். ராமிரெசின் வருகை தந்த பயத்தினால் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்தவர்கள் பலர், படுக்கையில் படுக்காமல், ஆண் தனியாக பெண் தனியாக தூங்கி உயிரைக்காப்பாற்றிய கதைகள் வெகு பிரபலம். பின்னே உசுரு போனா வருமா? தடயம் லேது! அத்தனை கொலைகளிலும் பிணங்களை தூக்கி வந்து மார்ச்சுவரியில் போட்ட போலீசாருக்கு நயா பைசா துப்பு கூட கிடைக்கவில்லை. மிச்சம் ஒன்றுதான். அவர் அவியா என்ற ஷூக்களை அணிந்தார் என்ற