இடுகைகள்

கண்காணிப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் அல்காரித நிறுவனங்கள் - பாதகங்களும் விளைவுகளும் - அல்காரிதம் - நூல் விமர்சனம்

படம்
  அல்காரிதம் ஹில்கே செல்மன் ஹாசெட் புக்ஸ் வங்கிகள், பள்ளிகள், தனியார் டெக் நிறுவனங்கள் ஆகியவற்றில் அல்காரித நிறுவனங்கள் எந்தளவு பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக ஏற்படும் பாதகங்கள் என்னென்ன, அதை வேலை தேடுவோர் எப்படி எதிர்கொள்வது என நூலாசிரியர் விளக்கியுள்ளார்.  இன்று வேலைக்கு அனுப்பும் ரெஸ்யூம்களை அல்காரிதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. அவை தேர்ந்தெடுத்து சில தேர்வுகளை வைக்கின்றன. இதில் ஒருவரின் உடல்மொழி, குரல், செயல்பாடு, நிறம், இனம் என அனைத்தும் பார்க்கப்படுகிறது. பிறகு அவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட வேலைவாய்ப்பு தேர்வுகளை பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன. அமேஸான் ஃபிளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஒருவர் அல்காரிதம் மூலம் கண்காணிக்கப்பட்டு, குறைகள் எழுந்தால் பெரிதாக விளக்கங்கள் கேட்காமல் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட முடியும். இதற்கான விளக்கங்களை வேலை இழந்தவர் பெற முடியாது. இதற்காகவே தனி ஒப்பந்தங்களை அமேசான் தயாரித்து வைத்து வேலை செய்பவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. வாகனங்களில் உள்ள கேமராக்கள் மூலம் ஓட்டுநர்களை கண்காணிப்பது, அந்த

அடிப்படை உரிமைகளை கோரும் போராளிகளை கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  கண்காணிப்பு அரசியலில் வேகமெடுக்கும் சீனா  சிசிடிவி கேமராக்களை செயற்கை நுண்ணறிவு வசதியுடன் பொருத்தி அதை இயக்கி குற்றவாளிகளை பிடிப்பது சீனாவின் சிறப்பம்சம். இதில் நாம் அறியாத ஒன்று. இதே வசதியைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களை முழுமையாக முடக்க முடியும் என்பதுதான். சீனாவில் மட்டுமல்ல. அதன் ஆட்சி ஹாங்காங்கிலும் விரிவடைந்துள்ளது. அங்குள்ள காவல்துறைஅதிகாரிகளும் இப்போது சீனாவின் காவல்துறை போலவே அரசியல் உரிமை போராளிகளை கைதுசெய்து, கண்காணித்து விசாரித்து மிரட்டி வருகின்றனர். இங்கு நாம் பார்க்கப்போவது அப்படியான போராளி ஒருவரின் வாழ்க்கை பற்றியதுதான்.  ஹாங்காங்கைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆக்னஸ் சோ. இவர் கனடாவில் படிக்க விண்ணப்பித்தார். பல்கலைக்கழகத்தில் கூட அனுமதி கடிதம் வழங்கிவிட்டனர். ஆனால், அவரது பாஸ்போர்ட்டை ஹாங்காங் அரசு தர மறுத்துவிட்டது. அதை ஆக்னஸ் பெற சில நிபந்தனைகளை விதித்தது. ஹாங்காங்கில் அவர் செய்த போராட்டங்கள், பங்கேற்புகள் அனைத்தும் வருத்தம் தெரிவிப்பது, கம்யூனிஸ்ட் கொள்கை சுற்றுலாவை ஏற்கவேண்டும் என்பவைதான அவை.  ஆக்னஸூக்கு அப்படியான கருத்தியல் சுற்றுலா என்பது பற்றி எதுவ

சரக்குளை சென்சார் வைத்து கண்காணிக்க முடியும்! - ஒளி மூலம் மின்சாரம் சேமிக்கும் சென்சார்கள்

படம்
  ஒளியைப் பயன்படுத்தும் சென்சார்கள்! அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், மைக் ஃபிட்ஸ்ஜெரால்ட். இவரது நிறுவனத்தின் பெயர், நெட் ஃபீசா ). மைக்கிற்கு ஒரு கனவு உண்டு. கண்டெய்னர்களில் சென்சார்களைப் பொருத்தி, அதுபற்றிய தகவல்களை அனுப்புவர்களுக்கு உடனுக்குடன் அனுப்புவதை லட்சியமாக நினைக்கிறார். எதிர்காலத்தில் சென்சார்களை வைத்து இன்னும் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும் என நினைக்கிறார். சமகாலத்திலேயே நிறைய நிறுவனங்கள் அதற்காக முயன்று வருகின்றன. அவற்றில் சில நிறுவனங்களைப் பற்றி பார்ப்போம்.  அமேஸான், கூகுள் ஆகிய நிறுவனங்களின் சாதனங்கள் மூலம் வீட்டிலுள்ள அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் கட்டுப்படுத்த முடியும். மேலும், ஸ்மார்ட்வாட்ச் மூலம் நமது உடல்நிலை பற்றியும் கவனத்துடன் இருக்க முடிகிறது.  2035ஆம் ஆண்டுக்குள் சென்சார்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நெட் ஃபீசா தயாரிக்கும் சென்சார்கள், அசைவு, ஒளி, வெப்பம் மூலம் ஆற்றலை சேமித்து வைத்து இயங்கக் கூடியவை. இத்தொழில்நுட்பத்தை உருவாக்குவதில், கார்க்கில் உள்ள டின்டால் தேசிய கழகம் உருவாக்கியுள்ளது. தற்போது சென்சாரை சோதிக்கும் ச

விரைவில் வருகிறது ஸ்மார்ட்சிட்டி! - முழுமையாக நகரங்களைக் கண்காணிக்கும் ஒன்றிய அரசு!

படம்
  ஸ்மார்ட்சிட்டியை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மையங்கள் மொத்தம் 100 ஐ அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் 80 மையங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மீதியுள்ளவை ஆகஸ்ட் 15 அன்று நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அண்மையில் ஸ்மார்ட்சிட்டிகளுக்கான மாநாடு சூரத்தில் ஏப்.18 - 19 என இரு நாட்கள் நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன சமாச்சாரங்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறினார்.  ஸ்மார்ட்சிட்டி திட்டம் 100 நகரங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. இவற்றில் தற்சார்பான பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு செய்யவிருக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டம் 2015ஆம் ஆண்டு  ஜூன் 25 அன்று தொடங்கியது.  நகரங்களில் நடப்பதற்கான பிளாட்பாரங்கள், சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதைகள், போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை ஸ்மார்ட்சிட்டி திட்டங்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  நகரை புனரமைப்பது, பசுமை பரப்பை அதிகரிப்பது, நிலப்பரப்பு சார்ந்த அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இதில் முக்கியமான அம்சங்கள்.  கட்டுப்பாட்டு மையங்க

விலங்குகளைக் கண்காணிக்கும் புதிய தொழில்நுட்பங்கள்!

படம்
  pixabay விலங்குகளை பின்தொடரும்  தொழில்நுட்பம்!  இன்று நவீன வாழ்க்கையில் உருவாகி வரும் தொழில்நுட்பங்கள், இயற்கையைக் காக்கவும் உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, விலங்குகளின் உடலில் மாட்டும் சிறு ரேடியோ டேக் மூலம் அதன் நடமாட்டத்தை எளிதாக கணிக்கலாம்.  தொழில்நுட்பம் அதிகரித்த அதேயளவு, விலங்குகள், தாவரங்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. அதனை கவனத்துடன் பாதுகாக்கும் தேவையும் உள்ளது.  காகபோ (kakapo) இன கிளிகளின் மீது டிரான்ஸ்மிட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் 201 கிளிகளும் தொலைவிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.  பருந்து (hawk) ஒன்றின் மீது கேமரா, அல்ட்ராசோனிக் மைக்ரோபோன் பொருத்தப்பட்டது. இதன் வழியாக வௌவால் திரள்களின் நடமாட்டத்தை விஞ்ஞானிகள் கண்காணித்தனர். வௌவால்களின் எதிரொலிப்பு திறனை உள்வாங்கி அதனை தானியங்கி கார்களுக்கு பயன்படுத்துவதே அறிவியலாளர்களின் நோக்கம்.  பருந்து, கிளி மட்டுமல்ல சிறு ஆமைக்குட்டிக்கும் கூட நவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்தி அதனைக் கண்காணிக்கும் வசதி வந்துவிட்டது. தொண்ணூறுகளில் ஹவாய் மங் சீல் Hawaiian monk seal) ஒன்றுக்கு கேமரா பொருத்தப்பட்டது. இதில் சென்சார

பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!

  பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி ! உலகம் முழுவதும் மக்களுக்கான சுதந்திரத்தன்மையை , இணையம் வழங்கியுள்ளது . இதில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் அதன் கட்டற்ற தன்மையை தடுத்து வருகின்றன . டெக் உலகில் கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் , ஆப்பிள் , ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை . இந்த பெரு நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் இத்துறையில் போட்டியிடுவதை தடுத்து வருகி்ன்றன என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . அமெரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகிய நாடுகள் , டெக் நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர் . கூகுளின் சர்ச் எஞ்சின் வழியாக தேடும் தகவல்களில் பெரும்பாலானவை , கூகுளின் நிறுவனங்களிலிருந்து வழங்கும் சேவையாகவே உள்ளது என புகார்கள் கூறப்படுகிறது . மக்கள் , பிற வலைத்தளங்களை விட கூகுளின் தளங்களை விட்டு வேறு தளங்களுக்கு செல்லாதபடி இந்த நிறுவனம் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது . இதுபற்றி , தி மார்க்அப் என்ற நிறுவனம் இணையவழியில் ஆய்வை மேற்கொண்டது . இதன்படி கிடைத்த 15 ஆயிரம் முடிவுகளை சோதித்ததில்

டீப் லேர்னிங் தொழில்நுட்பத்தை நம்பலாமா?

படம்
            செயற்கை நுண்ணறிவை நம்பலாமா ?   டீப் லேர்னிங் என்பதில் இல்லாத அம்சங்களே கிடையாது . இதில் முகமறியும் தொழில்நுட்பம் , மொழிபெயர்ப்பு வசதி , விளையாட்டுகளை விளையாடுவது ஆகியவையும் உள்ளது . இதன் அடிப்படையில்தான் செயற்கை நுண்ணறிவு என்பது கடந்த பத்தாண்டுகாக தொழில்நுட்பத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது . டீப் லேர்னிங்கில் நிறைய சாதகமான அம்சங்கள் இருந்தாலும் இந்த அமைப்பு எப்படி இயங்குகிறது , அப்ளிகேஷன்கள் முதல் தானியங்கி கார்கள் வரை இந்த அமைப்பில் இயங்குவது பாதுகாப்பானதுதானா ? கணினியில் இயங்கும் அல்காரிதம்கள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என பலரும் நினைக்கிறோம் . ஆனால் டீப் லேர்னிங்கில் இது சாத்தியமில்லை . கணினி குறிப்பிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் முறையை இப்போது மாற்றியுள்ளனர் . இதனை ஆர்ட்டிபிஷியல் நியூரல் நெட்வொர்க்ஸ் என்று அழைக்கின்றனர் . நமது மூளையில் நியூரான்கள் செய்யும் வேலைகளையே இந்த அமைப்பும் செய்கிறது . நியூரான்கள் எப்படி மூளையில் செய்கிறதோ அந்த முறை இன்னும் எளிமையாக்கி செயல்படுகிறது என கூறலாம் . 1950 களில் நியூரல் நெட்வொர்க்ஸ் பற்றிய ஆராய்ச்

மக்களைக் கண்காணிக்கும் பெரு நிறுவனங்கள்! - தகவல் சேகரிப்பில் கொட்டும் லாபம்!

படம்
                பழக்கங்களை பின்பற்றுதல் காலையில் எழுகிறீர்கள் . எழுந்த உடனே பெரும்பாலும் முகங்களை கூட இப்போது எல்லாம் யாரும் கழுவுவதில்லை . உடனே போனில் பேஸ்புக் , வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் என பல்வேறு தளங்கள் உள்ள பதிவுகளை பார்க்கிறோம் . இரவில் தூங்கும்போது மாறியுள்ள விஷயங்களை எப்படி கவனிப்பது ? பின் கிளம்பி அலுவலகம் சென்று இணையத்தில் ஷூ வாங்குவது பற்றி தேடுகிறீர்கள் . இன்ஸ்டாகிராமில் காபியை குடிப்பது போன்ற புகைப்படத்தை டீ பிரேக்கில் பதிவிடுகிறீர்கள் . சிறிதுநேரத்தில் இணையத்தில் நீங்கள் எங்கு சென்றாலும் புதிய ஷூக்கள் பற்றிய விளம்பரங்கள் வரத் தொடங்கும் . எப்படி என்று இந்நேரம் யூகித்திரப்பீர்கள் . அனைத்து வலைத்தளங்கள் நுழைந்தவுடன் குக்கீஸ்கள் நம்மை பின்தொடர அனுமதி கொடுப்பதை மறந்திருக்க மாட்டீர்கள் . இந்த குக்கீஸ்கள்தான் நாய்க்குட்டிபோல நம்மைப் பின்தொடர்ந்து வந்து பல்வேறு தகவல்களை சேகரிக்கின்றன . அதனால்தான் விளம்பரங்கள் நாம் செல்லும் இடங்களில் எல்லாம் வருகின்றன . சில சமயங்கள் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது , கூகுள் இந்த விளம்பரம் பொருந்தவில்லையா என்று கேள்வி கே

நுண்ணுயிரிகள் கண்காணிப்பு!

படம்
  நுண்ணுயிரிகள் கண்காணிப்பு ஆஸ்திரேலியாவில் நிலம், நீர் உள்ளிட்டவற்றிலுள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சைகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் லேமா முயற்சித்து வருகிறார். இவர், பாசிகள் எப்படி நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பாசிகள் வெளியிடும் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார் கிம்.  நுண்ணுயிரிகளின் டிஎன்ஏக்களைத் தொகுத்து அதனை வரிசைப்படுத்த தொடங்கியுள்ளார். இம்முறையில் 1.7 மில்லியன் பாக்டீரியா, 1.2 மில்லியன் பூஞ்சைகள் ஆகியவற்றோடு பிறவகை நுண்ணுயிரிகள் 1.8 மில்லியன் அளவில் இணைக்கப்பட்டு மக்கள் அணுகும் தகவல்தளமாக இதனை உருவாக்கி வருகிறார். நுண்ணுயிரிகளை ஆவணப்படுத்தும் பணியில் 40 அறிவியல் அமைப்புகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதன் மூலம் வெப்பமயமாதலின் தாக்கத்தை அறிவதோடு, நுண்ணுயிரிகளை எப்படி வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்ற புத்திசாலித்தனமும் இதில் உள்ளது.  மாசுபடுதலை நுண்ணுயிரிகள் மூலம் எப்படி தடுக்கலாம் என்பதற்கும் இவற்றின் டிஎன்ஏக்களை ஆவணப்படுத்த

பராக் ஒபாமா விரும்பி படித்த நூல்கள் இவைதான்!

படம்
பராக் ஒபாமா விரும்பிய புத்தகங்கள்! தகவல் யுகத்தில் மனிதர்கள் எப்படி பொருட்களாக மாறுகிறார்கள். அவர்களை எப்படி கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன என்பதை ஆசிரியர் சோசனா கூறியுள்ளார்.  இந்தியா முழுக்க பல்வேறு வணிக குழுக்கள் வியாபாரம் செய்தன. அதற்காக பல்வேறு நாடுகளை காலனியாக்கி ஆட்சி செய்தன. அது பற்றிய வரலாற்றை ஆசிரியர் கூறுகிறார். மொகலாயர் தொடங்கி கிழக்கிந்திய கம்பெனி வரையில் இந்த வரலாறு நீள்கிறது.  1890 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையிலான செவ்விந்தியர்களின் வாழ்க்கை பதிவாகி உள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த பழங்குடி மக்கள் மற்றும் கருப்பினத்தவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை த் தாக்குதல்களை நூல் மீண்டும் நினைவுபடுத்துகிறது.  அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் ஆண்ட்ரேவின் சுயசரிதை. இதில் அவரின் வாழ்க்கை, விளையாட்டில் ஈடுபட்ட அனுபவம் ஆகியவற்றைப் பகிர்ந்துள்ளார்.  நன்றி - எகனாமிக் டைம்ஸ் 

தகவல் பாதுகாப்பு அம்ச மசோதா அம்சங்கள்!

படம்
தகவல் பாதுகாப்பு மசோதா அண்மையில் அமலானது. அதில் பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான அம்சங்கள் இதோ.... இந்தியாவில் சேமியுங்கள் இந்தியர்களைப் பற்றி சேகரிக்கப்படும் நிதி, ஆரோக்கியம் தொடர்பான தகவல்கள் இந்தியாவில் உள்ள சர்வர்களில் வைக்கப்பட வேண்டும். பிற விஷயங்களை நிறுவனங்கள் த த்தமது நாடுகளிலுள்ள சர்வர்களில் பராமரிக்க தடையேதும் இல்லை. கட்டற்ற அரசு அதிகாரம் அரசு எந்த விதிவிலக்கின்றி அனைத்து குடிமக்களின் தகவல்களை பெற அதிகாரம் கொண்டது. அதனால், ஏறத்தாழ சீனா போல கண்காணிப்பு கொண்ட நாடாக இந்தியா மாறக்கூடும். மேலும் தனிப்பட்ட தகவல்கள் அல்லாதவற்றை அரசு கேட்டால் நிறுவனங்கள் அதனை தரவேண்டியது கட்டாயமாகிறது. அனுமதி அவசியம். மக்களின் தகவல்களை தங்களிடம் வைத்திருக்க நிறுவனங்களுக்கு காலக்கெடு உண்டு. பிற நிறுவனங்களுக்கு பகிர உரிமையானவர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது. அழிக்கும் உரிமை மக்களின் தகவல்களை பயன்படுத்திவிட்டு அதனை சேமிக்க அவசியமில்லை. அதனை அழித்துவிட மக்கள் கோரலாம். இந்த உரிமை இச்சட்டத்தின் மூலம் அமலுக்கு வருகிறது. சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அனுமதி பயனர்களின் தகவல்

டிஎன்ஏ சோதனைகள் ஆபத்தானவையா? -இங்கிலாந்தில் தொடரும் கண்காணிப்பு!

படம்
மெடிக்கல் நியூஸ் டுடே அதிகரிக்கும் டி.என்.ஏ. சோதனைகள்! செய்தி: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் டி.என்.ஏ வை சோதனை செய்யும் சாதனங்கள் விற்கப்படுகின்றன. இச்சோதனைகளின் விளைவுகள் பற்றிய விவாதங்கள் மருத்துவ வட்டாரங்களில் தீவிரமாகியுள்ளன. இங்கிலாந்தில் டி.என்.ஏ. சோதனைகளைச் செய்வதற்கான சாதனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. அங்குள்ள தகவல் கமிஷனர் அலுவலக தகவல்படி, தோராயமாக 40 லட்சம் மக்கள் டி.என்.ஏ சாதனங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வணிகத்தில் மூன்று தனியார் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன.  டி.என்.ஏ. சோதனை தவறல்ல; முறையான பாதுகாப்பு ஏற்பாட்டுடன் இதனைச் செய்வது அவசியம்.  தனியார் நிறுவனங்கள் மக்களின் தகவல்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தந்து பராமரிக்கிறார்கள் என்ற பயம், புகார்களாக மாறியுள்ளன. இதன் விளைவாக,  தகவல் கமிஷனர் அலுவலகத்திற்கு பத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் என்ன பிரச்னை வர வாய்ப்புள்ளது? இரண்டாம் நிலை நீரிழிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் இந்தச் சோதனை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவியல் வட்டாரத்தினர் எச்சரி

குழந்தைகளைக் கண்காணிக்கும் சீன அரசு!

படம்
பெரியவர்களுக்கு கேமிரா என்றால் சிறுவர்களுக்கு சீன அரசு ஸ்மார்ட் வாட்சுகளைத் தயாரித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இருக்கும் இடங்களை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். குவாங்சூ நகரில் மாவட்ட நிர்வாகம் 17 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச்களை இலவசமாகவே வழங்கியுள்ளது. இதன்மூலம் பெற்றோர் மாணவர்களைக் கண்காணிக்க முடியும் என்று சீன அரசு பதில் கூறியுள்ளது. இது ஒருவகையில் பாதுகாப்பு என்றாலும் அரசு கண்காணிப்பை மாணவர்களுக்கு வளர்ந்து வரும்போது பழக்கப்படுத்துகிறதோ என்ற எண்ணமும் பலருக்கும் எழுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் மாணவர்கள் குளம், குட்டை ஆகிய இடங்களுக்கு அருகில் போனால் உடனடியாக பெற்றோரின் போனுக்கு எச்சரிக்கை செய்தி வந்துவிடுகிறது. தன்னார்வமாக முன்வரும் பெற்றோர்களுக்கு மட்டுமே ஜிபிஎஸ், ரேடியோ சிக்னல்களில் இயங்கும் வாட்சுகள், பிரஸ்லெட்டுகளை தருவதாக அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல. பல்வேறு பள்ளிகளை அரசு ஸ்மார்ட் வாட்சுகளைப் பெற கட்டாயப்படுத்தி வருவதே உண்மை. இதன் விளைவுதான் ஜிபிஎஸ் ஆடைகளை மாணவர்கள் உடுத்துவதும். இந்த ஆராய்ச்சிகளை சீன ராணுவம் செய்துவருகிறது. பெய்டூ எனும் ஜிபிஎஸ் கண்காணிப்

1984 ஜார்ஜ்வெல் நூலுக்கு எழுபது வயது!

படம்
1984 ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய நாவல். எரிக் பிளேர் என்பவர் ஜார்ஜ் ஆர்வெல் என்ற பெயரில் இந்த நூலினை எழுதினார். இதில் வரும் ஸ்மித் என்பவர் அரசு அதிகாரி. நாளிதழ்களில் வரும் செய்திகளை கவனமான தணிக்கை செய்து அரசுக்கு ஆதரவாக மாற்றி எழுதி மக்களுக்கு பிரசாரம் செய்வதே பணி. இதில் டெலிஸ்க்ரீன் என்ற கருவி வரும். ஏறத்தாழ டிவி போல. ஆனால் இதனை நீங்கள் அணைக்க முடியாது. அதன் வழியாக நீங்கள் கவனிக்கப்பட்டு வருவீர்கள். இரண்டாம் உலகப்போரின் போது டிவி இருந்தாலும், அதனை அறிவியல் புனைவில் பயன்படுத்திய ஆர்வெல்,  முன்னதாகவே இதனை எழுதிவிட்டார். அப்போது ஜெர்மனியில் வீடியோ போன் சிஸ்டம்தான் உருவாக்கப்பட்டிருந்தது. நூல் எழுதிய காலகட்டத்தில் டிவி பார்க்கும் மோகம் அபரிமிதமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு கூட அதிகம்தான். 2017 வாக்கில் மெல்ல டிவி செல்வாக்கிழந்து வருகிறது. இப்போது, டிவியின் இடத்தை இணையம், அமேசான், நெட்பிளிக்ஸ் ஆகியவை பிடித்து விட்டன. ஆனால் நூலில் வரும் அரசின் கண்காணிப்பு வேறுவகையாக மாறிவிட்டது. அமெரிக்கா, விசா கொடுப்பதற்கு முன்னே பயணிகளின் சமூக வலைத்தள கணக்குகளை ஆராய்ந்த பின்னரே நாட்டில் அனுமதிக்கும்

முஸ்லீம்களை உளவு பார்க்கும் சீன அரசு!

படம்
நேர்காணல் சீனா, தன் நாட்டிலுள்ள இய்கூர் மற்றும் துருக்கிய முஸ்லீம்களை கவனமாக பார்த்து கட்டுப்படுத்த குறிப்பிட்ட ஆப்பைப் பயன்படுத்துகிறது. இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்தால் ஒருவரின் மின்கட்டணம் இணையம் முதற்கொண்டு கண்காணிக்க முடியும்.  ஐஜேஓபி பற்றி கூறுங்கள்.  நாடு முழுக்க ஒரே கணினியில் கொண்டுவரும் கண்காணிப்புத் திட்டம் இது. செக் போஸ்ட்,மக்கள் ஒன்றுகூடும் இடங்கள், பள்ளிகள் தெரு என அனைத்து இடங்களிலும் இந்த கண்காணிப்பு உண்டு. ஜின்ஜியாங் பகுதியில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இது ஆபத்தான கண்காணிப்பு திட்டமாக மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது. ஆப்பின் செயல்பாடு பற்றிக் கூறுங்கள்.  நீங்கள் அரசு கூறும் விதிகளை மீறீனாலே ஆப் தானாகவே அருகிலுள்ள அதிகாரிக்கு செய்தி அனுப்பி விடும். நீங்கள் என்ன வலைத்தளத்தை பார்க்கிறீர்கள். அதில் வன்முறையைத்தூண்டும் விஷயங்கள் உண்டா? விபிஎன் பயன்படுத்துகிறீர்களா? வேறு என்ன ஆப் பயன்படுத்துகிறீர்கள் என அத்தனை விஷயங்களையும் கண்காணிப்பு ஆப் பதிவு செய்யும்.  எப்படி இந்த ஆப் இப்படி கண்காணிக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது? ஐஜேஓபி என ஆப் ஸ்டோரில் த

நாம் கண்காணிக்கப்படுகிறோமா?

படம்
நிச்சயமா என்கிறார் சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மாயா வாங். இவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் பணிபுரிகிறார். மக்கள் முகத்தை ஸ்கேனிங் செய்யும் கருவி மட்டும்தான் தம்மைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளில், மால்களில் நிறுவியுள்ள பாதுகாப்பு கதவுகள் கூட உங்களைப்ப ற்றிய  தகவல்களை சேகரித்து வருகின்றன என்று கூறி அதிர்ச்சியூட்டுகிறார். சீனா தற்போது உலகிலேயே மிகப்பெரியளவிலான வீடியோ கண்காணிப்பு அமைப்பை உருவாக்கிவிட்டது. அரசுக்கு எதிராக சுண்டுவிரலை அசைத்தால் கூட சாலை, விமானநிலையம், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் உங்கள் முகம் ஒளிபரப்பாகத் தொடங்கிவிடும். செலிபிரிட்டியாக அல்ல தேடப்படும் குற்றவாளியாக.  கூகுள் எப்படி தன் சேவைகளை இலவசமாக கொடுத்து பயனர்களின் தகவல்களை சேகரித்து விளம்பரங்களை அளித்து காசு பார்க்கிறதோ இதுவும் அதேபால்தான். போனின் ஐஎம்இஐ எண், வைஃபை முகவரி ஆகியவை அனைத்தைப் பயன்படுத்தியும் மக்களை பின்தொடர்ந்து உளவு பார்க்க முடியும் என்கிறது பிங்டெக் நிறுவனம்.  பீஜிங்கில் உள்ள ஸ்மார்ட் சிட்டியில் இந்த வகை தகவல் கொள்ளை நடை