இடுகைகள்

கலப்படம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய நிறுவனங்கள் சுகர் சிரப்பை தேனில் கலந்து விற்கும் கொடுமை! - கலப்பட வணிகத்தில் கொடி கட்டும் இந்திய நிறுவனங்கள்

படம்
                    கலப்படத் தேன் ! அ்ண்மையில் நாளிதழ்களில் டாபர் , மாரிகோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் தேன் தாயின் பாலைப் போல பரிசுத்தமானது என விளம்பரப்படுத்துவதை பார்த்திருப்பீர்கள் . அண்மையில் ஜெர்மனி நிறுவனம் செய்த என்எம்ஆர் சோதனையில் டாபர் தேன் தோற்றுப்போயுள்ளது . இந்த சோதனையில் சபோலாதேன் வென்றுள்ளது . ஆனால் இந்தியளவில் நடைபெறும் என்ஆம் ஆர் சோதனையில் டாபர் வென்றுள்ளது . எப்படி ? அதுதான் இந்தியன் மேஜிக் .   கலப்படம் செய்து சோதனையில் தோற்ற தேன் நிறுவனங்கள்! தேனில் நுணுக்கமாக கலக்கப்படும் சுகர் சிரப் சீனாவிலிருந்து தருவிக்கப்படுகிறது . இந்த நிறுவனங்கள் இதனை பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது . இந்தியாவின் உணவுத்தர அனுமதி ஆணையம் இதுதொடர்பான விதிகளை இயற்றினாலும் , சோதனைகள் லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டு நடத்தப்பட்டுள்ளன . இதனால்தான் 13 நிறுவனங்கள் பங்கேற்ற என்எம்ஆரில் சில நிறுவனங்கள் மட்டுமே பாஸாகி உள்ளன . இதனால் டாபர் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . அதன் விளம்பரங்களில் உள்நாட்டில் சோதனைகளில் வென்ற நிறுவனம் என விளம்பரம் செய்யப்படுகிறது . தேனில்

உணவில் தில்லுமுல்லு! - கலப்படத்தின் ஆபத்து

படம்
pixabay பாலில் வேதிப்பொருட்களை கலப்பது, கோதுமை மாவில் சோயா மாவு கலப்பு, எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்பு என கலப்படம் இல்லாத உணவு வணிகம் கிடையாது என்று ஆகிவிட்டது. வணிகத்திற்கு கருணை கிடையாது என்பதால் உணவில் பாரபட்சம் பார்க்காமல் கல், மண், மலிவான எண்ணெய்களை கலந்து விற்கிறார்கள். அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்துவிட்டு மேட் இன் இந்தியா என்று பிரின்ட் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். சாதாரண உணவில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய சற்று கூர்மையான நாக்கும் அறிவும் தேவை. 2013ஆம் ஆண்டு உலகளவில் டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சிப் பொருட்களை சோதனை செய்தனர். அதில் மாட்டு இறைச்சி என்று எழுதப்பட்ட டின்களில் மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சி உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. கறிகளில் என்ன தீண்டாமனை என அதிலும் கலப்படம் செய்து உலகளவில் மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையை தில்லாலங்கடி ஆட்கள் குலைத்தனர். பால் பொருட்களில் பலரும் தில்லுமுல்லு வேலைகளைச்செய்கிறார்கள். இன்று உங்கள் கையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை பால் பண்ணையில் நான்கு நாட்களுக்கு முன்னரே வேதிப்பொருட்களை சேர்த்து குறிப்பிட்ட

டைட்டானியம் ஆக்சைடு உடல்நலனை பாதிக்குமா?

படம்
டைட்டானியம் ஆக்சைடு மணமற்ற பவுடர் ஆகும். இதனை பொருட்களுக்கு சிறப்பான நிறத்தைத் தர பற்பசை, மிட்டாய்கள், சன்ஸ்க்ரீன் க்ரீம்கள், காபி க்ரீம்கள்  ஆகியவற்றில் சேர்க்கிறார்கள். இதன் பயன்பாடு அதிகமாகும் போது தோலில் சிறியளவு எரிச்சல் ஏற்படும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பொதுவாக உணவின் நிறம், தரத்தின் மேம்பாட்டிற்காக டைட்டானியம் ஆக்சைடை தூய வடிவில் சேர்க்கிறார்கள். பொதுவாக அனைத்து சாக்லெட்டுகளிலும், சூயிங்கம்மிலும் இந்த பொருள் சேர்க்கப்படுகிறது. பொருட்களை அதிக நாட்கள் பயன்படுத்தவும் இந்த வேதிப்பொருள் உதவுகிறது. பழங்களிலுள்ள எத்திலீன் அதிகரிப்பை குறைத்து பழங்கள் வேகமாக பழுப்பதைக் குறைக்கிறது. டைட்டானிம் ஆக்சைடு முக்கியமாக பயன்படுவது அழகுசாதனப் பொருட்களில்தான். இதில் பல்வேறு பொருட்களில் நிறத்தை அதிகரிக்கவும், புற ஊதாக்கதிர்களைத் தடுக்கும் க்ரீம்களிலும் பயன்படுகிறது. உணவுத்துறையில் இதன் பங்கு குறைவு. உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை இதனை பயன்படுத்த அனுமதித்துள்ளது. ஆனால் டைட்டானியம் ஆக்சைடு புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளில் ஒன்

தினசரி பிளாஸ்டிக் சாப்பிடுகிறோமா?

படம்
நாம் சாப்பிடும் உணவில் பிளாஸ்டிக் உள்ளது. அதன் அளவு வாரத்திற்கு கிரடிட் கார்டு அளவு என்று இது குறித்து வெளியான ஆய்வு குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியாவிலுள்ள நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. உலகளவில் 2 ஆயிரம் சிறு துகள்கள் அளவுக்கு சாப்பிடுகின்றனர் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிளாஸ்டிக் துகள்களின் எடை வாரத்திற்கு 5 கிராம் என ஆண்டிற்கு 250 கிராம் பிளாடிஸ்க்கை நாம் சாப்பிட்டு வருகிறோம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பொதுக்குடிநீர் பைப்புகளில்தான் பெரும்பான்மையான பிளாஸ்டிக் கலப்படம் நிகழ்கிறது. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இதன் அளவு அதிகமாக உள்ளது. உப்பு, மீன், பீர் ஆகியவற்றில் இந்த பிளாஸ்டிக் கலப்பு அபரிமிதமாக உள்ளது. இந்த ஆய்வு நாம் கவனிக்க வேண்டிய விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. எனவே நாடுகள் உடனடியாக மக்கள் பிளாஸ்டிக் கலப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவ வேண்டும் என்று கூறுகிறார் உலக வைல்ட் ஃபன் உலக இயக்குநர் மார்கோ லாம்பெர்டினி. இந்த ஆராய்ச்சியை தவ பழனிச்சாமி செய்துள்ளார். இந்த அறிக்க

குடிநீரில் மருந்து கலக்கிறார்களா?

படம்
குடிநீரில் மருந்து கலக்கிறார்களா? ஆம். அமெரிக்காவில் நடந்த புவியியல் தொடர்பான ஆய்வில் அங்கு வரும் குழாய் நீரில் 80 சதவீதம் மருந்துகளின் எச்சங்கள் இருப்பது தெரிய வந்தது. இதில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, மனச்சோர்வைக் குறைக்கும் மருந்துகள் உள்ளடங்கும். இது அமெரிக்காவில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் உண்டு. மருத்துவமனைகளிலிருந்து வரும் கழிவுகள், அல்லது கழிவறைகளில் தூக்கி எறியப்படும் மாத்திரைகள் நீர் போக்குவரத்தில் கலப்பதால் ஏற்படும் பாதிப்பு இது. முதலில் இப்படி கலந்து வருவதை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குறைவாகத்தானே இருக்கிறது என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் ஆய்வுகள் சொன்ன உண்மை, இவை அதிக அடர்த்தியில் நீரில் கலந்து வருகிறது என்பதே. மனச்சோர்வை போக்கும் மருந்துகள் நம் மூளையில்  இயக்கத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இங்கிலாந்தில் ந திப்படுகை அருகே வாழும் மக்களை சோதித்தபோது, அவர்களின் உடலில் கருத்தடை மாத்திரைகளின் அடர்த்தி அதிகமாக இருந்தது. இது அவர்களின் ஹார்மோன் சுரப்பை மட்டப்படுத்துகிறது. நன்றி: பிபிசி