இடுகைகள்

வரலாறு -இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் அணுசக்தி பயணம்!

படம்
அணுசக்தி பயணம் ! இந்தியாவின் அணுசக்தி பயணம் தொடங்கிய ஆண்டு 1944. டாடா ஆராய்ச்சி நிலையத்தில் இதனை தொடங்கியவர் இயற்பியலாளரான ஹோமி ஜே . பாபா . ஆராய்ச்சிகள் தொடங்கிய நான்காவது ஆண்டில் 1948 ஆண்டு , ஆக்கப்பூர்வமான பணிகளுக்கான அணுசக்தி ஆற்றல் சட்டம் இயற்றப்பட்டது . 1968 ஆம் ஆண்டு இங்கிலாந்து , அமெரிக்கா , சீனா , பிரான்ஸ் , ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய அணு ஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில் (NPT) இந்தியா கையெழுத்திட மறுத்தது . இந்த ஒப்பந்தம் 1970 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது . 1974 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசு முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது . 1998 ஆம் ஆண்டு பாஜக பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு , ஐந்து அணு ஆயுதச்சோதனைகளை நடத்தியது . இதன் விளைவாக உலகநாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிட்டது .  2001 ஆம் ஆண்டு இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டது . 2005 ஆம் ஆண்டு அமெரிக்கா - இந்தியா அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது