இடுகைகள்

பார்ப்பனர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வருத்தமோ குற்ற உணர்ச்சியோ கொள்ளாத இந்துஸ்தானத்தின் புதிய விதிகள்!

படம்
  இந்தியா, இந்துஸ்தானாக மாறத் தொடங்கிவிட்டது. இனி என்னென்ன விஷயங்களை நாம் நாளிதழ்களில் பார்ப்போம். அல்லது பார்க்க கட்டாயப்படுத்தப்படுவோம் என்பதைப் பற்றிய கற்பனை இது. அதேசமயம் சில விஷயங்கள் நடந்துகொண்டும் இருக்கலாம்.  வானொலிகளில் ஆன்மிக பாடல்கள் முழுக்க இந்து கடவுள்களைப் பற்றியதாகவே இருக்கும். சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கான பாடல்கள் ஒலிபரப்பப்படாது. மக்களிடம் வரிகளை வாங்கித்தானே அரசு ஒலிபரப்பு நிறுவனம் இயங்குகிறது என்று கூறினால், நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்.  அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், தேசத்தை முன்னேற்ற விரும்புவது மக்களின் தோளில்தான் உள்ளது. எனவே, அதிக விலை கொண்ட தரமற்ற உள்நாட்டு பொருட்களை மட்டுமேதான் வாங்கவேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ இனிமேல் அப்படித்தான். இதை சரிபார்க்க உறுதிப்படுத்த மதவாத கட்சியின் துணை அமைப்புகள் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குள் வருவார்கள். சோதனையிடுவார்கள்.  கூடுதலாக குளிர்பதனப்பெட்டி சோதனை தனி. சமையல் அறையில், இந்...

ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்!

படம்
  ஒருவரின் மூளையைக் கழுவி மதவாத திசையில் கடந்த காலத்திற்கு கொண்டு செல்ல உதவும் நூல்கள்! நீங்கள் வரலாற்றை வலதுசாரி,மதவாதப் பார்வையில் பார்க்க வேண்டுமா அதற்கு கீழேயுள்ள நூல்கள் பல்வேறு தகவல்களை வழங்கும். இந்துத்துவா பார்வையில் உலகைப் பார்க்க தொன்மை வரலாற்று நூல்கள் உதவும். இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொன்மை இந்தியா அதாவது பார்ப்பனர்களின் மேலாதிக்கத்தில் இருந்த வேதகாலம் எப்படி பொற்காலமாக இருந்தது என்பதை நூல்களாக எழுத மாணவர்களை இந்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகளாக இப்படியான எழுத்தாளர்கள்தான் நேஷனல் புக் டிரஸ்டில் வரலாற்று நூல்களை எழுதி வருகிறார்கள்.  என்பிடி ஒரு அரசு நிறுவனம், மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனத்தை ஆர்எஸ்எஸ் ஆட்களை வைத்து வளைத்து வரலாற்றை திருத்தி எழுதி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூல்களையும் வலதுசாரிகள் வாசித்தால் குறைந்தபட்சம், டிவி விவாதங்களிலாவது உருப்படியாக ஏதாவது பேசித்தொலைய வாய்ப்புண்டு. இந்த நூல்பட்டியலை பரிந்துரைத்தவர் புகழ்பெற்ற நாளிதழ் ஆசிரியர் ஒருவர்.  நாம் குறிப்பிட்ட பார்வையை கோணத்தை உறுதி செய்துகொண்டு எந்த ந...