இடுகைகள்

ஸ்மார்ட்போன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளிநாட்டில் தேடிய வணிக வாய்ப்புகளும், சவால்களும்!

ஹூவெய் நிறுவனத்தின் உரிமையாளர்கள் என இருப்பது ரென் கிடையாது. ரிலையன்ஸின் திருபாய் அம்பானி போன்ற டெக்னிக்தான். ஊழியர்கள் தான் உரிமையாளர்கள். மொத்தம் 1 லட்சம் பேர். அவர்களின் பெயர்களைக் கூட பொறித்து வைத்திருக்கிறார். 1987ஆம் ஆண்டு ஐந்து நண்பர்கள் ஹூவெய் நிறுவனத்திற்கு முதலீடு செய்தனர். பிறகு 2000ஆம் ஆண்டிற்குள் தங்களது முதலீட்டை திரும்ப பெற்றுக்கொண்டனர்.    அமெரிக்காவில் முக்கியமான நிறுவனம் ஏடி அண்ட் டி. இந்த நிறுவனத்தின் பெல் லேப்ஸில் ஆய்வு செய்து ஏராளமான காப்புரிமைகளை பெற்று வந்தனர். இவர்களின் துணை நிறுவனமாக லூசென்ட் டெக்னாலஜி என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் தொடங்கப்ப்பட்டது. 1996ஆம் ஆண்டு தொடங்கிய  இந்த நிறுவனம், 2006ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டது. இத்தனைக்கும் எம்ஐடியின் சிறந்த நிறுவனத்திற்கான விருதை இரு ஆண்டுகள் தொடர்ச்சியாக பெற்ற நிறுவனம் தான் லூசென்ட் டெக்னாலஜி.   பின்னாளில் சரிவை தடுத்து நிறுத்த அல்காடெல்லுடன் லூசென்ட் டெக்னாலஜி சேர்க்கப்பட்டது. ஆனாலும் பயனில்லை. நஷ்டப்பட்டு திவாலாகும் வங்கியை, நன்றாக இயங்கும் வங்கியோடு சேர்த்தால் அது சிறந்த ராஜதந்திரமாகுமா என்ன? அப்ப

இந்திய அரசின் புதிய தனித்துவமான ஸ்மார்ட்போன் ஓஎஸ்!

படம்
  ஸ்மார்ட்போன்களுக்கான புதிய ஓஎஸ் - எப்படி இருக்கும்? மத்திய அரசு இந்தியாவிற்கென தனித்துவ  ஸ்மார்ட்போன் இயக்க முறைமையைத் (OS) தயாரிக்க உள்ளது. இந்த இயக்க முறைமை, கூகுளின் ஆண்ட்ராய்ட், ஆப்பிளின் ஐஓஎஸ் ஆகிய இயக்கமுறைமைகளுக்கு மாற்றாக இருக்கும். இதுபற்றிய செய்தியை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.  இந்தியாவின் பிராண்ட்! தற்போது இந்தியச் சந்தையில் பன்னாட்டு நிறுவனமான கூகுளும், ஆப்பிளும்  ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மென்பொருள் மட்டுமன்றி, வன்பொருள் சந்தையையும் கட்டுப்படுத்தி வருகின்றன. இதற்கு நிகரான திறன் கொண்ட ஓஎஸ்ஸை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தகவல்தொடர்பு அமைச்சகம் வல்லுநர்களிடம் கருத்து கேட்டுள்ளது.   புதிய இயக்கமுறைமையை இந்தியா உருவாக்கினால், அது இந்தியாவின் வணிக பிராண்டாக மாறும் என அரசு எதிர்பார்க்கிறது. மக்களுக்கு இரண்டு இயக்கமுறைமைகளைக் கடந்து மூன்றாவது வாய்ப்பாகவும் இது அமையும்.  ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களின் ஆதரவு மற்றும் உதவியால் ஸ்மார்ட்போன் இயக்கமுறைமையை உருவாக்க மத்திய அரசு தி

15 ஆயிரம் ரூபாயில் ஸ்மார்ட் போன் வாங்கப்போகிறீர்களா? - இந்த போன்களை ட்ரை செய்யுங்கள்

படம்
  போகோ எம்3 புரோ 5ஜி உலகத்தில் ஆடை இல்லாமல் கூட இருக்கலாம். அதைக்கூட புது பேஷன் என்று சொல்லிவிடலாம். ஆனால் பழைய போனுடன் இருந்தால் வீட்டில் உள்ள குட்டீஸ் கூட மதிக்காது. எனவே இப்போது நாம் பார்க்கப்போவது பட்ஜெட் போன்கள்தான்.இந்த பதினைந்தாயிரம் ரூபாய் கேட்டகிரியில் கூட 5 ஜி லெவல் போன்களும் உண்டு. சாம்சங், போகோ, ரியல்மீ, ஜியோமி, மோட்டரோலா ஆகிய நிறுவனங்கள் போன்கள் இவை.  போகோ எம்3 புரோ 5ஜி 14,599 ரூபாய் போன். ஒருரூபாய் தந்துவிடுவார்கள் என நம்பலாம்.  5 ஜி போன் இது. மீடியாடெக் 700 சிப், 90 ஹெர்ட்ஸ்ல் திரை அடிக்கடி புத்துயிர் பெறுமாம். 5000எம்ஏஹெச் பேட்டரி, 48 எம்பி கேமரா பின்புறம் உள்ளது. மேற்சொன்ன காசுக்கு ஸ்டைலான போனு வேணும் சேட்டா என்றால், இதையே இ வலைத்தளங்களில் ஆர்டர் செய்து மோட்சம் பெறுங்கள்.  சாம்சங் கேலக்ஸி எம்32 அதிக நேரம் பைத்தியம் பிடித்த வெட்டுக்களி போல சமூக வலைத்தளங்களில் பறந்து திரிபவரா, ஓடிடியில் வெப்சீரிஸ், திரைப்படங்கள் என ஏராளமாக பார்க்கணுமே ப்ரோ என்பவரா உங்களுக்காகத்தான் இந்த போன். 12499 ரூபாயில் இருந்து விலை தொடங்குகிறது. 6ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி, அமோல்ட் திரை. 6.4 இன்ச்சில்

ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது!

படம்
  தமிழ்நாட்டில் இப்போது மெல்ல பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து வந்த தலித், பட்டியலின மாணவர்கள், அரசின் கல்வி தொலைக்காட்சியைக் கூட அணுக முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு இவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலைதான் முக்கியமான காரணம்.  ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையிலும் அரசின் கல்வி தொலைக்காட்சி பார்த்து கல்வி கற்க முடியாத நிலையில் கல்வி கற்றலில் ஓராண்டு தடை விழுந்துள்ளது. ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் பதில் வந்திருச்சு என்றுதான் பதில் கிடைக்கும்.  ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மீது அக்கறையாக செயல்படுபவர்கள் குறைவானவர்கள்தான். அரசின் கல்வி தொலைக்காட்சி பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஆதி திராவிடர் மாணவர்களை ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். உண்மையில் கல்வி கற்றலில் விழுந்த இடைவெளியை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடும் கல்வி தொலைக்காட்சி புகைப்படம் நிரப்பிவிடும் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறு என்ன இருக்க முடியும்? சேத்துப்பட்டு, பெருநகர், மானாமதி ஆகிய காஞ்சிபுரத்தி

ஒலிப்பெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அர்ப்பணிப்பான குஜராத் கிராமம்!

படம்
                  ஒலிப்பெருக்கி வழியே கல்வி ! ஷைலேஷ் ராவல் ஆசிரியர் , குஜராத் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா காரணமாக மாணவர்களுக்கு கல்வி தடைபட்டுள்ளது . இந்த நேரத்திலும் பல்வேறு ஆசிரியர்கள் புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர தொடங்கியுள்ளனர் . குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரம் . இங்குள்ள பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஊர் பார்பட்டா . இங்கு காலை எட்டு மணி என்றால் ஒலிபெருக்கிகள் முழங்கத் தொடங்கிவிடும் . இதுதான் அங்குள்ள பள்ளி செல்லும் மாணவர்களுக்கான பாடவேளை தொடங்கிவிட்டதற்கான அறிகுறி . ஷைலேஷ் ராவல் இப்படித்தான் ஒலிபெருக்கி வழியாக மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார் . பல்வேறு மாநில மாணவர்களும் இணையம் வழியாக கற்கத் தொடங்கியபோது , ஷைலேஷ் ஒலிப்பெருக்கி பக்கம் நகர்ந்துள்ளார் . வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மாணவர்கள் பலரின் வீடுகளில் ஸ்மார்ட்போன் , டேப்லெட் , மடிக்கணினி , ஏன் டிவி கூட கிடையாது . அண்மையில் ஸ்மைல் பௌண்டேஷன் 22 மாநிலங்களில் 42,831 மாணவர்களிடம் செய்த ஆய்வில் 56 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்ற உண்மை தெரியவந்துள

சிசிடிவி மூலம் குற்றவாளிகளை ஸ்மார்ட்டாக பிடிக்கும் காவல்துறை! எப்படி குற்றவாளிகளைப் பிடிக்கிறார்கள்?

படம்
        சிசிடிவி கேமரா மூலம் திருடர்களை பிடிக்க முடியுமா? சென்னை பெருநகரத்தில் காவல்துறையினர் 2.9 லட்சம் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இதில் 1.5 லட்சம் கேமராக்கள் தனியார் வீடுகள், கடைகளுக்கானவை. இதன்மூலம் கடைகளில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு ஆகியவற்றில் தொடர்புடையவர்களையும் காவல்துறையினர் ஸ்மார்ட்டாக பிடித்து வருகின்றனர். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற 14 கொலைக்குற்றங்களில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் சிசிடிவி மூலம் கண்டுபிடித்துள்ளனர். இதில் முக்கியமான உதவி சிசிடிவி காட்சிகள் மூலம் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை 60 வழிப்பறி கொள்ளையர்கள் இம்முறையில் பிடிபட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். இம்முறையில் அண்மையில் புல்லட்டுகளை திருடி நகருக்கு வெளியில் விற்கும் திருட்டு கும்பலை போலீசார் பிடித்துள்ளனர். எப்படி பிடிக்கிறார்கள்? நகரத்தின் பாதைகள், ஸ்மார்ட்போன், சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை இணைத்து யோசிக்கும் காவல்துறை அதிகாரிகள்தான் இதில் வெற்றி பெறுகின்றனர். அனைவரும் இதனை கவனித்து புரிந்துகொள்ள முடியாது.முதலில் குற்றம் நடந்த இடத்திலிருந்து 50 முதல் 50

ஆன்லைன் விளையாட்டு: அதிகரிககும் மவுசு!

படம்
        cc       ஆன்லைன் விளையாட்டு : அதிகரிககும் மவுசு ! உலகளவில் திரைப்படம் , பாடல்கள் ஆகியவற்றை விட அதிகளவு வளர்ச்சி பெற்றுவரும் துறையாக ஆன்லைன் விளையாட்டுத்துறை வளர்ந்து வருகிறது . இதனால் கூகுள் , ஃபேஸ்புக் , ஆப்பிள் உள்ளிட்ட பெரும் டெக் நிறுவனங்கள் இத்துறையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன . இந்தியாவில் விளையாட்டுத்துறையில் ஏராளமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குதித்துள்ளன . அமேஸான் , ரிலையன்ஸ் ஜியோ , பேடிஎம் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் விளையாட்டு சார்ந்து முதலீடுகளை குவித்து வருகின்றன . இதுதொடர்பான ஆய்வில் டிவிட்டர் தனிப்பயனர் ஒருவருக்கு ரூ .600, ஃபேஸ்புக் ரூ .1,423 , கூகுள் , ரூ .2,023 சம்பாதித்து உள்ளன . எபிக் கேம்ஸ் நிறுவனத்தின் தனி விளையாட்டாக ஃபோர்ட்நைட் மட்டும் ரூ .7,196 சம்பாதித்து உள்ளது . இதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கை அறிந்து கொள்ளலாம் . பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆன்லைன் விளையாட்டுத் துறை அபரிமிதமான வளர்ச்சி பெற்று வருகிறது . பல்வேறு சமூக வலைத்தளங்களிலும் உலகளவில் முன்னணி ஆன்லைன் விளையாட்டு வீரர்களைப் பின்பற்

ஸ்மார்ட்போனைக் கண்காணிப்போம். - சூப்பர் ஆப்ஸ்

படம்
அன்லாக் கிளாக் எத்தனை முறை போனை திறக்கிறீர்கள், கைரேகை, முகமறியும் வசதியை எத்தனை முறை பயன்படுத்துகிறீர்கள், பின்கோடை எத்துனை முறை அழுத்துகிறீர்கள் என அத்தனையும் பதிவு செய்து உங்கள் அடிமைத்தனத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஆப் இது. அதிக நினைவகத்தை எடுத்துக்கொள்ளாது என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம். இதனை உங்கள் போன் ஸ்க்ரீன் வால்பேப்பர் போல வைத்துக்கொண்டு எத்தனை முறை போனை திறக்கிறீர்கள் என்று கூட சோதித்துக்கொள்ள முடியும். ஆப்பை திறக்கும் நேரம் மிச்சம்தானே? ஜியோமி பயனர்கள் இதனை பயன்படுத்த வேண்டாம். நேரவிரயம். மார்ப் உங்கள் போனில் ஸ்பாட்டிஃபை முதற்கொண்டு கருப்பு குரோம் ஜிலுஜிலு படங்கள் வரை பல ரகசியங்களை வைத்திருப்பீர்கள். இதற்கான ஆப்களை ஒழுங்குமுறைப்படுத்தினால்தானே நல்லது? அதற்குத்தான் இந்த மார்ப் ஆப் உதவுகிறது. மேலேயுள்ள ஆப்பும், மார்ப் ஆப்பும் கூட கூகுளின் தயாரிப்பே. வேலை, விளையாட்டு, இணைய ரேடியோ என தலைப்பிட்டு ஆப்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஸ்பேஸ் இதுவும் அன்லாக் கிளாக் போன்ற வேலைகளைச் செய்கிறது. நீங்கள் போனில் செலவிடும் நேரத்தை வரையறை செய்துகொள்ள இந்த ஆப்பை நாடல

சமூகத்தோடு இளைஞர்கள் உரையாடுகிறார்களா?

படம்
giphy தெரிஞ்சுக்கோ! இன்று பேச்சு முழுக்க சமூக வலைத்தளங்கள் வழியாக நடந்தாலும், பேசுவது நாம்தானே. பேசுவது முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாக உள்ளது. உரையாடலின் இடத்தை பெரும்பாலும் இன்று இமோஜி என்ற படங்கள் ஆக்கிரமித்துவிட்டன. குறைந்த உழைப்பில் அதிக விஷயங்களை இதன்மூலம் சொல்லிவிட முடிகிறது. அதுபற்றிய டேட்டா இதோ.... பார்ட்டியில் கலந்துகொள்பவர்களில் குறைந்தபட்சம் 8 பேர் புதிதாக இருக்கிறார்கள் என்கிறார் பிரபல செஃப் அலிசன் ரோமன். நாம் பொதுவாக ஒரு நிமிடத்திற்கு 140 முதல் 180 வார்த்தைகளை பேசுகிறோம். அதேசமயம் அதேநேரத்தில் 400 வார்த்தைகளை கவனிக்கிறோம். இதுவரை உலகிலேயே அதிக நேரம் பேசியது இருவர்தான். சமூகம், அக்வாரியம், மூளையின் சக்தி பற்றி இருவரும் சேர்ந்து 54 மணிநேரம் 4 நிமிடங்கள் பேசியிருக்கின்றனர். இங்கிலாந்திலுள்ள கஃபேக்களில் குறைந்தது 900 புதிய நபர்கள் அறிமுகமில்லாதவர்களிடம் பேசுவதை சாட்டி கஃபே திட்டம் மூலம் ஊக்குவிக்கிறார்கள். சமூகம் தொடர்பான நிகழ்வுகளில் அமெரிக்கர்களின் பங்கேற்கு மொபைல் அளவில்தான் உள்ளது. இம்முறையில் 89 சதவீதம் பேர் சமூகத்தோடு இணைந்துள்ளனர். நன்றி -

ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவழிக்கிறீர்களா?

படம்
மிஸ்டர் ரோனி என்னால் ஸ்மார்ட் போனின் நோட்டிபிகேஷனை பார்க்காமல் இருக்க முடியவில்லை? இப்பிரச்னைக்கு தீர்வு என்ன? உங்களுக்கு அந்த பிரச்னை. எங்கள் குழுவுக்கு போயபட்டி ஸ்ரீனு படங்கள் பார்ப்பது எனக்கு பிரச்னை. அதை விடுங்கள். இதை எப்படி கட்டுப்படுத்துவது? சிம்பிள். ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் நோட்டிஃபிகேஷன் செட்டிங்கில் சென்று அதனை ஆஃப் செய்யுங்கள். பிரச்னை பாதி தீர்ந்தது. பாக்கெட்டில் வைத்தால் தொலைபேசி அழைப்புகளை மட்டும் பெறும்படி மாற்றுங்கள். கை அரிக்குது எஜமான் என்று புகார் சொன்னால் வேறு வழியில்லை. உளவியல் மருத்துவரைச் சந்திக்க அப்பாய்ன்மென்ட் வாங்குவதே ஒரே வழி. இப்பழக்கத்தை மாற்றுவது நீண்ட கால நோக்கில் யோசித்தால்தான் முடியும். எளிதல்ல. நன்றி - பிபிசி