ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது!

 






தமிழ்நாட்டில் இப்போது மெல்ல பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து வந்த தலித், பட்டியலின மாணவர்கள், அரசின் கல்வி தொலைக்காட்சியைக் கூட அணுக முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு இவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலைதான் முக்கியமான காரணம். 

ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையிலும் அரசின் கல்வி தொலைக்காட்சி பார்த்து கல்வி கற்க முடியாத நிலையில் கல்வி கற்றலில் ஓராண்டு தடை விழுந்துள்ளது. ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் பதில் வந்திருச்சு என்றுதான் பதில் கிடைக்கும். 

ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மீது அக்கறையாக செயல்படுபவர்கள் குறைவானவர்கள்தான். அரசின் கல்வி தொலைக்காட்சி பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஆதி திராவிடர் மாணவர்களை ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். உண்மையில் கல்வி கற்றலில் விழுந்த இடைவெளியை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடும் கல்வி தொலைக்காட்சி புகைப்படம் நிரப்பிவிடும் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறு என்ன இருக்க முடியும்?

சேத்துப்பட்டு, பெருநகர், மானாமதி ஆகிய காஞ்சிபுரத்திலுள்ள ஊர்கள் அனைத்திலும் நிலைமை இப்படித்தான் சென்றுகொண்டிருக்கிறது. ஸ்கூல் என்ற அமைப்பு பல்கலைக்கழக மாணவர்கள் உதவியுடன் 1362 மாணவர்களிடம் ஆய்வு செய்துள்ளது.  பதினைந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

சில பள்ளி ஆசிரியர்கள் முயற்சி செய்தாலும் கூட மாணவர்களின் பொருளாதார நிலையால் ஸ்மார்ட்போன்களை எட்ட முடியவில்லை. இதனால் கல்வி நிலையில் தேக்கம் உள்ளது. பள்ளி நிர்வாகத்தைப் பொறுத்தவரை அனைத்தும் நன்றாகவே நடக்கிறது என காட்டவே முயன்று வருகிறது. 

வேலூரில் உள்ள சேயானூர், ஆர்.வெங்கடபுரம் ஆகிய ஊர்களில் உள்ள ஆதி திராவிடர்  பள்ளிகளில் சுற்றுச்சுவரும் கிடையாது. முறையான கழிவறை வசதிகளும் செய்யப்படவில்லை. ”பொதுமுடக்கத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏதாவது இருக்கிறது என்றால், அது வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்கு நாம் முன்னுரிமை தரவேண்டும் என்பதுதான். ” என்கிறார் குழந்தைகள் மேம்பாட்டு மற்றும் உரிமைகள் அமைப்பின் அதிகாரி. 

டைம்ஸ் ஆப் இந்தியா

சரண்யா சக்ரபாணி


கருத்துகள்