எரிபொருளுக்கான மத்திய அரசு வரியைக் குறைக்க முடியாது! - நிதியமைச்சர் நிர்மலா

 






நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சர்


பொருளாதாரம் மெல்ல நல்ல நிலைக்கு மீள்வது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதா?

பொருளாதாரம் மீள்வதை நான் மகிழ்ச்சியுடன் கவனித்து வருகிறேன்.  அனைத்து துறைகளிலும் நேர்மறையான விஷயங்கள், அறிகுறிகள் தெரிய வேண்டுமென நினைக்கிறேன். இதனை சிலர் சென்டிமென்ட் என்று கூறுவார்கள். சென்டிமென்ட் நேர்மறையாக இருக்கும்போது நிறைய மாற்றங்களை தரும் என நினைக்கிறேன். 

பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?

இரண்டுமே ஒன்றுபோலவே இருக்காது என்பது உண்மை. மக்களை பாதிக்காத அளவில் பணவீக்கம் இருப்பது பிரச்னையில்லை. இதை தடையாக நினைத்து வளர்ச்சிக்காக திட்டமிடாமல் இருக்கமுடியாது. வளர்ச்சிக்கான எங்களது செயல்பாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். 

கடந்த வாரம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலைகளை ஏன் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வரவில்லை?

அப்படி கொண்டுவருவது மாநிலங்களின் முடிவுகளைச் சேர்ந்தது. எரிபொருள், மது தொடர்பான வரி விஷயங்களை மாநிலங்கள்தான் முடிவு செய்யவேண்டும். இதில் அவர்கள் வரிகளை குறைக்க அல்லது உயர்த்துவது பற்றி முடிவெடுக்கலாம். 

இந்த நேரத்தில் மாநிலங்களை நான் வற்புறுத்த விரும்பவில்லை. அவர்கள் எரிபொருளில் கிடைக்கும் வருமானத்தை நம்பியிருக்கலாம். மத்திய அரசு மாநிலங்களுக்கு செய்யவேண்டிய உதவிகளை செய்ய தயாராகவே உள்ளது. 

எரிபொருளுக்கான எக்சைஸ் வரியை மத்திய அரசு குறைத்தால் விலை குறைய வாய்ப்புள்ளதா?

மத்திய அரசின் எக்சைஸ் வரியில் கூடுதலாக மதிப்பு ஏதும் சேர்க்கப்படவில்லை. இந்த வரி முடிவு செய்யப்பட்டது. இதில் மதிப்பு சேர்க்கப்பட்டால், ஒவ்வொரு முறையும் விலையேற்றம் இருக்கும். எனவே இதன் காரணமாக எரிபொருளின் விலை உயரும். இதற்குமேல் நான் இந்த கேள்விக்கு கூடுதலாக பதில் சொல்ல விரும்பவில்லை. (எரிபொருளுக்கு மாநிலங்கள் கூடுதலாக மதிப்பு வரியை விதிக்கின்றன)


ஹெச்டி

ஆர் சுகுமார்







கருத்துகள்