சித்திரவதைகளை படம்பிடித்தால் மகிழ்ச்சி!

 








புகைப்படம் எடுப்பது.....


தேவையான நபர்களை பின்தொடர்ந்து கடத்தி கொல்வதில்தான் பெரும்பாலான சீரியல் கொலைகார ர்கள் ஈடுபடுவார்கள். அதனை ஆவணப்படுத்தி பிவிஆர் சினிமாஸில் பின்னாளில் திரையிடலாமே என யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருக்காது. பாலியல் ரீதியாக துன்புறுத்தி வல்லுறவு செய்யும் சைக்கோ கொலைகார ர்கள், தங்களது சித்திரவதைகளை ஆவணப்படுத்துவார்கள். புகைப்படம், வீடியோ, ஆடியோ  என பலவாறாக பதிவு செய்து தங்களது செயல்களை தாங்களே பார்த்து சபாஷ்டா மாப்ளே என சொல்லிக்கொள்வார்கள். 

இதில் முக்கியமான பிரச்னை, இப்படி ஆவணப்படுத்தும் பழக்கம் ஆபாசப் படங்களை விரும்புபவர்கள்தான் செய்வார்கள். இவர்களின் பாலியல் வல்லுறவு வன்முறையின் உச்சகட்டமாக இருக்கும். இதனை மட்டும் காவல்துறையினர் கைப்பற்றி விட்டால் போதும். ஆயுள்தண்டனை அல்லது மரணதண்டனை என இரண்டே வாய்ப்புகள்தான்  நீதிபதிக்கு இருக்கும். அவர் பெரும்பாலும் சாகும்வரை சிறை என்பதை தேர்ந்தெடுப்பார். 



இயான் பிராடி, மைரா என்ற இருவருக்கும் ஹிட்லரின் மெயின் கெம்ப் நூல் பிடிக்கும். அதில் வதை முகாம்கள் எழுதப்பட்ட பகுதிதான் அவர்களது விருப்பம். இதனால் ஊக்கம் பெற்றவர்கள் சிறுவர்களை கடத்தி வந்து அவர்களை வல்லுறவு செய்து கொன்றனர். தங்களது செயல்பாடுகளை ஆவணப்படுத்தி வைத்ததுதான் முக்கியமான நிகழ்ச்சி. 

பொருட்களை எடுக்கலாமா?

கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களிலிருந்து பிரேஸ்லெட், செயின்,வாட்ச், போன் என சில பொருட்களை மட்டுமே சீரியல் கொலைகாரர்கள் எடுப்பார்கள். அதை பிறருக்கு பரிசாக கொடுக்கும் தவறை அவர்கள் செய்வதில்லை. அப்படி செய்தால், மாட்டிக்கொள்வோம் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, இறந்தவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களை தங்களிடம் வைத்துக்கொள்வார்கள். மற்றபடி விலையுயர்ந்த பொருட்களை ஜிலேபி தின்னும் சேட்டு கடையில்  வைத்து காசு வாங்கிக்கொள்வார்கள். அப்போதுதான் வாகனத்திற்கு பெட்ரோல் பிடிக்க முடியும். 

pat brown



கருத்துகள்