கொலைகளை ரிகர்சல் பார்த்தால்தான் வெற்றி கிடைக்கும்! சைக்கோ டைரி

 





கற்பனையான கொலை


சீரியல் கொலைகாரர்கள், தங்களது மனதில் கொலைகளை பற்றிய நிறைய கனவுகளை காண்பார்கள். அவற்றை எப்படி செய்வது என பலமுறை ரிகர்சலும் பார்ப்பார்கள். திடீரென ஒரு பெண்ணை தாக்கவேண்டுமென தோன்றியது. தாக்கினேன் என பிடிபடும்போது காவல்துறையில் லந்து கொடுப்பார்கள். 

எப்படி தாக்குவது, அதற்கு தாக்கப்படுபவரின் எதிர்வினை எப்படியிருக்கும் என அனைத்து விஷயங்களையும் சீரியல் கொலைகாரர்கள் மனதில் செய்துபார்த்து விடுவார்கள். உண்மையில் அந்த சம்பவம் நடக்கும்போது சுகானுபவத்தின் உச்சியில் இருப்பார்கள். இது ஒருவகையில் சுய இன்பம் அனுபவிப்பது போலத்தான். 


குற்றங்களை திட்டமிடுதல்

பாலியல்ரீதியான துன்புறுத்தலில் இறங்கும் சீரியல் கொலைகார ர்கள் இதற்கான கத்தி கபடாக்களை கொண்ட பட்டறையை பண்ணைவீடு அல்லது வீட்டில் கீழ்ப்புறத்தில் மனைவி, மக்கள் யாரும் போய்விடாதபடி அமைத்திருப்பார்கள். அங்குதான் கிடைக்கும் பெண்களை கொண்டுபோய் வைத்து சித்திரவதை செய்து வருவார்கள். எவ்வளவுநாள் தாங்குகிறார்களோ அவ்வளவு தூரம் சித்திரவதை நீளும். 

பெரும்பாலும் இதுபோன்ற சித்திரவதைகள் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் போல எளிதாக சலித்துவிடக்கூடியன. இதெல்லாம் அடுத்த லெவல் என்ன என்றுதான் பார்ப்பார்கள். கற்பனை செய்து பார்த்து இன்னும் பர்பெக்ஷன் வரணுமே என சித்திரவதையை நுட்பமாக செய்வார்கள். மல்லிகை மகளில் எப்படி சமையல் குறிப்புகளை தேடுகிறோமோ அதேபோல புத்தகம், சினிமா, இணையம் என  பல்வேறு இடங்களில் ஐடியாக்களை தேடி கடன் பெற்று இரையைப் பிடித்து வதைப்பார்கள். சிலர் நினைக்கலாம், மதப்புத்தகங்கள்தான் இதற்கெல்லாம் அடிப்படை என. அதனை அவர்கள் தங்களின் குற்றங்களிலிருந்து தப்பிக்க கூறும் முக்கியமான சாக்கு என வைத்துக்கொள்ளலாம். 

ஃஎப்பிஐயைப் பொறுத்தவரை எப்படி சீரியல் கொலைகார ர்கள் தங்கள் கொலைகளை செய்கிறார்கள் என்பதை வைத்து ஆர்கனைஸ்டு, அன் ஆர்கனைஸ்டு என பிரிக்கிறார்கள். கொலையை செய்ய எந்தளவு கொலைகார ர் மூளையைப் பயன்படுத்துகிறார், அதிலிருந்து தப்ப என்ன முயற்சிகளை செய்கிறார்கள் என்பதெல்லாம் இதில் வரும். பொதுவாக போட்டுத்தள்ளவேண்டும் என்ற எண்ணம் வந்தால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வருபவர்களை ஆண், பெண் என பாலின பேதம் பார்க்காமல் போட்டுத்தள்ளிவிடுவதுதான் சீரியல் கொலைகாரர்களின் வேலை. சிறப்பாக மூளையைப் பயன்படுத்தி யோசித்தால் ஐடியாக்களை ஏன் புத்தகத்தில் சினிமாக்களில் தேடுகிறார்கள்? 

இந்த கேள்வியை நீங்கள் கேட்டுவிட்டால் விழிப்புணர்வோடு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 


பாட் ப்ரௌன் 






கருத்துகள்