பகடை காய்களாக உருளும் மனிதர்களின் வாழ்க்கை! - லூடோ - அனுராக் பாசு
லூடோ இயக்கம் , கதை , திரைக்கதை ஒளிப்பதிவு , தயாரிப்பு அனுராக் பாசு இப்படி ஒருவரே அனைத்தும் செய்வதால் படம் நன்றாக இருக்குமோ என பலரும் நினைப்பார்கள் . ஆனால் படம் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது . நான்கு கதைகள் . நான்கு ஜோடிகள் . அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளான நூல்கண்டு போல குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது . இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்தான் கதை . அனைவரின் வாழ்க்கையிலும் வரும் முக்கியமான கதாபாத்திரம் சட்டு ( பங்கஜ் திரிபாதி ). வைரத்தை வைத்துள்ள பில்டர் பிந்தரை போட்டுத்தள்ளிவிட்டு ஓ பேட்டாஜி பாடலைக் கேட்டுக்கொண்டே தன்னுடைய ஏரியாவுக்கு வருகிறார் . இவர்தான் கதையின் மையப்புள்ளி . இவரிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலைபார்த்து காதல் செய்துகொண்டு ஒழுங்காக திருந்தி வாழ நினைத்தவன் பிட்டு . சட்டுவின் வலது கரமாக விளங்கியவன் . அவனை போலீசில் பணம் கொடுத்து ஆறு ஆண்டுகள் உள்ளே தள்ளுகிறான் . இதனால் பிட்டுவின் காதல் வாழ்க்கை நாசமாகிறது . மனைவி தாலியை சிறைக்கு வந்து கழற்றி எறிந்துவிட்டு செல்கிறாள் . அவர்களது குழந்தைக்கு அவனை யார் என