இடுகைகள்

அனுராக் பாசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பகடை காய்களாக உருளும் மனிதர்களின் வாழ்க்கை! - லூடோ - அனுராக் பாசு

படம்
                லூடோ இயக்கம் , கதை , திரைக்கதை ஒளிப்பதிவு , தயாரிப்பு அனுராக் பாசு இப்படி ஒருவரே அனைத்தும் செய்வதால் படம் நன்றாக இருக்குமோ என பலரும் நினைப்பார்கள் . ஆனால் படம் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது . நான்கு கதைகள் . நான்கு ஜோடிகள் . அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளான நூல்கண்டு போல குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது . இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்தான் கதை . அனைவரின் வாழ்க்கையிலும் வரும் முக்கியமான கதாபாத்திரம் சட்டு ( பங்கஜ் திரிபாதி ). வைரத்தை வைத்துள்ள பில்டர் பிந்தரை போட்டுத்தள்ளிவிட்டு ஓ பேட்டாஜி பாடலைக் கேட்டுக்கொண்டே தன்னுடைய ஏரியாவுக்கு வருகிறார் . இவர்தான் கதையின் மையப்புள்ளி . இவரிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலைபார்த்து காதல் செய்துகொண்டு ஒழுங்காக திருந்தி வாழ நினைத்தவன் பிட்டு . சட்டுவின் வலது கரமாக விளங்கியவன் . அவனை போலீசில் பணம் கொடுத்து ஆறு ஆண்டுகள் உள்ளே தள்ளுகிறான் . இதனால் பிட்டுவின் காதல் வாழ்க்கை நாசமாகிறது . மனைவி தாலியை சிறைக்கு வந்து கழற்றி எறிந்துவிட்டு செல்கிறாள் . அவர்களது குழந்தைக்கு அவனை யார் என

நாடக மேடையிலிருந்து உருவாகி வந்தவன் நான். அதுதான் என்னை திரைப்படத்திற்காக உந்தியது! - அனுராக் பாசு

படம்
        anurag basu         அனுராக் பாசு இந்தி திரைப்பட இயக்குநர் உங்கள் திரைப்படம் பொதுவாகவே பெரிய கேன்வாஸ் கொண்டதாகவே இருக்கிறதே? லூடோ அந்த வகையைச் சேர்ந்ததுதானா? பெரிய படங்களாக எடுக்கவேண்டும் என்று நினைத்து எடுப்பதில்லை. நான் கதையை எழுதும்போது அதனை காட்சிரீதியாக யோசித்து பார்ப்பேன். அப்படி பார்த்து பிட்டு கதாபாத்திரத்திற்கு அபிஷேக் பச்சனையும், சட்டு பாத்திரத்திற்கு பங்கஜ் திரிபாதியையும் நடிக்க கேட்டு அணுகினேன். அவர்களும் அதிர்ஷ்டவசமாக அதற்கு ஒகே சொல்லிவிட்டனர். சான்யா மல்கோத்ராவும், அபிஷேக் பச்சனும் நீங்கள் படத்தை இயக்கு வதால்தான் உள்ளே வந்தார்கள் என்று கூறப்படுகிறதே? நான் இதற்கு ஏதும் சொல்லமுடியாது. அப்படியும் இருக்கலாம். செட்டில் நான் உருவாக்கும் சூழல் அப்படி அவர்களை யோசிக்க வைத்திருக்கலாம். நீங்கள் தொடக்கத்தில் டிவி தொடர்களை இயக்கியது திரைப்படங்களை இயக்குவதற்கு உதவி செய்கிறது என்று கூறலாமா? டிவி என்று இல்லை. நான் நாடகத்திலிருந்து காட்சியை எப்படி ஒருங்கிணைக்கிறேன் என்று கற்று வந்திருப்பதாக நினைக்கிறேன். நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியதில்லை. நாடகமேடைதான் எனது ஒரே பள்ளி.