இடுகைகள்

அடிப்படைவாதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகள் அசாதாரணமானவர்கள்!

படம்
2019ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் அடிப்படைவாதி ஒருவர் மசூதிகளின் மேல் தாக்குதல் நடத்தினார். மேலும் இத்தாக்குதலை திறமாக திட்டமிட்டு பேஸ்புக்கில் லைவ் செய்தார். இத்தாக்குதலை பல்வேறு தரப்பினரும்  பார்த்து அதிர்ந்து போனார்கள். வெளிப்படையாக வெளியுலகில் இருக்கும் அடிப்படைவாதிகளை விட இணையத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அளவும் எண்ணிக்கையும் அதிகம். இவர்கள் நடத்தும் தாக்குதல்களை அனைவரும் பார்க்கும்படியாகவும் செய்கிறார்கள். இந்த நூற்றாண்டில் நாம் தொலைத்த முக்கியமான விஷயம். குற்றவுணர்வுதான். தனது சந்தோஷம் முக்கியம் என யாரையும் பலிகொடுக்கத் தயங்காத ஆட்கள் உருவாகி வருகிறார்கள். இவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியா எப்னரிடம் பேசினோம். இணையத்தில் ஒளிந்துள்ள தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது எளிதாக இருந்ததா? அவர்களைக் கண்டறிவது மிகவும் கஷ்டம். காரணம், அவர்கள் படுகொலை செய்வது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிடுகிறார்கள். அதனைக் கண்டறிந்து நீக்குவது மிகவும் கடினம். ஒரு லிங்கை நீங்கள் நீக்கினால் மூன்று லிங்குகளை புதிதாக உருவாக்குகிறார்கள். ட்விட்டர், பேஸ்புக் எ

கற்பைக் கேள்வி கேட்கும் திருமணச் சான்றிதழ்!

படம்
வங்கதேசத்தில் ஐந்து ஆண்டுகளாக போராடி, திருமணச்சான்றிதழில் உள்ள குமாரி என்ற சொல்லை நீக்கியுள்ளனர். குமாரி என்பது, கல்யாணப் பத்திரிக்கையில் இருந்தால் பரவாயில்லை. ஆனால் அங்கு அரசின் திருமணச்சான்றிதழில் இருப்பது விவகாரமானது. காரணம், குமாரி என்பது பெண்ணின் கன்னித்தன்மையைக் குறிக்கிறது. 1974 ஆம் ஆண்டு வங்கதேச திருமணம் மற்றும் விவாகரத்து சட்டப்படி,  மேற்சொன்ன விஷயங்கள் கறாராக கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இஸ்லாமியர்கள் திருமணம் என்பதால், அரசு இவற்றை பெரிய மாறுதலுக்கு உட்படுத்தவில்லை. அங்கு செயல்படும் பிளாஸ்ட்,  மொகிலா பரிஷத், நாரிபோகோ ஆகிய அமைப்புகள் பெண்ணை குமாரி - திருமணமாகதவர் அல்லது கற்புள்ளவர் என்பதை மாற்றி ஒபிபாகிதோ என்ற வார்த்தையை அச்சொல்லுக்கு பதிலாக சேர்க்க விண்ணப்பித்தன. மேலும் அந்நாட்டு அரசியல் சட்டப்படி குமாரி என்று கூறுவது சில குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் படி தவறு என்றும் வாதிட்டு பொதுநல வழக்கைத் தொடர்ந்தன. இதில் உயர்நீதிமன்றம் அரசை இது பற்றிய ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யக்கூறியது. அதில்தான் குமாரி என்ற சொல்லை இனி சான்றிதழில் பயன்படுத்தவேண்டியதில்லை என்று தீ