இடுகைகள்

ஆர்டிஐ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் பெருமையான சாதனைகள்! India@75

படம்
  இந்தியாவின் பெருமையான சாதனைகள்! இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் அரசியலமைப்பு நாட்டைக் கட்டமைத்ததில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஜனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகியவற்றை இதில் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குடிமக்களுக்கு வழங்குகின்றன. அனைத்து மாநிலங்களுக்கான உரிமைகளை உள்ளடக்கிய ஒன்றிய அரசு என்பதை அரசியலமைப்புச் சட்டங்களே உறுதிப்படுத்துகின்றன. இன்று அதனை உடைக்க மதவாத கும்பல் முயன்றாலும், அது உருவாக்கப்பட்ட காலத்திலும் இன்றும் வலிமையான ஒன்றாக எளிய மக்களுக்கும் உதவுகிறதாகவே உள்ளது.  அனைவருக்கும் வாக்குரிமை பாலினம், வகுப்பு, கல்வி, சாதி, மதம்  என எந்த பாகுபாடுமின்றி அனைத்து வயது வந்தோர்களுக்கும் வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியுள்ளது. பல்லாண்டுகளாக காலனித்துவ நாடாக இருந்த நாடு இந்தியா. பணக்கார ர்கள் ஏழைகளுக்கான இடைவெளி இன்றும் இருக்கிறது. ஆனாலும் அனைத்து மக்களுக்குமான வாக்குரிமையை இந்தியா சாத்தியப்படுத்தியது மகத்தான சாதனை.  ராணுவ ஒழுக்கம் இந்தியாவில் அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் ஆகிய நாடுகளில் ராணுவ கலகம் நடந்துள்ளது. இன்றுவரை பாகிஸ்தானில் ராணுவம்தான் மறைமுக ஆட

மக்களுக்காக உருவான சட்டத்தை மக்கள் தங்களை உயிரைக்கொடுத்து காப்பாற்றிக்கொண்டு வருகிறார்கள்! - நிகில் தே, ஆர்டிஐ செயற்பாட்டாளர்

படம்
                  தகவல் அறியும் உரிமைச்சட்டம் அரசின் செயல்பாட்டையே மாற்றியது நிகில் தே அனுபமா கடகம் பிரன்ட்லைன்    15 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிஐ சட்டம் நிறைவேற்றப்பட்டது உண்மையிலேயே முக்கியமானது . ஆனால் அண்மைய காலங்களில் மெல்ல அச்சட்டம் முடக்கப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? இதற்கான முயற்சிகள் 30 ஆண்டுகளாக இருந்ததால் ஆர்டிஐ சட்டம் அமலுக்கு வந்தது . ஏராளமான போராட்டங்கள் , பேரணிகள் என மக்கள் போராடியதால்தான் இச்சட்டம் நாடு முழுக்க நடைமுறைக்கு வந்தது . இதனை மக்களுக்கான சட்டம் என்று கூட சொல்லலாம் . எனவேதான் நாடு முழுக்க பரவலாக பயன்பட்டு வருகிறது . இந்த சட்டத்தின் வெளிப்படைத்தன்மை தற்போது கேள்விக்குறியாகி வருகிறது . ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வலிமையைக் குறைப்பதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன . முதலில் சட்டத்தை அமலாக்க போராடிய செயல்பாட்டாளர்கள் இப்போது அதனை நீர்த்துப்போகாமல் பாதுகாக்க போராடவேண்டியுள்ளது . இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை தினசரி எட்டு லட்சத்திற்கும் அதிகமான மக