இடுகைகள்

சர்வாதிகாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன. ஜெர்மனி

தனிநபர் சுதந்திரத்திற்கு மதிப்பளித்த உளவியலாளர் சாலமன் ஆச்!

படம்
  தனிநபர் சுதந்திரம்  வெளிநாடுகளில் தனிநபர் சுதந்திரத்திற்கு அதிக மதிப்புண்டு பிற மூன்றாம் உலக நாடுகளை விட அங்கு கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு அளிக்கிறார்கள். ஆனால் அதேசமயம் மறைமுகமாக கண்காணிப்பும் களையெடுத்தலும் உண்டு. இன்று வலதுசாரிகளின் தலையெடுப்பால் கண்காணிப்புச் சட்டங்களும், சர்வாதிகார நிர்வாக முறைகளும் என நிலைமை வெகுவாக மாறிவருகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கருத்து சுதந்திரம் சார்ந்த பாதைக்கு வந்து சேர பலநூறு ஆண்டுகள் பிடித்தன இந்த நாடுகளில் குழுக்களை விட தனிநபர்களுக்கே அதிக மதிப்புண்டு. ஜப்பான், ஆப்பிரிக்கா, ஃபிஜூ ஆகிய நாடுகளில் குழுக்களுக்கும் அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்புண்டு.  தொடக்க கால அமெரிக்காவில், கம்யூனிசம் பேசினால் அவர்களை கைது செய்து சிறையில் வைத்து சித்திரவதை செய்வது வழக்கம். சொந்தகருத்துகளை பேசியவர்களை, மனித உரிமைக்கு குரல் கொடுத்தவர்களை தேசதுரோகி என்று கூறிவிடுவார்கள். இப்படி மனதிலுள்ள கருத்துகளை வெளிப்படையாக பேசும் தனிநபர்களை குறிப்பாக கம்யூனிஸ்டுகளை கைது செய்யும் வழக்கத்தை தொடங்கியவர், அமெரிக்க சட்டமன்ற உறுப்பினரான ஜோசப் மெக்கார்த்தி. இவரது ச

ஜனநாயகம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடியது - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

படம்
  ஜனநாயக வழியில் என்னை தூக்கி எறிய முடியாது - ஷேக் ஹசீனா என்னை அழிக்கவேண்டுமென்றால் கொல்லவேண்டும். மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார் என்று  கூறி தனது வழியில் நாட்டை ஆட்சிநடத்திக் கொண்டு செல்கிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. 170 மில்லியன் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியாக, நாட்டின் பிரதமராக எழுபத்து நான்கு வயதிலும் உறுதியாக நிற்கிறார்.  மத்திய கிழக்கு நாடுகளை விட அதிக முஸ்லீம்கள் வாழும் நாடு. அரசியலமைப்பு நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. ஆனால் ராணுவ ஆட்சி காலம், நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டுக்குள் கூட்டிச்சென்றது. இதெல்லாம் கடந்து 2009ஆம் ஆண்டு தொடங்கி நீண்டகாலமாக அங்கு ஆட்சி செய்வது ஹசீனாதான். எனது பெரும் பலமே மக்கள்தான். என்னுடன் மக்கள் நிற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறுபவர், இந்திய பிரதமர் இந்திராகாந்தி, இங்கிலாந்து பிரதமர் மார்க்கரேட் தாட்சர் ஆகியோர் செய்த தேர்தல் சாதனைகளை கடந்து நிற்கிறார்.  வங்கதேசத்தில் புகழ்பெற்ற வலிமை பெற்ற இரு கட்சிகள் உண்டு. ஒன்று, ஹசீனாவின் ஆவாமி கட்சி, அடுத்து வங்கதேச தேசியவாத கட்சி. அண்மையில் தேசியவாத கட்சி, வங்கதேசத்தில் பிரதமரு

தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!

படம்
                போராட்டத்தின் வீழ்ச்சி எங்கு தவறு நடைபெற்றது ? 2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள் . இதில் எந்த தலைவர்களும் இல்லை . தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள் , பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள் . இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள் . ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது . எகிப்தில் ராணுவம் , பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும் , துருக்கியில் எர்டோகன் , ஹாங்காங்கில் சீன அரசு , பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது . எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும் . பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது . எம்பிஎல் என்ற இடதுசாரி குழு , பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை தொடங்கியது . அதற்கு நாடெங்கும் வரவேற்பு

செயற்கை நுண்ணறிவை எப்படி புரிந்துகொள்வது?

படம்
  ஹியூமன் கம்பாட்டிபிள் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் வைகிங் செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன விதமான நல்லவை, அல்லவை நடைபெறும் என்பதை விளக்கி எழுதப்பட்ட நூல். பயப்பட வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் வகைகள், செயல்பாட்டு வரம்புகள், அதைப்பற்றிய நூல்கள், நுண்ணறிவை மேம்படுத்த உதவிய கணிதவியலாளர்கள், அவர்களது தத்துவங்கள், கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என ஏராளமான தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார். அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையை தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்கான நூல் இதுதான். அந்த பிரிவிலேயே ஏராளமான தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். கூகுளின் டீப் மைண்ட் தயாரிப்புகள் என்னவிதமான கணித திறன் கொண்டவை என விவரிக்கும் பகுதி இதற்கு உதாரணம். செயற்கை நுண்ணறிவை அரசு கையில் எடுத்து பயன்படுத்தினால் நன்மை என்ன, தீமைகள் என்ன என்று ஆராய்ந்த விதம் முக்கியமானது.. இந்த வகையில் சீனா மக்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க என்று அரசு சொன்னாலும், தனக்கு எதிரி என்று தோன்றுபவர்களை எளிதாக பிடித்து ஒழித்துக்கட்ட

ஓஷியானா நாட்டில் ஒரே கட்சி நடத்தும் சர்வாதிகார அரசியல் கோமாளித்தனங்கள்- 1984 -ஜார்ஜ் ஆர்வெல் க.நா.சு

படம்
  1984 ஜார்ஜ் ஆர்வெல்   தமிழில் க.நா.சு ஓஷியானா என்ற சர்வாதிகார நாடு. அங்கு ஒரே கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. முத்தண்ணாதான் அதன் நிரந்தர தலைவர். அந்த கட்சி உருவாக்கும் கொள்கை, போர், எதிரிகளைப் பற்றிய பிரசாரம், மக்களின் அவலமான வாழ்க்கை, பொய்யான வளர்ச்சி பிரசாரம் என பல்வேறு விஷயங்களை அங்கதமாக கூறும் நாவல்தான் 1984. வின்ஸ்டன் என்ற அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்தான் நாவல் நாயகன். இவன்தான் கதையை நாடு எப்படி செயல்படுகிறது என்பதை நமக்கு விளக்குகிறான். இவனது காதலியாக வரும் ஜூலியா தனது உடல் மூலம் புரட்சிக்கு எதிரான வகையில் செயல்படுகிறாள். அது எப்படி என்பதை நாவல் படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஒருவகையில் இந்த நூல் குறிப்பிட்ட கொள்கைகளை வலியுறுத்தி, கோஷம் போடும் கோரஸ் பாடும் கட்சிகளை சர்வாதிகாரத்தை கேலி செய்கிறது. தனிப்பட்ட மக்களின் வாழ்க்கையில் அரசு எந்தளவு தலையிட்டு அவர்களை கட்டுப்படுத்துகிறது என்பதை விவரிக்கும் இடங்கள் பீதியூட்டுகின்றன. ஏறத்தாழ வளர்ந்த,வளரும் நாடுகளில் கண்காணிப்பு பொருட்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு ஜார்ஜ

அதானியால் கையகப்படுத்தப்படும் என்டிடிவி - முடிவுக்கு வரும் டிரெண்ட் செட்டிங் சேனலின் யுகம்!

படம்
            இந்திய ஊடகங்களின் முன்னோடி என்டிடிவி! இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் பெருமளவு கடன்பெற்று, அதைக்கட்டக்கூட நினைக்காத தொழிலதிபர். அவருக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, ஹேர்கட் என்ற பெயரில் கடன் தள்ளுபடியை ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அப்படிப்பட்ட தகைமை சான்ற தொழிலதிபர் தான் கௌதம் அதானி. அவரின் எண்ணெய், பருப்பு, அரிசி வகைகளால் புழங்காத இந்தியாவின் நகரங்கள் கிடையாது. அவர் தற்போது என்டிடிவிக்கு கடன் கொடுத்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் என்டிடிவியை மறைமுகமாக கைப்பற்றியுள்ளார். குறிப்பாக ஏன் என்டிடி டிவி. இந்த டிவி தான் தற்போது மத்திய அரசுக்கு எதிரான என்பதை விட உண்மையை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து வருகிறது. யாருக்கு என்று கேட்கிறீர்களா? சிறு, குறு நகரிலுள்ள ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்களுக்குத்தான். என்டிடி டிவி எதனால் முக்கியத்துவம் பெறுகிறது? 1984ஆம் ஆண்டு ராதிகா ராய், பிரனாய் ராய் ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் இது. தொடக்கத்தில் டிவி சேனல்களுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தது. குறிப்பாக தூர்தர்ஷனில் தி வேர்ல்ட் திஸ் வீக் என்ற உலக நிகழ்வுகளை அலசும் நிகழ்ச்

சீனா, வளர்ச்சிக்கு கொடுத்த விலை என்ன? சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன்

              சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன் அனைவரும் தெற்கு சீன கடல், பிற நாடுகளுக்கு வழங்கும் கடன் என பல விஷயங்களிலும் சீனாவை கவலையுடன் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டு எப்படி முன்னேறியது என்பதை சொல்லும் ஏராளமான நூல்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. ரமணன் எழுதியுள்ள இந்த நூல் அந்த வகையில் ஏராளமான தகவல்கள், ஆராய்ச்சிகள் என சீனாவின் வளர்ந்த கதையை எளிமையாக முன்வைக்கிறது. சீனாவின் வளர்ச்சி, உள்நாட்டில் எதிர்கொண்ட சவால்கள், கிராமங்களை அழித்து அதனை நகரங்களாக்கி குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை தயாரிப்பு என பல்வேறு சர்ச்சைக்குள்ளான சமாச்சாரங்களையும் நூலில் சொல்லியிருக்கிறார்கள். மாசேதுங் காலத்தில் சீனாவில் தொடங்கிய கலாசார, சமூக பொருளாதார மாற்றங்கள், டொங்பிங், ஜின்பிங் வரை அப்படியே தொடர்வதையும் சிறப்பாக விவரித்துள்ளார் ரமணன். குறிப்பாக நிலச்சீர்திருத்தங்கள். இந்த விஷயத்தில் இந்தியா கற்றுக்கொள்ள நிறைய சமாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு சீர்த்திருத்தங்களாக முயன்று பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்த நாடு சீனா. இவற்றை ஒரே நேரத்தில் முயல்வதால் இந்தியா முன்னேற முடியவில்லை என்ற கருத்தைய

வில்லாதி வில்லன்கள் - உலகை அழித்த தலைவர்களின் கதை!

படம்
pixabay வில்லாதி வில்லன்கள் பாலா ஜெயராமன் கிழக்கு பதிப்பகம் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே கொள்கை என்று பேசி ஆட்சிக்கு வருபவர்கள் உருவாக்கும் சட்டங்கள், நாடுகளை எப்படி துண்டாடுகின்றன என்பதற்கு நிறைய வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. நடப்பில் பாஜக அரசு என்றால், தொன்மைக் காலத்தில் பல்வேறு இனக்குழுக்கள், போர்ச்சுக்கல், இங்கிலாந்து ஆகியவை இதே வேலையைச் செய்தன. வரலாற்றில், வடகொரியாவின் கிம் குடும்பம், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக், சீனாவின் மாவோ, ரஷ்யாவின் ஸ்டாலின் வரை நாட்டை சீரழித்த ஆட்களைப் பற்றி கூறலாம். நூலில் உலக நாடுகளில் உள்ள மக்களை கொன்றழித்த, ஆட்சியாளர்களைப் பற்றி சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதில் கொள்கை என்ற வகையில் கிம் குடும்பம் இன்றும் சில கொள்கைகளைப் பின்பற்றி வடகொரியாவை சர்வாதிகாரமாக ஆண்டு வருகிறார்கள். ஜனநாயகத்தில் எந்த முடிவும் எட்டப்படாது என்று நம்பிக்கை கொண்டவர்கள், கம்யூனிசத்தின் பக்கம் செல்வார்கள். அதுவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்தானே? எந்தக் கொள்கைகளாக இருந்தாலும் காலத்திற்கேற்ப மாற வேண்டும். பிற நாடுகளுடன் இசைவாக இருந்து நாட்டை முன்னேற்ற வேண

இந்தியாவை உடைக்கும் வலதுசாரித்துவம்! - கபில்சிபல்

படம்
பிரிவினையின் விதைகள் தூவப்படுகின்றன! கபில் சிபல், காங்கிரஸ். அதிகாரம், உடல் பலத்தை வைத்துச் செய்யும் அரசியல், சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயனளிக்கும். மோடி அரசு இதனை திடமாக நம்பி, அதற்கான திட்டங்களோடு பயணிக்கிறது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்ற மோடி, உணர்ச்சிகரமான இந்துவின் மனநிலையைப் பிரதிபலித்தார். விளைவு, அதுபோலவே போலியாகப் பேசினார். வரலாற்றில் நடந்த தவறுகளுக்கு, இந்துக்களுக்கு நேர்ந்த பிரச்னைகளைத் தீர்ப்போம் என விநோதமாக பேசினார். கூட்டணி ஆட்சியில் சில விஷயங்களை துணிச்சலாக பாஜக செய்யவில்லை. ஆனால் இம்முறை கிடைத்த பெரும்பான்மை  பல அதிரடி முடிவுகளை எடுக்க வைத்திருக்கிறது. கர்வாப்சி எனும் திட்டத்தை ஆர்எஸ்எஸ் அதன் துணை அமைப்புகளாக பஜ்ரங்தள் ஆகியவை முன்னிலைப்படுத்தி சமூக ஒழுங்கை சீர் குலைத்தன. மெல்ல சமூகத்திலுள்ள மக்களிடையே அமைதியை உடைத்து பயத்தை உண்டாக்கும் சம்பவங்களை கலாசார காவலர்கள் ஏற்படுத்தினர். ஆண், பெண் காதலித்து திருமணம் செய்வது கிரிமினல் குற்றமல்ல. ஆனால் அதனையும் லவ் ஜிகாத் என்ற பெயரில் இழிவு செய்தனர். சாதியை அழிக்கும் காதல் திரு

ஜியோவுக்கு மூன்று ஆண்டு நிறைவு! - இஷா அம்பானியின் கனவு!

படம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவாகிறது. முகேஷ் அம்பானியின் மகள் இஷா, இந்த நிறுவனத்தின் உருவாக்கத்திற்கு காரணம், யேல் பல்கலையில் படித்தபோது விடுமுறைக்கு இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் இணைய இணைப்பு மிக மெதுவாக இயங்குவதாக தந்தை முகேஷிடம் கூறினார். அதுவே பின்னர் ஜியோவாக குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா என மாறி இன்று இந்தியாவை ஆக்கிரமித்துள்ளது. மேற்சொன்ன சம்பவம் நடந்தது 2011 ஆம் ஆண்டு, 2018 ஆம் ஆண்டு தனது துணிகர பிசினஸ் முயற்சிக்காக லண்டனில் விருது பெற்றுவிட்டார் முகேஷ். பேசும் அழைப்புகள் இலவசம். டேட்டாவுக்கு குறைந்த காசு என்ற திட்டம் ஏர்டெல் உள்ளிட்ட கம்பெனிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. எதிர்பார்த்தது போலவே இந்தியர்கள் ஜியோவைத் தேர்ந்தெடுத்தனர். இன்று இந்திய அரசு அமைப்புகள் கூட ஜியோவை தங்களது தொலைபேசி நிறுவனமாக ஒப்பந்தம் செய்து வருகின்றன. இந்த நேரத்தில் உங்கள் மூளையில் பிஎஸ்என்எல் எம்டிஎன்எல் என்ற நிறுவனங்களின் பெயர்கள் நினைவுக்கு வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. ஜியோ என்பதற்கான லோகோவும இஷாவின் ஐடியாதான். பழமையான ரிலையன்ஸ் லோகோவை கடாசிவிட்

எழுத்தாளரை சிறைப்படுத்திய சீனா!

படம்
எழுத்தாளரும், இணைய விமர்சகருமான யாங் ஹெங்ஜூன் என்பவரை. சீன அரசு சிறையில் ஆறு மாதமாக அடைத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 19 அன்று குவாங்ஜூ விமானநிலையத்தில் சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டார். யாங் ஹெங்ஜூன் தன் குடும்பத்துடன் ஷாங்காய் செல்லும் முயற்சியில் அங்கு இருந்தார். அமெரிக்காவில் பணியாற்றிய யாங், நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலையில் வருகைதரும் பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் சீனாவுக்கு அடிக்கடி வந்து செல்வதை தேசப்பாதுகாப்புக்கு ஆபத்தாக உளவுத்துறை சந்தேகப்பட்டது. மேலும் யாங் கைது செய்யப்படுவது முதல்முறை கிடையாது. 2011 ஆம் ஆண்டு கூட சீன காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். விசாரிக்கப்படும்போது அவரின் நடவடிக்கைகளை சொல்லுமாறு வற்புறுத்தப்பட்டுள்ளார். 2002 ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்திரேலியாவின் குடிமகனாக யாங் இருந்து வருகிறார். 1980 களில் சீனா வெளியுறவுத்துறையில் பணியாற்றியுள்ளார். ஆனாலும் கூட ஆஸ்திரேலியா அரசு கைதுக்கு கண்டனம் தெரிவித்து உதவிக்கு வரவில்லை. இவரின் கைது குறித்து அரசியல் எழுத்தாளர் கிரிஸ் உஹிமன் போன்றவர்தான் இணையத்தில் இப்பிரச்னை

குழந்தைகளைக் கண்காணிக்கும் சீன அரசு!

படம்
பெரியவர்களுக்கு கேமிரா என்றால் சிறுவர்களுக்கு சீன அரசு ஸ்மார்ட் வாட்சுகளைத் தயாரித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இருக்கும் இடங்களை எளிதாக தெரிந்துகொள்ள முடியும். குவாங்சூ நகரில் மாவட்ட நிர்வாகம் 17 ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச்களை இலவசமாகவே வழங்கியுள்ளது. இதன்மூலம் பெற்றோர் மாணவர்களைக் கண்காணிக்க முடியும் என்று சீன அரசு பதில் கூறியுள்ளது. இது ஒருவகையில் பாதுகாப்பு என்றாலும் அரசு கண்காணிப்பை மாணவர்களுக்கு வளர்ந்து வரும்போது பழக்கப்படுத்துகிறதோ என்ற எண்ணமும் பலருக்கும் எழுகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் மாணவர்கள் குளம், குட்டை ஆகிய இடங்களுக்கு அருகில் போனால் உடனடியாக பெற்றோரின் போனுக்கு எச்சரிக்கை செய்தி வந்துவிடுகிறது. தன்னார்வமாக முன்வரும் பெற்றோர்களுக்கு மட்டுமே ஜிபிஎஸ், ரேடியோ சிக்னல்களில் இயங்கும் வாட்சுகள், பிரஸ்லெட்டுகளை தருவதாக அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல. பல்வேறு பள்ளிகளை அரசு ஸ்மார்ட் வாட்சுகளைப் பெற கட்டாயப்படுத்தி வருவதே உண்மை. இதன் விளைவுதான் ஜிபிஎஸ் ஆடைகளை மாணவர்கள் உடுத்துவதும். இந்த ஆராய்ச்சிகளை சீன ராணுவம் செய்துவருகிறது. பெய்டூ எனும் ஜிபிஎஸ் கண்காணிப்

சர்வாதிகார நாடாகிறதா வங்கதேசம்?

படம்
வங்கதேசத்தில் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த தற்காக கவிஞர் ஹென்றி, வழக்கறிஞர் இம்தியாஸ் ஆகியோர் தடாலடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது. கவிஞர் ஹென்றி, கத்தோலிக்க பிஷப் ஏப்ரல் 22, 2019 அன்று நடத்திய கலாசார நிகழ்ச்சியை தள்ளி வைத்திருந்தால் பல நூறு பேர் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என செய்தியை சமூக வலைத்தளத்தில் எழுதியிருந்தார். அந்நாளுக்குப் பிறகுதான் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. உடனே கோபமான அடிப்படைவாதிகள், ஹென்றிக்கு கொலைமிரட்டல்களை விடுக்க தொடங்கினர். ஹென்றி தன் நகரத்தில் நடக்கும்  ஊழல், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றைப் பற்றியும் எழுதி வந்தவர் ஆவர். அவர் தற்போது டிஜிட்டல் பாதுகாப்பு சட்டப்படி கைதாகியுள்ளார். பொதுவாக மதம் குறித்து எழுதினால் முஸ்லீம் அடிப்படைவாதிகள்தான் கொந்தளித்து எழுவார்கள். இப்போது கிறிஸ்தவர்கள் அந்த இடத்தை அடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை மனநல சிகிச்சைதான். எனவே வழக்கை தடை செய்து கவிஞர் ஹென்றியை விடுதலை செய்ய வேண்டுமென ஸ்வாகிரிட்டோ நோமன் என்பவர் எழுதியுள்ளார். வங்காளி ஒருவர் காக்ராச்சாரி பகுதியில