இடுகைகள்

அறிவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

chapter 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள்!

படம்
  அத்தியாயம் 2 அள்ளிக்கொடுத்த தொழிலதிபர்கள் உலகம் முழுக்கவே அறக்கட்டளை, தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியை வழங்குவது போல தெரிந்தாலும் அதெல்லாம் வெளிப்படையான விஷயம் அல்ல. பெரும்பாலான தொழிலதிபர்கள், அவர்களது அறக்கட்டளை வழியாகவே நிதியை மடைமாற்றம் செய்து ஆராய்ச்சிகளை செய்கிறார்கள். விருதுகளை உருவாக்கி வழங்கினாலும் கூட சிறந்த சிந்தனைகளை, கண்டுபிடிப்புகளை, கண்டுபிடிப்பாளர்களை தங்களது நிறுவனத்திற்கென பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே, பணத்தை நன்கொடையாக கொடுத்தார்கள் என்றால், அதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. அதைப் புரிந்துகொண்டுதான், இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கவேண்டும்.  ஹே ஷியாங்ஜியான் வயது 81 மிடியா குழுமம் சீனா பல்வேறு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து வரும் சீன தொழிலதிபர். 410 மில்லியன் டாலர்களை தனது ஹே சயின்ஸ் பவுண்டேஷன் வழியாக அறிவியல் ஆராய்ச்சிக்கு செலவிட முன்வந்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவு, உடல்நலம், காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள், நிதியின் வழியாக நடைபெறவிருக்கிறது. 21.7 பில்லியன் சொத்து மதிப்பு கொண்ட தொழிலதிபர், தனது ஆராய்ச்சியின் வழியாக பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் சீனாவுக்

பூமியிலுள்ள மர்மங்கள் பற்றி அறிய கேட்க வேண்டிய கேள்விகள்!

படம்
  பூமியைப் பற்றி அறிந்துகொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. நேஷனல் கிராபிக் இதழ், டிகேபுக்ஸ் , ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்  வழியாக,  நிறைய விஷயங்கள் வெளியே தெரிய வந்தாலும் அறிய வேண்டிய பதில்கள் நிறைய உள்ளன. அப்படி சிலருக்கு தோன்றிய பூமி பற்றிய கேள்விகளும் பதில்களும் இதோ.... காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை மாற்றிக்கொள்ளுமா? இதற்கு எதிர்காலத்தில் உயிரியல் துறையில் நடைபெறும் ஆராய்ச்சிகள், மேம்பாடுகள்தான் பதில் சொல்லவேண்டும். காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை எப்படி மாற்றிக்கொள்ளும். அதற்கான கால வரம்பு என்ன என்பதை உடனே கூறுவது கடினம். இதை எதிர்காலத்தில்தான் ஆய்வு செய்து அறியவேண்டும்.  பேட்ரிக் வாலன்ஸ், முன்னாள் அறிவியல் ஆலோசகர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நுண்ணுயிரிகள் உதவுமா? நிலம், நீர், நமது வயிறு, கை, கால்கள் ஆகியவற்றில் ஏராளமான கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள், வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் உள்ளன. இவற்றில் நல்ல நுண்ணுயிரிகளை எடுத்து பயன்படுத்தினால் மரத்தின் வளர்ச்சியைக் கூட மும்மடங்கு அதிகரிக்க முடியும். மனிதர்களின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை மேம்படுத்தினால் செ

வட்டவடிவ பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி எதற்காக?

படம்
  பழமொழிகளை நாம் நிறைய இடங்களில் பயன்படுத்துவோம். நிறைய நம்பிக்கைகளை முன்னோர்கள் கூறினார்கள் என அப்படியே பின்பற்றுவோம். அதை ஏன் என கேள்வி கேட்டால்தானே அதன் பின்னணி தெரியும். அப்படி சில விஷயங்களை தேடிப்பார்த்த அனுபவம் இது.  தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடலுக்கு நல்லது இப்படி கூறுவதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. பொதுவாக வாக்கிங் சென்றால் நல்லது என்ற நிலைக்கு நீரிழிவு நோய் வந்தவர்கள் வந்துவிட்டார்கள். எனவே பத்தாயிரம் அடி என்பது கூட இப்போது போதுமா என்று தெரியாத நிலை. ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வந்த காலம். 1960ஆம் ஆண்டு, மான்போ கெய் என்ற கருவி விற்பனைக்கு வந்தது. இதை பத்தாயிரம் அடி மீட்டர் என்று அழைத்தனர். இக்கருவியை தயாரித்த யமாசா என்ற நிறுவனம் பத்தாயிரம் என்ற எண்ணைக் குறிக்கும் ஜப்பானிய எழுத்தைக் கவனித்தது. அது ஒரு மனிதர் நடப்பது போலவே இருந்ததால்,அதேயே விற்பனைப் பொருளுக்கு பயன்படுத்தியது.  உடல் ஒரே இடத்தில் இருந்தால் அது கெடுதலை உருவாக்கும், எனவே சிறிது நடங்கள், உட்காருங்கள். உடலை பல்வேறு வடிவங்களில் நிலைகளில் மாற்றி உட்கார்ந்து பாருங்கள். இதெல்லாமே உடலுக்கு ப

ஜார்ஜ் ஆர்மிடேஜ் மில்லர்

  ஜார்ஜ் ஆர்மிடேஜ் மில்லர் இவர் சார்லஸ்டன் என்ற ஊரில் பிறந்தார். 1941ஆம் ஆண்டு ஸ்பீச் பாத்தாலஜி பாடத்தில் எம்ஏ பட்டம் வென்றார். பிறகு, ஹார்வர்டில் உளவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்லி ஸ்மித் ஸ்டீவன்ஸ் ஆய்வகத்தில் ஜெரோம் ப்ரூனர், கார்டன் ஆல்போர்ட் ஆகியோருடன் பணியாற்றினார். இரண்டாம் உலகப்போரின்போது ராணுவம் ரேடியோக்களை இடைமறித்து கேட்கும் பணிகளை செய்து தர கோரியது. 1951ஆம் ஆண்டு எம்ஐடியில் பணியாற்றச்சென்றவர். பிறகு 1955ஆம் ஆண்டு மீண்டும் ஹார்வர்டிற்கு திரும்பினார். அங்கு நோம் சாம்ஸ்கியோடு இணைந்து வேலை  செய்தார். 1960ஆம் ஆண்டு, அறிவாற்றல் படிப்புக்கான மையத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேலை செய்துள்ளவருக்கு 1991ஆம் ஆண்டு தேசிய அறிவியல் பதக்கம் வழங்கப்பட்டது.  முக்கிய படைப்புகள்  1951 language and communication  1956 the magival number seven plus or minus two 1960 plans and the structure of behaviour

ஞாபகசக்தியை மேம்படுத்திக்கொள்ள உதவும் வழிகள் சில!

படம்
    மனித கால்குலேட்டர்களுக்கு இன்று பெரிய மரியாதை கிடைக்கப்போவதில்லை. அந்தளவுக்கு சூப்பர் கணினிகள் வளர்ந்துவிட்டன. கூகுளின் தேடலுக்கு பார்ட் எனும் செயற்கை நுண்ணறிவு உதவுகிற காலம் இது. இந்த காலத்திலும் சில விஷயங்களை மூளையில் நினைவு வைத்துக்கொண்டு தேவையானபோது கூறுகிற மனிதர்கள் ஆச்சரியம் தருவதோடு சற்று பொறாமையையும் ஏற்படுத்துகிறார்கள். உணவகங்களில் மெனு கார்டை நாம் பார்த்துக்கொண்டிருக்க சிறப்பு உணவுகளை கூறிவிட்டு, அதன் தயாரிப்பு முறைகளை படபடவென ஒப்பிப்பவர்களை பார்த்தால், உணவை விட அவர் எப்படி இத்தனை விஷயங்களை நினைவில் கொள்கிறார் என்று தோன்றும். ஏனெனில் பலருக்கும் நேற்று காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதே அண்டன் பிரகாஷ் கட்டுரையை புரிந்துகொள்வது போல கடினமாக, மீள நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கிறது. தேவையானபோது குறிப்பிட்ட விஷயங்களை நினைவில் இருந்து மீள எடுத்து பேசி கைதட்டல் வாங்குவது என்பது பெரிய சாமர்த்தியம். சற்று பொறாமை இருந்தாலும் கைதட்டிவிடுவதுதான் பெரிய மனுஷன் செய்யும் வேலை. மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் பகுதிதான் நினைவுகளை உருவாக்குகிறது. அதுமட்டும்தானா என்றால் அமிக்டால என்ற

பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா?

படம்
  பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உண்டா? தேனீகளுக்கு உணர்ச்சிகள் உண்டு. அவை உயர்ந்தும் தாழ்ந்தும் மாறுகின்றன. இதில் சில பொம்மைகளோடு விளையாடும் இயல்பு கொண்டுள்ளன. கரப்பான் பூச்சிகளுக்கு ஆளுமைகள் உள்ளன. பழ ஈக்களுக்கு பய உணர்வு உள்ளது ஆகிய உண்மைகள், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளில் தெரிந்துள்ளது. பூச்சிகளுக்கு உணர்ச்சிகள் உள்ளது என்பது புதிய சிந்தனை கிடையாது. 1872ஆம் ஆண்டு, சார்லஸ் டார்வின்   பூச்சிகளுக்கு பயம், பீதி, பொறாமை, காதல் ஆகிய உணர்ச்சிகள் உண்டு என்று கூறியுள்ளார். இப்போதுவரை பூச்சிகளின் மூளையில் என்ன சிந்தனை ஓடுகிறது என கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், நரம்பியல் ஆய்வாளர்கள், தத்துவவாதிகள் இந்தக்கருத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு சயின்ஸ் இதழில் அறிவியல் கட்டுரை ஒன்று வெளியானது. அதில் கட்டுரையாளர்களான ஃபிரான்ஸ் டே வால், தத்துவ பேராசிரியர் கிரிஸ்டன் ஆண்ட்ரூஸ் ஆகிய இருவரும் பூச்சிகளுக்கு உணர்வுகள் இருப்பது உண்மையென்றால், அவைக்கு குண இயல்புகளும் உண்டு என அர்த்தமாகிறது என கூறியிருந்தனர். மனிதர்கள் என்றால் அவர்கள் மனதில் நினைப்பது என்ன என்று கூற வாய்ப்பு

எனது அனுபவம் சார்ந்து உணர்ந்த அறிவியல் உண்மைகளை பேசுகிறேன்! ஆண்ட்ரூ ஹூயூபர்மன், ஆய்வாளர்

படம்
  ஆண்ட்ரூ ஹூயூபர்மன், நரம்பியல் ஆய்வாளர் ஆண்ட்ரூ ஹூயூபெர்மன் நரம்பியல் ஆய்வாளர், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் பல்லாயிரம் மக்கள் உங்களது அறிவியல் பாட்காஸ்டை கேட்கத்தொடங்கியுள்ளார்களே எப்படி? மக்கள் புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அறிவியலைக் கற்க வேண்டுமென விரும்புகிறார்கள். இப்போது நான் கூறுவது சற்று உணர்ச்சிகரமான வாசகங்களாக தோன்றலாம்.   உயிரியல் என்பது அழகானது. அதிலுள்ள உயிரினங்கள் போலவே நாமும்   உருவாகி வந்தவர்கள்தான். நம்மைப் பற்றிய அறிவியலும், நம்மைக் கடந்து பிற உயிரினங்களையும் பார்ப்பது சுவாரசியமான ஒன்று. பொதுவான அறிவியலாளர்களை விட ஹூயூபர்மன் லேப் பாட்காஸ்டிற்கு மக்கள் மத்தியில் நம்பிக்கை அதிகமாக உள்ளது. இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் இதை பாட்காஸ்ட் கேட்கும் நேயர்களிடம்தான் கேட்க வேண்டும். நான் இதற்கு காரணம் என நினைப்பது, மக்களிடம் நேரடியாக கருத்துகளை பகிர்வதுதான் என்பேன். ஆடியோவாக இருந்தாலும், செய்தி துணுக்காக இருந்தாலும் என்னுடைய அனுபவம் சார்ந்து அதை பேசுகிறேன். ஆழமான கவனித்தலின் அடிப்படையில் இருப்பதால், மக்கள் நம்பிக்கை கொள்கிறார்கள்

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறுவனங்

பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பிற்கு உதவும் கர்ணா வித்யா பவுண்டேஷன்!

படம்
  சென்னையின் கிண்டியில் கர்ணா வித்யா பவுண்டேஷன் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் லட்சியமே பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதுதான். 1999ஆம் ஆண்டு, சென்னை ரோட்டரி கிளப் தொடங்கிய நிறுவனம்தான்   கர்ணா வித்யா பவுண்டேஷன். 2013ஆம் ஆண்டு தன்னார்வ நிறுவனமாக மாற்றப்பட்டு கல்வி, வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் நிறுவனமாக மாறியது. பார்வைத்திறன் குறைந்தவர்களுக்கு ஆலோசனை, பயிற்சி, போக்குவரத்து, தொழில்நுட்ப உதவிகளை கர்ணா வித்யா பவுண்டேஷன் வழங்குகிறது. இந்த நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுகிறது. இதன் காரணமாக, பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர முடிகிறது. 2023ஆம் ஆண்டு கர்ணா வித்யா பவுண்டேஷன் பயிற்சியளித்த மாணவர்களில் 25 பேர், இருபது கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர். அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம்களிலும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று வருகின்றனர்.   சாதாரண ஆட்களுக்கு வேலைவாய்ப்பு என்பது நேர்காணல் நடத்தினாலே வேலைவாய்ப்ப

மாணவர்களை விஞ்ஞானிகளாக்க புதுமையான முறைகளைக் கையாளும் அறிவியல் ஆசிரியர் - மைதிலி

படம்
  மாணவர்களை விஞ்ஞானிகளாக்க முயலும் ஆசிரியர் – மைதிலி புதுக்கோட்டையில் உள்ள கம்மங்காட்டில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, அறிவியல் ஈடுபாட்டில் தலைசிறந்த பள்ளி என பெயர் பெற்றுவருகிறது. மாநில அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசுகளை,  இந்த அரசு பள்ளி மாணவர்கள் பெற்று வருகிறார்கள். இதெல்லாம் கடந்து மத்திய அரசின் உதவித்தொகைக்கான தேர்வுகளை எழுதியதில் 14 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் என்ன காரணம் என்று கேட்டால், மைதிலி டீச்சர் என கோரசாக சொல்லுகிறார்கள் மாணவர்கள். ‘’எனக்கு மாணவர்களின் ஒழுக்கம் என்பது முக்கியம். பாடங்களை சாதாரணமாக சொல்லித் தந்தபிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் மாணவர்கள் நான் கற்றுத்தரும் வழிகளை ஏற்கத் தொடங்கினார்கள்’’ என்று பேசும் மைதிலி, வேதியியல் பட்டதாரி. இவர் அறிவியல் பாடங்களின் முக்கியமான அம்சங்களை சினிமா பாடலாக மாற்றிப்பாடுகிறார். பிறகு, பாடங்களை எப்போதும் போல நடத்துகிறார். இதனால் மாணவர்களுக்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக புரிகிறது. அறிவியல் கண்காட்சிகளில் கம்மங்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கோள் மண்டலம், பிளாஸ்டிக்கில் இருந்து ப்ளூடூ

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 3 - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ் 3, தொடர்வரிசை நூலாக வெளிவருவது திட்டமிடாத ஒன்று. இந்த நூலில் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு வேடிக்கையான கேள்வி பதில்கள் உள்ளன. அதை ஒருவர் வாசிக்கும்போது, அதற்கான அறிவியல் விளக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும்.  கேள்வி பதில் என்றாலும் அதன் வடிவம் மூடநம்பிக்கை, அதற்கான அறிவியல் விளக்கம் என்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவரின் மனதில் ஆராயாமல் நம்பும் விஷயத்தை தவறு என்று சொல்ல அறிவியலில் நிச்சயமாக ஆதாரங்கள் தேவைதானே? அந்த அடிப்படையில் அறிவியல் ஆதாரங்கள் எழுதப்பட்டுள்ளன. பிபிசி, நியூ சயின்டிஸ்ட், கார்டியன், டிஸ்கவரி, நியூ சயின்டிஸ்ட், பாப்புலர் சயின்ஸ் என பல்வேறு அறிவியல் இதழ்களிலிருந்து பெறப்பட்ட அறிவியல் தகவல்களின் சேகரம்தான் இது. நூலை வாசியுங்கள். பிடித்திருந்தால் நண்பர்களுக்கும், அறிவியலை நேசிப்போருக்கும் பகிருங்கள். நூலைத் தரவிறக்கி வாசிக்க... https://www.amazon.in/dp/B0BXF3HGTF அட்டைப்படம்  பின்டிரெஸ்ட்  வடிவமைப்பு  AU STUDIO

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - அறிவியல் கேள்வி பதில்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2, எந்த வகையில் வேறுபட்டது? முதல் நூல் போல இதில் நகைச்சுவை இருக்காது. சற்று குறைவு. ஏன் இல்லவே இல்லை எனலாம். இதெல்லாம் வெளியிட்ட நாளிதழின் ஆசிரியரின் கைத்தொழில் காரியம். ஆனால் அறிவியல் மூடநம்பிக்கைகளை, அறிவியல் உண்மையோடு எதிர்கொள்ள நேர்ந்தது எனக்கு பிடித்திருந்தது. வாரம்தோறும் இரண்டு நாட்கள் இதற்காக வேலை செய்தபோது தெரிந்து கொண்ட விஷயங்கள் எனக்கு பரவசம் தந்தன.  தினந்தோறும் அறிவியல் உலகம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கேள்விகளை பல்வேறு வடிவங்களில் இணையத்தில் தேடி, அதற்கான பதில்களை ஒப்பீடு செய்து தேர்ந்தெடுத்து தமிழாக்கம் செய்தேன். இந்த வேலை தந்த மகிழ்ச்சி, அக்காலகட்ட  இழிவான அலுவலக அரசியலைக் கூட சற்று மறக்கடித்துவிட்டது. வித்தியாசமான கோக்குமாக்கான கேள்விகளை எடுத்தாலும் அதற்கு நேர்த்தியான அறிவியல் ரீதியான விளக்கம் உள்ளே இருக்கிறது. இதுதான் வாசகர்களுக்கு வாசிப்பில் ஆர்வமூட்டும் விஷயமாக கருதுகிறேன். வாசியுங்கள். நூல் பிடித்திருந்தால் நண்பர்களுக்குப் பகிருங்கள். நன்றி நூலைத் தரவிறக்கி வாசிக்க.... https://www.amazon.in/dp/B0BWXM1M4X

பதில் சொல்லுங்க ப்ளீஸ் 2 - மிஸ்டர் ரோனி - புதிய மின்னூல் அட்டைப்படம் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ 2 அட்டைப்படம்

பதில் சொல்லுங்க ப்ளீஸ் - மிஸ்டர் ரோனி - மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ்... அட்டைப்படம் தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவந்த வார இதழ், முத்தாரம். அந்த  இதழில் வெளியான ஏன்? எதற்கு? எப்படி? தொடரின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்தான் இந்த நூல்.  பதில் சொல்லுங்க ப்ளீஸ் நூலில் என்ன எதிர்பார்க்கலாம்? தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சந்தேகங்கள், படிக்கும் நாளிதழில் உள்ள அறிவியல் தொடர்பான கேள்விகள் ஆகியவைதான் நூலில் இடம்பெற்றுள்ளன.  நூலின் தலைப்பை எழுத்தாளர் சுஜாதா தனது நூல்களுக்கு ஏற்கெனவே வைத்துவிட்டார் என பின்னர்தான் தெரிந்த்து. ஆனால் அதற்குள்  தலைப்பு வைத்து தொடரை தொடங்கியாயிற்று. ஆனாலும் தலைப்பு தொடருக்கு சரியாக இருந்த காரணத்தால் அதை மாற்றவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவரின் தலைப்புக்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.  நூலின் அட்டைப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஃபோடார் வலைத்தளத்தில் படத்திற்கான குறிப்புகளைக் கொடுத்து உருவாக்கியது. அறிவியல் தொடருக்கு, அட்டைப்படமும் சாதாரணமாக இருந்தால் எப்படி? அறிவியல் என்பது காலம்தோறும் மாறிக்கொண்டே இருப்பது, நிறைய தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கும்தான். அதை மறுக்கவில்லை.

அறிவியல் முன்னேற்றத்தால் எளிமையான வாழ்க்கை - ஜித்து கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள்

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் கேள்வி பதில்கள் கே. அறிவியல் முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளதா? ப. அறிவியல் கண்டுபிடிப்புகள் உங்கள் வாழ்க்கையை எளிதாக மாற்றவில்லையா என்ன? மின்சாரம் இருக்கிறது. உங்கள் அறையில் ஒரு ஸ்விட்சை தட்டினால் விளக்கு எரிகிறது. ஆகாயவிமானத்தில் ஏறினால் லண்டனிலிருந்து டெல்லிக்கு எளிதாக சென்றுவிடலாம். தொலைபேசி அறையில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் உங்களுக்கு நண்பர்களோடு பேசத் தோன்றினால் அவர்களோடு பேசலாம். அறிவியல் கண்டுபிடிப்புகள் வாழ்க்கையை எளிமையாக்கி உள்ளன என்பது உண்மைதான். நோய்களை எளிதாக கண்டறிந்து தடுக்க முடிகிறது. அதேசமயம் அதே அறிவியல் மூலம்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டுகளை கண்டறிந்தனர். இதை வெடிக்க வைப்பதன் மூலம் பல லட்சம் மக்களை கொல்ல முடியும். நமது அறிவை விழிப்புணர்வோடும் அன்புடனும் சேர்த்து பயன்படுத்தினால் நம் வாழ்க்கையை நாமே அழித்துக்கொள்வதிலிருந்து காக்கலாம். கே. பெரிய மீன் சிறிய மீனை தின்று வாழ்வது இயல்பானதா? விலங்குகள் உலகில் நீங்கள் சொல்வது போல பெரிய மீன், சிறிய மீனை உணவுக்காக நம்பியிருக்கலாம். இது இயற்கையாக   அமைந்திருக்கலாம்

சொத்துக்காக சிறுமியின் உயிரைப் பறிக்க காஷ்மோரா பூதத்தை ஏவும் கும்பல்! துளசிதளம் - எண்டமூரி வீரேந்திரநாத்

படம்
  துளசிதளம்  எண்டமூரி வீரேந்திரநாத் தமிழில் கௌரி கிருபானந்தன் அல்லயன்ஸ்  துளசிதளம் நாவல் தலைப்பை அறிந்தவுடன் கோட்டயம் புஷ்பநாத் நாவல் போல இருக்குமோ என யாருமே நினைக்கலாம். ஆனால் உண்மையில் கதை அப்படி அமையவில்லை.  ஶ்ரீதர், சாரதா, துளசி, அனிதா, நாராயணன் ஆகிய பாத்திரங்கள் முக்கியமானவை. துளசி என்ற ஶ்ரீதர் - சாரதா தம்பதிக்கு பிறக்கும் மகளுக்கு ஶ்ரீதரின் நிறுவன முதலாளி சொத்துக்களை எழுதி வைக்கிறார். இந்த சொத்து துளசிக்கு பத்து வயது ஆனபிறகு  கிடைக்கும். அப்படி அவள் பத்து வயதுக்குள் இறந்துவிட்டால், சொத்து கிருஷ்ணா என்ற ஆசிரமத்திற்கு கிடைக்கும். சொத்துக்காக ஆசிரம தலைவர் செய்யும் அதீத செயல்பாடுகளும் அதற்கான எதிர்வினையாக ஶ்ரீதர், அவரின் நண்பர் நம்பூதிரி, வழக்குரைஞர் லட்சுமிபதி, மருத்துவர் பார்த்தசாரி, ஹிப்னாட்டிச பேராசிரியர் ஆகியோர் என்ற செய்கிறார்கள் என்பதுதான் இறுதிப்பகுதி.  நாவலில் எண்டமூரி வீரேந்திர நாத்தின் புத்திசாலித்தனத்தை எங்கு வியக்கிறோம் என்றால் அது நூலின் இறுதிப்பகுதியில்தான்.அதில் காஷ்மோரா பூதம் அதிருப்தியடைந்து துளசியை விட்டுவிட்டதா, அவளைக் கொல்லும் முயற்சியை ஹிப்னாட்டிச பேராசிரியர் தா

அறிவியல் தகவல்களை வெளிப்படுத்தும் வழிகள் - பை சார்ட், அட்டவணை, டயகிராம்

படம்
  தகவல்களை எப்படி வெளியே கூறி விளக்குவது? அறிவியல் சம்பந்தமான தகவல்களை எழுத்துக்களாக பத்தி பத்தியாக எழுதி ரிசர்ச்கேட் வலைத்தள கட்டுரை போல விளக்கினால் படிக்கும்போதே பலருக்கும் தூக்கம் வந்துவிடும். இதை தடுக்கவே பல்வேறு படங்கள், அட்டவணைகள் உதவுகின்றன. பொதுவாக அறிவியல் சோதனைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள், அளவுகள் ஆகியவற்றை டேட்டா என்கிறார்கள். தமிழில் தகவல்.  பொதுவாக பங்குச்சந்தை, பணவீக்கம் ஆகியவற்றின்  ஏற்ற இறக்கங்களை கிராப் வடிவில் சொல்லுவார்கள். இந்த வடிவில் ஏற்ற இறக்கங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும். அனைத்து தகவல்களையும் இதே வடிவில் சொல்ல முடியாது.  பை சார்ட் நிதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது ஒரு ரூபாயில் வரவு செலவுகளை இந்த வகையில் சொல்லுவார்கள். இதனை பார்த்தாலே எளிதாக ஆண்டின் நிதி அறிக்கை எந்த லட்சணத்தில் இருக்கிறது என அடையாளம் கண்டுகொள்ளலாம். பொதுவாக எந்த அளவு, சந்தையில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, வருமான அளவு ஆகியவற்றை பை சார்ட் மூலம் புரிந்துகொள்ளலாம். நோய்த்தாக்குதல் அளவு, வறுமையில் உள்ள மக்களின் அளவு ஆகியவற்றை சதவீத அடிப்படையில் எளிதாக புரிந்துகொள்ளலாம்.  நூறுகிராம்

அறிவியல் முறைகளும், அதன் கண்காணிப்பும்! - அறிவியல் அறிவோம்

படம்
  அறிவியல் எப்படி வேலை செய்கிறது? அறிவியல் என்பது தகவல்களை சேகரித்து வைக்கும் தொகுப்பு என பலரும் நினைக்கலாம். அப்படியல்ல. புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அதனை சோதித்துப் பார்ப்பது அறிவியலின் முக்கியமான இயல்பு. அறிவியலாளர்கள் புதிய சிந்தனைகளை வைத்து கணிப்புகளை உருவாக்கி சோதிக்கின்றனர். அறிவியல் ரீதியாக சிந்தனைகளை சோதித்துப் பார்ப்பதை அறிவியல் முறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் சயின்டிஃபிக் மெத்தட். கவனித்தல் அல்லது கண்காணித்தல் அறிவியல் முறையில் அடிப்படையே, ஒன்றைக் கண்காணித்தல்தான். பூக்கள் தோட்டம் வைத்திருந்தால் இந்த முறையில் சூரிய வெளிச்சம் படுவதை எளிதாகப் பார்க்கலாம்.  இப்படி கண்காணித்தலை ஹைப்போதிசிஸ் என்று கூறுகிறார்கள். ஒரு பொருளை, தாவரத்தைக் கண்காணிப்பதை விளக்குவதுதான் ஹைப்போதிசிஸ். மண் சூரிய வெப்பத்தைப் பெற்று கதகதப்பாக இருப்பதை கண்டறிவது இந்த வகையில் சேரும்.  ஒரு தாவரம் வளருவதற்கு சூரிய வெளிச்சம் முக்கியமானது. அதை சூரிய வெளிச்சம் உறுதி செய்கிறது. தோட்டத்தில் மூடாக்கு போட்டு செடிகளை வளர்ப்பவர்கள் செயற்கையான முறையில் பல்புகளை எரிய விட்டு செடிகளை வளர்ப்பார்கள். குறிப்பிட்ட வெப்பநிலையி

கொலைக்கரத்தால் தடுமாறும் ஜானி நீரோ, ஸ்டெல்லா - முத்து காமிக்ஸ்

படம்
  கொலைக்கரம்  முத்து காமிக்ஸ்  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசப்பற்றுக் கதை. கதையில், பெரிய நினைத்து வியப்படையும் சண்டைக்காட்சிகள் ஏதும் கிடையாது. கதையில் ஆச்சரியப்படுத்துவது ஜானி நீரோ அல்லது ஸ்டெல்லா அல்ல. வில்லனான மைக்கேல்தான். அவரின் திறமைதான் கொலைக்கரம் என தலைப்பு வரக்காரணம். இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றுபவரின் கைகள் எஃகு போன்றவை. ஆயுதமே இல்லாமல் ஜெர்மன் படை வீர ர்களை கழுத்தை உடைத்து புகழ்பெற்றவர். நாட்டிற்காக இப்படி உழைத்தாலும் அவரது குடும்பத்தை அயர்லாந்து நாட்டிற்கு சுதந்திரம் கேட்டதற்காக இங்கிலாந்து அரசு சுட்டுக்கொல்கிறது. அவர்களின் செயல்பாடுகளை தேசதுரோகி என்ற ஒற்றை வார்த்தையில் பேசி முற்றுப்புள்ளி வைக்கிறது., இதனால் மைக்கேல் விரக்தி கொள்வதோடு, இங்கிலாந்தை பழிவாங்க முடிவு செய்கிறார். இதற்காக தக்க சமயத்திற்காக காத்திருக்கிறார். அப்படி ஒரு வாய்ப்பும் அவருக்கு கிடைக்கிறது. அறிவியல் விஞ்ஞானி ஒருவர் மேக உடைப்பு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் கருவி ஒன்றை உரு வாக்கியிருக்கிறார். இந்த கருவி ஒரு நகரில் கூடும் அதிக மேகங்களை, மேக கூட்டங்களை கலைக்கும் திறன் கொண்டது. இதனால் நகரம