கழிவறை, குளியறைகளில் எமர்ஜென்சி! கடிதங்கள் - கதிரவன்
30.11.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலம். மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது. வேலை செய்தே ஆகவேண்டும். நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும். ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது. அதுதான் இருப்பதிலேயே கடினமானது. இனிய உதயம் பத்திரிகை படித்தேன். இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார். அதாவது மொழிபெயர்த்து தமிழில் செய்திருக்கிறார். பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை. சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை. அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே. பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள். இதனால் அம்முக்குட்டிக்கு கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது. அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள். அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை. நன்றி! அன்பரசு 2.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு சளி பிடித்துள்ளது. சள