இடுகைகள்

இருமல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழிவறை, குளியறைகளில் எமர்ஜென்சி! கடிதங்கள் - கதிரவன்

படம்
  30.11.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலம். மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது. வேலை செய்தே ஆகவேண்டும். நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும். ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது. அதுதான் இருப்பதிலேயே கடினமானது.  இனிய உதயம் பத்திரிகை படித்தேன். இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார். அதாவது மொழிபெயர்த்து தமிழில் செய்திருக்கிறார். பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை. சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை. அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே. பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள்.  இதனால் அம்முக்குட்டிக்கு கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது. அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள். அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை.  நன்றி!  அன்பரசு 2.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? வெகு நாட்களுக்குப் பிறகு எனக்கு சளி பிடித்துள்ளது. சள

இருமல் கூடுகிறது! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  pixabay அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? சமூக வலைத்தளங்கள் இல்லாமல் வாழ்வது பற்றி கணினி வல்லுநர் ஜாரோன் லேனியர் சில நூல்களை எழுதியிருக்கிறார். இதனை எனது சீட்டுக்கு அருகில் உட்கார்ந்து என்னை கிண்டல் செய்துகொண்டிருக்கும்  ஓவியர் குழந்தை முருகன் கூறினார். தரவிறக்கிய இந்த நூல்களை விரைவில் படிக்க வேண்டும்.  சளி வந்தால் மூச்சுக்குழலில் உராயும்படி ஆக்ரோஷமாக மாறிவிடுகிறது. வேறுவழியின்றி அதனை வேகமாக வெளியேற்ற டாபர் ஹனிடஸ் வாங்கி குடித்தேன். நூறுமில்லி மருந்து ரூ.99க்கு விற்கிறார்கள். அலுவலகத்தில் வேலை பெரிதாக இல்லை. திங்கட்கிழமை இதழுக்கான வேலையை மட்டும் செய்தால் போதும். எழுத்தாளர் ஷோபா டே எழுதிய கட்டுரை நூலை படித்து வருகிறேன். தினசரி பத்து பக்கம் என்ற கணக்கில்தான் படிக்க முடிகிறது. இப்போதைக்கு அவ்வளவுதான்.  நன்றி சந்திப்போம் அன்பரசு  2.11.2021