இடுகைகள்

மேக்கிங் இந்தியா ஆசம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தூய இந்தி மொழி சாத்தியமில்லை! - சேட்டன் பகத்

படம்
டில்லியில் புதிய அரசு எப்போது ஆட்சி அமைத்தாலும் இந்தி சார்பான ஆதரவை எப்போதும் காட்டுவார்கள். காங்கிரஸ் முதல் பாஜக வரை இந்தி பிரசார சபையில் நின்று மொழி வீரம் பேசுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் இவர்கள் என்ன சாதிக்கிறார்கள் என்று இதுவரையிலும் புரியவில்லை. இந்தியா பன்மைத்துவமான தேசம். அரசு கூறும் புள்ளிவிவரங்களில் இந்தி எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்து, தெலுங்கு, மராத்தி, தமிழ் என இடம்பெறுவது மாறவே இல்லை. பின் எதற்கு இந்தி படி என்று காட்டுக்கத்தல் வட இந்தியாவிலிருந்து எழுகிறது. காரணம், ஆட்சியில் உள்ளவர்கள் பிராமணர்கள் என்ற காரணம்தான் தேடினால் தட்டுப்படுகிறது. பாஜக நேரடியாக சமஸ்கிருதத்தை நோக்கி பயணித்துவருகிறது. இந்தி என்பது சமஸ்கிருதம் எனும் லட்சியத்தை அடைய உதவும் படகுதான். பிறகு இந்தியை கைவிட்டு விடுவார்கள். இன்றைய இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா முதற்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் வரை இந்தி விசுவாசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இப்போதும் இந்தி பேசுகிறார்கள் என்பதை அவர்கள் வெளியிடும் புள்ளிவிவரங்களே சொல்லுகின்றன. பின் என்ன? எதற்கிந்த

மதுத்தடை வளர்ச்சியை குலைக்கும் - சேட்டன் பகத்!

படம்
giphy.com நான் மதுத்தடை தவறு என்று சொல்வதற்காக வருத்தப்படவில்லை. முக்கியமான குறிப்பு, நான் மது அருந்துபவனல்ல. குஜராத்தில் இன்றும் மதுவுக்கு தடை உள்ளது. காந்தி போர்பந்தரில் பிறந்ததால் அரசு அவருக்கு மரியாதை செய்வதற்காக இத்தடையை நீக்காமல் அப்படியே பெயரளவுக்கு காப்பாற்றி வருகிறது. மணிப்பூர், மிசோரம், ஏன் கேரளத்தில் கூட மது தடை அமலாகி பின் கைவிடப்பட்டது. இந்தியர்கள் பொதுவாக சிக்கலான பிரச்னைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு நட்பை வளர்க்கிறார்கள். நான் அதைக் குறையாக கூறவில்லை. முக்கிய விவகாரங்களில்  அவர்கள் சரியான அதிரடி முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும். மது தடை என்ற முடிவை நான் எதிர்க்கிறேன். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானது என்று உறுதியாக நம்புகிறேன். உண்பது, உடுப்பது, வணங்குவது போன்ற விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து. மது தடையால் குஜராத் அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கிறது. இதற்காக மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இது தவறான முறைதானே? மது விற்பது என்பதும், அதன

அசாமும் நம்மில் ஒரு பகுதிதான்- இனவெறி வேண்டாம் - சேட்டன் பகத்!

படம்
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஆவணங்களை பதிவு செய்ய கந்துவட்டிக்கு கடன் வாங்கி அசாமியர்கள் அலைந்துகொண்டு இருக்கிறார்கள். டெல்லி முதன்முறையாக கிழக்கிந்தியர்களை இப்படி செய்கிறது என நினைக்க முடியவில்லை. அசாமில் தீவிரவாதிகளின் போராட்டம், கலவரம், நிடோ டானியா  என்ற இளைஞரின் கொலை போன்ற விஷயங்கள் நம்மை நாமே வெறுக்க வைப்பன. கிழந்திந்தியாவின் வாசலான அசாமில் உள்ள மக்களை வெறுப்பது இந்தியாவில் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அங்குள்ளவர்களுக்கு சரியான வேலைவாய்ப்புகளை பொருளாதார மண்டலம் அமைத்து உருவாக்கலாம். பல்வேறு இசை, கலாசார நிகழ்வுகளை அங்கு நடத்தலாம். இந்திய எல்லையை ஒட்டி உள்ள மக்கள் என்பதால் எளிதாக அவர்கள் சீனாவின் பக்கம் சாய வாய்ப்புள்ளது. இந்திய அரசு தன்னுடைய மக்களாக அசாமியர்களைப் பார்ப்பது பன்மைத்துவத்திற்கு நல்லது. இனிமேலும் அசாம் மக்கள் நாம் பாகுபாட்டுடன் கேலி, கிண்டல் செய்தால் அவர்கள் இந்திய மக்களாக இருப்பது கஷ்டம். விரைவில் இதனை இதை இந்திய அரசு உணரும் வாய்ப்பு வரும். அசாமியர்களை தங்களுடன் தக்கவைத்துக்கொள்ள இந்தியா, தாய்மொழி, மண் என பிராந்திய அரசியலை கையகப்படுத்த முயற்சிக்கிறது

வேறுபாடுகளை மறப்போம்! - சேட்டன் பகத்

படம்
நான் குஜராத்தில் நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நினைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஏன் இப்போது திடீரென அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. காரணம், இந்துக்கள் எரித்துக்கொல்லப்பட்ட அடுத்தடுத்த நாட்களில் முஸ்லீம்கள் அதேபோல தாக்கி கொல்லப்பட்டார்கள். இதற்கான பழி இருதரப்பிலும் போடப்பட்டது. வசைமாரி தூற்றப்பட்டது. இன்றுவரையிலும் இதற்கான காரணம் இவர், அவர் என ஆட்காட்டி விரல்கள் மாற்றி மாற்றி காட்டப்பட்டு வருகிறது. இந்த சொற்களும் ஆவேசமும் எனக்கு உறுதிப்படுத்துவது நாம் ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் ஏராளமான பிளவுகளைக் கொண்டு ஒற்றுமையாக இல்லை என்பதுதான். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை நான் நிச்சயம் ஏற்பதில்லை. சில விஷமிகள் இன்று சாப்பிடும் உணவைப் பற்றிக்கூட சர்ச்சையாக்கி ஒருவரை தாக்கி கொல்லமுடிகிறது என்றால் வெறுப்பு எப்படி தீயாக பரவுகிறது பாருங்கள். எளிமையான மேடைப்பேச்சு இதனை கிளறி விட போதுமானது. அப்படியென்றால் நமது மனதில் இதுபற்றிய கருத்தும், அதற்கான பதிலடியும் தயாராகவே இருக்கிறது. கண்ணுக்கு கண் என்ற பழிக்குப்பழி வெறி நம்மை மதம் சார்

ஜனநாயகத்தில் சீர்த்திருத்தங்கள் சாத்தியம்தான்! - சேட்டன் பகத்

படம்
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள்! முன்னால் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், ஜனநாயகத்தில் சீர்திருத்தங்கள் எளிதாக நடைபெறாது என்று கூறினார். அவர் அதை என்ன பொருளில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு என்ன காரணம் என யோசித்தால், இந்திய மக்களிடையே அரசு புதிய விஷயங்களை கொண்டு வரும்போது அதனை சந்தேகமாக பார்க்கிறார்கள். ஜிஎஸ்டி விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். காங்கிரஸ் காலத்தில் உருவாக்கப்பட்ட வரி சீர்திருத்தம் அது. ஆனால் பாஜக காலத்தில் எந்த விழிப்புணர்வுமின்றி அமலானது. இன்றுவரையிலும் வரிவிகிதங்களைப் பற்றி மக்களுக்கும் புரியவில்லை. தொழிலதிபர்களுக்கும் எப்போது வரி கட்டவேண்டும் என்பதை ஆடிட்டர்கள் சொல்லும்போதுதான் புரிந்துகொள்கின்றனர். அரவிந்த் சுப்பிரமணியன், சீர்திருத்தங்கள் அமலாக அதிக காலம் எடுப்பதை கருத்தில் கொண்டு மேற்சொன்னது போல கூறியிருக்கலாம். அது உண்மைதான். இங்கு பல்வேறு சிந்தனை அமைப்புகள் உள்ளன. வரி சீர்திருத்தம் என்பது சரி, தவறு, பாதிப்பு என்ன என்பதை முன்னரே அடையாளம் காண இதுபோன்ற அமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைவரின் குரல

மோடியை ஏன் அனைவருக்கும் பிடிக்கிறது? - சேட்டன் பகத்

படம்
நாட்டில் எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள்? ஆனால் மோடி எதிர்மறையாகவே அதிகம் பேசப்பட்டிருக்கிறார். இன்றுவரையிலும் கூட அப்படித்தான். ஆனால் அவரைத்தான் வலிமையான தலைவர்களாக மக்கள் கருதி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏன் அரவிந்த் கெஜ்ரிவால், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், அத்வானி ஆகியோரை விட மோடி பெரிய தலைவராக இருக்கிறார்? தன்னை அவர் அப்படி உருவாக்கிக் கொண்டது முக்கியமானது. மன்மோகன் சிங்கை குறைத்து மதிப்பிட முடியாது. தாராளவாத சீர்திருத்தங்களை தொண்ணூறுகளில் அமல்படுத்திய நிதி அமைச்சர், முன்னாள் பிரதமராகவும் பணியாற்றியிருக்கிறார். தான் செய்யும் வேலைகளை செய்யப்போவதை எதற்கு என்று மக்கள் முன் சொற்பொழிவாற்றியது நினைவுக்கு வருகிறதா? அப்படி ஒரு காட்சி மன்மோகனுக்கே இருக்காது. ஏனெனில் அவர் இயல்பு அதல்ல. மோடி முந்தைய பிரதமரிடம் இல்லாத அம்சங்களை கொண்டிருப்பது இங்குதான். மோடி அவரது துறைசார் அமைச்சர்கள் பேசுவதற்கு முன்னர் இவரே அறிவிப்புகளை கூறிவிடுவார். எளிமையாக பேசுவார் என்பது முக்கியமானது. குறிப்பாக, குஜராத் முதல்வராக தன்னை நிரூபித்திருக்கிறார். அதேசமயம் இந்து மக்களின்  வாக்குகளைப் பெறுவதற்கான

காலனி கால இந்தியாவில் ராஜாக்கள் யார்? -சேட்டன்பகத்

படம்
teluguone மும்பையின் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் காரில் காத்திருந்தேன். நான் மட்டுமல்ல; என்னைச்சுற்றி பல்வேறு வேலைகளுக்குச் சொல்லும் நூற்றுக் கணக்கான ஆட்கள் இருந்தனர். எதற்கு சாலையில் இத்தனை பேர் ஒன்றாக நிற்கிறோம். நாம் வாக்களித்து நம் பிரதிநிதியாக மக்கள் மன்றத்திற்கு தேர்ந்தெடுத்தோம் அல்லவா? அந்த மக்கள் பிரதிநிதி நகர்வலம் செல்கிறார். அவருக்கான விஐபி நேரத்திற்காகத்தான் மக்களான நாங்கள் போக்குவரத்து துறை மூலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். உண்மையில் எனக்கு காலனி கால இந்தியாவில் இருக்கிறோமா என்று தோன்றியது. அதில்தான் ராஜாக்களுக்கு இப்படியொரு மரியாதையை மக்கள் அளிப்பார்கள். அதாவது கட்டாயம் அளித்தாக வேண்டும். இன்றும் கேரளத்தில் பத்மநாபசுவாமி கோயிலில் குறிப்பிட்ட காலவேளையை ராஜா வணங்கும் நேரம் என்கிறார்கள். அந்தவேளையில் மக்கள் தரிசனத்திற்கு வரக்கூடாது. அங்கு காத்திருந்தவர்களில் வேலைக்குச்செல்பவர்கள், முக்கியமான சந்திப்புக்காக ஆட்டோவில் காத்திருந்தவர்கள், மருத்துவமனை செல்பவர்கள் முகத்தில் என்னவென்றே தெரியாத தவிப்பும், எரிச்சலும் படர்ந்திருந்தன. ஆனால் அவர்களிடம் இனியும் என்ன

தவறுகளை சகித்துக் கொள்ளாதீர்கள் - சேட்டன் பகத்

படம்
கோவிலுக்குள் அரசியல்வாதி ஒருவர் செருப்புடன் செல்கிறார். அங்குள்ள சிலைகளுக்கு பாக்கெட்டிலிருந்து எடுத்த சாராயத்தை அபிஷேகம் செய்கிறார். இந்தக்காட்சி உங்களுக்குள் அனல் கிளப்புகிறதா? இப்படி ஒருவர் இன்று செய்தால் அவரின் அரசியல் எழுச்சி, எதிர்காலம் அதோடு முடிந்துவிடும். காரணம், வாக்காளர்களின் நம்பிக்கைதான். ஆனால் மற்ற விஷயங்களில் நமது கவனம் எங்கிருக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.  நம் கண்ணெதிரே தொழிலதிபர்கள் கடன்களை கட்ட மறுக்கிறார்கள், அவர்களுக்கு அரசியல்வாதிகள் உதவி செய்து வல்லரசு நாடுகளில் அடைக்கலம் தேடித்தருகிறார்கள். நிழலான பல வணிக காரியங்களை தொழில் என்ற பேரில் இவர்கள் செய்கிறார்கள். இவற்றை மக்கள் நாளிதழ்களில் படித்து தெரிந்துகொண்டாலும் அமைதியாகவே இருக்கின்றனர். ஆனால் இது நல்லதல்ல. ஊழல் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டவர்களாக மாறி வருகிறார்களோ என்று தோன்றுகிறது. இதே காலத்தில்தான் ஊழல் நமக்கு பகை என்று சொல்லி அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியைப் பிடித்தார். காரணம், இயல்பாகவே நமக்கு ஊழல் மீதான கோபம் உள்ளது. ஆனால்,  அது அரசியல்வாதிகள் மீதான கோபமாக மாற்றத்தை ஏற்படுத்துவதாக

மக்களை கறைபடிந்தவர்களாக்குவது அரசியல்வாதிகளின் தந்திரம் - சேட்டன் பகத்!

படம்
டெக்கன் கிரானிக்கல் ஊழலை ஒழிப்போம்! நீங்கள் நிச்சயம் அரசு அலுவலகங்களுக்குச் சென்றிருக்கலாம். தன் வேலைகளுக்கு சம்பளமும் பெறுவார்கள். கூடவே லஞ்சமும் ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.இவர்களை நீங்கள் ஏன் இப்படி என்றால் இருக்கவே இருக்கிறது யூனியன்கள். தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவார்கள். நாம் சாப்பிடும்போதும், அல்லது சினிமா பார்க்கும்போதும், பூங்காவில் சந்திக்கும்போதும் பொது விஷயங்களை நண்பர்களுக்குள் பேசிக்கொள்கிறோம். அதில் ஊழல் மறுக்கமுடியாமல் ஒரு பகுதியாக இருக்கிறது. என்ன காரணம் என்றால் அரசியல்தான். தூய்மையான அரசியல் என்றால் உங்களது வீட்டு சிறுவன் கூட சிரிப்பான். அந்தளவு நிலைமை சீரழிய அரசியல் ஓர் முக்கியக் காரணம். மக்கள் எப்போது அரசியல்வாதியைப் பார்த்து கேள்வி கேட்பார்கள்? அவர்கள் தூய்மையாகவும் எதிராளி தூய்மையற்று இருக்கும்போதுதானே? அரசியல்வாதிகள் இதைத்தான் குறி வைக்கிறார்கள். மக்களுக்கு வாக்களிக்க பணம் கொடுப்பது முக்கியமானது. இனி எப்படி மக்கள் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் உயர்த்த முடியும்? மக்களும் எப்படியும் வெற்றி பெறுபவர் தொகுதிக்கு வரப்போவதில்லை. குறைந்த பட்ச பணம

மிட்டாய் தரும் தலைவர் வேண்டாம்! - சேட்டன் பகத்!

படம்
தேர்தல் வரும்போதுதான் பல அரசியல்கட்சிகள் நமக்கு மிட்டாய்கள் வழங்கின்றனவா, அல்லது அறிவை வளர்க்கும் புத்தகங்கள் வழங்குகின்றனவா என்று தெரியும். பல்வேறு கட்சிகளும் சாத்தியமோ இல்லையோ ஏராளமான கனவு லட்சியங்களை மக்களிடம் கூறுகின்றன. வெகுஜன ஈர்ப்புவாத பிரசாரங்களில் மக்களை கனவு காண வைக்கின்றனர். இவை சாத்தியமா என்று மக்களும் கேட்பதில்லை. அரசியல்வாதிகளும் அதனை மேற்கொண்டு ஜெயித்தபிறகு பேசுவதில்லை.  மக்களும் கனவு வாக்குறுதிகளை நம்புகின்றனர். அவை தற்காலிகமானவை என்று புரியாமல் அவற்றை கண்ணை மூடிக்கொண்டு  நம்புகின்றனர். இதன் விளைவு,  ஜனநாயகச் சீரழிவுகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்தியர்கள் கூட்டாக ஏன் வளரமுடியவில்லை. காரணம், அவர்களுடைய சாதி வெறி. பிறரை விட தன்னுடைய குழு, இனம் உயர்ந்தது என்ற எண்ணம். இதன் விளைவாக அவர்கள் தங்கள் சாதி, இனத்துக்குள்ளேயே திருமண உறவுகளை அமைக்கின்றனர். இது எப்படி இந்தியாவை வளர்ச்சி பெறச்செய்யும்? இது குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியை பெரிதும் முடக்குகிறது. அதோடு தனது மகள், மகன் இன்னொரு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள், எப்படி பிறருடன்

மோடியின் இந்தியா எப்படியிருக்கவேண்டும்? - சேட்டன் பகத்

படம்
மோடி என்ன செய்யவேண்டும்? - சேட்டன் பகத் மோடி, 2014 ஆம் ஆண்டில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு வாக்களித்த மக்கள், எதிர்கட்சிகள், அரசியல் சட்டங்கள் ஆகியவற்றையெல்லாம் தாண்டிவிட்டார் . இனி அவர் எதிர்பார்ப்பது, பயணிப்பது 2024 ஆம் ஆண்டு  நோக்கித்தான். ஏறத்தாழ அவரின் பயணம் தடங்கலற்று அவரே ஏற்படுத்திக்கொண்ட பாதையில் வேகமாக சென்று வருகிறது. அவர் ஆட்சிக்கு வந்தபோது சேட்டன் பகத் சில விஷயங்களை பரிந்துரைத்தார். வெளிநாட்டு இந்தியர்களுடன் பாஜக அரசுக்கு நல்லுறவு இருக்கிறது. அதன்மூலம் இந்தியா வளமடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை உருவாக்க முயலலாம். மன் கீ பாத்  - மனதின் குரல் போன்ற நிகழ்ச்சிகள் ஒருவழிப்பாதையாக அமையக்கூடாது. மக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளை அறிவது அவசியம். இதுவே ஜனநாயகப்பாதையில் பாஜகவை நடக்க வைக்கும். பாஜக வெற்றியடையும் அதே நேரத்தில் கட்சிக்குள்ளிருந்து இந்து மத வெறிக் கருத்துகளைக்  கேட்கிறோம். பாஜக, இந்துக்களை பெரும்பான்மைப்படுத்தினாலும் மோடிக்கு வாக்களித்தது நாட்டின் வளர்ச்சிக்காகத்தான். இதனை  அனைத்து மக்களுமே செய்தனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

மதிப்பெண்ணால் வாழ்க்கையை மதிப்பிடாதீர்கள்! சேட்டன்பகத்

படம்
பத்தாண்டுகளுக்கும் முன்பு பத்தாவது வகுப்பில் நானூறு மதிப்பெண்கள் எடுப்பது ஆச்சரியமான விஷயம். இன்று பல்வேறு மாநிலங்களில் 460 மதிப்பெண்களுக்கு மேல் லட்சக்கணக்கானோர் எடுக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் தீவிரமான மன அழுத்தத்தில் மாணவர்களைத் தள்ளுகிறது. பிற மாணவர்களை விட வேகமாக முன்னேற வேண்டும், அவர்களைத் தாண்டவேண்டும் என்ற பெற்றோரின் அழுத்தம், சமூகத்தின் தூண்டுதல் ஆகியவை மாணவர்களை நேர்த்தியை நோக்கித் தள்ளுகிறது.  இதன் விளைவாக  குறைந்த மதிப்பெண்களையும், குறைந்த கட் ஆஃப் எடுத்த மாணவர்களையும் குப்பையாக உதாசீனமாக அவர்களின் பெற்றோர் நடத்துகின்றனர்.  இவ்வளவு செலவு செய்தும் எனக்கு அது லாபம் ஈட்டித் தரவில்லை என கல்வியை தொழிலாக, முதலீடாக மதித்து பேசும் பெற்றோர்களை நான் அறிவேன். இதேகாலத்தில் இக்கட்டுரையை எழுதுபவனான நான் 76 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவன்தான். ஆனால் மதிப்பெண்கள் என்னை அளவிடும் கருவியாக நினைக்கவில்லை. அதனால்தான் பல்வேறு விஷயங்களை என்னால் முயற்சிக்க முடிந்தது. இந்தியர்கள் ஜீரோ அளவுக்கு மட்டுமே வாழ்க்கையில் ரிஸ்குகளை எதிர்பார்ப்பவர்கள்.பிராண்ட் பள்ளி, பக்கத்து வீட்டுக்காரரி

கற்ற இளைஞர்களை அவமதிக்காதீர்கள்! - சேட்டன் பகத்

படம்
அண்மையில் நான் ஓர் உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றேன். அங்கு எனக்கான ஆர்டரை நேர்த்தியாக உடையணிந்து ஆங்கிலத்தில் பேசிய இளைஞர் எடுத்தார். சுறுசுறுப்பாக வேலை செய்ததோடு, அங்கு தினசரி வருபவர்களிடம் இயல்பாக பேசினார். மறக்காமல் அவர்களின் ஆர்டர்களை எடுத்துக் கொண்டார். எனக்கு ஆச்சரியம். அவர் துல்லியமான ஆங்கில மொழியில் பேசியதுதான். இவ்வளவு மொழியறிவு கொண்டவர் இந்த உணவகத்தில் என்னதான் செய்கிறார்  என்று யோசித்தேன். பிறகு எனக்கான உணவை அளித்தபோது, அவரிடம் பேசினேன். அவரின் மாத சம்பளம் வெறும் 8 ஆயிரம் ரூபாய். இது அமெரிக்காவில் பகுதி நேரமாக பணிபுரிபவரின் ஊதியத்தை விட மிக குறைவு.  இந்தியா இன்னும் வளரும் நாடு என்ற பட்டியலில் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப்போகிறதோ என்று எனக்கு வேதனையாக இருந்தது. துல்லியமாக ஆங்கிலம் பேசுபவருக்கு இந்தியாவில் இந்த வேலைதான் கிடைக்கும் என்றால், பள்ளியில் படிப்பெதற்கு? பட்டம் எதற்கு என்று எனக்கு மனதில் ஆவேசம் கரைபுரண்டது. எனக்கு அவர் கொடுத்த உணவு கூட கசந்துபோனது. சாப்பிடவே முடியவில்லை. சமாளித்து சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டேன். புன்னகையுடன் பில்லை மேசையில் வைத்

அட்மிஷன் நேரத்து ஆபத்து! - மக்கப் மகேஷ்கள் வேண்டாம் - சேட்டன் பகத்

படம்
அட்மிஷன் நேரத்து முட்டாள்தனம்! பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் நேரம் இது. டெல்லி பல்கலைக்கழகம், சில இடங்கள் மட்டுமே அங்கு உள்ளது என்று கூறியுள்ளது. நாளிதழ்களில் நிறைய விளம்பரங்கள் இடைவிடாமல் வருகின்றன. அவற்றில் பலவும் அட்மிஷன் தங்கள் கல்லூரிகளில் நடைபெறுகிறது. விரைவீர் என தங்க நகைக்கடை போல விளம்பரங்கள் கொடுக்கின்றனர். இதனால் என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை. டெல்லி பல்கலைக்கழகம் போன்ற கல்வி அமைப்புகள் சிறிதேனும் விதிவிலக்கான முயற்சிகள் ஏதேனும் செய்யலாம். இப்போது, இரண்டு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அம்மாணவருக்கு நிறைய திறன்கள் உண்டு. என்எஸ்எஸ் அமைப்பில் இருக்கிறார். பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆர்வம் உண்டு. இவர் பள்ளியில் பெற்ற மதிப்பெண்கள் 87 சதவீதம்தான். ஆனால் இன்னொரு மாணவருக்கு இத்திறன்கள் ஏதும் கிடையாது. பள்ளிக்குச் செல்வார். அதைவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெறுகிறார். இவர்களில் யாருக்கு பல்கலையில் இடம் கிடைக்கும்? 94 சதவீதம் மதிப்பெண் எடுத்தவருக்குத்தானே.