இடுகைகள்

சிரஞ்சீவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுரத்தே இல்லாத சவால்களும், மாறுவேட குத்தாட்டங்களும்!

படம்
  சாணக்யா சபதம் சிரஞ்சீவி, விஜயசாந்தி,கோபால்ராவ் விமானநிலையத்தின் கஸ்டம்ஸ் அதாவது சுங்கத்துறை அதிகாரி சாணக்யா, கள்ளக்கடத்தல் தொழிலதிபருடன் மோதி வெல்லும் கதை.  படத்தில் பாடல்களும் அதற்கு நாயகனும் நாயகனும் ஆடினால் போதும் என்ற மனநிலையில் எடுக்கப்பட்டுள்ளது. அதைத்தாண்டி இந்த படத்தில் வேறு எந்த அம்சமும் உருப்படியாக இல்லை. சுங்கத்துறையில் வேலைக்கு வரும் முதல்நாளே நாயகியைக் காப்பாற்றி கடத்தல் செய்யப்பட்ட வைரங்களை பிடித்துக்கொடுக்கிறார் நாயகன் சாணக்யா. சுங்கத்துறையின் தலைவருக்கு கள்ளக்கடத்தல் செய்யும் தொழிலதிபர் மீது நல்ல அபிப்ராயம் உள்ளது. இதை அறிந்த சாணக்யா, தனது விசாரணையை அமைதியாக செய்யாமல் சவால் விடுவது எனது குணம். என் பெயர்தான் சாணக்யா என லூசு தனமாக ஏதோ பேசுகிறார். வில்லனிடமே இப்படி பேசி பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார். வில்லனும் சாதாரணமான ஆள் இல்லை. வில்லனின் மகன் விமானியாக உள்ளார். அதை வைத்து பொருட்களை கடத்தல் செய்கிறார். இதை விமான பணிப்பெண் சசிரேகா, கண்டுபிடித்து நாயகனுக்கு தகவல் கொடுக்கிறார். இப்படித்தான் கதை நகர்கிறது. நாயகன், வில்லனின் விமானி மகனை ஆதாரத்துடன் பிடித்து நீதிமன்றத்தில ஒ

கொலைக்குற்றவாளியாக்கப்பட்ட தங்கையின் கணவரைக் காப்பாற்ற நாயகன் செய்யும் அசகாய செயல்கள்!

படம்
  மாநகரிலோ மாயகாடு சிரஞ்சீவி, விஜயசாந்தி  சிரஞ்சீவி ஹைதராபாத்தில் சிறியளவு பிக்பாக்கெட், பணத்தை திருடும் மனிதராக வாழ்கிறார். இவருக்கென தனி திருட்டு நண்பர்கள் குழுவே உள்ளது. அவர்களுக்கு வேலை சொல்லி திருட்டை நடத்துவது சிரஞ்சீவிதான். இப்படியான அவரது வாழ்க்கையில் முக்கியமான நோக்கம், தங்கைக்கு திருமணம் செய்து வைப்பதுதான். தங்கை கிராமத்தில் வாழ்கிறாள். இந்த நிலையில் அவளுக்கு திருமணம் நடந்திருப்பதும், மாப்பிள்ளை ஹைதராபாத்திற்கு வந்திருப்பதாகவும் கிராமத்து மனிதர்கள் மூலம் தகவல் கிடைக்கிறது. ஆனால் சிரஞ்சீவி செய்யும் தவறான பொய்சாட்சியால் மாப்பிள்ளை சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை மீட்டு உண்மையை வெளியே கொண்டு வருகிறார். அது என்ன உண்மை என்பதே கதை.  படத்தில் நடக்கும் கொலை முயற்சி என்னவென்பதை பார்வையாளர்கள் முன்னமே அறிந்தாலும் அதில் உள்ள பாத்திரங்கள் அறிவதில்லை.  போலீஸ் அதிகாரி, பாசத்தால் ஈர்க்கப்பட்டு தனது கடமை, பொறுப்பை துறப்பதுதான் முக்கியமான திருப்புமுனை. ஆனாலும் கூட அவர் தான் பிடித்து வைத்திருப்பவர்களை இம்சிப்பதில்லை. தனது மகளின் வாழ்க்கையைக் காக்க நினைக்கிறார். ஆனால் அது சட்டவிரோத கும்பலுக்கு

சிபிஐ ஏஜெண்ட் வேலைக்கு பிக்பாக்கெட் ஒருவரை அவுட்சோர்சிங்கில் எடுத்து பணியாற்ற வைத்தால்..

படம்
  ஜேபுதொங்கா சிரஞ்சீவி, பானுப்ரியா, ராதா, சத்யநாராயணா பிக்பாக்கெட் ஒருவரை சிபிஐ அவருக்கே சொல்லாமல் பயன்படுத்த முயல்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை.  தீவிரவாத இயக்கம் ஒன்று, இந்தியாவை அழிக்க முயல்கிறது. சிபிஐயில் கூட ஆட்களுக்கு காசு கொடுத்து அவர்களின் செயல்களை மோப்பம் பிடிக்கிறது. இதை அறிந்த மேல்மட்ட அதிகாரிகள், பிக்பாக்கெட் ஒருவரை தங்கள் அமைப்பில் சிறப்பு அதிகாரியாக நியமித்திருப்பதாக தகவல் உருவாக்குகிறார்கள். இதில்தான் சிட்டிபாபு எனும் பிக்பாக்கெட் திருடர் மாட்டுகிறார். அவரை தீவிரவாத இயக்கம், சிபிஐ அமைப்பு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய விஷயங்களைக் கேட்கிறது. ஆனால் சிட்டிக்கு அதுபற்றி ஏதும் தெரியாது. அவரும் அவரது காதலியான திருடியும் சேர்ந்து ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். . இந்த நிலையில் சிட்டி மீது  ஒருவரைக் கொன்றதாக வழக்கு பதியப்படுகிறது. காவல்துறை, தீவிரவாத இயக்கம் இரண்டுமே சிட்டியைப் பிடிக்க முயல்கின்றன. இவர்களிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். அவள் யார், எதற்கு சிட்டி பாபுவை காப்பாற்றுகிறாள் என்பதே கதையின் முக்கியப்பகுதி.  சிட்டிபாபுவுக்கு அம்மா, திருமணமாகாத தங்கை, கால் ஊ

ஜேம்ஸ்பாண்ட் படத்தை தெலுங்குமொழியில் பட்ஜெட்டே இல்லாமல் எடுத்தால்....

படம்
  த்ரீநேத்ரா சிரஞ்சீவி, ராதா, ரேகா, விஜயசாந்தி ஜேம்ஸ்பாண்ட் படத்தை மட்டமான தயாரிப்புத் தரத்தோடு தெலுங்கு மொழியில் எடுத்தால் எப்படியிருக்கும் அதுதான் இந்தப்படம்.  படத்தில் கொஞ்சமேனும் உயிர்ப்புடன் நடித்திருப்பவர், கோபால் ராவ் என்ற நடிகர்தான். இவர்தான் பெரும்பாலான சிரஞ்சீவி படங்களில் முக்கிய வில்லனாக வருபவர். சத்ய நாராயணா நாயகனின் அப்பாவாக நடிப்பார். இதெல்லாம் அதிகம் மாறாமல் வரும் காட்சி.  வில்லன்கள் எஸ்பிஆர். க்யூ ஆகியோர் விஷவாயு ஒன்றை தயாரித்து அதை ராக்கெட் மூலம் பரப்பி இந்தியாவை அழிக்க முயல்கிறார்கள். இதை எப்படி செய்யப்போகிறார்கள் என்பதை அறிய ஏஜெண்ட் நேத்ரா முயல்கிறார். இதற்காக எஸ்பிஆரின் மகள் ஸ்வர்ண லேகாவை காதலித்து ஏமாற்ற முயல்கிறார். ஆனால் தவறுதலாக அவரின் தங்கை ஹம்ச லேகாவை காதலிக்கிறார். இதில் எஸ்பிஆர், நேத்ராவை அடையாளம் கண்டுவிடுகிறார். இருவரும் ஒருவருக்கொருவர் யார் ஜெயிப்பது என சவால்விட்டுக்கொண்டே இருக்கிறார்கள். படத்தில் இதுபோன்ற காட்சிகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன.  படத்தில் கடினமான உழைத்திருப்பவர் பாடல்காட்சிகளுக்கா உடை வடிவமைப்பாளரும், நடன இயக்குநரும்தான். வேறுயாரும் இந்தளவு

தனது குடும்பத்தை அழித்த பணக்காரரை பழிவாங்க அலையும் கல்லூரி மாணவன்!

படம்
  கைதி சிரஞ்சீவி, மாதவி ஊரில் பணக்காரரின் மகளை காதலித்து,அதன் விளைவாக அப்பா, அக்கா, இறுதியாக தனது உயிரையே இழப்பவனின் கதை.  இந்த கதை ஒருவகையில் ஆந்திரத்தில் உள்ள சாதிக்கட்டமைப்பை மறைமுகமாக வெளிக்காட்டுகிறது. சிரஞ்சீவியும், மாதவியும் ஒரே கிராமத்தை்ச சேர்ந்தவர்கள். இருவரும் நகரில் சென்று ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நடனம்,நாடகம் ஆகியவற்றில் சேர்ந்து நடித்து இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மாதவிக்கு பெரியளவில் பணம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சிரஞ்சீவிக்கோ, மாதவியின் அப்பா வீரபத்திரனிடம் அடமானம் வைத்த வீட்டை மீட்க வேண்டும். விதவை அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என நிறைய கடமைகள் உள்ளன. இதனால் படிப்பில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. மாதவிக்கு அவனை காதலிப்பது தவிர வேறு வேலையில்லை.  இந்த நிலையில் தேர்வு எழுதியபிறகு சிரஞ்சீவி தனது கிராமத்திற்கு வருகிறான். அப்படி வரும்போது பேருந்தில் வருவதாக கூறுபவனை, மாதவி தனது காரில் கிராமத்திற்கு கூட்டி வருகிறாள். இதைப் பார்த்து கிராம முன்சீப், வீரபத்திரத்திடம் தகவல் கூற அவர் சி

அப்பாவின் முன்கோபத்தால் திருடனாக மாறும் மகன் - கூண்டா - சிரஞ்சீவி, ராவ் கோபால் ராவ், ராதா

படம்
  கூண்டா  சிரஞ்சீவி, ராதா, சைகலா நாராயணா  இயக்கம் - கோதண்டராமி ரெட்டி இசை கே சக்ரவர்த்தி கொல்கத்தாவில் தொடங்கும் கதை, ஆந்திரத்தின் ஹைதராபாத்தில் முடிவடைகிறது. கொல்கத்தாவில் காளிதாஸ் என புகழ்பெற்ற நகை கொள்ளையன் தனது வளர்ப்பு தந்தையோடு வாழ்கிறான். வளர்ப்புத்தந்தைக்கு திருட்டுதான் தொழில். அதில் சாதிக்கும்படி காளிதாசுக்கு பயிற்சி கொடுக்கிறார்.அ வனும் வளர்ந்து, வளர்ப்புத்தந்தையின் வணிகத்தை பெருமளவு வளர்த்துக்கொடுக்கிறான். இந்த நிலையில் வளர்ப்புத் தந்தையின் தொழிலை யார் தொடருவது என காளிதாசுக்கும், வளர்ப்புத்தந்தையின் மருமகன் காசிராமுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதில் தோற்றுப்போகும் காசிராம் காளிதாசை கொலைசெய்ய நேரம் பார்த்து காத்திருக்கிறான். இந்தநேரத்தில் வளர்ப்புத்தந்தை விபத்து ஒன்றில் இறக்க, அங்கிருந்து கிளம்பும் காளிதாஸ் ஹைதராபாத்திற்கு வேலை தேடி வருகிறான். அ்ங்கு எஸ் பி ஒருவரை ரயில் சந்திக்கிறான். அவரை கொல்ல முயல்பவர்களை விரட்டுகிறான். பிறகு அவர் வீட்டில் தங்கி வேலை தேடுகிறான். உண்மையில் அந்த எஸ்பி யார், காளிதாசின் சிறுவயது, அவனது பெற்றோர் யார் என்பதை படம் விவரிக்கிறது.  மேற்சொன்னபடியும் கதை

பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா

படம்
  மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்.. இதுதான் ராஜாவின் மாஸ்க்.. சுபலேகா பாடல்...  கொண்டவீட்டி தொங்கா இயக்கம் கோதண்டராமி ரெட்டி கதை வசனம் பாருச்சி சகோதரர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம்.    ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான்.  ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செய்யும் வேலைக்கு ஏற்ப உடை அணிய

ஏழைகளுக்கு வழங்கிய கோவில் தான நிலத்தை அபகரிக்க நினைக்கும் பணக்கார கூட்டம் - அல்லுடு மஜாக்கா - சிரஞ்சீவி

படம்
  அல்லுடா மஜாகா சிரஞ்சீவி, ரம்பா, ரம்யா கிருஷ்ணன் கிராமத்தில் உள்ள கோயில் நிலங்களை தேட்டை போட முயலும் பெரும் பணக்காரர்களுக்கு இடையில் கிராம பஞ்சாயத்து தலைவரின் மகள் மாட்டிக்கொள்கிறாள். அவளது வாழ்க்கையைக் காப்பாற்றி, மணம் செய்துவைக்க அண்ணன் திட்டமிடுகிறான். அவனது முயற்சி சாத்தியமானதா என்பதே கதை.  படத்தின் கதைதான் சீரியசாக இருக்கும். ஆனால் காட்சிகள் எதிலும் எந்த சீரியஸ் தனமும் இருக்காது. படத்தில் சண்டைக்காட்சி நடைபெற்று முடிந்ததும், வில்லனின் ஆள் இப்போதே ஹீரோவைக் கொன்னுட்டா அப்புறம் கதையில் என்ன சுவாரசியம் இருக்கும் என்கிறார். இறுதிக்காட்சியில் அடிபட்டு உதைபடும் நாயகனின் தங்கையை மணக்கும் மாப்பிள்ளை கேமராவைப் பார்த்து இன்னும் நாயகனின் சாந்தி முகூர்த்தம் இருக்கு.. அதையும் பாருங்க என்கிறார். இறுதிக்காட்சியில் மட்டும்தான் சிரஞ்சீவி தன்னை மணக்க கொழுந்தியாளும் தயாராக இருப்பதைப் பார்த்து மிரண்டு என்ன செய்ய என்று கேமராவைப் பார்த்து பேசுகிறார். முடியலடா சாமி.  படத்தில் தொடக்க காட்சிகள் மட்டுமே சற்று ஆறுதலாக இருக்கின்றன. படத்தில் லட்சுமியின் மகள்கள் ரம்பா, ரம்யா கி வந்தபிறகு படம் எந்த திசையில் போக

அநீதி வில்லன்களை எதிர்க்கும் பொறுப்பான திருடன் - சிரஞ்சீவி, ராதா

படம்
  தொங்கா  சிரஞ்சீவி, ராதா மற்றும் பலர்  யூசுவலான பழிக்குப்பழி கதைதான். அதையே சீரியல் போல மாற்றி வள வளவென இழுத்து பிறகு சுபம் போட்டிருக்கிறார்கள்.  சிரஞ்சீவி கார்களைத் திருடுவது, பணத்தை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து கொள்ளையடிப்பது என செய்து பிழைக்கிறார். இன்னொரு விஷயம், அவர் தனது குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார். திருடர் என்றாலும் அவர் ஒரு லட்சியவாதி. திருடும் பணத்தில் தனது மெக்கானிக் நண்பனுக்கும், தனக்கு கொஞ்சம் வைத்துக்கொண்டு மீதியை அனாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுகிறார். எவ்வளவு நல்ல மனசு பாருங்க சாரே! ஊரில் இரண்டு பணக்கார ர்கள் இருக்கிறார்கள். அத்தனையும் கடத்தல், பிறரை ஏமாற்றுதல் செய்தே சம்பாதித்தது. அவர்களிடம் உள்ள சொத்துக்களை தன் பக்கம் இழுத்து அவர்களை கதறவிட நினைக்கிறார். ஏன் அப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் அதற்கான ஃபிளாஷ்பேக் சொல்லித்தானே ஆகவேண்டும். அதை முதலிலேயே சொல்லிவிடுவதால், கதையில் புதிய பாத்திரங்களைக் கொண்டு வந்து கதையை இழுக்கிறார்கள்.  வருமானவரித்துறை அதிகாரி விஸ்வநாதன், அடுத்து இன்ஸ்பெக்டர். விஸ்வநாதனை தூண்டிவிட்டுத்தான் ஊரின் இரு பணக்காரர்களையும் பீதி அடைய வைக்கி

செத்தும் பிழைத்து வந்து எதிரிகளை அடித்து நொறுக்கும் அதிசாகச நாயகன்! யமுடிக்கி மொகுடு - சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி

படம்
  யமுடிக்கி மொகுடு சிரஞ்சீவி, ராதா, விஜயசாந்தி இயக்கம் - ராஜ் பினி செட்டி தமிழில் அதிசயப்பிறவி என்ற ரஜினிகாந்த் நடித்த படம் என நினைக்கிறேன். அதைத்தான் தெலுங்கில் ரீமேக் செய்து சிரஞ்சீவி அட்டகாசமாக நடித்து படமாக்கியிருக்கிறார்கள்.  சென்னையில் வாழும் காளி என்ற ரௌடிக்கும், சட்டவிரோத தொழில் செய்யும் இரு பணக்கார ர்களுக்கும் நேரும் பிரச்னைதான் படத்தில் வரும் முதல் பகுதி. இதில் பணக்கார ர்கள் விரோதிகளாக இருந்து பிறகு நண்பர்களாகி காளியை லாரி மூலம் விபத்துக்குள்ளாக்கி கொல்கிறார்கள். பிறகு, காளியின் ஆன்மா எமலோகம் சென்று தனக்கான நீதியைப் பெற்று திரும்ப வந்து எதிரிகளை அழிப்பதுதான் கதை.  இன்னொருபுறம், கிராமத்தில் பெரும் சொத்துள்ளவரின் வாரிசு, பாலு. இவரது சித்தப்பா. அதாவது பாபாய். பாலுவை பயந்தாங்கொள்ளியாக வைத்துக்கொண்டு அவரது சொத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பாலுவின் அம்மா பெரிய வீட்டில் இருந்தாலும் வேலைக்காரி போல வேலைகளை செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் இறந்துபோன காளியின் ஆன்மா பாலுவின் உடலுக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? அதேதான். ரவுசுதான். கூடவே அப்பிராணி பாலுவுக்கு பாவாடை தாவணியில் வ

அத்தையின் கொட்டத்தை அடக்கி ஒட்டுமொத்த குடும்பத்தை ரேஷன்கார்டில் சேர்க்கும் அல்லுடு! - அத்தாக்கு மொகுடு - சிரஞ்சீவி

படம்
  அத்தாவுக்கு மொகுடு சிரஞ்சீவி, விஜயசாந்தி, பிரம்மானந்தம் இதுவும் ரஜினி நடித்த படம்தான். இதில் மாமியாரின் ஆணவத்தை மருமகன் எப்படி அடக்கி அவளின் குடும்பத்தை ஒன்றாக சேர்க்கிறான் என்பதே கதை.   படம் வெற்றி பெற்றது என்றாலும் பெரிய முரண், திருப்புமுனை என்பதெல்லாம் இல்லை. நகைச்சுவையோடு உள்ள படம். இன்று சீரியல்கள் வரிசையாக ஓடும் காலத்தில் இந்த படம் நெடுந்தொடர்களைத்தான் மீண்டும் நினைவுபடுத்துகிறது.  படத்தை தன் தோளில் தூக்கி சுமந்திருப்பது, சிரஞ்சீவிதான். படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் உள்ளது. அத்தனையிலும் தனியாக தெரியும் ஆட்கள் என்று பார்த்தால் யாருமில்லை.  இதில், விஜயசாந்தி எப்படி சிரஞ்சீவியை காதலிக்கிறார் அதாவது கல்யாண் என்ற பாத்திரத்தை என்று பார்த்தால், தலையே சுற்றிப்போகும். தன் தோழியை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று இன்னொருவருக்கு மணம் செய்விக்கிறார். இதற்காக பெண்ணின் பெற்றோரை முந்திக்கொண்டு காவல்துறையில் புகார் கொடுக்கிறார். அதில்தான், கல்யாணின் குணம் புரிந்து குற்றவுணர்வு கொண்டு காதல் வயப்படுகிறார். இந்த காட்சிகளெல்லாம் அடடா, அப்பப்பா ரகத்தில் எடுத்து வைத்திருக்கிறார்கள். விஜயசாந்தியின

கொலைப்பழியிலிருந்து தொழிலதிபரை மீட்கும் ஆட்டோ டிரைவர் ஜானி! - ரௌடி அல்லுடு - சிரஞ்சீவி, திவ்யா பாரதி, சோபனா

படம்
  ரௌடி அல்லுடு சிரஞ்சீவி, திவ்யா பாரதி, ஷோபனா Director - Ragavendra rao Music - bappi lahiri ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபர் கல்யாண். இவரது அப்பா தொழிலைத் தொடங்கி நடத்துகிறார். ஆனால் அவருடன் தொழில் கூட்டாளியாக சேரும் ஆட்களை நிறுவனத்தை  கைப்பற்றி கல்யாணை கொலைப்பழியில் சிறைக்கு அனுப்புகிறார்கள். அந்த பழியில் இருந்து கல்யாண் எப்படி தப்புகிறார், வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படத்தில் கல்யாண் பாத்திரத்திற்கு பெரிய வேலை இல்லை. ஒரே ஒரு சண்டைக்காட்சி, சோபனாவுடன் பாடல் மட்டும் பாடுகிறார். மீதி அனைத்து விஷயங்களையும் ரௌடி அல்லுடுவான பாம்பே ஆட்டோ டிரைவர் ஜானி  பார்த்துக்கொள்கிறார்.  படம் முழுக்க ஆட்டோ டிரைவரான ஜானி தான் பீடியைக் குடித்தபடி நம்மை காட்சிகளை ரசிக்கும்படி செய்கிறார். படம் சி சென்டருக்கானது. இதில் ஏ கிளாஸ் பாத்திரம் தான் கல்யாண். அவருக்கும் நாயகி சோபனாவுக்குமான இடம் படத்தில் மிக குறைவு. எண்பது சதவீதம் ஜானிக்கும் அவரது காதலியான ரேகாவுக்குமான காட்சிகளும் பாடல்களும்தான் அதிரடிக்கின்றன.  கல்யாண் தவறான கொலைக்குற்றத்தில் சிக்கிக்கொள்ள அதைப் பார்த்து அவரை மீட்க ஜானி மும்பையிலிருந்து ஆ

பெரிய அண்ணனைக் கொன்றவர்களை ஒன்றாக சேர்ந்து கொல்லும் குடும்பம்! - கேங்லீடர் - சிரஞ்சீவி, விஜயசாந்தி

படம்
                  960 × 960                         கேங் லீடர் சிரஞ்சீவி, விஜயசாந்தி, கிருஷ்ணா, ஆனந்தராஜ் இயக்கம் விஜயா பாபிநீடு இசை பப்பி லகிரி மூன்று அண்ணன் தம்பிகள். இவர்களுக்குள் உள்ள பாசமும், பின்னாளில் ஏற்படும் முரண்பாடுகளும்தான் கதை. ரகுபதி மட்டுமே ஆபீஸ் வேலைக்கு செல்பவர். ராகவன், குடிமைச் தேர்வுகளுக்காக படித்துக்கொண்டிருக்கிறார். ராஜாராம் வேறு யார் சிரஞ்சீவிதான். படித்துவிட்டு தனது கேங் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். இவர்கள் மொத்தம் ஐந்து பேர் கொண்டு குழு. இந்த குழுதான் படம் நெடுக வருகிறது. படத்தின் திருப்புமுனையே ராஜாராமின் நண்பர்கள்தான். ராஜாராமைப் பொறுத்தவரை வேலை என்பது கிடைக்கும்போது செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும் விட குடும்பம், பெருமை முக்கியம் என நினைக்கிற ஆள். ராகவனின்  தேர்வு செலவுகளுக்காக அவர் அறை ஒன்றை காலி செய்து கொடுக்க போகிறார். அங்குதான் நாயகி அறிமுகம். இவர் யாரென படத்தில் யாருமே கேட்பதில்லை. பெற்றோர் இருக்கிறார்களா, இல்லையா என்று. இறுதியில் அவரே தான் யார் என்று சொல்லுகிறார். அதுதான் முக்கியமான ட்விஸ்ட். நமக்கு அது பெரிய ஆச்சரியம் தருவதில்லை. நமக்

காதலித்த வெளிநாட்டு காதலன் அக்காவின் கணவரா? - பாவாகாரு பாகுன்னாரா - சிரஞ்சீவி, ரம்பா

படம்
                  பாவகாரு பாகுன்னாரா சிரஞ்சீவி, ரம்பா, பிரம்மானந்தம், பரேஷ் ராவல் இயக்குநர் ஜெயந்த் பானர்ஜி இசை மணி சர்மா வாக்கிங் இன் தி க்ளவுட்ஸ் கதையை எடுத்து தட்டி டிங்கரிங் பார்த்து நம்மூருக்கான மசாலாக்களை சற்று ஜாஸ்தியாக சேர்த்தால் பாவா பாகுன்னாரா படம் தயார். கதை தொடங்குவது வெளிநாடு ஒன்றில்தான். அதாவது நியூசிலாந்து. அங்குதான் ரம்பா படித்துக்கொண்டிருக்கிறார். சிரஞ்சீவி ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டார் என அவரது தோழன் புகார் செய்ய, அப்படியா என எதைப்பற்றியும் யோசிக்காமல் அடித்து உதைக்க கிளம்புகிறார் ரம்பா. அதாவது சொப்னா. அவர் அடித்து கை, காலை முறிக்க வேண்டுமென கூறியது ராஜூ என்ற மெகா ஸ்டார் சிரஞ்சீவிதான். அவர் அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வரு 1,280 × 720 கிறார் கூடவே இந்தியாவில் அனாதை ஆசிரம் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி அவர்களுக்கு உதவி வருகிறார். அறம் செய்யவும் பொருள் வேண்டுமே? அதற்குத்தான் ஹோட்டல் தொழில்..  இந்த சூழலில் சொப்னாவுக்கு ராஜூவுக்கும் காதல் வருகிறது. ராஜூ நான் இந்தியாவுக்கு போய்விட்டு வருகிறேன் என கிளம்பிவிடுகிறார். அங்கு வந்து அனாதை ஆசிரம வேலைகளை முடித்துவிட்டு பார்த்த

சிங்கம் செத்துவிட்டது - மிருகராஜூ - சிரஞ்சீவி, சிம்ரன், பிரம்மானந்தம், நாகபாபு

படம்
                   மிருகராஜூ இயக்கம் குணசேகர் படத்தின் கதை எங்கே நடக்கிறது என்று கேட்டுவிடக்கூடாது ஏதோ ஒரு கிரகத்தில் நடைபெறுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இந்த படத்திற்கும் நமக்கும் மஞ்சிதி... பழங்குடிகள் வாழும் காடு. அங்கு ரயில் செல்வதற்கான இருப்புபாதை கொண்ட பாலம் ஒன்றைக் கட்ட நினைக்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் சிங்கத்தால் கட்டுமான பொறியாளர் கொல்லப்படுகிறார். இதனால் புதிதாக அங்கு பெண் பொறியாளர் வருகிறார். ஆனால் அவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை. ஆட்கொல்லியாக மாறிவிட்ட சிங்கம்தான். எத்தனை தான் இருக்கிறது என தெரியாமலேயே வேட்டையாடுவேன் என பெண் பொறியாளர் சொல்லுகிறார். ஆனால் பழங்குடி தலைவர் காட்டுக்குள் உள்ள ராஜூ என்ற பழங்குடி ஆளை சிங்கத்தை வேட்டையாட கூட்டி வருகிறார். அவருக்கும் பெண் பொறியாளருக்கும் உள்ள தொடர்பு என்ன, சிங்கத்தை வேட்டையாடினார்களா இல்லையா என்பதே கதை. படத்தில் சிரஞ்சீவியை விட அதிக காட்சிகளில் கிராபிக்ஸ் சிங்கம் ஒன்றுதான் நடமாடுகிறது. ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. பழங்குடிகள் சிங்கத்தின் மூலம் கொல்லப்படுவதை தடுக்க ராஜூ எடுக்கும் முயற்சிகள் என்பது ஒரு கதை. அடுத

கெத்து காட்டும் அப்பா, பம்மி பதுங்கும் மகன் - அந்தாரிவாடு - தெலுங்கு - சிரஞ்சீவி, தபு, ரைமான் சென்

படம்
                  அந்தாரிவாடு சிரஞ்சீவி, ரைமா சென், தபு இந்த படம் சினிமா என்றாலும் கூட பார்க்க சன் டிவி சீரியல் போலவே இருக்கும். கவனம் படத்தில் இரண்டு சிரஞ்சீவி. ஒருவர் மென்மையானவர். இன்னொருவர் அடிதடி, சவுண்டு பார்ட்டி. அப்பா, சிரஞ்சீவி தான் அந்தாரிவாடு. இவர், கட்டிடம் கட்டும் மேஸ்திரியாக இருக்கிறார். தனது மனைவி இறந்தபிறகு, திருமணம் செய்யாமல் மகனை நல்லபடியாக வளர்த்து கல்வியில் உயர உதவுகிறார். அவரும் படித்து முடித்து டிவி ஒன்றில் ஃபேஸ் டு ஃபேஸ் எனும் நிகழ்ச்சி நடத்தும் நெறியாளராக நாட்டுக்கே அறிந்த முகமாக இருக்கிறார். இந்த நிலையில் அப்பா சிரஞ்சீவி, தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அடிதடியில் இறங்குவது வழக்கம். இப்படி மக்களுக்கு நீர் கொடுக்கும் தண்ணீர் லாரியை பார்ட்டிக்கு பயன்படுத்தும் காண்ட்ராக்டர் ஒருவரின் மகனை போட்டு சாத்து சாத்து என கனல்கண்ணன் உதவியுடன் அடிக்கிறார். இதனால் அவர்கள் கூட்டம் சிரஞ்சீவியை அதாவது கோவிந்த ராசுலுவை தாக்க திட்டம் தீட்டுகிறது. இந்த நேரத்தில் கோவிந்தராசுலுவுக்கு புதிய கட்டுமான வேலை கிடைக்கிறது. அதை கொடுப்பது, வீரேந்திரா எனும் கோவிந்தராசுலுவின் பழைய நண்பர்

சிரஞ்சீவி பேக் டூ பேக் திரைப்படங்கள் - இந்திரா, சூடாலனி உந்தி, ரிக்‌ஷாவோடு

படம்
            சிரஞ்சீவி படங்கள் பேக் டூ பேக் இந்திரா இயக்கம் பி கோபால் கதை சின்னி கிருஷ்ணா வசனம் பாருச்சி பிரதர்ஸ் பட்ஜெட் - 10 கோடி வசூல் 40 கோடி மூன்று நந்தி விருதுகளைப் பெற்ற படம் 2002ஆம் ஆண்டு காசியில் சங்கர் வாழ்ந்து வருகிறார். டாக்சி ஓட்டுவதுதான் இவருடைய தொழில். இவருக்கென தெலுங்கு பேசும் சில மனிதர்கள் உள்ளனர். டாக்சி ஓட்டுவது, படகு ஒன்றை காசிக்கு வருபவர்களுக்கென இயக்கி வருகிறார். படகை ஓட்ட ஆதரவற்ற ஒருவரை நியமித்திருக்கிறார். டாக்சியை நேர்மையாக ஓட்டி கிடைக்கும் பணத்தில் தான் தனது மாமன் மகள், மருமகன் ஆகியோரை பராமரித்து வருகிறார். மருமகளை கர்நாடக சங்கீதம் கற்பித்து பாடகியாக்கவேண்டுமென்ற கனவு சங்கருக்கு இருக்கிறது. ஆனால் மாமன் மகளுக்கோ பாட்டைக் கேட்டாலே தூங்கும் திறமைதான் இருக்கிறது. சாதாரணமாக பார்த்தாலே தெரியும். பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும் சங்கர், வாரணாசியில் என்ன செய்கிறார் என சந்தேகம் தோன்றும் சந்தேகம் சரிதான். சங்கர் தன் மாமன் மகள் பாடும் போட்டியில் அவர் தடுமாற இவர் மேடையேறி பாடுகிறார். அப்போது அவரைப் பார்த்து காதல் கொள்கிறார் பல்லவி என்ற பெண். இவர் உ.பி ஆ

கடல் தாண்டியும் பழிவாங்குவான் தெலுங்குவாடு!

படம்
              ஜெய் சிரஞ்சீவா சிரஞ்சீவி, பூமிகா சாவ்லா, சமீரா ரெட்டி     தனது தங்கை மகளை துப்பாக்கியை சுட்டு காண்பிக்கும் முறையில் கொல்லும் தீவிரவாத அமைப்பு தலைவனை தீர்த்துக்கட்டும் கிராமத்து விவசாயியின் கதை.  படத்தில் சிரஞ்சீவி, கிராமத்து விவசாயியாக வருகிறார். டிராக்டர் ஓட்டுகிறார். தங்கை பிள்ளையை கொஞ்சுகிறார். அதேவேகத்தில் அந்த சந்தோஷம் தொலைந்துபோக அதற்கு காரணமானவர்களை போட்டு பொளக்கிறார். இதுதான் கதை. இதற்குள் சிரஞ்சீவி இரண்டு பெண்களை காதலித்து அவர்களுடன் நிறைய பாடல்களை ஆடிப்பாடிமகிழ்விக்கிறார். கூடவே வேணு வேறு இருக்கிறார். காமெடிக்கு கேட்கவா வேண்டும்.  தொடக்க காட்சியில் அதிரடியாக இளம்பெண் ஒருவரை குழு வல்லுறவு பிரச்னையிலிருந்து அடி உதை மூலம் மீட்டு என்ட்ரி கொடுக்கிறார் ஆந்திரப் பிரதேச சூப்பர் ஸ்டார். பிறகுதான் ஹைதராபாத்திற்கு காப்பு கட்டுமளவு ரவுடிகளை அடித்து பிளக்கிறார். படத்தின் இறுதிவரை அவர் தனது தங்கை பிள்ளைக்காக மட்டுமே பழிவாங்குகிறார். வில்லனின் தீவிரவாத செயல்கள் மூலம் நிறையப் பேர் பாதிக்கப்படுவதை அழிவதைப் பற்றியெல்லாம் இயக்குநரும் கவலைப்படவில்லை. எனவே சிரஞ்சீவியும் கவலைப்படவில்