இடுகைகள்

கே.என்.சிவராமன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குருநாதரின் ஸ்பீடையும், ஸ்டாமினாவையும் நெருங்கவோ, மேட்ச் செய்யவோ முடியாது! கடிதங்கள் - கதிரவன்

படம்
  எனது ஆசான் திரு. கே.என்.சிவராமன் 21.10.2021 அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அப்பா, அம்மாவின் நலனை விசாரித்ததாக சொல்லுங்கள். நவ.1 இல் அரசு சொன்னபடி பள்ளி தொடங்கினால், எங்கள் மாணவர் இதழ் 15ஆம் தேதி தொடங்கும் என நினைக்கிறேன்.  பிரன்ட்லைன் இதழ்களுக்கு கட்டிய சந்தா இன்னும் இரு இதழ்களோடு முடிவுக்கு வருகிறது. இதில் வரும் கட்டுரைகள் படிக்க நிறைய தகவல்களோடு உள்ளன. எல்லாமே ஆழமாக கருத்துகளை கொண்டவரை. படிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இதழ் இதுவே. டி.கே. ராஜலட்சுமி என்ற கட்டுரையாளர் எனக்கு பிடித்தமானவர். எழுதும் கட்டுரைகளில் தனது மனிதநேயம், அக்கறையை எப்படியாவது சொல்லிவிடுகிறார்.  இப்போது ரெடிமேட் சட்டைதான் அணிகிறேன். ஃபேஷன் கம்போர்ட் என்ற கடையின் உடைகள் எனக்கு பொருத்தமாக இருக்கின்றன. அங்கு தான் 1450 ரூபாய்க்கு சட்டை, பேண்ட் வாங்கினேன்.  காலை எட்டு மணிக்கு ஆபீஸ் போய்விடுகிறேன். இதனை ஆசான் கேஎன்எஸ்சிடமிருந்து கற்றது. இப்போது ஆசான் என்னையும் மிஞ்சி ஏழுமணிக்கு ஆபீசுக்கு வந்துவிடுகிறார். இப்போதும் அவரின் உழைப்பு ஒரு அடி முன்னாடி தான் இருக்கிறது. வேகத்த

எழுத்து என்பது நம்பிக்கையின் செயல்! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன்  அன்புள்ள முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  எனது மடிக்கணினி பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ய லினக்ஸ் தெரிந்த ஆட்களிடம் கொடுத்திருக்கிறேன். கணினியில் 60 பக்கம் எழுதிய நூல் இருந்தது. அதுவும் மெல்ல அழிந்துபோய்விட்டது. கணினியின் இயக்கமும் பாதிக்கப்பட்டுவிட்டது. இப்படி ஒருபோதும் நடந்ததே இல்லை என லினக்ஸ் நண்பர் சீனிவாசன் சத்தியம் செய்தார். என்னவென்று, எனக்கும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டேன். மேன்ஷனில் ஆட்கள் அதிகரித்துவிட்டதால், இப்போது கடையில்தான் சாப்பிடுகிறேன்.   வேலைப்பளுவில் சமைப்பதும் கடினமாகிவருகிறது. தாரகை - ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவலை 150 பக்கங்கள் படித்துவிட்டேன். கதை, அமெரிக்காவில் நடைபெறுகிறது. ட்ரேஸி என்ற பெண் எப்படி தன் அம்மா தற்கொலை செய்யக்கார ணமானவர்களை பழிவாங்குகிறார் என்பதே கதை.  படித்தவரை மேற்குலக நகரக் கதை என்றாலும் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். அலுவலகத்தில் கிறிஸ்மஸிற்கு விடுமுறை கிடையாது என கூறிவிட்டார்கள்.  நன்றி! அன்பரசு 24.12.2021 ---------------------------- எழுத்தாளர் இசபெல் அலண்டே அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம்.  நலம

நுட்பமான கதாபாத்திர விவரிப்புகளைக் கொண்ட நகுலனின் கதைகள்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.   எங்கள் நாளிதழுக்கான பதிப்பக வேலைகளை செய்து வருகிறேன். கூட்டுறவு வங்கி பற்றிய தகவல்களை சேகரித்து எழுதி வருகிறேன். ஐந்து வாரங்களில் மினி தொடராக எழுதியதை தொகுத்து பத்து அத்தியாயங்களாக மாற்றியுள்ளேன். தினசரி இதழுக்கான இலக்கணம், பதிப்பக நூலுக்கான இலக்கணம் என்பதை ஒன்றாக வைத்துக்கொள்வதா, தனியாக உருவாக்கிக்கொள்வதா என்பதில் குழப்பம் உள்ளது. வறட்சியான மொழியில் எழுதி நூல்களை எப்படி விற்பனை செய்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இப்படியே நூல்களை தொகுத்தால் இன்னும் சில தொடர்களை விரிவாக்கலாம். ஆனால் அதன் வடிவங்களை நிறைய மாற்றவேண்டும்.  மயிலாப்பூர் காரணீஸ்வர் கோயில் அருகே எப்போதும் தட்டடைதான் வாங்குவேன். ஆனால் இன்று அங்கு முத்து மாரியம்மன் என்ற பழைய புத்தக கடையைப் பார்த்தேன். நகுலன் கதைகள் - காவ்யா பிரசுரம் வைத்திருந்தார் கடைக்காரர். விலையைக் கேட்டதற்கு காவ்யா ஓனரே கண்முன் நிற்பது போல நூலை புரட்டிப் பார்த்துவிட்டு நாற்பது ரூபாய் என்றார். அவரது உடல்மொழி இருக்கிறதே அபாரம்....  நகுலனின் கதைகளை முன்னர் திரு

விலையை குறைக்கவே குறைக்காத புத்தகக் கடை! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். இப்போதுதான் வடபழனி சென்று வந்தேன். ஃபோரம் விஜயா மாலில் உள்ள கிராஸ்வேர்ட் கடைக்கு சென்றேன். அங்கு ஷோபாடே எழுதிய கட்டுரை நூலை வாங்கினேன். 2008இல் வந்த நூலைக் கூட விலை குறைக்காமல் விற்கும் துணிச்சலான நிறுவனம். இன்னும் கொஞ்சநாளில் நூல்களை விட ஃபேன்சி பொருட்களை விற்கத் தொடங்கிவிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. நூல்களின் எண்ணிக்கைக்கு சமமாக பேக்குகள், பேனாக்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளன.  இந்த வாரம் முழுக்க எந்த நூலையும் ஆர்வமாக படிக்க முடியவில்லை. எ மிராக்கிள் என்ற துருக்கி தொடரை எம்எக்ஸ் பிளேயர் ஆப்பில் பார்த்தேன். இந்த தொடர் தென்கொரிய தொடரான குட் டாக்டரின் ரீமேக்தான். துருக்கியில் அதனைப் பார்ப்பதற்கு முக்கியமான காரணம், அதன் நாயகனாக நடித்து ஆட்டிச பாதிப்பை நமக்கு புரிய வைத்துள்ளார். நிறைய காட்சிகளில் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. புனைவுதான். ஆட்டிச பாதிப்பை கட்டுப்படுத்தி நல்ல அறுவை சிகிச்சை நிபுணராக மாறினார் என்பதே கதை. தரவிறக்கி வைத்துள்ள கட்டுரை நூல்களை படிக்கவேண்டும் என நினைக்கிறேன். விரைவி

முழங்காலில் வழியாக உடலெங்கும் பாயும் மின்சாரம்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  அம்மா மற்றும் தங்களின் நலம் நாடுகிறேன். இந்த வாரம் நோய்களின் வாரம் என்றே சொல்லவேண்டும். ஆண்டுக்காக கண் பரிசோதனைக்கு ஆழ்வார்பேட்டைக்கு சென்றேன். அங்குள்ள உதி அறக்கட்டளை நடத்தும் உதி மருத்துவமனையில் சில ஆண்டுகளாக சோதனை செய்து வருகிறேன். கண்கள் வறண்டு வருகிறது. சில ஆண்டுகளில் காட்சியைப் பார்க்கும்போது மின்னல் வெட்டு, கரும்புள்ளி தோன்றினால் உடனே மருத்துவமனைக்கு வந்துவிடுங்கள் ஷெரின் ரவீந்திரன் கூறினார். இதில் பெண் மருத்துவரான அன்பரசி கூறியதும் சோதித்ததும் எனக்கு திருப்தியாக இல்லை. இவர் மருத்துவமனையில் உள்ள லேசிக், கான்டாக்ட் லென்ஸ் திட்டங்களை ஒப்பித்தார். மற்றபடி கண்களில் உள்ள பவர், மூன்று ஆண்டுகளாக அப்படியே தொடர்கிறது.  மருத்துவமனை போய்விட்டு வரும்போது எங்கு கால்களை ஊன்றினேனோ, கால் தசை பிசகிவிட்டது. முழங்காலில் மின்சாரம் பாய்வது போன்று வலி கடுமையாக இருக்கிறது. ஆபீசிற்கு காலை நொண்டிக்கொண்டுதான் சென்று வந்தேன். மயிலாப்பூரில் உள்ள சம்பத் மருத்துவமனைக்கு சென்றேன். வர்த்தமான் என்ற வட இந்திய மருத்துவர்தான் எனக்கு சிகிச்சை அளித்தார். மரு

உரையாடல்களை சிறப்பாக அமைத்த கு.ப.ரா! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நான்கு மாதங்களுக்குப் பிறகு உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. பள்ளி தொடங்கியதும் எங்களுக்கு தினசரி வேலைகளின் அழுத்தம் கூடிவிடும்.நாங்கள் செய்து வரும் நூல்களின் தொகுப்பு வேலைகள் படு சுணக்கமாகவே நகருகின்றன. தினசரியில் தொடர்கள் எழுதக்கூடாது என்பது பொறுப்பாசிரியரின் உத்தரவு. இதனால் நூல்களை புதிதாக எழுதி தொகுக்கவேண்டியுள்ளது. இதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. நூல்களை விற்பதற்கு ஏற்ப தயாரிக்க அதிக மெனக்கெடல் தேவை. பல நல்ல ஐடியாக்களை கூட தினசரி இதழில் அதிக தூரம் பயன்படுத்த முடியவில்லை.  ஒருவகையில் அதனை அந்தளவேனும் பயன்படுத்த முடிகிறது என்பதே மகிழ்ச்சிதான். நேருவின் போராட்டகால சிந்தனைகளில் விடுபட்ட சில அத்தியாயங்களைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். கு.ப.ராவின் வேரோட்டம் என்ற குறுநாவலைப் படித்தேன். கதையை நகர்த்திச்செல்லும் கருவியாக உரையாடல்கள் நன்றாக அமைந்துள்ளன.  பொதுமுடக்க காலத்தில் கிடைத்த நேரத்தில் அசுரகுலம் குற்றங்களின் பின்னணி பற்றிய நூலை மட்டுமே எழுத முடிந்தது. மருத்துவம் தொடர்பாக ஏதாவது நூல்களைப் படிக்கவேண்டும். விரைவில் இந்த ஆண்டிற

அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் மனநிலையைச் சொன்ன நாவல்! - கடிதங்கள்

படம்
  ஒன்றிய அரசு விருது பெற்ற எழுத்தாளர் பாலபாரதி மதிப்பிற்குரிய ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு, வணக்கம்.  நலமா? தேர்தல் முடிந்தபிறகு ஊரில் சென்று வேலை செய்வேன் என்று நினைக்கிறேன். வங்கியில் சில வேலைகள் பாக்கி உள்ளன. நேருவின் நூலில் மக்கள் உரிமைகள், பண்பாடு, மதம் என இருபகுதிகளைப் படித்து முடித்துள்ளேன். மொழிபெயர்ப்பு நா.தர்மராஜன். வாசிக்க தட்டாமல் சரளமாக உள்ளது. நான் எழுதுவதிலும் இந்த ஒழுங்கைக் கொண்டு வரவேண்டும்.  பாலபாரதி சார் மயிலாப்பூர் வந்தபோது என்னை அழைத்தார். பஜார் தெருவில் மோர் மார்க்கெட் அருகே சந்தித்தோம். அவரோடு கனியும் வந்திருந்தான். ஃபேஸ்புக்கில் தினமொரு அத்தியாயம் என்று எழுதிய மந்திரச்சந்திப்பை நூலாக்கிவிட்டார். அவர் அதனை நூலாக தொகுத்தபோதே படித்துவிட்டேன். நூலைக் கொடுத்தவர், அதற்கு பணம் கொடுத்தபோது வேண்டாம் என மறுத்துவிட்டார். அவரே வேண்டாம் என்ற போது கட்டாயப்படுத்தவேண்டாம் என நானும் விட்டுவிட்டேன். மார்வெல் யுனிவர்ஸ் போல அவர் இதுவரை எழுதிய நாவல்களிலுள்ள பாத்திரங்கள் மந்திரச்சந்திப்பு நாவலில் சந்தித்து உரையாடுகின்றன. இதுதான் இந்த நாவலின் முக்கியமான அம்சம். வாசிக்க நன்றாக

மதம், வகுப்புவாத கருத்துக்களைப் பற்றி உறுதியாக இருந்த நேரு! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? கடந்த 25ஆம் தேதி முதல் நாங்கள் வேலை செய்த நாளிதழ் பதிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. திங்கள் மட்டும்தான் இதழ் வெளியாகும். அதற்கான வேலைகளை செய்து தரவேண்டும்.  எம்எக்ஸ் பிளேயரில், லிமிட்லெஸ் என்ற வெப்தொடரைப் பார்த்தேன். மூளையை சுறுசுறுப்பாக்கி அதன் சக்தியைக் கொண்டு குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒருவரின் கதை. வேலை இல்லாமல் கஷ்டப்படும் இளைஞனுக்கு இந்த மாத்திரை கிடைக்கிறது. கூடவே இதனைத் தயாரித்து விற்கும் மாபியா தலைவனின் பகையும் போனஸ். இப்பிரச்னைகளைச் சமாளித்து கொலைப்பழியிலிருந்து தப்பி காவல்துறைக்கு உதவத் தொடங்குகிறான்.  அவனுக்கு பக்கபலமாக பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் இருக்கிறார். நாயகன், மூளையை உசுப்பும் மருந்தின் பக்கவிளைவுகளை தடுக்கும் மாற்று மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடவில்லை என்றால் கண்ணில் கற்பனைக் காட்சிகள் தோன்றும், உடல் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள். காமெடியில் அசத்தியிருந்தார்கள். குடும்பம், காதல், நட்பு, துரோகம், அரசியல் பழிக்குப்பழி என நிறைய விஷயங்களை சொல்ல முயன்றிருந்தார்கள். பரபரவென தொடர் பற

விகாரமான தோலும் உடைந்த மனதும்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம். நலமாக உள்ளீர்களா? இந்த வார குங்குமத்தை ஈரோட்டில்தான் வாங்கினேன். சக்தி சாரின் ஃபேமில் ட்ரீ தொடரை முன்னதாகவே படித்தேன். சிறப்பாக எழுதி வருகிறார். நாணயம் விகடனில் வேலை பார்த்த அனுபவம் உதவுகிறது என நினைக்கிறேன்.  சென்னை, காலைக்கதிர் நாளிதழில் வேலை பார்த்த வீடியோ பிரிவினரில் ஆறு பேருக்கு கொரோனா வந்துவிட்டது. எங்களுக்கு இன்னும் வீட்டிலேயே பணி செய்யும் ஆணை வரவில்லை. அப்படி கொடுத்தால் அலுவலகத்திற்கு புறநகரிலிருந்து வரும் நேரம் நிறைய மிச்சமாகும். உற்பத்தி திறனும் கூடும். இதில் எங்களது ஆசிரியருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம்.  ஒவ்வாமை பிரச்னை இருப்பதால் கொரோனாவிற்கான தடுப்பூசியை நான் போட்டுக்கொள்ள முடியாது. ஊசி தூண்டிவிட்டால் மீண்டும் எனது முழு உடலும் தோல் உரிந்து எரிச்சல் தொடங்கிவிடும். முகமெல்லாம் கொப்புளங்கள் வெடித்து விகாரமாக மாறிவிடும். ஊருக்கு சென்று வந்ததில் அம்மாவுக்கு சித்த மருந்துகளை வாங்கிக் கொடுத்துவிட்டு வந்ததுதான் உருப்படியான விஷயம். மற்றபடி நானும் ரூ.2 ஆயிரத்திற்கு மருந்துகள் வாங்கிக்கொண்டேன். எஸ்கேஎம் மருத்துவமனையில்

பெண்களால் ஓரம்கட்டப்பட்ட டேஞ்சர் டயாபாலிக்! கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியர் கே.என். சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம். வரும் வெள்ளி ஊருக்கு சென்று மருந்துகள் வாங்க வேண்டியிருக்கிறது. தாய்மாமன்களில் நடுமாமன் தார்ச்சு கட்டிடம் கட்டிவிட்டார். இது கூட தாமதமான முயற்சிதான். புதுமனை புகுவிழா நடத்த அழைப்பு விடுத்தார்கள். ஆனால் என்னால் போகமுடியவில்லை. எங்கள் குடும்பத்தினர் செல்வார்கள்.  துரோகம் ஒரு தொடர்கதை காமிக்ஸ் படித்தேன். டேஞ்சர் டயபாலிக் கௌரவ தோற்றத்தில் வரும் காமிக்ஸ் என்று சொல்லலாம். இதில் கோரா, ஈவா என்ற இருபெண்கள்தான் கதையை நகர்த்தி செல்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் கதை சலிப்பாகிவிடுகிறது.  உறவுப்பாலம் என்று இலங்கை சிறுகதைத் தொகுப்பை படித்து வருகிறேன். எட்டு சிங்களச்சிறுகதைகளில் மூன்று நன்றாக இருக்கிறது. மறுபடியும், அக்கா,  இன்று என் மகன் வீடு வருகிறான் ஆகிய கதைகள் எனக்கு பிடித்திருந்தன. இன்று என் மகன் வீடு வருகிறான் கதை, காவல்துறையால் பிடிக்கப்பட்டு காவல்நிலையத்திற்கு சென்ற மகன் திரும்ப வருவான் என கல்லூரி வாசலில் காத்திருக்கும் தாய் பற்றிய கதை. இந்த மையம் வழியாக தாயின் மகன் என்ன செய்தான், அதற்கு அரசு எடுத்த நடவடிக்கை ஆகியவற்றை சிறுகதையில்

பிடித்திருக்கிறது என்பதற்கான உடனே நூலை வாங்கினால் கஷ்டம்! - கடிதங்கள்

படம்
  அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். லைபாக்லை ஆன்ட்டி வடகிழக்கு சிறுகதைகள் தொகுப்பு படித்தேன். மொழிபெயர்ப்பும் தொகுப்பும் சுப்பாராவ். நூலை வாங்கி படித்துக் கொண்டிருந்தபோது, அலுவலக நண்பர் பாலபாரதியிடம்  எழுத்தாளர் பற்றிக் கேட்டேன். அவர்,  சுப்பாராவ் சரியான மொழிபெயர்ப்பாளர் கிடையாது என்று சொன்னார். கூகுள் ட்ரான்ஸ்லேட் வழியாக அவர் மொழிபெயர்த்த நூல் ஒன்றை வாங்கி படாதபாடு பட்டதாக கூறினார்.  தொழில்நுட்பத்தை தனது வேலைக்காக பயன்படுத்திக்கொள்கிறார் போல என்று நினைத்துக்கொண்டேன். புதிய புத்தகம் பேசுது இதழில் நூல்களைப் பற்றி சுப்பாராவ் எழுதுவதை சில ஆண்டுகளாக நூலகத்தில் படித்திருக்கிறேன்.  வடகிழக்கு தொடர்பான கதைகளை படிக்கவேண்டும் என நினைத்து புத்தக கண்காட்சியில் சுப்பாராவின் நூலை வாங்கினேன். மொத்தம் பதினான்கு கதைகள் இருந்தது. அதில் நான்கு கதைகள் மட்டுமே மாநிலத்திலுள்ள மக்களின் தன்மையை, பிரச்னையை, அரசியல் சிக்கல்களை பேசும்படி இருந்தது.  பிடித்திருக்கிறது என்ற காரணத்திற்காக உடனே நூலை வாங்கக் கூடாது என்பதற்கு லைபாக்லை ஆன்ட்டி சரியான உதாரணம்.  எலிஸா பே எழுதிய இந்தி

மக்களுக்காக போராடி அவர்களின் தலைவரான பெண்மணி! - கடிதங்கள்

படம்
  newslaundry அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? மம்தா பற்றிய நூலை படித்து முடித்துவிட்டேன்.  மம்தா பிறந்து வளர்ந்த சூழல், கல்லூரி கால மாணவி, பின்னாளில் தலைவராவது, போராட்டங்கள், அரசியல் கட்சி தொடங்கிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்  என பல்வேறு விஷயங்களை புள்ளிவிவரங்களோடு நூலாசிரியர் எழுதியுள்ளார். மம்தாவே தனது பணிகளைப் பற்றி எழுதியுள்ள நூலை வாங்கியிருக்கலாம் என தாமதமாக நினைத்தேன். வாய்ப்பு கிடைத்தால் அதனை ஆன்லைனில் தான் வாங்க வேண்டும். அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, அதிமுக கட்சியை ஒத்துள்ளதாக படுகிறது. இளமைப் பருவம், அரசியலுக்குள் மம்தா நுழைவது, அரசுக்கு எதிரான போராட்டம் ஆகிய பகுதிகள் படிக்க சுவாரசியமாக இருந்தன. உணர்ச்சிகரமாக மக்களுக்காக போராடியவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானது பெரிய சாதனைதான். தாயிடம் குழந்தை கவன ஈர்ப்பிற்காக சில விஷயங்களை செய்யும் இல்லையா? அதுபோல குணம் கொண்டவர்களை சமாளிப்பது கடினமாக இருக்கிறது. நீங்கள் கூறியபடி அனைவரையும் நண்பர்களாக்கிக் கொள்வது எனக்கு சாத்தியமாக தோன்றவில்லை. காலையில் குட்மார்னிங் சொல்லவில்லை என்று எனது அலுவலக சகா கோபப்படு

மனிதர்கள் இறந்துவிடுவார்கள் ஆனால் பணம் சாசுவதமானது! - கடிதங்கள்

படம்
  15.2.2021 அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம்.  நலமாக இருக்க இறையைப் பிரார்த்திக்கிறேன். ஊரில் இருக்கும்போது சொந்தக்காரர்களின் வீட்டுக்குச் சென்றேன்.  கிடையில் விழுந்துவிட்ட டெய்லர் மாமா, சித்தப்பா வீட்டு ஆத்தா ஆகிய இருவரையும் நேரில் சென்று பார்த்தேன்.  ஆத்தாவுக்கு இடுப்பில் வலுவில்லை. கால்கள் வலுவில்லாத நிலையில் கண்களில் மட்டும் ஒளி தெரிந்தது. தன்னைப் பார்க்க வந்தவர்கள் மிகவும் பிரயத்தனம் செய்து அடையாளம் கண்டனர். கிளம்பும்போது கையெடுத்து கும்பிட்டதை மறக்கவே முடியாது. திரும்ப அவர்களது இறப்பிற்கு நான் ஊருக்கு வரமாட்டேன் என்று நினைக்கிறேன்.  நினைவுகள் மங்கி, யாரென்றே தெரியாத நிலையில் ஒருவரைப் பார்த்து இறைஞ்சுவது போல கையெடுத்து கும்பிடும் நிலை பரிதாபமாக இருக்கிறது. இன்னொரு மரணத்தைப் பற்றி சொல்லவேண்டும். பெரிய மாமன் கந்தசாமி, பிரஷர் கூடி மாரடைப்பு வந்து செத்துப்போனார். ஆடு மேய்க்கப்போனபோது நெஞ்சுவலி வந்து இறந்துபோயிருக்கிறார். அவரது வீட்டிலுள்ள மனைவி, மகன்கள் என எல்லோருக்குமே தேவையானதை செய்துவிட்டார். எனவே, அவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.  25 ஆண்டுகளாக அவரது தங்கையான எனது அம்மாவிடம் ஒருவ

எழுதுவதில் வேகத்தோடு தரமும் முக்கியம்! - கடிதங்கள் 2021

படம்
  13.2.2021 அன்புள்ள ஆசிரியர் கே.என்.சிவராமன் அவர்களுக்கு,  வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? 14ஆம் தேதி சந்திப்பிற்காக பலகாரம் வாங்கி வைத்திருந்தேன். உங்களுக்கு முன்னமே குறுஞ்செய்தி அனுப்பியது நல்லதாகிவிட்டது. ஆபீசில் வேலைக்கு வந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டது. திரும்ப மென்பொருட்கள் பிரச்னை, பாஸ்வேர்டுகள், கட்டுரைகளை எழுதுவது, டெட்லைன் சிக்கல்கள் என வந்துகொண்டிருக்கின்றன. கோ ஆர்டினேட்டராக வேலைகளை ஒருங்கிணைத்தபோதும் எழுதவே நினைத்திருக்கிறேன். இறை அருளால் பத்து மாதத்திற்குப் பிறகு அந்த பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டது நிம்மதியாக இருக்கிறது. இனி எழுத்தை கவனிக்கலாம். கட்டுரை எழுதுவதை விட அதனை செம்மையாக்குவதற்கு இன்னும் மெனக்கெட வேண்டும் என்பதை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளேன். பாலபாரதி சார், உன்னுடைய எழுத்து இன்னும் கொஞ்சம் கூட மாறவேயில்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லிவிட்டார். எனவே தற்போது எழுதிவரும் கட்டுரைகளில் பத்திகளுக்கு இடையில் தொடர்பிருக்கிறதா என்று சரிபார்த்து வருகிறேன். இந்த நேரத்தில் நான் எழுதிய அரைகுறை ஐடியாக்களைக் கொண்ட கட்டுரைகளை பதிப்பித்த உங்கள் நினைவுகூர்கிறேன். நன்றி சார்.  என

பறவையால் அழகாகிறது வானம்! - கடிதங்கள்

படம்
           பறவையால் அழகாகிறது வானம்!   அன்பு நண்பர் சபாவுக்கு , வணக்கம் . நான் செனைனக்கு வந்துவிட்டேன் . பள்ளிகள் தொடங்கிவிட்டதால் , மாணவர்கள் பஸ்ஸில் தொங்கியபடி செல்லும் காட்சிகளை இனி பார்க்க முடியும் என நினைக்கிறேன் . அறை முழுக்க தூசு காற்று போல நிரம்பியிருந்தது . வாடகைப்பணத்தைக் கொடுத்துவிட்டேன் . படிக்க வேண்டிய நூலாக நேரு எனக்காக இன்னும் காத்திருக்கிறார் . அதனை இப்போதுதான் மெல்ல படிக்கத் தொடங்கியுள்ளேன் . வரும் திங்கள் முதல் அலுவலகம் தொடங்கவிருக்கிறது . வேலைகள் நெருக்கும் என்று நினைக்கிறேன் . ஆசிரியர் சிவராமன் வீட்டுக்கு போகவேண்டும் என நினைத்துள்ளேன் . இந்த பிறந்தநாளுக்கு அவர் வீட்டிற்கு செல்ல நினைத்தே்ன் . ஆனால் பல்வேறு சிக்கல்களால் அதனை சாத்தியப்படுத்த முடியவில்லை . அதற்காக கடிதம் ஒன்றை எழுதி அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பினேன் . மனிதர் பதறிப்போய் போனில் அழைத்து என்னாச்சு என்று கேட்டார் . அவரைப்பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதை உணர்ச்சிகரமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன் . பிறகு எப்போதுதான் இதனை சொல்லுவது ? அவர் கொடுத்த ஊக்கம்தான் எனக்கு என்மேல் நம்பிக