இடுகைகள்

ரேடியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினோதரச மஞ்சரி - ரேடியோ தகவல்தொடர்பு, கனிமங்களின் வகைகள்

படம்
ரேடியோ தகவல் தொடர்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தகவல்தொடர்பு மெதுவாக நடைபெற்று வந்தது. பிறகுதான் ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டன. மின்காந்த அலைகளில் ரேடியோ அலையும் ஒன்று.இதன்மூலம் தொலைவிலுள்ள ஒருவருக்கு எளிதாக தகவல் அனுப்பி, பதிலைப் பெறமுடியும். இதற்கு உதவுவதுதான் டிரான்ஸ்சீவர் (Transceiver).இதில் உள்ள ஆன்டெனா மூலம் சிக்னல்களைப் பெற்று பதில் அனுப்ப முடியும். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரீசிவர் என இரு பணிகளையும் தனது பெயருக்கு ஏற்ப டிரான்ஸ்சீவர் கருவி செய்கிறது.  மலையேறும் வீரர்கள், டிரான்ஸ்சீவரைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் மலையேற்றக் குழுவில் யாராவது விபத்து காரணமாக காணாமல் போனாலும், கருவியில் உள்ள சிக்னல் மூலம் எளிதாக கண்டுபிடிக்க மீட்க முடியும். போக்குவரத்திற்கு பயன்படும் காருக்கான ஸ்மார்ட் கீ, ரேடியோ அலை மூலமே இயங்குகிறது. இதன்மூலம் காரின் கதவுகளை திறப்பது, மூடுவது, காரின் இஞ்சினை ஆன் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.  2 போர்னைட் (Bornite) இயற்கையில் கிடைக்கும் வண்ணமயமான கனிமங்களில் இதுவும் ஒன்று. போர்னைட், செம்பு மற்றும் இரும்பு கொண்ட சல்பைட் வடிவம். இதற்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த  கனி

விமானங்களின் தொழில்நுட்பத்தை 5 ஜி சேவை பாதிக்குமா?

படம்
  விமான சேவையை பாதிக்கிறதா 5 G? அமெரிக்காவில் 5 ஜி தொலைத்தொடர்பு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது, விமானங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுத்தும் என விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் கருதியது. இது பற்றிய அறிவுறுத்தலை, விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு விடுத்தது. இதன் காரணமாக ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.  பயம் ஏன்? அமெரிக்காவில் உள்ள வெரிஸோன், ஏடி அண்ட் டி ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள், சி பேண்ட் அலைவரிசையிலான 5 ஜி சேவையைத் தொடங்கியுள்ளன.  இதன்விளைவாக விமானங்களில் தரையிறங்க, உயரத்தைக் கணிக்கப் பயன்படுத்தும் ரேடியோ அல்டிமீட்டர், பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என அமெரிக்க அரசின் வான்வழி போக்குவரத்து முகமை (FAA) எச்சரித்தது. எனவே, பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி, பயணத்திட்டத்தை மாற்றின.   பெரும்பாலான விமான சேவை நிறுவனங்கள் போயிங் 777 என்ற விமானத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இதன் சிக்னல்களை 5 ஜி சேவை,  இடைமறித்து பாதிக்கும் என பலரும் அச்சப்பட்டு வருகின்றனர். இதனால் போஸ்டன், சிகாகோ நகரங்களுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. லாஸ் ஏஞ

பிற நாட்டினரை காப்பதே நமது முதல் குறிக்கோள்!

படம்
  பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்! எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே,  பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை எதிர்க்க  அரசு நடத்திய யாகங்கள், பூஜைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி நிகழ்ச்சிகள் நடந்து அதன்மூலம் நோய் பரவும் என  சமூகவிரோதிகள் கூறிவருவதை நான் கண்டிக்கிறேன். விரைவில் அவர்களை கண்டுபிடித்து மறு உலகிற்கு அனுப்ப உறுதிகொண்டுள்ளேன். மக்கள் தங்களுக்கு நோய் வந்தால் அதை அவர்களேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் காட்டிய வழியில்தான் கண்ணை மூடிக்கொண்டு நடந்து செல்கிறேன்.  எனக்கு நோய் தொற்றக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக இருக்கும்போது டிவிதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் மருத்துவர்கள் பெருந்தொற்று ஏற்பட்டவர்களை கவனித்துக்கொள்வதை பார்த்தால் இவர்களுக்கு எப்படி இந்தளவு துணிச்சல் வந்தது என ஆச்சரியமாக உள்ளது.  இயற்கைப் பேரிடர்களான சுமான், ஜிசாப் ஆகிய புயல்களைக் கூட மக்களேதான்  எதிர்கொண்டனர். இடிந்துபோன வீடுகளை பின்னர் அவர்களேதான் கட்டிக்கொண்டனர். இதற்கு அரசு என்ன செய்யமுடியும்? இதற்கு

பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு!

படம்
  பால்வெளியில் ரேடியோ அலைவெடிப்பு கோள்களிலிருந்து ரேடியோ சிக்னல்கள் கிடைத்தது என அறிவியல் செய்திகள் படிக்கும்போது பலருக்கும் சந்தேகம் வரும். அதென்ன ரேடியோ சிக்னல்கள் என்று. விண்வெளியில் இருந்து வரும் கதிர்வீச்சுகளோடு கிடைக்கும் ரேடியோ அலைகளைத்தான் அப்படி வானியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  பால்வெளியிலிருந்து பல்வேறு அடையாளம் காணப்படாத செயல்பாடுகளின் விளைவாக , வரும் ரேடியோ அலைகளை 2013 ஆம் ஆண்டுக்கு முன்னதாக வானியலாளர்கள் குழப்பத்துடன் பார்த்து வந்தனர். இன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ரேடியோ ஆன்டனாவில் தினசரி பத்திற்கும் மேற்பட்ட ரேடியோ அலை வெடிப்புகள் பதிவாகி வருகின்றன.  ரேடியோ அலைகள் பால்வெளியில் எப்படி உருவாகின்றன?  பிரகாசமான பொருளிலிருந்து வரும் ஒளி, எலக்ட்ரான்களையும் வேறு பல துகள்களையும் கொண்டுள்ளது. இது பழைய துகள்களை உடைத்து மின்காந்த அலை ஊடகத்தை உருவாக்குகிறது. இதிலுள்ள எலக்ட்ரான்கள் ரேடியோ அலைகளை உருவாக்குகின்றன என்பதே ஆய்வாளர்களின் ஆய்வு அறிக்கை. இது பற்றிய ஆய்வு அறிக்கை arxiv.org வலைத்தளத்தில் பதிவாகியுள்ளது.  2015 ஆம் ஆண்டு கனடாவின் மெக்கில் பல்கலையைச் சேர்ந்த வானியல

சினிமா, இசை அல்லாமல் பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள்! - விரிவாகும் பாட்காஸ்ட் சந்தை

படம்
                பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் ! பெருந்தொற்று காலத்தில் பிராந்திய மொழிகளில் பாட்காஸ்ட் (Podcast) சந்தை சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது . டிவி , இணையம் வெற்றி பெற்றுள்ள நவீன காலத்திலும் பாடல்கள் அல்லாத நிகழ்ச்சிகளைக் கொண்ட பாட்காஸ்ட் சந்தை சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது . கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதிலிபி எஃப்எம் என்ற ஆப் , விவசாயிகள் வாழ்க்கை பற்றி பாட்காஸ்ட் ஒன்றை வெளியிட்டது . இதனைப் படித்துவிட்டு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தங்கள் மொழிகளில் தெரிவித்திருந்தனர் . 2014 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முதல் பாட்காஸ்ட் சேவையை வழங்கத் தொடங்கியது . இந்த செயலியில் பதிவிடப்படும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கூட ரசிக்கப்பட்டு வருகின்றன . பாடல்கள் அல்லாத பல்வேறு செய்திகளுக்கான பாட்காஸ்ட் சந்தை வளர்ச்சி பெற்றாலும் வீடியோ மீதான மோகம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது . குறிப்பாக யூடியூப்பின் வளர்ச்சி 45 சதவீதம் ( ஜூன் , ஜூலை ) வளர்ச்சியடைந்துள்ளது . நெட்பிளிக்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கு அதிகமாக

ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி - டாப் 5 கேள்விகள்!

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - பேக் டூ பேக் கேள்விகள் மிஸ்டர் ரோனி பதில் சொல்லுகிறார்! வாத்தின் கால்கள் ஏன் ஆரஞ்சு நிறத்தில் இருக்கின்றன? வாத்துக்கறி சாப்பிடும்போது இப்படியெல்லாம் யோசிக்கிறீர்களா என்ன? எனிவே, வாத்தின் கால்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்க காரணம் அதன் உடலிலுள்ள விட்டமின்கள் மற்றும் ஹார்மோன்கள்தான்.விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இனப்பெருக்க காலத்தில் அதிகம் சுரக்கின்றன. இதன்விளைவாக, பெண் வாத்துகளுக்கு ஆண் வாத்துகள் சரியான இணை என நம்பிக்கை பிறக்கிறது. அப்புறம் என்ன, ரொமான்ஸ் றெக்கை கட்டிப்பறக்கும். உயரமான மனிதர்களுக்கு உடலில் அதிக செல்கள் இருக்கும் என்பது உண்மையா? நிஜம்தான். உடனே நீங்கள் என்பிஏ விளையாட்டு வீரர்களை கற்பனை செய்திருப்பீர்கள். அப்படி உயரமாக இருப்பது விளையாட்டுகளுக்கு உதவும் என்பது சரிதான். ஆனால் அதேசமயம் புற்றுநோய் ஆபத்தும் அதிக செல்களைக் கொண்டவர்களுக்கு உண்டு. உங்கள் உடலில் பத்து செ.மீ உயரம் கூடினாலே பத்து சதவீத புற்றுநோய் ஆபத்து உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். யோசித்து யோசித்து உடலின் கலோரிகளைக் கரைக்க முடியுமா? லேஸ் சிப்ஸ் தின்றுக