இடுகைகள்

இறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஐஇடி வெடிகுண்டுகள் - ஒரு அலசல்

படம்
  காவிக்கட்சி ஆட்சியில் கலவரங்கள் தேசியமயமாக்கப்பட்டு சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. நாளிதழ்களில், இந்தமுறை எத்தனை பேர் இறந்தார்கள் என எண்ணிக்கை விளையாட்டுதான் மக்கள் விளையாட வேண்டும். அந்தளவு சிறுபான்மையினர் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், அதீதமாக வெடிகுண்டு வைப்பதும் புதிதாக சேர்ந்துள்ளது. தேசப்பற்று கொண்ட வட இந்தியர்கள் கட்டுப்பாடு தவறாமல் காவிக்கட்சிக்கு வாக்களித்துவிட்டு வேலை செய்யவும், வாழவும் தென்னிந்தியாவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ராஜதந்திரம் புரியாத வடநாட்டிலேயே வேலை செய்யும் மக்கள் மாட்டு மூத்திர பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.  பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற இடத்தில் ஐஇடி என்ற வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் பத்துபேர் காயமுற்றிருக்கிறார்கள். ஐஇடி என்பதற்கு இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ளோசிவ் டிவைஸ் என்று விரிவாக்கம் கூறுகிறார்கள்.  சிசிடிவி கேமராவில் கஃபேயில் மர்ம மனிதர் பேக்கோடு வந்து உட்கார்ந்திருக்கும் காட்சியை காவல்துறை கைப்பற்றியுள்ளனர். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட குண்டு வகையில் ஐஇடி வருகிறது. இதை குழாய் வெடிகு

வாழ்க்கை, இறப்பு என இரண்டு புள்ளிகளுக்குள் ஓடும் ஓட்டம்!

படம்
  வாழ்க்கையில் நல்லது, கெட்டது என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை ஒருவர் தவிர்க்கவே முடியாது. நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும் நேரம், நினைத்தே பார்க்க முடியாத விஷம் கொண்ட சுயநலமான மனிதர்களையும் எதிர்கொள்ளவேண்டும். இதுதான் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒருவரை சுழன்றடித்துக்கொண்டே வருகிறது. நன்மை, தீமை என இரண்டு விஷயங்களுமே சமூகத்தை ஒருவகையில் முன்னே நகர்த்துகின்றன என்று கூறவேண்டும். ஒன்று இல்லாதபோது மற்றொன்று இல்லை.  இறப்பு பற்றிய பயத்தை ஒருவர் நீக்கிக்கொள்ளவே பாலியல் மீதான ஈர்ப்பு உதவுகிறது என ஃப்ராய்ட் கருதினார். ஆராய்ச்சியாளர் மெலானி கிளெய்ன், இந்த கருத்தை விரிவுபடுத்தினார். இறப்பு பயத்தை வெளியே கொண்டு வந்தால், அது உள்ளுணர்வில் ஆபத்தை உணர்ந்து தப்பிக்கும் ஆவேசம் கொண்ட தன்மையை அடைகிறது. இதை பாலியல் உணர்வுக்கு எதிராக நிறுத்தலாம். வளர்ச்சி, புதுமைத்திறன் என்ற ஆசைகள் எந்தளவு ஆழமாக வேர்விடுகிறதோ, அதற்கு நிகராக அதை எதிர்க்கும் அழிவு சக்திகளும் வேர்விட்டு வளர்கின்றன. இந்த முரண்பாடுகள்தான் வன்முறை, ஆவேசம் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. பிறந்த குழந்தை வெளியுலகிற்கு ஏற்ப வாழ தன்

புரொஜெக்ட் சீட்டா வெற்றி பெறுமா?

படம்
  சீட்டா அறிமுகம் வெற்றி பெற்றதா? கடந்த செப்டம்பர் மாதம், எட்டு ரேடியோகாலர் பொருத்தப்பட்ட சீட்டாக்கள் நமீபியாவிலிருந்து இந்தியாவின் குனோ தேசியப்பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. ஏறத்தாழ 5 ஆயிரம் மைல் தூர பயணம். புரொஜெக்ட் சீட்டா என்ற பதிமூன்று ஆண்டு கால திட்டத்தின்படி சீட்டாக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். கடந்த எழுபுது ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த புல்வெளிப்பகுதி சீட்டாக்கள் வேட்டையர்களால் வேட்டையாடப்பட்டன. எனவே, சீட்டாக்கள் எளிதாக அழிந்துவிட்டன. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, புரொஜெக்ட் சீட்டா திட்டத்தின் இரண்டாவது   கட்டம் தொடங்கியது. மொத்தமுள்ள இருபது சீட்டாக்களில் எட்டு சீட்டாக்கள், மூன்று குட்டிகள் இறந்துவிட்டன. இப்போது மீதமுள்ள சீட்டாக்களை பாதுகாக்க தேசியப்பூங்கா அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். உண்மையில் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை பாதுகாக்க முடியாது போனது இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலைமைதான். அவற்றை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது என்று பணியாளர்களுக்கு தெரியவில்லை என்று கருத்துகள் பேசப்பட்டுவருகின்றன. இறப்பிற்கான முக்கியக் காரணம், ரேடியோ காலர் பொருத்தப்பட்டதுதான்

பிஆர்சிஏ 2 மரபணு ஏற்படுத்தும் புற்றுநோய்! - தலைமுறைகளைத் தாண்டி தொடரும் வேதனை

படம்
  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இன்று அதிகரித்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவு, மரபணு வழியாக எளிதாக புற்றுநோய் ஒருவரை தாக்கி அழிக்கிறது. கூடவே, அவரது குடும்பத்தையும் பாதிக்க 50 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆபத்திலிருந்து தப்பி பிழைக்க பலரும் மருத்துவ சிகிச்சையை நாடி வருகிறார்கள். இதில் பொருளாதார சிக்கல்களும் உள்ளன. அமெரிக்க மருத்துவர் சூசனா உங்கர்லெய்டர், அவரது அப்பாவிற்கு சோதனை மூலம் கண்டறிந்த கணைய புற்றுநோயால் ஆடிப்போயிருந்தார். அப்பாவிற்கு வந்த உயிர்க்கொல்லி நோய் மூலம் தனக்கு எதிர்க்காலத்தில் வரும் ஆபத்தை அவர் முதலில் உணரவில்லை. 2022ஆம் ஆண்டு சூசனாவின் அப்பா ஸ்டீவனை சோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் இருந்த பிஆர் சிஏ 2 எனும் மரபணு, மார்பு, கருப்பை, கணையத்தில் புற்றுநோய்   உண்டாக்குவதோடு அவரது பிள்ளைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் கண்டனர். அவர்களின் பரிந்துரை பெயரில் சூசனாவும் அவரது சகோதரியும் மரபணு சோதனையை செய்து புற்றுநோய் அபாயத்தை அடையாளம் கண்டுகொண்டனர். நாற்பத்து மூன்று வயதாகும் சூசனா, மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக செயல்பட்டுவருகிறார். தீர

சுயத்தை அழித்து காதலை அடையாளம் காண்போம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
        தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   குழந்தைகளின் வளர்ப்புக்கு நிறைய பெற்றோர் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மாறுபடுகிறது. குழந்தைகள் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது, அவர்கள் என்ன வேலையை செய்யவேண்டும் என பெற்றோர் தீர்மானித்துக் கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் முக்கியமான இடத்தை அந்தஸ்தை அடைய வேண்டுமென நினைக்கிறார்கள். இதற்குள்தான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு பொருத்தமான மனிதர்களாக்க அவர்களை உருவாக்கி போர், முரண்பாடு, கொடூரங்களை செய்யும் விதமாக மாற்றுகிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதை அக்கறை, அன்பு என்று கூறமுடியுமா? ஒரு செடியை, விதையூன்றி வளர்க்க நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். மண்ணைச் சோதித்து, மரக்கன்றை நட்டுவைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும்போது, அம்முறையின் வழியாக  அவர்களை மெல்ல கொல்கிறோம். உண்மையில் நீங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்கள் என்றால், உலகில் போர் நடைபெறக் கூடாது. நீங்கள் நேசிக

பணம் சம்பாதிக்க முதியவர்களை திட்டம் தீட்டி கொன்ற பெண்மணி - ஏமி

படம்
  1873ஆம ஆண்டு பிறந்தவர், ஏமி. இருபது வயதில் ஜேம்ஸ் ஆர்ச்சர் என்பவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த பெண்பிள்ளையின் பெயர் மேரி. இவருக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசை, ஆனால் படிக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. படிக்காவிட்டால் என்ன படித்ததாக கூறிக்கொள்வோம் தவறில்லை என நினைத்தார். எனவே, கனெக்டிகட்டில் வயதானவர்களுக்கான நர்சிங் ஹோமை தொடங்கி நடத்தினார். 1907ஆம் ஆண்டு ஏமி, தனது நர்சிங் ஹோமை விண்ட்சோர் எனுமிடத்திற்கு மாற்றிக்கொண்டார்.வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றி நடத்தினர்.   தொடங்கிய காலத்தில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளில் சேர்ந்த பத்து வயதானவர்கள் நோயாளிகளாக இருந்து காலமானார்கள். 1910ஆம் ஆண்டு கணவர் ஜேம்ஸ் ஆர்ச்சர் இயற்கையான முறையில் இறந்துபோனார். பிறகு மைக்கேல் கில்லிகன் என்பவரை ஏமி மணந்துகொண்டார். இவரது ஆயுள் அதற்குப் பிறகு பனிரெண்டு மாதங்களாக குறைந்துவிட்டது. 1911- 1916 வரையிலான காலகட்டத்தில் நர்சிங் ஹோமில் இருந்தவர்களில் 48 பேர் காலமானார்கள். மைக்கேல் கில்லிகனின் குடும்ப மருத்துவர் மருத்துவர் கிங். இவருக்கு, ஏமியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர், ஏமி நோயாள

இளம் விதவையைக் காதலித்து அதன் வழியாக தனது அம்மாவை உணரும் பால்ராஜூ! - சாவு கப்புரு சல்லாக

படம்
  சாவு கப்புரு சல்லாக தெலுங்கு இயக்குநர் – கவுசிக் பெகல்படி இசை – ஜேக்ஸ் பிஜோய் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பஸ்தி பால்ராஜ், சாவு வீட்டில் கணவரை இழந்த பெண்ணைக் காதலிக்கிறார். இந்த காதல் இருவர் வாழ்விலும், குடும்ப உறுப்பினர்களிடையேயும் ஏற்படுத்தும் விளைவுகள்தான் கதை. குடிசைப்பகுதி மக்களாக வாழ்பவர்களின் வாழ்க்கை, மத்திய வர்க்க கிறிஸ்தவர்களின் வாழ்க்கை என இரண்டையும் இயக்குநர் விவரித்துள்ளார். பஸ்தி பால்ராஜூக்கு, அவரது தாயான கங்கம்மாதான் எல்லாமே. கங்கம்மா, விசாகபட்டினம் கடற்கரையில் சோளத்தை சுட்டு வருகிறார். பால்ராஜின் அப்பா, வாதம் வந்து விழுந்து படுக்கையில் கிடக்கிறார். வீட்டுக்கான சம்பாத்தியம் என்பது கங்கம்மாவின் பொறுப்பு. பஸ்தி பால்ராஜ் , இறந்தவர்களை தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்யும் வேலையை செய்கிறார். இதில் கிடைப்பதுதான் அவரது சம்பாத்தியம். சாவு வீட்டுக்குப் போகும்போது அங்கு, இறந்த பிணத்தின் அருகே மல்லிகா என்ற இளம்பெண்ணைப் பார்க்கிறார் பால்ராஜ். உடனே, காதல் வயப்பட்டு பிணத்தை தூக்கி வண்டியில் வைக்கும் முன்னரே காதல் வயப்படுகிறார். உடலை அடக்கம் செய்துவிட

மிரட்டும் பாம்பு, குறையும் சிகிச்சை!

படம்
  2020ஆம் ஆண்டில் பாம்புகளால் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 78 என தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு சொல்லுகிறது. இதனை நேஷனல் ஹெல்த் புரோஃபைல் அமைப்பின் (என்ஹெச்பி)  தகவல் உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் வந்துவிட்டால் பாம்புகளின் வருகை வீடு, வயல், கிடங்கு என தொடங்கிவிடும். இதனை பிடிக்கவென பயிற்சிபெற்ற வல்லுநர்கள் உள்ளனர் கோவையில் நடப்பு ஆண்டில் அதிகளவாக 55 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிகளவு மரண எண்ணிக்கை.  நகரம், கிராமம் ஆகிய இடங்களில் பெரிய வேறுபாடு இன்றி பாம்புகள் மனிதர்களை கடித்துள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை தங்களின் வாழிடத்திற்காக பாம்புகள் நகர்ந்துசெல்லும்போது குறுக்கே வரும் மனிதர்களை கடிக்கின்றன. கிராமத்தில், மலம் கழிக்க செல்லும் பெண்களை பெரும்பாலும் தீண்டுகின்றன.  வாரத்திற்கு ஒருமுறை பாம்புகள் உணவு உண்கின்றன. அப்படி கிடைக்கும் உணவும் மனிதர்களின் தலையீட்டால் கிடைக்காமல் போகும்போது பாம்புகள் ஆவேசம் கொள்கின்றன. மனிதர்களை கடிக்கின்றன. என்ஹெச்பி தகவல்படி, இந்தியாவில் தமிழ்நாடு பாம்பு கடியால் மனிதர்கள் இறப்பதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  ஏப்ரல் 2021 - மார்ச் 2022

மேற்கு நாடுகள் ஹூவாவெய் மீது நடத்திய வன்ம தாக்குதல்!

படம்
  ஹூவாவெய், உலகளவில் முக்கியமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம். சிறந்த நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியும் வந்தது. ஆனாலும் அதன் பூர்விகம் சீனா என்பதை யாரும் மறக்கவில்லை. இதை ரென் உணர்ந்தபோது நிறுவனத்தின் பெயரை ஊடகங்கள் வெறுப்புடன் உச்சரித்துக்கொண்டிருந்தனர்.   2005ஆம் ஆண்டு சீனாவில் ஹூவாவெய் நிறுவன அலுவலகத்தில் வேலை செய்த பணியாளர் மூளை அழற்சியால் இறந்துபோனார். உடனே அந்த விவகாரத்தை கையில் எடுத்த ஊடகங்கள், அய்யகோ மெத்தை கலாசாரம் தொடங்கிவிட்டது. அதனால்தான் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என கூக்குரலிடத் தொடங்கின. மேலும் விவரங்கள் தெரியவேண்டுமா? விளம்பரத்திற்கு பிறகு பாருங்கள் என ஸ்க்ரோல் செய்திகள் போட்டன.   ஹூவாவெய் நிறைய விஷயங்களில் மாறியிருந்தது. ஆனால் கலாசாரம் சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றமில்லை. காரணம், ரென்னின் ராணுவப்பணிதான். முன்னமே ரென் சில கொள்கைகளை பின்பற்றுகிறார் என குறிப்பிட்டிருந்தோம். அது வேறொன்றுமில்லை. ராணுவத்தில் இருக்கும் முக்கிய கொள்கையான கீழ்படிதல். அந்த இயல்பு இல்லாமல் ராணுவத்தில் ஒருவர் வேலை செய்யமுடியாது. மேலதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும். இல்லையென்றா

கோவிட் இறப்புகள் இந்தியாவில் அதிகமா?

படம்
  இந்தியாவில் 47 லட்சம் மக்கள் கொரானாவால் பலியானார்கள் என்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது. இது எந்த நாடுகளையும் விட அதிகம் என்பதால், பதறிப்போன இந்தியா, இதனை அப்படியெல்லாம் கிடையாது என ஒரே பேச்சாக முடிவாக மறுத்துள்ளது. உண்மை என்ன என்று டைம்ஆஃப் இந்தியா செய்தியை வெளியிட்டுள்ளது.  2020 -2021 காலகட்டத்தில் இந்தியா 47.4 லட்ச மக்களை இழந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தனது ஆவணங்களின்படி கூறியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ரஷ்யா உள்ளது. இந்த நாடு, 10.7 லட்ச மக்களை நோய்க்கு பலி கொடுத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் இந்தோனேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வருகின்றன.  லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா குறிப்பாக உக்ரைன், போலந்து, ரோமானியா ஆகிய நாடுகளில் மக்களி இறப்பு சதவீதம் இந்தியாவை விட அதிகம். இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டால், உலக சுகாதார நிறுவனம் கூறும் இறப்பு எண்ணிக்கை குறைவு.  இதனை எப்படி கணக்கிடுகிறார்கள்? நூறு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நாடுகளை பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும்.  அடுத்து அதில் லட்சத்திற்கு எத்தனை பேர் கொரானாவால் இறந்தார்கள் என்பதை கணக்கி

தலைவிதியை மாற்றி எழுத முடியுமா? - காதலைக் காப்பாற்ற போராடும் கைரேகை நிபுணன்- ராதேஷ்யாம்

படம்
  ராதே ஷ்யாம்  ராதாகிருஷ்ண குமார் மனோஜ் பரம ஹம்சா இசை - ஜஸ்டின் பிரபாகரன் பின்னணி - தமன் எஸ்  புகழ்பெற்ற கைரேகை வல்லுநரான விக்ரம் ஆதித்யாவிற்கு, சொந்த வாழ்க்கையில் நடக்கும் காதலும் அதைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்ததா என்பதும்தான் கதை.  படம் எழுபது, எண்பதுகளில் நடக்கும் கதை. ராதே ஸ்யாம் என்பதற்கு கிருஷ்ணன் அல்லது ராதா கிருஷ்ணன் என பொருள் கொள்ளலாம். ஏன் இயக்குநர் தனது பெயரைக் கூட முதல் படத்திற்கு வைத்துக்கொண்டார் என நினைக்கலாம். வேத பாடசாலையில் உள்ள குருவான சத்யராஜ், பார்வையற்றவர். கைரேகையை தொட்டுணர்ந்து சொல்லும் தீர்க்கமான ஆற்றலுடையவர். இவரது சீடர் தான் விக்ரம் ஆதித்யா. இவருக்கும் இஸ்ரோ விஞ்ஞானியான தலைவாசல் விஜய்க்கும் நடக்கும் விவாதமே படத்தின் போக்கை சொல்லிவிடுகிறது. இதில் சத்யராஜ் ஜோதிட சாஸ்திரத்தை நம்பினாலும், மனிதனின் சிந்திக்கும் அறிவு செய்யும் மாயத்தை உணர்ந்தே இருக்கிறார். இதில் இவரது கிரேட் சிஷ்யரான விக்ரம் ஆதித்யா, சற்று மாறுபட்டு விதியை கணித்தால் மாற்ற முடியாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.  இதனால் நிறைய பிரபலங்களிடம் அப்படியே உண்மையை சொல்லி வம்பு தும்புகளை சம்பாதித்துக்கொள்கிறார்

விலங்குகளுக்கு செயற்கைக் கால்களைக் கிடைக்கச் செய்யும் மருத்துவர்!

படம்
  மருத்துவர் தபேஷ் மாத்தூர் 2014ஆம் ஆண்டு மருத்துவர் தபேஷ் மாத்தூர், ஹிங்கோனியா பசு மறுவாழ்வு மையத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த பசு அமைவிடம் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ளது. இங்கு அதிகளவு பசு இறப்பு நடந்ததால், அதனைக் குறைக்கவே மருத்துவர் அழைக்கப்பட்டார்.  பசுக்கள்,  ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டிருந்தன. அதுதான் இறப்பிற்கான முக்கியமான காரணம்.  எனவே, அவற்றைக் காப்பாற்ற தினசரி ஏதேனும் ஒரு பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து வந்தார் மருத்துவர் தபேஷ். இதனால் பசுக்களின் இறப்பு பெருமளவில் குறைந்தது. அத்தோடு பசுக்களின் பிரச்னை முடியவில்லை. விபத்துக்குள்ளாகி கால்கள் முடமான பசுக்களின் இறப்பு பற்றியும் புகார்கள் வந்தன.  விபத்துக்குள்ளாகி அகற்றப்பட்ட கால்களால் முடமாகிப் போன பசுக்களின் வாழ்நாள் குறைந்து வந்தது. அதனை சரிசெய்ய, செயற்கைக் கால்களை பொருத்த மருத்துவர் முடிவு செய்தார். எனவே, கிருஷ்ணா லிம்ப் என்ற பிராண்டின் பெயரில் இவரே கால்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். இன்றுவரை 160 செயற்கைக்கால்களை உருவாக்கி பொருத்தியுள்ளார். இதனால் பசுக்களின் வாழ்நாளும் நீண்டுள்ளது.  செயற்கைக் கால்களை

தற்போது புழக்கத்தில் உள்ள கொரானோ பெருந்தொற்றுக்கான மருந்துகள்!

படம்
  Baricitinib மேம்படுத்தியவர் எலி லில்லி - இன்சைட் கார்ப்பரேஷன் வகை  ஜானஸ் கைனாஸ் திறன் மக்கள் இறப்பதை 50 சதவீதம் குறைத்துள்ளது.  நிலை இந்தியாவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு தர நிர்ணய அமைப்பு  இதனை ஏற்றுள்ளது. சந்தையில் முழங்கால் வலிக்காக பயன்படும் மருந்து இது.  Sotrovimab மேம்படுத்தியவர் கிளாக்ஸ்கோஸ்மித் கிளைன் நிறுவனம் பிரிவு மோனோசினோல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பு 85 சதவீதம் குறைந்துள்ளது.  நிலை இந்தியாவில் காத்திருப்புதான் பதில். இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலக சுகாதார நிறுவனம், மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.  Paxlovid மேம்படுத்தியவர் பைசர் பிரிவு ஆன்டி வைரல் திறன் இறப்பு எண்ணிக்கையை 88 சதவீதம் குறைக்கிறது. தடுப்பூசி போடாத மக்களை இறப்பிலிருந்து காக்கிறது.  நிலை இந்தியா ஒப்புதல் அளிக்கவில்லை. எப்டிஏ, அமெரிக்க அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.  Regncov மேம்படுத்தியவர் ரீஜெனரோன் பிரிவு  மோனோகுளோனல் ஆன்டிபாடி திறன் மக்களின் இறப்பை 81 சதவீதம் காக்கிறது. டெல்டா, ஓமிக்ரானுக

சின்னம்மை ஒழித்த 42ஆவது ஆண்டு! - எட்வர்ட் ஜென்னரின் மகத்தான தடுப்பூசி கண்டுபிடிப்பு

படம்
  இன்று இரண்டு விஷயங்கள் உலகில் நடக்கின்றன. ஒன்று, நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒரு பிரிவும், அதைப் போடக்கூடாது அப்படி போடுவதும் போடாததும் மக்களின் விருப்பம் எனவும் ஒரு பிரிவு பேசிக்கொண்டிருக்கிறது. எலன் மஸ்க் என்ன சொல்கிறார் என்றால், அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்தான். அதை ஊக்கப்படுத்தலாம். ஆனால் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்கிறார். இந்த வகையில் இந்த விவாதத்திற்கு முக்கியமான காரணம், எட்வர்ட் ஜென்னர்.  இவர்தான் தடுப்பூசியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர். 1749ஆம் ஆண்டு மே 17 அன்று இங்கிலாந்தில் உள்ள பெர்க்கிலியில் பிறந்தார்.  இவரின் காலத்தில் சின்னம்மை பலருக்கும் அதிகரித்து அதற்கான சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நிறையப் பேர் இறந்துகொண்டிருந்தனர். சுருக்கமாக சொல்வதென்றால், மக்கள் தொகையில் இருபது சதவீதம் பேர்.  ஜென்னர் தனது ஆராய்ச்சியில் ஒரு த த்துவத்தை உருவாக்கினார். ஒருவருக்கு சின்னம்மை வந்தும் கூட உயிர்பிழைத்து விட்டாரா? உடனே அவரைத் தேடிப் பிடித்து சோதித்தால் அவரது உடலில் நோய்க்கு எதிரான பொருட்கள் இருக்கும் என்று கூறினார். இந்த நேரத்தில

இயற்கைச்சூழலைக் கெடுத்த செர்னோபில் அணுஉலை பேரிடர்!

படம்
  செர்னோபில் பேரிடர்  செர்னோபில் பேரிடரைப் பலரும் எப்போதேனும் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் அணுஉலை பற்றி பேசும்போது முக்கியமாக இதனை சூழலியலாளர்கள் கூறுவார்கள். அந்தளவு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் இது.  1986ஆம்ஆண்டு ஏப்ரல் 26 அன்று செர்னோபில் அணுஉலை பாதிப்பு ஏற்பட்டது. சோவியத் யூனியனின் பிரிப்யாட் என்ற நகரில் அமைந்திருந்த அணுஉலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டது.  அணு உலையில் அமைந்திருந்த ரியாக்டரை சோதித்து வந்தனர். அதில், நீர் மூலம் இயங்கும் டர்பனை இயக்கி ரியாக்டரின் வெப்பத்தைக் படிப்படியாக குறைக்க முயன்றனர். ஆனால் அப்போது திடீரென மின்சாரம் நின்றுபோனது. இந்த இடத்தை மூடிய ஆபரேட்டர்கள் அணு உலையின் தொடர் சங்கிலியாக நடக்கும் செயல்பாடுகளை கவனிக்க வில்லை. இதன் காரணமாக அங்கு தீபிடித்தது. இதன் விளைவாக கதிரியக்க தனிமங்கள் சூழலில் கசியத் தொடங்கின. இதன் விளைவாக காற்றை சுவாசித்த நூறு பேர் உடனடியாக இறந்தனர். மீதியுள்ளவர்கள் பலருக்கும் வாழ்நாள் முழுக்க தொடரும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.  அரசுக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சுற்றுப்புறத்தில் வாழ்ந்த மக்கள் ஆயிரக்கணக்கில் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்தப்ப

குழந்தைகளுக்கான எளிமையான கவிதைகளை இயற்றிய அமெரிக்க கவி!

படம்
  ஹென்றி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ எளிமையான உணர்ச்சிகளை படைப்பாக்கியவர்! இவர் காலத்தில் பலரும் முக்கியமான இலக்கியப் படைப்புகளை உருவாக்க மெனக்கெட்டனர். ஆனால் வேட்ஸ்வொர்த் நேர்மையான மனிதர்களைக் கொண்ட சிறு உணர்ச்சிகளைப் பேசும் கவிதைகளை எழுதினார்.  இதன் காரணமாக இவரின் படைப்புகளை பலரும் குழந்தைத்தனமாக இருக்கிறது என விமர்சித்தனர். ஆனால் அன்றைய காலத்தில் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு படித்துக் காட்ட எளிதான கவிதை என்று இருந்தது ஹென்றியினுடையது மட்டும்தான்.  1807ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பிறந்தவர் ஹென்றி. அமெரிக்காவின் போர்லேண்டில் பிறந்தவர், தனது இளமைக் காலத்திலேயே இலக்கியத்திற்காக உழைப்பது என முடிவு செய்துவிட்டார்.  ஹென்றியின் பெற்றோர் அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அனுப்பினார்கள். பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, போர்ச்சுக்கீஷ், ஜெர்மன் ஆகிய மொழிகளை கற்றுக்கொள்வான் என நம்பினார்கள். மைக்கேல் ஏஞ்சலோவின் கவிதையை சிறப்பாக மொழிபெயர்த்தார். பிறகு, டண்டே அலிகியரின் டிவைன் காமெடியை மொழிபெயர்ப்பு  செய்ததை இலக்கிய வட்டாரம் முக்கியமானது என குறிப்பிடுகிறது.  ஹென்றிக்கு இருமுறை திருமணம் ஆனது. முதல் மனை

மத்தியப் பிரதேசத்தில் மட்டும் புலிகளின் இறப்பு அதிகரிப்பது ஏன்? - சுற்றுலா கொடூரம்

படம்
  மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மட்டும் 39 புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டில் புலிகளின் இறப்பு 32 ஆக இருந்தது. இப்போது இன்னும் ஒருமாதம் இருக்கும் நிலையில் புலிகளின் இறப்பு கூடியுள்ளது. இப்படியே புலிகள் இறந்துகொண்டிருந்தால் மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் இருப்பே இனி இருக்காது என சூழலியலாளர்கள் கூறி வருகின்றனர்.  2019ஆம் ஆண்டு புலிகளின் எண்ணிக்கை 526 ஆக இருந்தது. கர்நாடகாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை விட இதில் இரண்டுதான் கூடுதலாக உள்ளது.  நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் பதினைந்து புலிகளின் இறப்பு பதிவாகியுள்ளது. மொத்த இந்தியாவில் 113 புலிகள் இறந்துள்ளன. அதில் மத்திய பிரதேசத்தின் பங்கு 39 ஆகும். அதாவது, 34.5 சதவீத பங்கு.  கடந்த நவ. 22 அன்று காட்டுயிர் செயல்பாட்டாளர் அஜய் துபே நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை பதிவு செய்தார். இதில் புலிகளின் இறப்பு பற்றி அரசிடமும், புலிகளின் பாதுகாப்பு ஆணையத்திடமும் கேள்விகளைக் கேட்டிருந்தார்.  நவம்பர் 17 அன்றுதான் அனைத்திந்திய புலிகள் எண்ணிக்கை ஆய்வு தொடங்கியது. 2023ஆம் ஆண்டு இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.  புலிகள் பெரும்பாலும் பாதுகாக

கொலைக்கணக்குகளை எழுதி வைக்கும் பழக்கமுண்டா?

படம்
  கொல்லப்பட்டவர்களின் ஈமச்சடங்கு பொதுவாக சினிமாவில்தான் இதுபோன்ற கிளிஷே காட்சிகளைப் பார்க்கமுடியும். இப்படியெல்லாம் காட்சிகளை வைத்தால்தான் பார்ப்பவர்களுக்கு நெஞ்சு முழுக்க அமிலம் பரவும், வில்லனை பழிவாங்கும் ஆவல் பெருகும். உண்மையில் மிகச்சிலர் மட்டுமே இறந்தவர்களின் ஈமச்சடங்களுக்கு, கல்லறைகளுக்கு என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்று வருகிறார்கள்.  அதுகூட அவர்களின் சந்தோஷத்திற்காகத்தான். நீ என்னால் கொல்லப்பட்டாய், இப்போது குழியில் வைத்து மூடப்போகிறார்கள். ஆனால் உயிருடன் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லி சந்தோஷப்படும் ஆகிருதிகள் சீரியல் கொலைகாரர்கள். மற்றபடி கொலை  நடந்த இடம் பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அவர்களை அங்கு பார்க்க முடியும். திரும்ப அதே இடத்திற்கு வந்து நினைவு நரம்புகளை மீட்டுவது சினிமாவில் வேண்டுமானால் பார்க்க நன்றாக இருக்கும். நிஜத்தில் அப்படி நடக்காது.  கொலைக்கணக்கு நோட்டு போட்டு அதனை எழுதி வைக்குமளவு சீரியல் கொலைகார ர்கள் நேர்த்தியானவர்கள் கிடையாது. பெரும்பாலான ஐடியாக்களையே சினிமா, நூல்களிலிருந்து காப்பி அடிக்கும் ஆட்கள், தங்களை மாட்டிக்கொள்ள வைக்கும்படி ஆதாரங்களை அவர்களே உர

அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும் ஒரே சூப்பர் ஆப்!- அசத்தும் கொச்சி - நியூஸ் ஜங்ஷன்

படம்
நியூஸ் ஜங்க்ஷன் 21.7.2021 அப்படியா! புதிய வசதி!  இன்ஸ்டாகிராமில் வன்முறை, ஆபாசம் ஆகியவற்றை தவிர்க்கும்படியான வசதிகளை நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. யாராவது ஒருவர் வெளியிடும் செய்தி, சங்கடத்தை ஏற்படுத்தும்படி இருந்தால் அதனை எக்ஸ்ப்ளோரர் எனும் டேப் மூலம் மறைத்துவிடலாம். இதன்மூலம் நாம் பார்க்க விரும்பும், விரும்பாத செய்திகளை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். ”சிலர் வெளியிடும் செய்திகள் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் பார்க்காமல் தவிர்த்துக்கொள்ள முடியும். இப்படி செய்திகள் வெளியிடுவது எங்கள் விதிகளுக்கு புறம்பானது இல்லை” என இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது. https://techcrunch.com/2021/07/20/instagram-sensitive-content-controls-explore/ சாதனை! தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ஷெப்பர்ட் ராக்கெட் வானில் பறக்கும் காட்சி! இடம் அமெரிக்கா, டெக்சாஸ் அடச்சே! ஆக்சிஜன் மரணம்! இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால்  நோயாளிகள் இறந்ததாக எந்த தகவல்களும் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. டில்லி, ஹரியாணா, கோவா, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கோவிட் -19 பாதிப்பு கூடுதலாக இருந்தது. இங்கு

மைக்ரோடோஸ் அளவில் எல்எஸ்டி பயன்படுத்தலாமா?

படம்
  ஹெராயின், கஞ்சா, கோகைன் ஆகியவற்றை மைக்ரோடோஸ் அளவில் கொஞ்சமாக எடுத்துக்கொண்டால் மனநிலை மகிழ்ச்சியாகும், உற்சாகம், ஊக்கம் கிடைக்கும் என பலரும் பேசிவருகிறார்கள். உலகில் பல்வேறு நாடுகளில் போதைப்பொருட்களை சட்டரீதியாக பயன்படுத்தவும் தடை நீங்கி வருகிறது. உண்மையில் குறிப்பிட்டளவு போதைப்பொருட்களை பயன்படுத்தினால்  நன்மை கிடைக்குமா என்று  பார்ப்போம்.  1960களில் சிலோசைபின் என்ற போதைப்பொருள், எல்எஸ்டி ஆகியவை ஹிப்பிகளிடையே பிரபலமாக இருந்தன. உளவியலாளர் டிமோத்தி டியரி என்ற உளவியல் ஆய்வாளர், ஹார்வர்டில் பணிபுரிந்து வந்தார். இவரது தனது மாணவர்களுக்கு 2 ஆண்டுகளாக சிலோசைபின் மருந்தைக்  கொடுத்து சோதித்து வந்தார்.  எல்எஸ்டியை மைக்ரோடோஸாக பயன்படுத்தினால் அதன் 6 முதல் 25 மைக்ரோகிராமாக இருக்கவேண்டும். இதனை முழுமையான அளவில் பயன்படுத்தினால் 100 முதல் 150 மைக்ரோகிராம் அளவில் பயன்படுத்தலாம்.  ரெட்டிட் சேனலில் மைக்ரோடோஸ் பயன்படுத்தும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,61,000. அமெரிக்க அரசின் எப்டிஏ அங்கீகாரம் இல்லாமல் 9 கிராம் எல்எஸ்டி வைத்திருந்தால்  அவருக்கு ஆயிரம் டாலர் அபராதம் கட்டவேண்டும். இல்லையென்றால் ஓராண்டு சிற