இடுகைகள்

இயல்வகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒன்றை உயர்த்த பிறிதொன்றை தாழ்த்த வேண்டியதில்லை! - வினோத் பாலுசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  மதிப்பிற்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமாக உள்ளீர்களா? அலர்ஜி பற்றிய நூலை மீண்டும் எழுத முயன்று வருகிறேன். சிறு புத்தகம்தான். அதிகமாக எழுத நேரமும் இல்லை ஆர்வமும் இல்லை. மார்ச் மாத இதழ் வேலைகளை ஓரளவுக்கு முடித்துவிட்டேன். எதுவுமே தெரியாத பிறவி பைத்தியங்களுடன் சேர்ந்து வேலை செய்வது கடினமாக மாறிவருகிறது. இருந்தாலும் பொருள் இருந்தால்தான் தானே அறம் செய்யமுடியும்?  எனவே, பொறுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் சொன்னபடி ரமேஷ் வைத்யா சார், அதை கஷ்டப்பட்டு எழுதியதாக சொன்னார். நன்றாக எழுதக்கூடியவர் என எனது எடிட்டர் சொல்லுவார்.  மனம் ஒன்றினால்தான் வேலை செய்வார். இல்லையெனில் கீழிறங்கி டீ குடிக்கப் போய்விடுவார்.  அம்மாவுக்கு தைராய்டு சுரப்பி வேலை செய்யவில்லை. இத்தனை தொல்லைகள் இருந்தாலும், அவள் உளவியல் பிரச்னைகளால் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தாள். இனி கட்டாய ஓய்வு எடுத்தேயாகவேண்டும். மார்ச் மாதம் தொடங்கிவிட்டது. நான் திருவண்ணாமலை வர நினைத்தேன். ஆலிவர் அண்ணாவின் நூலையும் உங்களது நூல்களையும் திரும்ப கொடுத்துவிட்டால் கடன் முடிந்தது.  உங்களது ஆபீசில் - ஸ்டூடியோவில் சிறிதுநேரம்