இடுகைகள்

பனிச்சிறுத்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பனிச்சிறுத்தையை லடாக்கில் படம் பிடித்தது சவாலான சம்பவம்! - ஆதித்ய டிக்கி சிங்

படம்
  ஆதித்ய டிக்கி சிங் காட்டுயிர் புகைப்படக்கலைஞர் புகைப்படத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்? 1999ஆம் ஆண்டு. இந்தியாவின் ரந்தம்பூரில் பிபிசிக்கான ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அதற்கான நான்கு பேர் கொண்ட குழுவில் நானும் ஒருவன். ஒளிப்பதிவாளர்கள் தங்கள் பணியில் தீவிரமாக இருந்தனர். நான் பணியின்போது புகைப்படம் எடுக்கும் தேவை இருந்தது. அங்கிருந்தவர்களில் என்னால் மட்டும்தான் கேமராவின் கையேட்டை ஆங்கிலத்தில் படிக்க முடிந்தது. இப்படித்தான் அந்த வேலையை செய்து புகைப்படக்காரனானேன்.  கேமராவை எப்போதாவது சேதப்படுத்தி உள்ளீர்களா? நிச்சயமாக. இரண்டு லென்ஸ்கள், இரண்டு கேமராக்களை சேதப்படுத்தியுள்ளேன். அதை நினைத்து அப்போது பெரிய வருத்தம்... புதிதாக இத்துறைக்கு வருபவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்ல நினைக்கிறீர்களா? பல்லாயிரக்கணக்கான மணி நேரங்கள் நீங்கள் உழைத்தாக வேண்டும். எனவே, தயாராக இருங்கள். உழையுங்கள்.  புலிகளை புகைப்படம் எடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றவர். அப்படி புகைப்படம் எடுத்ததில் எது சிறந்த விஷயம்? நிலத்தில் வாழும் வேட்டையாடிகளை படம் எடுப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. ரந்தம்பூரில் உள்ள பல தலைமுறை புலிக

பனிச்சிறுத்தையை அழிவில் இருந்து காக்கும் உயிரியலாளர் - முகமது

படம்
  ”விவசாயிகளுக்கு உதவி பனிச்சிறுத்தையை காக்கிறேன்” உலகில் பனிச்சிறுத்தைகள் வாழும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான். அவை, இங்கும் அழியும் நிலையில்தான் உள்ளது. உணவுக்காக, அங்குள்ள விவசாயிகளின் பண்ணைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மனிதர்களால் எளிதாக கொல்லப்படும் நிலையில் பனிச்சிறுத்தை உள்ளது.  உயிரியலாளரான முகமது, பனிச்சிறுத்தை இனத்தைக் காக்க முயன்று வருகிறார். இந்த விலங்கு பற்றி கிராமத்தினருக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்தார். கூடவே விவசாயிகளின் வளர்க்கும் விலங்குகளுக்கு காப்பீடும், தடுப்பூசியும் கிடைக்க உதவினார்.  2013ஆம் ஆண்டு தொடங்கி, பல்வேறு நாடுகளில் உலக பனிச்சிறுத்தை பாதுகாப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன்படி பனிச்சிறுத்தைகள் வாழும் 12 நாடுகள் அடையாளம் காணப்பட்டன.   பாகிஸ்தானிலுள்ள பனிச்சிறுத்தை இனத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், உள்ளூர் மக்கள் ஆதரவு ஆகியவற்றை முகமது ஒருங்கிணைத்து வருகிறார். பாதுகாப்பு பணியை மேலாண்மை செய்ய, 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு பயிற்சி  அளித்துள்ளார். விலங்குகளை வளர்ப்பவர்களுக்கு நஷ்டம